|
Post by subi24 on Aug 17, 2012 21:21:19 GMT 5.5
பாட்டில் கவிதை நயத்தைப் பற்றி பெரியவா மிக அழகாக வர்ணிக்கறார்:
பசுவின் வால் குச்சத்தில் நடுவிலிருந்து ஒவ்வொரு ரோமமாக எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிறுத்துக் கொண்டு வருகிறதோ அப்படி ஒரு வார்த்தை ஒவ்வொரு எழுத்தாகக் குறைந்துகொண்டே வருமாறு சித்ர கவிதை எழுதுவதுண்டு. பசு வாலை வைத்து இதற்கு 'கோபுச்ச யதி'என்று பெயர். முத்துஸ்வாமி தீக்ஷிதரும் கவிகளைப் போல இரண்டு மூன்று கீர்த்தனங்களில் இந்த முறையைக் கையாண்டிருக்கிறார். 'மாயே'என்ற தரங்கிணி ராக க்ருதியில் 'ஸரஸகாயே, ரஸகாயே, ஸகாயே, அயே'என்று பிரயோகம் பண்ணியிருக்கிறார். 'ஸரஸகாயே'என்றால் 'அன்பும் அழகும் கொண்ட மேனியாளே'. 'ரஸகாயே'என்றால் (உபநிஷத் வாக்யப்படி) ரஸ ஸவ்ரூபமாயிருப்பவுள். 'ஸகாயே'என்றால் அரூபமாய் மட்டுமில்லாமல் ரூபமும் கொண்டிருப்பவள். 'அயே'என்றால் குழந்தை அம்மாவைக் கூப்பிடுகிற மாதிரி பராசக்தியைச் செல்லமாகக் கூப்பிடுவது. இதேபோல ஆனந்த பைரவியில் 'த்யாகராஜ யோக வைபவம்'என்று ஆரம்பித்து, அடுத்ததாக இதிலே 'த்ய'வை த்யாகம் பண்ணி, 'அகராஜ யோக வைபவம்' (அகராஜன் என்றால் மலையரசனான ஹிமோத்கிரி) , அதற்கப்புறம் 'ராஜயோக வைபவம்', 'யோக வைபவம்', 'வைபவம்', 'பவம்' (பவஸகாரத்திலிருந்து கடத்துவிக்கிறவனுக்கே 'பவன்'என்றும் ஒரு முக்யமான நாமா உண்டு) , 'வம்'என்று முடிக்கிறார். 'வம்'என்றால் அம்ருத மயமாயிருப்பவன்.
|
|
|
Post by Kanchi Periva on Aug 17, 2012 22:10:04 GMT 5.5
Good post, thanks for sharing.
|
|