Post by Sumi on Sept 22, 2012 9:33:16 GMT 5.5
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
பொதுவான தர்மங்கள்
அதம பட்சப் பரிகாரம்
Part 3 of 4
இப்போதிருப்பவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை என்பது மட்டுமின்றி, வருங்காலத்தில் வருபவர்களுக்கு நாம் மகா துரோகத்தைச் செய்து பாபத்தைச் சேர்த்துக் கொள்ளாமலிருக்கவும் இந்தக் காரியத்தை அவசியம் செய்தாக வேண்டும். இந்தக் காலத்திலேயே வேதத்தை எவனும் லக்ஷியம் செய்யவேண்டியதில்லை. வருங்காலத்தில் யார் சீந்தப் போகிறார்கள். இப்போது இதற்காகப் பெறும் பாடுபட்டு என்ன பிரயோஜனம். என்று சிலருக்குத் தோன்றலாம். அப்படி எனக்குத் தோன்றவில்லை. சக்கரம் சுற்றிக் கொண்டேயிருக்கும்போது, கீழே போனது மேலே வரத்தான் செய்யும். இப்போது இத்தனை நவநாகரீகம் தலைவிரித்தாடுவதாலேயே இதன் உச்சத்துக்குப் போனபின் கீழே இறங்கித்தான் ஆக வேண்டும். நவீனத்தில் ஏதோ செனக்கியம் இருப்பதாக நினைத்து இப்போது அதில் போய் விழுந்திருக்கிறோம். போகப் போக இதைப் பூர்ணமாக அநுபவித்துவிட்ட பிறகு இதில் வாழ்க்கை நிறைவே இல்லை. உண்மையில் அசெனகரியத்தைத்தான் உண்டாக்கிக் கொண்டோம் என்று தெரிந்து தானாக வேண்டும். அமெரிக்காவின் உதாரணம் ஒன்று போதும். ஜனங்களுக்குத் தாங்கள் நிறைவோடு இல்லை என்று ஒரே சூன்ய உணர்ச்சிதான் வந்திருக்கிறது. நவீன சுகாநுபவத்தால் வருகிற நிம்மதியின்மையைத் தொலைத்துவிட்டு, மறந்து விட்டு இருக்க வேண்டும் என்று தவிக்கிறார்கள். புத்திசாலிகளாக இருக்கிறவர்கள் நம்முடைய வேதாந்தம், யோகம், பஜனை இவைகளுக்கு வருகிறார்கள். மற்றவர்களும் எப்படியாவது இந்த இந்திரிய சுகத்தை மறந்திருக்கிற மட்டும் விசேஷம் என்றே ஏகப்பட்ட மாத்திரைகளை (tranquiliser) வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, அப்படியே தூங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.
இந்த நம் தேசத்திலும் வரக்கூடியதுதான். லெனகிக சுகத்தில் இன்னும் ஏதோ பாக்கியிருக்கிறது என்கிற வரைக்கும் அதையும்தான் பார்த்து விடுவோமே என்று ஒடிக் கொண்டிருந்தாலும், அப்புறம் கடைசியில் அநுபவித்து, அடடா, இதுவும் சாசுவதமாக பிடித்து வைத்துக் கொள்ள முடியாமல் மறைந்துபோகிற செனக்கியம்தான் என்று பிரத்தியக்ஷமாக தெரிந்துவிட்டபின், நித்திய சுகத்தைத் தருகிற அத்யாத்ம விஷயங்களுக்கு ஜனங்கள் திரும்பத்தான் நினைப்பார்கள்.
(to be continued...)
பொதுவான தர்மங்கள்
அதம பட்சப் பரிகாரம்
Part 3 of 4
இப்போதிருப்பவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை என்பது மட்டுமின்றி, வருங்காலத்தில் வருபவர்களுக்கு நாம் மகா துரோகத்தைச் செய்து பாபத்தைச் சேர்த்துக் கொள்ளாமலிருக்கவும் இந்தக் காரியத்தை அவசியம் செய்தாக வேண்டும். இந்தக் காலத்திலேயே வேதத்தை எவனும் லக்ஷியம் செய்யவேண்டியதில்லை. வருங்காலத்தில் யார் சீந்தப் போகிறார்கள். இப்போது இதற்காகப் பெறும் பாடுபட்டு என்ன பிரயோஜனம். என்று சிலருக்குத் தோன்றலாம். அப்படி எனக்குத் தோன்றவில்லை. சக்கரம் சுற்றிக் கொண்டேயிருக்கும்போது, கீழே போனது மேலே வரத்தான் செய்யும். இப்போது இத்தனை நவநாகரீகம் தலைவிரித்தாடுவதாலேயே இதன் உச்சத்துக்குப் போனபின் கீழே இறங்கித்தான் ஆக வேண்டும். நவீனத்தில் ஏதோ செனக்கியம் இருப்பதாக நினைத்து இப்போது அதில் போய் விழுந்திருக்கிறோம். போகப் போக இதைப் பூர்ணமாக அநுபவித்துவிட்ட பிறகு இதில் வாழ்க்கை நிறைவே இல்லை. உண்மையில் அசெனகரியத்தைத்தான் உண்டாக்கிக் கொண்டோம் என்று தெரிந்து தானாக வேண்டும். அமெரிக்காவின் உதாரணம் ஒன்று போதும். ஜனங்களுக்குத் தாங்கள் நிறைவோடு இல்லை என்று ஒரே சூன்ய உணர்ச்சிதான் வந்திருக்கிறது. நவீன சுகாநுபவத்தால் வருகிற நிம்மதியின்மையைத் தொலைத்துவிட்டு, மறந்து விட்டு இருக்க வேண்டும் என்று தவிக்கிறார்கள். புத்திசாலிகளாக இருக்கிறவர்கள் நம்முடைய வேதாந்தம், யோகம், பஜனை இவைகளுக்கு வருகிறார்கள். மற்றவர்களும் எப்படியாவது இந்த இந்திரிய சுகத்தை மறந்திருக்கிற மட்டும் விசேஷம் என்றே ஏகப்பட்ட மாத்திரைகளை (tranquiliser) வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, அப்படியே தூங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.
இந்த நம் தேசத்திலும் வரக்கூடியதுதான். லெனகிக சுகத்தில் இன்னும் ஏதோ பாக்கியிருக்கிறது என்கிற வரைக்கும் அதையும்தான் பார்த்து விடுவோமே என்று ஒடிக் கொண்டிருந்தாலும், அப்புறம் கடைசியில் அநுபவித்து, அடடா, இதுவும் சாசுவதமாக பிடித்து வைத்துக் கொள்ள முடியாமல் மறைந்துபோகிற செனக்கியம்தான் என்று பிரத்தியக்ஷமாக தெரிந்துவிட்டபின், நித்திய சுகத்தைத் தருகிற அத்யாத்ம விஷயங்களுக்கு ஜனங்கள் திரும்பத்தான் நினைப்பார்கள்.
(to be continued...)