|
Post by anusham163 on Sept 11, 2012 18:34:34 GMT 5.5
இந்த நமது கெட்டிக்காரத்தனமே அவனுக்கு ஒரு அடையாளம்தான்.கள்ளனைக்கண்டு பிடிக்க மண்ணில் பதித்த காலடிச்சுவடி இருக்கிறது போல், உள்ளம் கவர் 'கள்வ'னான ஸ்வாமியின் காலடி ப்ரபஞ்சத்தின் எல்லா இடத்திலும் பதிந்து கிடக்கிறது. நம் கெட்டிக்காரத்தனமும் அவனது காலடி அடையாளம்தான். இந்த கெட்டிக்காரத்தனத்துக்கு எல்லாம் ஒரு ஆதாரம் இருக்க வேண்டும் என்று அது காட்டிக்கொடுப்பதால் அதுவே காலடி ஆகிறது. ஸ்ருஷ்டி கர்த்தனாக ஒரு ஸ்வாமி இருப்பதற்கு நாமே அடையாளம்.நம் ஒவ்வொருவர் உள்ளங்கையிலும் அவ்ன் தினுசு தினுசாகப் போட்டுள்ள ரேகை மாதிரி நம்மால் போடமுடியுமா? இந்தப் பட்டணம் முழுவதிலும் அனேக மனிதர்களின் கெட்டிக்காரத்தனத்தினால் செய்துள்ள காரியங்களை விட அதிகமாக் ஒரு சிறு இலையில் போட்டிருக்கிற ரேகைகளில் விசித்திரம் செய்திருக்கிறான் அவன். ப்ர்பஞ்ச வஸ்து எல்லாமே அந்த மகா திருடனின் ரேகை அடையாளம்தான். திருடன் பதுங்கி இருப்பது போல் இவனும் பதுங்கி இருப்பவன்தான். அவன் குகைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறான் என்றே வேதம் திரும்பத் திரும்பச் சொல்லும். நம் இதயம் தான் அந்த குகை. நமக்குள்ளே ஒளிந்து கொண்டு நமக்கு வெளியே இத்தனை அற்புதங்களைச் செய்து, நம்மை ஆச்சரியப்படுத்தித் தன்னைத் தேட வைக்கிறான் ஸ்வாமி. அப்படி அவனைத் தேடுகிறதுதான் பக்தி.
|
|
|
Post by athmapremprakash on Sept 11, 2012 19:01:39 GMT 5.5
hara hara sankara jaya jaya sankara
பக்தி.====soulful
ஸ்வாமி=====skillful playful hide and seek game அவன் குகைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறான் என்றே வேதம் திரும்பத் திரும்பச் சொல்லும்.
HE RESTS IN OUR HEARTFUL / KNOWN AS BLISSFUL
|
|
|
Post by athmapremprakash on Sept 12, 2012 12:02:25 GMT 5.5
HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
ப்ர்பஞ்ச வஸ்து எல்லாமே அந்த மகா திருடனின் ரேகை அடையாளம்தான். திருடன் பதுங்கி இருப்பது போல் இவனும் பதுங்கி இருப்பவன்தான். அவன் குகைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறான் என்றே வேதம் திரும்பத் திரும்பச் சொல்லும்.
He is the Thief , the lier and also playing the qame of hide and seek not allowing us to lead in the path of gnaana as easily covering with all Maya illusory appearences
|
|