Post by radha on Aug 23, 2012 9:26:44 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
மேன்மை வாழ்வளிப்பார் மயூரநாதர்
Mayuranathar of Mailaduthurai
திருப்பரையலூரில் சிவபெருமானை நிந்தனை செய்து தட்சன் செய்த வேள்வியில் பார்வதி தேவியார் கலந்து அவமானப்பட்டதில் சினமுற்ற சிவன், உமையவளை மயில் உரு எடுத்து, ஐப்பசி மாதம் முழுதும் விரதம் இருக்குமாறு ஆணையிட்டார். அவ்வாறு அன்னை மயிலாக உருவெடுத்த தலம் மயிலாடுதுறை. மயில் உருக்கொண்டு பார்வதி தேவியார் சிவனைத் தொழுத புண்ணியத் தலமான திருமயிலையை அடுத்து மயிலாடுதுறை சிறப்புடையது. ஒரு முதுமொழி உண்டு; ‘ஆயிரமானாலும் மாயூரமாகாது.’ அதன் பொருள், ஆயிரம் க்ஷேத்திரங்கள் இருந்தாலும் மாயூரம் போல் ஒரு புண்ணிய க்ஷேத்திரத்திற்கு ஈடாகாது என்றளவிற்கு பெருமை உடையவர் மயூரநாதர்.
‘‘அஞ்சல் நாயகியை யண்டி நிற்பர் வினைபோம் - போகாத் துயர் போம்’’ என்கிறார் அகத்தியர். அகத்தியர் தொழுத விநாயகர் இன்றும் இங்கு அருள்பாலிக்கிறார். சந்தன மரத்தடியமர்ந்த இந்த அகத்திய விநாயகரைத் தொழுதக்கால் கலை விருத்தி கூடும். காவிரிக் கரையில் அமைந்துள்ள எழில் வளமும் இயற்கை வளமும் கூடிய, பிரம்ம தேவனால் ஏற்படுத்தப்பட்ட இந்தக் கோயிலின் தல விருட்சம் மாமரம். அம்பிகைக்கு அபயாம்பிகை என்று பெயர். அகத்தியர் இந்த அம்பிகையை அஞ்சல் நாயகி எனப் போற்றுவார். காவிரி நீர் கரைபுரண்டு ஓடினாலும் திருஞானசம்பந்தருக்காக வெள்ளமே ஒதுங்கி வழிவிட்ட ஊர் இது. காசி விஸ்வநாதர் கோயிலைத் தொழுதால் என்ன பலனோ, அதனை இங்கு சென்றால் அடையலாம்.
‘‘காசியுறை கங்கைக்கும் விமோசனந் தரும் பொன்னி’’ என்று அகத்தியர் பேசுகிறார். கண்ணுவ மகரிஷி என்ற முனிவர் ஒருமுறை கங்கையில் நீராடச் செல்லுகையில், சண்டாளக் கோலத்துடன் வந்த மூன்று தேவ கன்னியரைக் கண்டு, ‘‘இக்கோலம் வரக் காரணம் என்ன?’’ எனக் கேட்டார். முனிவரை அந்த மூவரும் வணங்கி, ‘‘கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற புண்ணிய நதிகளான நாங்கள் மக்கள் நீராடி தம் பாவங்களை எங்களில் கழுவியமையால், வந்த அவலம் இது’’ என்று சொல்லி வருந்தினார்கள். கண்ணுவ மகரிஷி, ‘‘மயூரநாதர் திருவடிக் கீழ் ஓடும் காவிரியில் நீராடி, அன்னை அபயாம்பிகை சமேத மயூர நாதனை ஐப்பசி மாதத்தில் தொழுதால், பாவங்கள் நீங்கப்பெற்று, முன்போல் அழகுறலாம்’’ என்றார்.
அன்று தொட்டு என்றுமே ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் முப்பது நாளும் கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகள் மயூரநாதரை காவிரியில் நீராடித் தொழுது விமோசனம் பெற்று வருகின்றன. எனவே, ஒவ்வொரு பக்தரும் ஐப்பசி மாதத்தில் ஏதாவது ஒருநாள், காவிரியில் முழுகி எழுந்து மயூரநாதனைத் தொழவேண்டும். இயலாது போனால், ஐப்பசி மாதம் கடைசி நாள் கண்டிப்பாக காவிரியில் முழுகி, மயூரநாதனைத் தொழ, சுவர்க்கம் நிச்சயம். அதனைக் ‘கடைமுகம்’ என்கின்றனர் முனிவர்கள். ‘‘கடைமுக முழுக்கு வினையறுக்கும் பந்தமும் தொட்ட பிறவி பயனைத் தருமன்றோ!’’
-நமது தீவினையைக் கெடுக்கும்; நமது உறவினருக்கும் நற்கதியைத் தரும். எத்துணை தவறுகள் செய்திருந்தாலும் பிறவி எடுத்ததின் பலனை முழுமையாக அடைய ஏதுவாகும் என்கிறது நாடி. கார்த்திகை மாதம், முதல்நாள் அதிகாலையில் சூரிய உதயம் ஆகும் முன் காவிரி நீராடுதல் மிகவும் உத்தமம். இதனை பெரியோர், ‘முடவன் முழுக்கு’ என்பர். முடவன் என்றால், சனி கிரகத்தையும் ராகு, கேது எனப்படும் நிழல்களின் அம்சமான கோள்களையும் குறிக்கும். எனவே, முடவன் முழுக்கு நேரத்தில் காவிரியில் நீராடினால், சனி கிரகத்தினாலும் கிரகண தோஷங்களினாலும் உண்டான தோஷங்கள் நீங்கும்.
இவ்வாறு தோஷம் ஏற்பட்டதினாலேயே படைக்கும் தொழிலை மேற்கொண்ட பிரம்மதேவர், அந்தணக் கோலத்தில் இங்கு எழுந்தருளி, புரட்டாசி மாதக் கடைசி நாள் முதல், கார்த்திகை மாதம் முதல் நாள், அதாவது முடவன் முழுக்கு நாள் வரைக்கும் காவிரியில் நீராடி, மயூர நாதனைத் தொழுது செல்கின்றார். தர்மசிந்தை கொண்ட ஆன்மாக்களுக்கும்கூட துயர் தந்த தோஷம் போக்க இப்படி செய்கின்றாராம்.
‘‘அறமது பிசகா ஆன்மாக்கள்
தமக்கல்லல் ஈந்த வினையகல
அயனுமிருந்து தொழுதேத்தும்
மயூரபுரி நாதன் போற்றுதுமே’’
-என்கிறார், குடமுனிச் சித்தர்.
இங்கு மகாவிஷ்ணு சிவ பூஜை புரியும் சந்நதியை தொழுபவருக்கு குறைவற்ற செல்வம் கிடைக்கும். அஷ்ட லட்சுமிகள் உறையும் தலமிது. அருணகிரிக்கு ஆனந்தம் விளைவித்த பூமி. அருணகிரிநாதர் இங்குள்ள முருகப்பிரானை பிரார்த்தித்து, திருச்செந்தூரில் அவரது நடனத்தைக் கண்டு இன்புற்றார். வள்ளி- தெய்வானையுடன் கூடிய இந்த முருகப் பெருமான் சகல ஐஸ்வர்யங்களையும் தர வல்லவர். இவரது அனுக்ரகத்தாலேயே பற்பல இசைக் கலைஞர்கள், அரசியல் மேதைகள், சட்ட வல்லுநர்கள் நமது நாட்டிற்குக் கிடைத்தனர் என்றால் அது பொய் அல்ல.
‘‘அண்ணல் அப்பன் குறமணாளன்
தண்ணருளால் பேர் பெறுமே இத்தலம்
பண்டிதரும் இயலிசை விற்பன்னருந் தோன்ற
கருவாவானை கருத்தாய் போற்றுதுமே’’
-என்கிறார் அகத்தியர். ரிஷபாரூடராய் கொலுவிருக்கும் மயூரநாதனைத் தொழுபவர் உயர் பதவியை அடைவர்; அழியாக் கீர்த்தி பெறுவர். பாவங்கள் தீரும். கடவுளை நேரில் காண எண்ணுவோர் முயன்று மயூரநாதனை சரணடைந்தால் வெற்றி கிட்டும் என்கிறது, நாடி.
‘‘கிட்டாததேது மாயூரனை
சரணடைந்த பேருக்கு
அவனையுங் கண்டு களிக்க
கருவாவான் காரணன்
அவனை கருணையுள்ளங்
கொண்டறி’’
-என்கிறார், அகத்தியர். மயூரநாதனை சரண் அடைந்து விட்டால், எதுவும் நல்லதே நடக்கும். சிவபெருமானை தரிசிப்பது எளிதாகும். எல்லா காரியங்களுக்கும் உயிரான கருவான இறைவனாம், மயூரநாதனை, அன்பு உள்ளத்தால் உணரலாகுமே என்று பொருள். சிவசண்டிகேசரையும் தேஜஸ் சண்டிகேசுவரரையும் இங்கு தொழுதால் பெரிய நோய்கள் விலகிப் போகும். சிவபெருமானின் குஞ்சிதபாதத்தடியில் ஜுரதேவர் நிற்க, அருள் பரிபாலிக்கும் நடராஜரைத் தொழுதால் கண் பீடை, மூளை நோய், கபாலபீடை போன்றவை விலகும் என்பது அனுபவபூர்வமான உண்மை.
காசி விஸ்வநாதர் கோயில் விமானத்தைப் போன்றே விமானம் இங்கும் இருப்பதால், காசிக்குச் சென்று தொழ இயலாதவர்கள் இங்கு சென்று தொழுது பயன் பெறலாம். சிதம்பரத்திலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது மயிலாடுதுறை.(MY NATIVE TOWN )
Kanchi Maha Periva Thiruvadigal Saranam
மேன்மை வாழ்வளிப்பார் மயூரநாதர்
Mayuranathar of Mailaduthurai
திருப்பரையலூரில் சிவபெருமானை நிந்தனை செய்து தட்சன் செய்த வேள்வியில் பார்வதி தேவியார் கலந்து அவமானப்பட்டதில் சினமுற்ற சிவன், உமையவளை மயில் உரு எடுத்து, ஐப்பசி மாதம் முழுதும் விரதம் இருக்குமாறு ஆணையிட்டார். அவ்வாறு அன்னை மயிலாக உருவெடுத்த தலம் மயிலாடுதுறை. மயில் உருக்கொண்டு பார்வதி தேவியார் சிவனைத் தொழுத புண்ணியத் தலமான திருமயிலையை அடுத்து மயிலாடுதுறை சிறப்புடையது. ஒரு முதுமொழி உண்டு; ‘ஆயிரமானாலும் மாயூரமாகாது.’ அதன் பொருள், ஆயிரம் க்ஷேத்திரங்கள் இருந்தாலும் மாயூரம் போல் ஒரு புண்ணிய க்ஷேத்திரத்திற்கு ஈடாகாது என்றளவிற்கு பெருமை உடையவர் மயூரநாதர்.
‘‘அஞ்சல் நாயகியை யண்டி நிற்பர் வினைபோம் - போகாத் துயர் போம்’’ என்கிறார் அகத்தியர். அகத்தியர் தொழுத விநாயகர் இன்றும் இங்கு அருள்பாலிக்கிறார். சந்தன மரத்தடியமர்ந்த இந்த அகத்திய விநாயகரைத் தொழுதக்கால் கலை விருத்தி கூடும். காவிரிக் கரையில் அமைந்துள்ள எழில் வளமும் இயற்கை வளமும் கூடிய, பிரம்ம தேவனால் ஏற்படுத்தப்பட்ட இந்தக் கோயிலின் தல விருட்சம் மாமரம். அம்பிகைக்கு அபயாம்பிகை என்று பெயர். அகத்தியர் இந்த அம்பிகையை அஞ்சல் நாயகி எனப் போற்றுவார். காவிரி நீர் கரைபுரண்டு ஓடினாலும் திருஞானசம்பந்தருக்காக வெள்ளமே ஒதுங்கி வழிவிட்ட ஊர் இது. காசி விஸ்வநாதர் கோயிலைத் தொழுதால் என்ன பலனோ, அதனை இங்கு சென்றால் அடையலாம்.
‘‘காசியுறை கங்கைக்கும் விமோசனந் தரும் பொன்னி’’ என்று அகத்தியர் பேசுகிறார். கண்ணுவ மகரிஷி என்ற முனிவர் ஒருமுறை கங்கையில் நீராடச் செல்லுகையில், சண்டாளக் கோலத்துடன் வந்த மூன்று தேவ கன்னியரைக் கண்டு, ‘‘இக்கோலம் வரக் காரணம் என்ன?’’ எனக் கேட்டார். முனிவரை அந்த மூவரும் வணங்கி, ‘‘கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற புண்ணிய நதிகளான நாங்கள் மக்கள் நீராடி தம் பாவங்களை எங்களில் கழுவியமையால், வந்த அவலம் இது’’ என்று சொல்லி வருந்தினார்கள். கண்ணுவ மகரிஷி, ‘‘மயூரநாதர் திருவடிக் கீழ் ஓடும் காவிரியில் நீராடி, அன்னை அபயாம்பிகை சமேத மயூர நாதனை ஐப்பசி மாதத்தில் தொழுதால், பாவங்கள் நீங்கப்பெற்று, முன்போல் அழகுறலாம்’’ என்றார்.
அன்று தொட்டு என்றுமே ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் முப்பது நாளும் கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகள் மயூரநாதரை காவிரியில் நீராடித் தொழுது விமோசனம் பெற்று வருகின்றன. எனவே, ஒவ்வொரு பக்தரும் ஐப்பசி மாதத்தில் ஏதாவது ஒருநாள், காவிரியில் முழுகி எழுந்து மயூரநாதனைத் தொழவேண்டும். இயலாது போனால், ஐப்பசி மாதம் கடைசி நாள் கண்டிப்பாக காவிரியில் முழுகி, மயூரநாதனைத் தொழ, சுவர்க்கம் நிச்சயம். அதனைக் ‘கடைமுகம்’ என்கின்றனர் முனிவர்கள். ‘‘கடைமுக முழுக்கு வினையறுக்கும் பந்தமும் தொட்ட பிறவி பயனைத் தருமன்றோ!’’
-நமது தீவினையைக் கெடுக்கும்; நமது உறவினருக்கும் நற்கதியைத் தரும். எத்துணை தவறுகள் செய்திருந்தாலும் பிறவி எடுத்ததின் பலனை முழுமையாக அடைய ஏதுவாகும் என்கிறது நாடி. கார்த்திகை மாதம், முதல்நாள் அதிகாலையில் சூரிய உதயம் ஆகும் முன் காவிரி நீராடுதல் மிகவும் உத்தமம். இதனை பெரியோர், ‘முடவன் முழுக்கு’ என்பர். முடவன் என்றால், சனி கிரகத்தையும் ராகு, கேது எனப்படும் நிழல்களின் அம்சமான கோள்களையும் குறிக்கும். எனவே, முடவன் முழுக்கு நேரத்தில் காவிரியில் நீராடினால், சனி கிரகத்தினாலும் கிரகண தோஷங்களினாலும் உண்டான தோஷங்கள் நீங்கும்.
இவ்வாறு தோஷம் ஏற்பட்டதினாலேயே படைக்கும் தொழிலை மேற்கொண்ட பிரம்மதேவர், அந்தணக் கோலத்தில் இங்கு எழுந்தருளி, புரட்டாசி மாதக் கடைசி நாள் முதல், கார்த்திகை மாதம் முதல் நாள், அதாவது முடவன் முழுக்கு நாள் வரைக்கும் காவிரியில் நீராடி, மயூர நாதனைத் தொழுது செல்கின்றார். தர்மசிந்தை கொண்ட ஆன்மாக்களுக்கும்கூட துயர் தந்த தோஷம் போக்க இப்படி செய்கின்றாராம்.
‘‘அறமது பிசகா ஆன்மாக்கள்
தமக்கல்லல் ஈந்த வினையகல
அயனுமிருந்து தொழுதேத்தும்
மயூரபுரி நாதன் போற்றுதுமே’’
-என்கிறார், குடமுனிச் சித்தர்.
இங்கு மகாவிஷ்ணு சிவ பூஜை புரியும் சந்நதியை தொழுபவருக்கு குறைவற்ற செல்வம் கிடைக்கும். அஷ்ட லட்சுமிகள் உறையும் தலமிது. அருணகிரிக்கு ஆனந்தம் விளைவித்த பூமி. அருணகிரிநாதர் இங்குள்ள முருகப்பிரானை பிரார்த்தித்து, திருச்செந்தூரில் அவரது நடனத்தைக் கண்டு இன்புற்றார். வள்ளி- தெய்வானையுடன் கூடிய இந்த முருகப் பெருமான் சகல ஐஸ்வர்யங்களையும் தர வல்லவர். இவரது அனுக்ரகத்தாலேயே பற்பல இசைக் கலைஞர்கள், அரசியல் மேதைகள், சட்ட வல்லுநர்கள் நமது நாட்டிற்குக் கிடைத்தனர் என்றால் அது பொய் அல்ல.
‘‘அண்ணல் அப்பன் குறமணாளன்
தண்ணருளால் பேர் பெறுமே இத்தலம்
பண்டிதரும் இயலிசை விற்பன்னருந் தோன்ற
கருவாவானை கருத்தாய் போற்றுதுமே’’
-என்கிறார் அகத்தியர். ரிஷபாரூடராய் கொலுவிருக்கும் மயூரநாதனைத் தொழுபவர் உயர் பதவியை அடைவர்; அழியாக் கீர்த்தி பெறுவர். பாவங்கள் தீரும். கடவுளை நேரில் காண எண்ணுவோர் முயன்று மயூரநாதனை சரணடைந்தால் வெற்றி கிட்டும் என்கிறது, நாடி.
‘‘கிட்டாததேது மாயூரனை
சரணடைந்த பேருக்கு
அவனையுங் கண்டு களிக்க
கருவாவான் காரணன்
அவனை கருணையுள்ளங்
கொண்டறி’’
-என்கிறார், அகத்தியர். மயூரநாதனை சரண் அடைந்து விட்டால், எதுவும் நல்லதே நடக்கும். சிவபெருமானை தரிசிப்பது எளிதாகும். எல்லா காரியங்களுக்கும் உயிரான கருவான இறைவனாம், மயூரநாதனை, அன்பு உள்ளத்தால் உணரலாகுமே என்று பொருள். சிவசண்டிகேசரையும் தேஜஸ் சண்டிகேசுவரரையும் இங்கு தொழுதால் பெரிய நோய்கள் விலகிப் போகும். சிவபெருமானின் குஞ்சிதபாதத்தடியில் ஜுரதேவர் நிற்க, அருள் பரிபாலிக்கும் நடராஜரைத் தொழுதால் கண் பீடை, மூளை நோய், கபாலபீடை போன்றவை விலகும் என்பது அனுபவபூர்வமான உண்மை.
காசி விஸ்வநாதர் கோயில் விமானத்தைப் போன்றே விமானம் இங்கும் இருப்பதால், காசிக்குச் சென்று தொழ இயலாதவர்கள் இங்கு சென்று தொழுது பயன் பெறலாம். சிதம்பரத்திலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது மயிலாடுதுறை.(MY NATIVE TOWN )
Kanchi Maha Periva Thiruvadigal Saranam