Post by Sumi on Sept 14, 2012 8:28:49 GMT 5.5
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
வைதிக மதம்
பொறுப்பாளி யார் ? பரிகாரம் எனன
Part 4 of 9
துவேஷம் இரட்டிப்பாகிற மாதிரி பிராமணனே இன்னொன்றும் செய்தான். ஒரு பக்கத்தில் ஜாதி தர்மத்தை விட்டுவிட்டு, இவனும் வெள்ளைக்காரனோடு சேர்ந்து பழைய ஏற்பாடு காட்டுமிராணிடித்தனமானது. ஒருத்தரை இன்னொருத்தர் சுரண்டுவது என்றெல்லாம் சமத்துவம் பேசினாலும், இன்னொரு பக்கம் இவன் மற்றவர்களோடு ஒட்டிப்போகாமல், தான் ஏதோ உசத்தி என்று பெருமை கொண்டாடிக் கொண்டான். முன்பும் இவன் மற்றவர்களோடு ஸ்தூலமாக (physical) ஒட்டிப் பழகத்தான் இல்லை. ஆனால், அதற்கு நியாயம் இருந்தது. பலவிதமான காரியங்களை உத்தேசித்து, அவரவருக்கும் ஆகாரம் முதலியவற்றிலும் மற்ற விஷயங்களிலும் வித்தியாசங்கள் இருந்தாக வேண்டியிருக்கிறது. அவர்கல் வேறு வேறு விதமான சூழ்நிலைகளில் இருந்தாக வேண்டியிருக்கிறது. ஃபிலிமைக் கழுவுகிற இடம் இருட்டாகத்தான் இருக்க வேண்டும். ஸினிமா ஷ§ட்டிங் செய்கிற இடத்திலோ நிறைய வெளிச்சம் வேண்டும். ஒரே காரியாலயத்தில் கான்டீனில் இருக்கிறவர்கள் பரம சுத்தமாகக் கைகாலில் அழுக்கில்லாமல் இருக்க வேண்டும். அங்கேயே மெஷினைத் துடைக்கிறவன் எண்ணைப் பிசுக்கோடு அழுக்குச் சட்டை போட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும். இதனால் அந்த ஸர்வர் அந்த மெஷின் மேனைவிட உசத்தவன் என்று அர்த்தமாகிவிடுமா?
இதே மாதிரி, தன்னலமில்லாமல் புத்தி பலத்தைப் பேனுகிறவன் பட்டினி கிடக்க வேண்டும். சைனியத்திலிருக்கிறவனோ மாம்சாதிகளுக்குக்கூட விலகில்லாமல் புஷ்டியாகச் சாப்பிட்டாலும் தோஷமில்லை. ஆகாரம் வேறாக இருப்பதால் பிராமணனுக்கும் க்ஷத்திரியனுக்கும் துவேஷம் என்று அர்த்தமாகுமா?. அதற்காக துவேஷமில்லையே என்று இவன் ஸ்தூலமாக அவனோடு ஒட்டி வாழ்ந்தால், அவனுடனேயே இவனும் உட்கார்ந்து சாப்பிட்டால், அவனுடைய ஆகராதிகளை நாமும்தான் ருசித்துப் பார்ப்போமே என்ற சபலம் உண்டாகத்தான் செய்யும். அந்தச் சபலம் இவனை இழுத்துக் கொண்டுபோய்க் கடைசியில் இவன் தர்மத்துக்கே ஹானி விளைவிக்கிற அளவுக்கு ஆகிவிடும். அந்தந்த சமுதாயத்திற்கு அந்தந்த குல தர்மம், பழக்க வழக்கம், ஆகார முறைகள்தான் உகந்தவை.
ஆனால் சமத்துவம் என்ற எண்ணத்தில் ஸ்தூலமாக (Physical) எல்லோரும் பழகி, அந்த தனித்தனி ஏற்பாடுகளையெல்லாம் பல பட்டறையாகக் குழப்ப ஆரம்பித்தால், அத்தனை காரியமும் கெட்டு, மொத்தத்தில் பொதுக்காரியமே சீர்குலைகிறது. இதனால்தான் அக்ரஹாரம், வேளாளர் தெரு, சேரி என்று கிராமங்களில் பிரித்து வைத்தார்கள். கிராம வாசத்தில் இது முடிந்தது. புதிதாக உண்டான பட்டணவாசத்தில் இது சாத்தியமாக இருக்கவில்லை. எல்லோரும் ஒரே மாதிரி ஷிஃப்டில் வேலைக்குப் போய், ஒரே மாதிரி காண்டீனில் உட்கார்ந்து, ஒரே ஆகாரத்தைச் சாப்பிட வேண்டும். இப்படிப் பல தினுசுகளில் கலந்து கலந்துதான் இருக்க வேண்டும் என்றாகி விட்டது. உபவாஸாதி நியமங்களைக் கண்டிப்பாக அநுஷ்டிக்க வேண்டிய பிராமணன் எல்லாவற்றிலும் மற்றவர்கள் போலவே ஆகிவிட்டான். ஆபீஸ் நேரம், காலேஜ் நேரம் எல்லாம் இவனுடைய கர்மாநுஷ்டானங்களுக்கு இடைஞ்சலாக இருந்தால் அவற்றை எல்லாம் காற்றிலேவிட்டுவிட்டு, மற்றவர்களைப் போலவே ஆகிவிட்டான். இதுவரை இவன் அநுஷ்டித்தது மற்றவர்களுடைய க்ஷேமத்துக்காகத்தான். முக்கியமாகவே அதற்காகவேதான். தர்மகத்தா (trustee) மாதிரி, சமூகத்தின் பொருட்டு, இவன் இந்த தர்மங்களை ரக்ஷித்துப் பிரயோஜனங்களை எல்லோருக்கும் தந்துவந்தான். இப்போது அவர்களோடு நானும் ஒன்று, எல்லோரும் சமம் என்று சொல்லிக் கொண்டே அவர்களுடைய வயிற்றெரிச்சலுக்குக் காரணமாக எல்லா ஸ்தானங்களுக்கும் போட்டியாக வந்துவிட்டான். இது போதாது என்று நியமங்களில் அவர்களைவிடத் துளிக்கூட கட்டுப்பாடு இல்லாமல் வாழ்ந்தாலும், உள்ளூர அவர்களை விடத் தான் உயர்ந்தவன் என்று நினைத்துக் கொண்டிருந்தால் மற்றவர்களின் துவேஷம் ஜாஸ்தியாகத்தானே தெரியும்.
(to be continued....)
வைதிக மதம்
பொறுப்பாளி யார் ? பரிகாரம் எனன
Part 4 of 9
துவேஷம் இரட்டிப்பாகிற மாதிரி பிராமணனே இன்னொன்றும் செய்தான். ஒரு பக்கத்தில் ஜாதி தர்மத்தை விட்டுவிட்டு, இவனும் வெள்ளைக்காரனோடு சேர்ந்து பழைய ஏற்பாடு காட்டுமிராணிடித்தனமானது. ஒருத்தரை இன்னொருத்தர் சுரண்டுவது என்றெல்லாம் சமத்துவம் பேசினாலும், இன்னொரு பக்கம் இவன் மற்றவர்களோடு ஒட்டிப்போகாமல், தான் ஏதோ உசத்தி என்று பெருமை கொண்டாடிக் கொண்டான். முன்பும் இவன் மற்றவர்களோடு ஸ்தூலமாக (physical) ஒட்டிப் பழகத்தான் இல்லை. ஆனால், அதற்கு நியாயம் இருந்தது. பலவிதமான காரியங்களை உத்தேசித்து, அவரவருக்கும் ஆகாரம் முதலியவற்றிலும் மற்ற விஷயங்களிலும் வித்தியாசங்கள் இருந்தாக வேண்டியிருக்கிறது. அவர்கல் வேறு வேறு விதமான சூழ்நிலைகளில் இருந்தாக வேண்டியிருக்கிறது. ஃபிலிமைக் கழுவுகிற இடம் இருட்டாகத்தான் இருக்க வேண்டும். ஸினிமா ஷ§ட்டிங் செய்கிற இடத்திலோ நிறைய வெளிச்சம் வேண்டும். ஒரே காரியாலயத்தில் கான்டீனில் இருக்கிறவர்கள் பரம சுத்தமாகக் கைகாலில் அழுக்கில்லாமல் இருக்க வேண்டும். அங்கேயே மெஷினைத் துடைக்கிறவன் எண்ணைப் பிசுக்கோடு அழுக்குச் சட்டை போட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும். இதனால் அந்த ஸர்வர் அந்த மெஷின் மேனைவிட உசத்தவன் என்று அர்த்தமாகிவிடுமா?
இதே மாதிரி, தன்னலமில்லாமல் புத்தி பலத்தைப் பேனுகிறவன் பட்டினி கிடக்க வேண்டும். சைனியத்திலிருக்கிறவனோ மாம்சாதிகளுக்குக்கூட விலகில்லாமல் புஷ்டியாகச் சாப்பிட்டாலும் தோஷமில்லை. ஆகாரம் வேறாக இருப்பதால் பிராமணனுக்கும் க்ஷத்திரியனுக்கும் துவேஷம் என்று அர்த்தமாகுமா?. அதற்காக துவேஷமில்லையே என்று இவன் ஸ்தூலமாக அவனோடு ஒட்டி வாழ்ந்தால், அவனுடனேயே இவனும் உட்கார்ந்து சாப்பிட்டால், அவனுடைய ஆகராதிகளை நாமும்தான் ருசித்துப் பார்ப்போமே என்ற சபலம் உண்டாகத்தான் செய்யும். அந்தச் சபலம் இவனை இழுத்துக் கொண்டுபோய்க் கடைசியில் இவன் தர்மத்துக்கே ஹானி விளைவிக்கிற அளவுக்கு ஆகிவிடும். அந்தந்த சமுதாயத்திற்கு அந்தந்த குல தர்மம், பழக்க வழக்கம், ஆகார முறைகள்தான் உகந்தவை.
ஆனால் சமத்துவம் என்ற எண்ணத்தில் ஸ்தூலமாக (Physical) எல்லோரும் பழகி, அந்த தனித்தனி ஏற்பாடுகளையெல்லாம் பல பட்டறையாகக் குழப்ப ஆரம்பித்தால், அத்தனை காரியமும் கெட்டு, மொத்தத்தில் பொதுக்காரியமே சீர்குலைகிறது. இதனால்தான் அக்ரஹாரம், வேளாளர் தெரு, சேரி என்று கிராமங்களில் பிரித்து வைத்தார்கள். கிராம வாசத்தில் இது முடிந்தது. புதிதாக உண்டான பட்டணவாசத்தில் இது சாத்தியமாக இருக்கவில்லை. எல்லோரும் ஒரே மாதிரி ஷிஃப்டில் வேலைக்குப் போய், ஒரே மாதிரி காண்டீனில் உட்கார்ந்து, ஒரே ஆகாரத்தைச் சாப்பிட வேண்டும். இப்படிப் பல தினுசுகளில் கலந்து கலந்துதான் இருக்க வேண்டும் என்றாகி விட்டது. உபவாஸாதி நியமங்களைக் கண்டிப்பாக அநுஷ்டிக்க வேண்டிய பிராமணன் எல்லாவற்றிலும் மற்றவர்கள் போலவே ஆகிவிட்டான். ஆபீஸ் நேரம், காலேஜ் நேரம் எல்லாம் இவனுடைய கர்மாநுஷ்டானங்களுக்கு இடைஞ்சலாக இருந்தால் அவற்றை எல்லாம் காற்றிலேவிட்டுவிட்டு, மற்றவர்களைப் போலவே ஆகிவிட்டான். இதுவரை இவன் அநுஷ்டித்தது மற்றவர்களுடைய க்ஷேமத்துக்காகத்தான். முக்கியமாகவே அதற்காகவேதான். தர்மகத்தா (trustee) மாதிரி, சமூகத்தின் பொருட்டு, இவன் இந்த தர்மங்களை ரக்ஷித்துப் பிரயோஜனங்களை எல்லோருக்கும் தந்துவந்தான். இப்போது அவர்களோடு நானும் ஒன்று, எல்லோரும் சமம் என்று சொல்லிக் கொண்டே அவர்களுடைய வயிற்றெரிச்சலுக்குக் காரணமாக எல்லா ஸ்தானங்களுக்கும் போட்டியாக வந்துவிட்டான். இது போதாது என்று நியமங்களில் அவர்களைவிடத் துளிக்கூட கட்டுப்பாடு இல்லாமல் வாழ்ந்தாலும், உள்ளூர அவர்களை விடத் தான் உயர்ந்தவன் என்று நினைத்துக் கொண்டிருந்தால் மற்றவர்களின் துவேஷம் ஜாஸ்தியாகத்தானே தெரியும்.
(to be continued....)