Post by Sumi on Sept 23, 2012 4:38:04 GMT 5.5
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
பொதுவான தர்மங்கள்
அதம பட்சப் பரிகாரம்
Part 4 of 4
அப்போது அவர்கள், இதுவரை சமூகத்துக்கு நிம்மதியைத் தந்த பழைய வைதிக மார்கத்தையே மறுபடி பூரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிற போது, அவர்களுக்கு வேத அத்யயனம் செய்வதற்கே இடமில்லை என்கிற நிலையில், இந்தத் தலைமுறையைச் சேர்த்த நாம் சங்கிலியைக் கத்தரித்துப் போட்டிருந்தால் அது எத்தனை பெரிய துரோகம்.
அதற்கென்ன, அதுதான் இத்தனை புத்தகங்கள் இருக்கின்றனவையே?. வேதமந்திரங்கள், யாகங்கள் முழுவதையும் நம்மவர்களும், மற்ற தேசத்துக் காரர்களும் ஆதியோடந்தம் ஆராய்ச்சி பண்ணி வால்யூம் வால்யூமாக எழுதி வைத்திருக்கிற புத்தகங்கள் இருக்கின்றனவையே? அவற்றைப் பார்த்து வருங்காலத் தலைமுறைகள் வேதத்தைத் தெரிந்து கொள்ளட்டுமே என்று கேட்கலாம். இதற்கு நான் பதில் சொல்லியாக வேண்டும். அது தவிர அஸ்திவாரத்தையே இன்னொரு பெரிய கேள்வி இருக்கிறது. அதற்கு நான் இதுவரை பதில் சொல்லவில்லை. அதையும் சொல்லியாக வேண்டும். அது என்ன கேள்வி என்று கேட்டால் வேத சப்தம் லோகத்தை ரக்ஷிக்கும் என்றால் என்ன அர்த்தம். ஏதோ மந்திரங்கள் என்றால் அவையெல்லாம் சில ஒலிகள். அவை வார்த்தை வார்த்தையாக இருக்கின்றன. அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் இருக்க வேண்டும். அவை ரொம்பவும் உயர்ந்த அர்த்தமாக இருக்கலாம். அப்படியே இருந்தாலும் அந்த அர்த்தத்தைப் படித்தும் தெரிந்து கொண்டு விடலாமே. வேதத்தை எதற்காக ஒரு கூட்டம் வாழ்நாள் முழுவதும் வாயால் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். இப்படிச் சொல்லுவதற்காகவே ஒரு கூட்டம் எப்போதும் இருக்க வேண்டும் என்றால் எதற்காக, வேதத்தின் அர்த்தம் மங்காமல் இருக்க வேண்டும் என்றால், அதற்குப் புஸ்தகங்கள் இருக்கின்றன. புஸ்தகத்திலிருப்பதைக் காப்பாற்றுவதற்கென்றே பாரம்பரியமாக ஒரு ஜாதி இருக்க வேண்டிய அவசியமில்லையே. அவரவரும் புஸ்தகத்தைப் பார்த்துத் தத்துவங்களைத் தெரிந்து கொள்ளலாமே. ஆனால் அர்த்தத்தை மட்டும் சொல்லாமல் வேத சப்தம் இதுவரைக்கும் இதுவரைக்கும் வந்திருக்கிற கிரமத்தில் மாறாமல் இருக்க வேண்டும். சப்தத்தை வாயால் சொல்லி ரட்சிக்க ஒரு கூட்டம் இருக்க வேண்டும் என்று சொல்வது ஏன். என்பதுதான். இதற்குப் பதில் சொல்லி வேண்டும்.
பொதுவான தர்மங்கள்
அதம பட்சப் பரிகாரம்
Part 4 of 4
அப்போது அவர்கள், இதுவரை சமூகத்துக்கு நிம்மதியைத் தந்த பழைய வைதிக மார்கத்தையே மறுபடி பூரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிற போது, அவர்களுக்கு வேத அத்யயனம் செய்வதற்கே இடமில்லை என்கிற நிலையில், இந்தத் தலைமுறையைச் சேர்த்த நாம் சங்கிலியைக் கத்தரித்துப் போட்டிருந்தால் அது எத்தனை பெரிய துரோகம்.
அதற்கென்ன, அதுதான் இத்தனை புத்தகங்கள் இருக்கின்றனவையே?. வேதமந்திரங்கள், யாகங்கள் முழுவதையும் நம்மவர்களும், மற்ற தேசத்துக் காரர்களும் ஆதியோடந்தம் ஆராய்ச்சி பண்ணி வால்யூம் வால்யூமாக எழுதி வைத்திருக்கிற புத்தகங்கள் இருக்கின்றனவையே? அவற்றைப் பார்த்து வருங்காலத் தலைமுறைகள் வேதத்தைத் தெரிந்து கொள்ளட்டுமே என்று கேட்கலாம். இதற்கு நான் பதில் சொல்லியாக வேண்டும். அது தவிர அஸ்திவாரத்தையே இன்னொரு பெரிய கேள்வி இருக்கிறது. அதற்கு நான் இதுவரை பதில் சொல்லவில்லை. அதையும் சொல்லியாக வேண்டும். அது என்ன கேள்வி என்று கேட்டால் வேத சப்தம் லோகத்தை ரக்ஷிக்கும் என்றால் என்ன அர்த்தம். ஏதோ மந்திரங்கள் என்றால் அவையெல்லாம் சில ஒலிகள். அவை வார்த்தை வார்த்தையாக இருக்கின்றன. அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் இருக்க வேண்டும். அவை ரொம்பவும் உயர்ந்த அர்த்தமாக இருக்கலாம். அப்படியே இருந்தாலும் அந்த அர்த்தத்தைப் படித்தும் தெரிந்து கொண்டு விடலாமே. வேதத்தை எதற்காக ஒரு கூட்டம் வாழ்நாள் முழுவதும் வாயால் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். இப்படிச் சொல்லுவதற்காகவே ஒரு கூட்டம் எப்போதும் இருக்க வேண்டும் என்றால் எதற்காக, வேதத்தின் அர்த்தம் மங்காமல் இருக்க வேண்டும் என்றால், அதற்குப் புஸ்தகங்கள் இருக்கின்றன. புஸ்தகத்திலிருப்பதைக் காப்பாற்றுவதற்கென்றே பாரம்பரியமாக ஒரு ஜாதி இருக்க வேண்டிய அவசியமில்லையே. அவரவரும் புஸ்தகத்தைப் பார்த்துத் தத்துவங்களைத் தெரிந்து கொள்ளலாமே. ஆனால் அர்த்தத்தை மட்டும் சொல்லாமல் வேத சப்தம் இதுவரைக்கும் இதுவரைக்கும் வந்திருக்கிற கிரமத்தில் மாறாமல் இருக்க வேண்டும். சப்தத்தை வாயால் சொல்லி ரட்சிக்க ஒரு கூட்டம் இருக்க வேண்டும் என்று சொல்வது ஏன். என்பதுதான். இதற்குப் பதில் சொல்லி வேண்டும்.