Post by anusham163 on Sept 10, 2012 20:22:43 GMT 5.5
In continuation to the first post on this subject, let us ,now, look at what Mahaperiava had stated on this. Excerpts taken from "Deivathin Kural"--vol.2
வேத மந்திரங்களுக்கு உயிர் எதில் இருக்கிறது ? மந்திரங்களின் ஒவ்வொரு எழுத்தையும் அதன் பரிமாணம் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படிச் சரியாக உச்சரிக்க வேண்டும்." அக்ஷர சுத்தம்" என்று இதற்குப் பெயர்.அதோடு கூட ஒவ்வொரு எழுத்தையும், உயர்த்திச்சொல்வதா , தாழ்த்திச்சொல்வதா, ஸமனாகச் சொல்வதா என்ற பாகுபடும் உண்டு. இந்த மூன்றையும் முறையே உதாத்தம்,அனுதாத்தம், ஸ்வரிதம் என்று சொல்வார்கள். இப்படி அக்ஷர சுத்தம், ஸ்வர சுத்தம் இரண்டும் இருந்தால்தான் மந்திரங்கள் பலன் தரும். மந்திரங்களில், அர்த்தத்தையும் கூட, அவற்றின் ஒலி சரியாக இருக்க வேண்டியதுதான் முக்கியம். அர்த்தம் தெரியாவிட்டாலும் கூட, மந்திரங்களின் சப்த ரூபத்தைஉள்ளபடி உச்சரித்து விட்டால் அவை பலன் தந்து விடும் ஆகையால், மந்திர சமூஹமாகவே இருக்கப்ப்பட்ட வேதத்துக்கு எது மூச்சு ஸ்தானம் என்றால், சப்த ரூபம் தான்.
................................................................
ஒரு பாஷையில் இப்படியிப்படி உச்சரிக்க வேண்டும் என்று முறைப்படுத்துகிறதை Phoenetics என்கிறார்கள். மற்ற பாஷைகளை விட வேத பாஷைக்கு இந்த phoenetics ரொம்ப முக்கியம். ஏனென்றால் உச்சரிப்பு மாறினால் பலனே மாறி விடுகிறதை அந்த பாஷையிலே பார்க்கிறோம்.
...................................................................................................
.................................................
வார்த்தையின் அர்த்தத்தை விட சப்தம் முக்கியம் என்று சொன்னேன்......வார்த்தையின் சப்தமே அதன் அர்த்தத்தைக் காட்டும்படியாக அனேக பதங்கள் சந்தஸ் என்ற வேத பாஷையிலும் அதை வைத்தே உருவாக்கிய ஸம்ஸ்கிருதத்திலும் இருக்கின்றன. உதாரணமாக, ' தந்தம்' என்று ஒரு வார்த்தை இருக்கிறது.' பல்' என்று அதற்கு அர்த்தம். பல் நாக்கிலே நன்றாக அடித்து, அதாவது,சப்தத்தை எழுப்புவதில் பல்லுக்கே முக்கியமான வேலை கொடுப்ப்பதாக இந்த தந்தம் என்ற வார்த்தையே அமைந்திருக்கிறது.தந்தம் போனவர்களை ' தந்தம்' என்ற வார்த்தையை சொல்லச் சொல்லிப் பார்த்தால் தெரியும்.அவர்களால் இந்த வார்த்தையை ஸ்பஷ்டமாகச் சொல்லவே முடியாது!
Dental என்று இன்றைக்கு இங்கிலீஷில் சொல்வதும் பல்லைக் குறிப்பதுதான். 'தந்த்'---டென்ட்' என்கிறதில் நிறைய ஒற்றுமை நமக்குத் தெரிகிறது. French, Latin முதலான பாஷைகளிலும் 'டென்ட்' சம்பந்தமே தெரிகிறது. அதாவது 'ட' காரம் வருகிறதே தவிர,ஸம்ஸ்க்ருதத்தில் 'தந்த'த்தில் வருகிற 'த' காரம் இல்லை. " இருந்து விட்டுப் போகட்டும். இதனால் ஸம்ஸ்க்ருதம் மூல பாஷை என்று எப்படி ஆகும்? ஏன் 'டென்டல்' என்பதில் இருந்துதான் சம்ஸ்க்ருத 'தந்தம்' வந்தது என்று வைத்துக் கொள்ளக்கூடாது?" இப்படிக் கேட்டால், இங்கிலீஷ், பிரெஞ்சு, லாடின் எல்லாவற்றுக்கும் ஸம்ஸ்க்ருதமே தாய் பாஷை என்பதற்கு 'தந்தம்' என்பதில் வருகிற சப்தங்களே ஆதரவாயிருக்கிறது. எப்பெடி என்றால், 'தந்தம் என்பதைச் சொல்லவே தந்தம்(பல்) வேண்டியிருக்கிறது. 'டென்டல்' முதலான மற்ற பாஷை வார்த்தைகளைச் சொல்லிப்பாருங்கள். அதில் பல் சம்பந்தமே இல்லை.நாக்கின் நுனி மேலண்ணத்தில் படுவதாலேயே 'டென்ட்' சப்தம் உண்டாயிருக்கிறது. வார்த்தையே அர்த்தத்தைக் குறிப்பிடுமானால், அதி ஸம்ஸ்க்ருத 'தந்த'த்தில்தான். அதனால் இதுதான் மூல ரூபம். இதுதான் திரிந்து 'டென்டல்' வந்தது என்று தெரிகிறது.
வேத மந்திரங்களுக்கு உயிர் எதில் இருக்கிறது ? மந்திரங்களின் ஒவ்வொரு எழுத்தையும் அதன் பரிமாணம் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படிச் சரியாக உச்சரிக்க வேண்டும்." அக்ஷர சுத்தம்" என்று இதற்குப் பெயர்.அதோடு கூட ஒவ்வொரு எழுத்தையும், உயர்த்திச்சொல்வதா , தாழ்த்திச்சொல்வதா, ஸமனாகச் சொல்வதா என்ற பாகுபடும் உண்டு. இந்த மூன்றையும் முறையே உதாத்தம்,அனுதாத்தம், ஸ்வரிதம் என்று சொல்வார்கள். இப்படி அக்ஷர சுத்தம், ஸ்வர சுத்தம் இரண்டும் இருந்தால்தான் மந்திரங்கள் பலன் தரும். மந்திரங்களில், அர்த்தத்தையும் கூட, அவற்றின் ஒலி சரியாக இருக்க வேண்டியதுதான் முக்கியம். அர்த்தம் தெரியாவிட்டாலும் கூட, மந்திரங்களின் சப்த ரூபத்தைஉள்ளபடி உச்சரித்து விட்டால் அவை பலன் தந்து விடும் ஆகையால், மந்திர சமூஹமாகவே இருக்கப்ப்பட்ட வேதத்துக்கு எது மூச்சு ஸ்தானம் என்றால், சப்த ரூபம் தான்.
................................................................
ஒரு பாஷையில் இப்படியிப்படி உச்சரிக்க வேண்டும் என்று முறைப்படுத்துகிறதை Phoenetics என்கிறார்கள். மற்ற பாஷைகளை விட வேத பாஷைக்கு இந்த phoenetics ரொம்ப முக்கியம். ஏனென்றால் உச்சரிப்பு மாறினால் பலனே மாறி விடுகிறதை அந்த பாஷையிலே பார்க்கிறோம்.
...................................................................................................
.................................................
வார்த்தையின் அர்த்தத்தை விட சப்தம் முக்கியம் என்று சொன்னேன்......வார்த்தையின் சப்தமே அதன் அர்த்தத்தைக் காட்டும்படியாக அனேக பதங்கள் சந்தஸ் என்ற வேத பாஷையிலும் அதை வைத்தே உருவாக்கிய ஸம்ஸ்கிருதத்திலும் இருக்கின்றன. உதாரணமாக, ' தந்தம்' என்று ஒரு வார்த்தை இருக்கிறது.' பல்' என்று அதற்கு அர்த்தம். பல் நாக்கிலே நன்றாக அடித்து, அதாவது,சப்தத்தை எழுப்புவதில் பல்லுக்கே முக்கியமான வேலை கொடுப்ப்பதாக இந்த தந்தம் என்ற வார்த்தையே அமைந்திருக்கிறது.தந்தம் போனவர்களை ' தந்தம்' என்ற வார்த்தையை சொல்லச் சொல்லிப் பார்த்தால் தெரியும்.அவர்களால் இந்த வார்த்தையை ஸ்பஷ்டமாகச் சொல்லவே முடியாது!
Dental என்று இன்றைக்கு இங்கிலீஷில் சொல்வதும் பல்லைக் குறிப்பதுதான். 'தந்த்'---டென்ட்' என்கிறதில் நிறைய ஒற்றுமை நமக்குத் தெரிகிறது. French, Latin முதலான பாஷைகளிலும் 'டென்ட்' சம்பந்தமே தெரிகிறது. அதாவது 'ட' காரம் வருகிறதே தவிர,ஸம்ஸ்க்ருதத்தில் 'தந்த'த்தில் வருகிற 'த' காரம் இல்லை. " இருந்து விட்டுப் போகட்டும். இதனால் ஸம்ஸ்க்ருதம் மூல பாஷை என்று எப்படி ஆகும்? ஏன் 'டென்டல்' என்பதில் இருந்துதான் சம்ஸ்க்ருத 'தந்தம்' வந்தது என்று வைத்துக் கொள்ளக்கூடாது?" இப்படிக் கேட்டால், இங்கிலீஷ், பிரெஞ்சு, லாடின் எல்லாவற்றுக்கும் ஸம்ஸ்க்ருதமே தாய் பாஷை என்பதற்கு 'தந்தம்' என்பதில் வருகிற சப்தங்களே ஆதரவாயிருக்கிறது. எப்பெடி என்றால், 'தந்தம் என்பதைச் சொல்லவே தந்தம்(பல்) வேண்டியிருக்கிறது. 'டென்டல்' முதலான மற்ற பாஷை வார்த்தைகளைச் சொல்லிப்பாருங்கள். அதில் பல் சம்பந்தமே இல்லை.நாக்கின் நுனி மேலண்ணத்தில் படுவதாலேயே 'டென்ட்' சப்தம் உண்டாயிருக்கிறது. வார்த்தையே அர்த்தத்தைக் குறிப்பிடுமானால், அதி ஸம்ஸ்க்ருத 'தந்த'த்தில்தான். அதனால் இதுதான் மூல ரூபம். இதுதான் திரிந்து 'டென்டல்' வந்தது என்று தெரிகிறது.