Post by radha on Sept 5, 2012 2:19:47 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்து படுக்கையிலிருந்து எழும் போதும், இரவு படுக்கைக்கு போகும் போதும், ஏதாவது ஒரு பகவான் நாமாவைச் சொல்ல வேண்டும். விடியற்காலையில் எழுந்திருக்கும் போதே, "பகவானே... இன்றைய பொழுது நல்லபடியாக போக வேண்டும். எண்ணிய காரியங்கள் நிறைவேற வேண்டும்...' என்று தியானம் செய்வது நல்லது.
அதேபோல், இரவு படுக்கும்போதும், "பகவானே... உன் அருளால் இன்றைய பொழுது நல்லபடியாக போயிற்று. இரவு நான் தூங்கும்போது, நீ, என்னை ரட்சிப்பாயாக...' என்று தியானித்தபின் படுப்பதும் நல்லது.
இந்த ஜென்மா நிரந்தரமானதல்ல. என்றோ ஒரு நாள் போக வேண்டியது; அது எப்போது, எப்படி போக வேண்டும் என்பது முன்னதாக விதிக்கப்பட்டு விடுகிறது; அதை மாற்ற முடியாது. அகாலத்தில் ஏற்படக் கூடிய மரணத்தை, பகவான் தடுத்து விடலாம். ஆயுள் முடிந்தவனை அவராலும் காப்பாற்ற முடியாது.
எப்போது முடிகிறது என்று தெரியாதபடியால், தினமும் அவனை தியானம் செய்து வந்தால், ஒரு சில ஆபத்துகள் நீங்கலாம். மரணம் என்பதை சில நாள் தள்ளிப் போடலாம். அப்படியே ஒருநாள் போய் விட்டாலும், பகவான் நாமா சொன்ன புண்ணியம் அவனுக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.
விடியற்காலையில் எதை எல்லாம் நினைத்தால், எல்லா பாவங்களும் விலகி, புண்ணியம் கிடைக்கும் என்பதை, பகவானே ஒரு பட்டியல் கொடுத்திருக்கிறார். இதை விடியற்காலையில் நினைக்க மறந்தாலும், கடைசி காலத்திலாவது நினைக்கலாம் என்று ஒரு மாற்று யோசனையையும் கூறியுள்ளார். அப்படி நினைக்க வேண்டியவை:
பகவான், கஜேந்திரன், கஜேந்திரனும், முதலையும், மலைகள், காடுகள், தேவ விருட்சங்கள், பிரம்மா, விஷ்ணு, பாற்கடலில் பகவானின் ஆபரணங்களான ஸ்ரீவத்சம், சங்கு, கருடன், ஆதிசேஷன், லட்சுமிதேவி, நாரதர், பிரகலாதன் பகவானுடைய அவதாரங்களான சூரியன், சந்திரன், அக்னி, பசு ஆகியவை.
விடியற்காலையில் எழும்போதே இந்த ஞாபகம் தானா வருகிறது? பால் பாக்கெட் வந்தாச்சா, பால்காரன் வந்தாச்சா, காபி ரெடியா? இந்த ஞாபகம் தானே வருகிறது. காலையில் இரண்டு விஷயங்களுக்கு கோபம் வரும். ஒன்று, பால் வராமல் காபி தயாராகாவிட்டால் கோபம் வரும்.
அடுத்தது, காலையில் வழக்கமாக வரும் செய்தித்தாள் வராவிட்டால் கோபம் வந்துவிடும். உள்ளுக்கும், வாசலுக்கும் அலைவான். தெருக்கோடி வரை எட்டி எட்டிப் பார்ப்பான். காபியும், செய்தித்தாளும் சரியான நேரத்துக்கு வந்து விட்டால் போதும், அவனுக்கு ஒரே மகிழ்ச்சி.
இப்படி இதையே நினைத்துக் கொண்டிருப்பவனுக்கு, மேலே சொன்ன பகவான், கஜேந்திரனின் ஞாபகம் எப்படி வரும்? அதையும் தான் கொஞ்சம் நினைத்துப் பாருங்களேன்!
தியானம் பழகுங்கள்
* மனம் தூய்மையாகவும், முன்வினைப் பாவங்கள் நீங்கவும்<<, யாருக்கும் பழிபாவங்கள் செய்யாமல் இருக்கவும் வீட்டில் உள்ள அனைவரும் தியானத்தை காலையில் முறையாகச் செய்ய வேண்டும்.
* செல்வத்தில் திளைத்தாலும், வறுமையில் தவித்தாலும், துன்பத்தில் துவண்டாலும், சுகித்திருந்தாலும், ஆரோக்கியம் இருந்தாலும், வியாதியில் அவதிப்பட்டாலும் நாள்தோறும் தியானம் செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
* குழந்தைப் பருவத்திலிருந்தே தியானத்தை பழகினால், பாவங்களில் ஈடுபடாமல் நல்ல விஷயங்களை நாடும் மனநிலை உண்டாகும். அநாவசியமாக எவ்வளவோ காலத்தை நாம் வீணடித்திருக்கிறோம். அதனால், தியானம் செய்வதை அடிப்படை கடமையாகக் கொள்ள வேண்டும்.
* வாக்கினாலும், மனத்தினாலும், கைகால் முதலியவற்றாலும் பாவங்கள் செய்து இருக்கிறோம். அந்தப் பாவங்களை எல்லாம் அதே வாக்காலும், மனதாலும், கைகால் முதலியன கொண்டே புண்ணியம் செய்து கரைத்துவிடும் மனவுறுதியை தியானத்தால் மட்டுமே பெற முடியும்.
-காஞ்சிப்பெரியவR
God has a million Names. Select any Name of His, any Name that appeals to you, select any Form of His; every day when you awaken to the call of the brightening east, recite the Name, meditate on the Form; have the Name and Form as your companion, guide and guardian throughout the toils of the waking hours; when you retire for the night offer grateful homage to God in that Form with that Name, for being with you, by you, beside you, before you, behind you, all day long. If you stick to this discipline, you cannot falter or fail.
Kanchi Maha Periva Thiruvadigal Saranam
ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்து படுக்கையிலிருந்து எழும் போதும், இரவு படுக்கைக்கு போகும் போதும், ஏதாவது ஒரு பகவான் நாமாவைச் சொல்ல வேண்டும். விடியற்காலையில் எழுந்திருக்கும் போதே, "பகவானே... இன்றைய பொழுது நல்லபடியாக போக வேண்டும். எண்ணிய காரியங்கள் நிறைவேற வேண்டும்...' என்று தியானம் செய்வது நல்லது.
அதேபோல், இரவு படுக்கும்போதும், "பகவானே... உன் அருளால் இன்றைய பொழுது நல்லபடியாக போயிற்று. இரவு நான் தூங்கும்போது, நீ, என்னை ரட்சிப்பாயாக...' என்று தியானித்தபின் படுப்பதும் நல்லது.
இந்த ஜென்மா நிரந்தரமானதல்ல. என்றோ ஒரு நாள் போக வேண்டியது; அது எப்போது, எப்படி போக வேண்டும் என்பது முன்னதாக விதிக்கப்பட்டு விடுகிறது; அதை மாற்ற முடியாது. அகாலத்தில் ஏற்படக் கூடிய மரணத்தை, பகவான் தடுத்து விடலாம். ஆயுள் முடிந்தவனை அவராலும் காப்பாற்ற முடியாது.
எப்போது முடிகிறது என்று தெரியாதபடியால், தினமும் அவனை தியானம் செய்து வந்தால், ஒரு சில ஆபத்துகள் நீங்கலாம். மரணம் என்பதை சில நாள் தள்ளிப் போடலாம். அப்படியே ஒருநாள் போய் விட்டாலும், பகவான் நாமா சொன்ன புண்ணியம் அவனுக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.
விடியற்காலையில் எதை எல்லாம் நினைத்தால், எல்லா பாவங்களும் விலகி, புண்ணியம் கிடைக்கும் என்பதை, பகவானே ஒரு பட்டியல் கொடுத்திருக்கிறார். இதை விடியற்காலையில் நினைக்க மறந்தாலும், கடைசி காலத்திலாவது நினைக்கலாம் என்று ஒரு மாற்று யோசனையையும் கூறியுள்ளார். அப்படி நினைக்க வேண்டியவை:
பகவான், கஜேந்திரன், கஜேந்திரனும், முதலையும், மலைகள், காடுகள், தேவ விருட்சங்கள், பிரம்மா, விஷ்ணு, பாற்கடலில் பகவானின் ஆபரணங்களான ஸ்ரீவத்சம், சங்கு, கருடன், ஆதிசேஷன், லட்சுமிதேவி, நாரதர், பிரகலாதன் பகவானுடைய அவதாரங்களான சூரியன், சந்திரன், அக்னி, பசு ஆகியவை.
விடியற்காலையில் எழும்போதே இந்த ஞாபகம் தானா வருகிறது? பால் பாக்கெட் வந்தாச்சா, பால்காரன் வந்தாச்சா, காபி ரெடியா? இந்த ஞாபகம் தானே வருகிறது. காலையில் இரண்டு விஷயங்களுக்கு கோபம் வரும். ஒன்று, பால் வராமல் காபி தயாராகாவிட்டால் கோபம் வரும்.
அடுத்தது, காலையில் வழக்கமாக வரும் செய்தித்தாள் வராவிட்டால் கோபம் வந்துவிடும். உள்ளுக்கும், வாசலுக்கும் அலைவான். தெருக்கோடி வரை எட்டி எட்டிப் பார்ப்பான். காபியும், செய்தித்தாளும் சரியான நேரத்துக்கு வந்து விட்டால் போதும், அவனுக்கு ஒரே மகிழ்ச்சி.
இப்படி இதையே நினைத்துக் கொண்டிருப்பவனுக்கு, மேலே சொன்ன பகவான், கஜேந்திரனின் ஞாபகம் எப்படி வரும்? அதையும் தான் கொஞ்சம் நினைத்துப் பாருங்களேன்!
தியானம் பழகுங்கள்
* மனம் தூய்மையாகவும், முன்வினைப் பாவங்கள் நீங்கவும்<<, யாருக்கும் பழிபாவங்கள் செய்யாமல் இருக்கவும் வீட்டில் உள்ள அனைவரும் தியானத்தை காலையில் முறையாகச் செய்ய வேண்டும்.
* செல்வத்தில் திளைத்தாலும், வறுமையில் தவித்தாலும், துன்பத்தில் துவண்டாலும், சுகித்திருந்தாலும், ஆரோக்கியம் இருந்தாலும், வியாதியில் அவதிப்பட்டாலும் நாள்தோறும் தியானம் செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
* குழந்தைப் பருவத்திலிருந்தே தியானத்தை பழகினால், பாவங்களில் ஈடுபடாமல் நல்ல விஷயங்களை நாடும் மனநிலை உண்டாகும். அநாவசியமாக எவ்வளவோ காலத்தை நாம் வீணடித்திருக்கிறோம். அதனால், தியானம் செய்வதை அடிப்படை கடமையாகக் கொள்ள வேண்டும்.
* வாக்கினாலும், மனத்தினாலும், கைகால் முதலியவற்றாலும் பாவங்கள் செய்து இருக்கிறோம். அந்தப் பாவங்களை எல்லாம் அதே வாக்காலும், மனதாலும், கைகால் முதலியன கொண்டே புண்ணியம் செய்து கரைத்துவிடும் மனவுறுதியை தியானத்தால் மட்டுமே பெற முடியும்.
-காஞ்சிப்பெரியவR
God has a million Names. Select any Name of His, any Name that appeals to you, select any Form of His; every day when you awaken to the call of the brightening east, recite the Name, meditate on the Form; have the Name and Form as your companion, guide and guardian throughout the toils of the waking hours; when you retire for the night offer grateful homage to God in that Form with that Name, for being with you, by you, beside you, before you, behind you, all day long. If you stick to this discipline, you cannot falter or fail.
Kanchi Maha Periva Thiruvadigal Saranam