Post by radha on Aug 23, 2012 9:06:16 GMT 5.5
OM sri Gurupyo Namaha:,Respectful Pranams to Sri Kanchi Maha periva.
பரணீதரன் சந்தித்த அனுமந்த தாசர்
பரணீதரனின் அனுபவங்கள்.......
"திரு அனுமந்த தாஸ் என்ற ஸித்தரை நண்பர் பாப்ஜியோடு அவர் இல்லத்தில் சந்தித்தோம். நான் அவரோடு உரையாடிக்கொண்டிருந்தபோது வைத்த கண் வாங்காமல் பாப்ஜி அந்த அலுமினியப் பெட்டியையே [பாம்பு இருக்கும் பெட்டி] பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கும் அந்தப் பாம்பை பார்க்க வேண்டும் என்ற ஆவல்தான். "இந்தப் பாம்பு எப்படி உங்களிடம் வந்தது?" என்றேன். ஆனால் அவர் அப்போதும் பெட்டியை திறக்கவில்லை. கதைதான் சொன்னார்.
"சிவராத்ரி அன்னிக்கி குண்டூரில் என் வீட்டில் சிவபூஜை பண்ணியபோது, ஸர்ப்ப ஆவாஹனம் பண்ணினேன். மொத்தம் அஞ்சு நல்ல பாம்பு வந்தது. பூஜைக்கப்புறம் நாலு பாம்பு போய்விட்டது. இந்த ஒரு பாம்பு மட்டும் என்னிடமே தங்கிவிட்டது! இதையும் கூட்டிக்கொண்டு பெரியவாளை தர்சனம் பண்ண வேண்டும் என்பதால் ஸ்ரீசைலம் வந்தேன்..." என்று கூறிவிட்டு இத்தனை நேரம் "பெட்டிப்பாம்பாக" இருந்த அந்த ஸர்ப்பத்தை எடுத்து வெளியே விட்டார்!
எங்களில் ஒருவரும் அதுவரை இத்தனை அருகில் ஒரு நல்லபாம்பை பார்த்ததே கிடையாது! ஏழடி நீளத்தில், ரெண்டே அடி தொலைவில் படம் எடுத்தாடும் ஒரு பாம்பைக் கண்டதும், சட்டென்று ஒருவித திகில் எங்களை பற்றிக் கொண்டது! "நீங்களெல்லாரும் யார்?" என்பது போல அது கம்பீரமாக சுற்றும் முற்றும் பார்த்தது. நாக்கை வெளியே நீட்டி நீட்டி உள்ளுக்கிழுத்துக் கொண்டது. பின்னர் மெல்ல ஊர்ந்து வந்து நண்பர்களின் மடியில் ஏறிற்று. எங்களுக்குள் லேசாக ஒரு தைர்யம் பிறந்தது! இது "கெட்ட பாம்பு" இல்லை, உண்மையிலேயே "நல்ல" பாம்புதான் என்ற உணர்வு உண்டானது. இருந்தாலும் உள்ளே ஒரு நடுக்கம்.ஆனால், முகத்திலோ, சிறிதும் பயமில்லை என்ற பாவனையில் ஒருவித அசட்டு சிரிப்பு! தாசர் கைகளை தட்டி பாட ஆரம்பித்தார்......
"சங்கர சிவா, சங்கர சிவா, சம்போ மகாதேவ சங்கர சிவா..." பாம்பு அவர் பக்கம் திரும்பியது. எங்களையும் பாடச் சொன்னார்.....பாடினோம். சட்டென்று திரும்பி என் காலருகில் வந்து படமெடுத்தது! முதன்முறையாக "பயபக்தி" என்பதின் முழுப் பொருளையும் உணர்ந்து கொண்டேன்! என் காலடியில் ஒரு நல்லபாம்பை கண்டதும், பயமும் பக்தியும் இணைந்த வாழ்க்கை தத்துவத்தை உணர்ந்தேன். ஆனால், சற்று நேரத்தில்,மெய்யான பக்தியோடு அதனிடம் பேரன்பு கொண்டுவிட்டால், நாம் ஏன் பயப்படவேண்டும்? என்ற வினோதமான மனநிலை ! அதன் கண்களை நேருக்குநேர் சந்திக்கும்போது, அதுவும் "கடவுளின் குழந்தை" என்ற எண்ணம் மட்டுமே உறுதியானது!
"இந்தப்பாம்புக்கு ஐநூறு வயஸ் ஆறது!" என்றார் அனுமந்த தாஸ்.
"அப்டியா? ஆச்சர்யமா இருக்கே! எப்படி கண்டுபிடித்தீர்கள்?"
உடனே அவர் பாம்பைத் தூக்கி அதன் கழுத்துக்கு கீழே விபூதிப்பட்டை போல ஐந்து கோடுகள் இருப்பதை காட்டி, "பார்த்தேளா? ஒவ்வொரு கோடும் நூறு வயசை குறிக்கும்....அஞ்சு கோடுக்கு ஐநூறு வயஸ்.. என்னோட பூஜைக்கு வரும் பாம்புகள் ரொம்ப ஆச்சாரமா இருக்கும். விடிகாலை இதுக்கு ஸ்நானம் பண்ணி வைப்பேன். இந்தப் பாம்பு பாலைத்தவிர வேறு எதுவும் சாப்பிடுவதில்லை! ஸுத்த சைவம்! எகாதசியன்னிக்கி பால் கூட குடிக்காது! ஸுத்த உபவாசம்! பட்டினியா இருக்கே...ன்னு வலுக்கட்டாயமா பாலைக் குடுத்தா, கக்கிவிடும்! இன்னிக்கி எகாதசியானதால அது எதுவுமே சாப்பிடலை....அதான் சோர்ந்து இருக்கு.." என்றார். அவருடைய வீட்டுக் குழந்தைகள் பாம்பு அருகில் வந்தும் கூட, கொஞ்சமும் பயப்படாமல் இருந்தனர். அதைப்பற்றி கேட்டதும், தாசர் சிரித்துக் கொண்டே....
"எதுக்கு பயப்படணும்? ஆஞ்சநேயஸ்வாமி வரவழைக்கும் பாம்பு நமக்கு ஒரு தீங்கும் பண்ணாது. "கடவுள் மீது எல்லையற்ற நம்பிக்கை வைத்து விட்டவர்கள் எதற்கும் பயப்பட தேவையே இல்லை....." என்பதை சொல்லாமல் சொன்னார்.
----------------------------------------
Kanchi Maha Periva Thiruvadigal Saranam
பரணீதரன் சந்தித்த அனுமந்த தாசர்
பரணீதரனின் அனுபவங்கள்.......
"திரு அனுமந்த தாஸ் என்ற ஸித்தரை நண்பர் பாப்ஜியோடு அவர் இல்லத்தில் சந்தித்தோம். நான் அவரோடு உரையாடிக்கொண்டிருந்தபோது வைத்த கண் வாங்காமல் பாப்ஜி அந்த அலுமினியப் பெட்டியையே [பாம்பு இருக்கும் பெட்டி] பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கும் அந்தப் பாம்பை பார்க்க வேண்டும் என்ற ஆவல்தான். "இந்தப் பாம்பு எப்படி உங்களிடம் வந்தது?" என்றேன். ஆனால் அவர் அப்போதும் பெட்டியை திறக்கவில்லை. கதைதான் சொன்னார்.
"சிவராத்ரி அன்னிக்கி குண்டூரில் என் வீட்டில் சிவபூஜை பண்ணியபோது, ஸர்ப்ப ஆவாஹனம் பண்ணினேன். மொத்தம் அஞ்சு நல்ல பாம்பு வந்தது. பூஜைக்கப்புறம் நாலு பாம்பு போய்விட்டது. இந்த ஒரு பாம்பு மட்டும் என்னிடமே தங்கிவிட்டது! இதையும் கூட்டிக்கொண்டு பெரியவாளை தர்சனம் பண்ண வேண்டும் என்பதால் ஸ்ரீசைலம் வந்தேன்..." என்று கூறிவிட்டு இத்தனை நேரம் "பெட்டிப்பாம்பாக" இருந்த அந்த ஸர்ப்பத்தை எடுத்து வெளியே விட்டார்!
எங்களில் ஒருவரும் அதுவரை இத்தனை அருகில் ஒரு நல்லபாம்பை பார்த்ததே கிடையாது! ஏழடி நீளத்தில், ரெண்டே அடி தொலைவில் படம் எடுத்தாடும் ஒரு பாம்பைக் கண்டதும், சட்டென்று ஒருவித திகில் எங்களை பற்றிக் கொண்டது! "நீங்களெல்லாரும் யார்?" என்பது போல அது கம்பீரமாக சுற்றும் முற்றும் பார்த்தது. நாக்கை வெளியே நீட்டி நீட்டி உள்ளுக்கிழுத்துக் கொண்டது. பின்னர் மெல்ல ஊர்ந்து வந்து நண்பர்களின் மடியில் ஏறிற்று. எங்களுக்குள் லேசாக ஒரு தைர்யம் பிறந்தது! இது "கெட்ட பாம்பு" இல்லை, உண்மையிலேயே "நல்ல" பாம்புதான் என்ற உணர்வு உண்டானது. இருந்தாலும் உள்ளே ஒரு நடுக்கம்.ஆனால், முகத்திலோ, சிறிதும் பயமில்லை என்ற பாவனையில் ஒருவித அசட்டு சிரிப்பு! தாசர் கைகளை தட்டி பாட ஆரம்பித்தார்......
"சங்கர சிவா, சங்கர சிவா, சம்போ மகாதேவ சங்கர சிவா..." பாம்பு அவர் பக்கம் திரும்பியது. எங்களையும் பாடச் சொன்னார்.....பாடினோம். சட்டென்று திரும்பி என் காலருகில் வந்து படமெடுத்தது! முதன்முறையாக "பயபக்தி" என்பதின் முழுப் பொருளையும் உணர்ந்து கொண்டேன்! என் காலடியில் ஒரு நல்லபாம்பை கண்டதும், பயமும் பக்தியும் இணைந்த வாழ்க்கை தத்துவத்தை உணர்ந்தேன். ஆனால், சற்று நேரத்தில்,மெய்யான பக்தியோடு அதனிடம் பேரன்பு கொண்டுவிட்டால், நாம் ஏன் பயப்படவேண்டும்? என்ற வினோதமான மனநிலை ! அதன் கண்களை நேருக்குநேர் சந்திக்கும்போது, அதுவும் "கடவுளின் குழந்தை" என்ற எண்ணம் மட்டுமே உறுதியானது!
"இந்தப்பாம்புக்கு ஐநூறு வயஸ் ஆறது!" என்றார் அனுமந்த தாஸ்.
"அப்டியா? ஆச்சர்யமா இருக்கே! எப்படி கண்டுபிடித்தீர்கள்?"
உடனே அவர் பாம்பைத் தூக்கி அதன் கழுத்துக்கு கீழே விபூதிப்பட்டை போல ஐந்து கோடுகள் இருப்பதை காட்டி, "பார்த்தேளா? ஒவ்வொரு கோடும் நூறு வயசை குறிக்கும்....அஞ்சு கோடுக்கு ஐநூறு வயஸ்.. என்னோட பூஜைக்கு வரும் பாம்புகள் ரொம்ப ஆச்சாரமா இருக்கும். விடிகாலை இதுக்கு ஸ்நானம் பண்ணி வைப்பேன். இந்தப் பாம்பு பாலைத்தவிர வேறு எதுவும் சாப்பிடுவதில்லை! ஸுத்த சைவம்! எகாதசியன்னிக்கி பால் கூட குடிக்காது! ஸுத்த உபவாசம்! பட்டினியா இருக்கே...ன்னு வலுக்கட்டாயமா பாலைக் குடுத்தா, கக்கிவிடும்! இன்னிக்கி எகாதசியானதால அது எதுவுமே சாப்பிடலை....அதான் சோர்ந்து இருக்கு.." என்றார். அவருடைய வீட்டுக் குழந்தைகள் பாம்பு அருகில் வந்தும் கூட, கொஞ்சமும் பயப்படாமல் இருந்தனர். அதைப்பற்றி கேட்டதும், தாசர் சிரித்துக் கொண்டே....
"எதுக்கு பயப்படணும்? ஆஞ்சநேயஸ்வாமி வரவழைக்கும் பாம்பு நமக்கு ஒரு தீங்கும் பண்ணாது. "கடவுள் மீது எல்லையற்ற நம்பிக்கை வைத்து விட்டவர்கள் எதற்கும் பயப்பட தேவையே இல்லை....." என்பதை சொல்லாமல் சொன்னார்.
----------------------------------------
Kanchi Maha Periva Thiruvadigal Saranam