Post by radha on Aug 11, 2012 3:07:40 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
8-சந்திரசேகரம்–இந்திரா-செளந்தர்ராஜன்
பெரியவரானவர் அந்த போலீஸ்காரர்களின் ஆக்கிரமிப்பை ‘இதுவும் அம்பாள் செயலே!’ என்று ஞானருசியோடு பார்க்க, இளையவருக்கு மட்டும் கோபமான கோபம் வந்தது.
உங்கள் சரபோஜி, எதற்காக எங்களை இப்படி சுற்றி வளைத்து பிடிக்கிறார்? இந்த தஞ்சாவூர் நகரத்துக்குள்ளேயே கால் பட்டுவிடக்கூடாது என்று ஒதுங்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஏன் இப்படி வைதீகமானவர்களை சிரமப்படுத்துகிறீர்கள்?” என்று கேட்டதற்கு சிப்பாய்களிடம் பதிலில்லை.
மாறாக ‘நடங்கள்’ என்கிற உத்தரவு வேறு…
இதில் பெரியவரின் மேனாவைச் (பல்லக்கு) சுற்றி மட்டுமே ஏழெட்டு போலீஸ்காரர்கள்!
அதேபோல இளைவருக்கும்…!
மேனாவுக்குள் இருக்கும் இளையவர் மனத்திலோ, சரபோஜி ராஜாவை நினைத்து மிகவே மனம் கொதித்தபடி இருந்தது. ‘உதவி செய்ய முடியாது என்று சொன்னவர், உபத்திரவம் எதற்கு செய்கிறார்?’ என்கிற கேள்வி வேறு…
ஆனால், நடந்ததே வேறு…
ஊருக்குள் செல்லச் செல்லத் தான் அது புரிந்தது. வைதீக பிராம்மணர்கள் பூர்ணகும்பத்துடன் காத்திருக்க, வழியெங்கும் தண்ணீர் தெளித்து கோலமும் போடப்பட்டிருந்தது.
அதாவது, ராஜ வரவேற்பு!
இப்படிக் கூடவா ஒரு ராஜா இருப்பார்?
அதற்கு சரபோஜி ராஜாவான சிவாஜி மஹாராஜா மிக பணிவாக பதில் கூறினார்.
ஸ்வாமிஜி! முதலில் என்னை மன்னித்துவிடுங்கள். உங்களால் நான் மிக மிக தன்யனாகியுள்ளேன். நீங்கள் உதவி கேட்டு வந்தபோது, நான் அதை சாதாரணமாய் எடுத்துக்கொண்டு உதவ மறுத்து விட்டேன். அதற்காக இப்போது எவ்வளவு சந்தோஷப்படுகிறேன் தெரியுமா?” என்று திருப்பிக் கேள்வி கேட்டார்.
உங்கள் பேச்சு, செயல் எல்லாமே புரியாத புதிராகவே உள்ளதே?” என்றார் பெரியவர்.
உண்மைதான்… உங்களிடம் முடியாது என்று நான் சொல்லப்போக, அந்த அம்பாளுக்கே என் மேல் கோபமான கோபம் வந்துவிட்டது. இரவு என் சொப்பனத்தில் தோன்றியவள், ‘என் குழந்தைகளை இப்படி ஏமாற்றி அனுப்பிவிட்டாயே – இதற்கா நான் உனக்கு திரவியங்களை தந்திருக்கிறேன்?’ என்றும் கேட்டாள். உடம்பெல்லாம் வியர்த்திட தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தேன். ஒருபுறம் இப்படி கோபத்துக்கு ஆளாகிவிட்டோமே என்ற வருத்தம் ஏற்பட்டாலும், மறுபுறம் அவள் தரிசனம் கிடைத்ததை நான் என்ன வென்று சொல்வேன்?
உங்களுக்கு கருணை செய்ய உத்தேசித்தவள், போனால் போகிறது என்று எனக்கும் கருணை செய்துவிட்டாள். இது எத்தனை பெரிய பாக்கியம்?” என்று கேட்கவும், பெரியவருக்கும் சரி; இளையவருக்கும் சரி, அப்படியே மனது குளிர்ந்து, கண்களிலும் ஆனந்தக்கண்ணீர் வந்து தேங்கிவிட்டது.
அப்புறமென்ன?
தர்பார்தான்… தங்கம், வெள்ளி என்று வாரி இறைத்ததோடு, மடத்து பணிகளுக்கான உபபொருட்களாக கூடாரத்திலே இருந்து வலம்புரிச் சங்கு தங்க வட்டில், வெள்ளிப்பாத்திரங்கள் என்று பரிசாகக் குவித்துவிட்டார்.
இது போக, தஞ்சை ராஜ வீதியில் யானை மேலேறிக்கொண்டு நகர்வலம் வேறு. இந்த நகர்வலத்தின்பொருட்டு, பெரியவர் யானை மேல் ஏற சிரமப்பட்ட போது, சிவாஜி மஹாராஜாவே முன் வந்து தன் தோளைத் தந்து, அதில் பெரியவர் கால் பதிய யானை மேல் ஏறிக்கொள்ள, சிவாஜி மஹாராஜாவிடம் ஒரே பூரிப்பு!
இறுதியில் கூட்டிக்கழித்து பார்த்த போது, மடத்துக் கடன்கள் அவ்வளவும் நீங்கி ஐயாயிரத்துக்கும் மேலாக பொற் காசுகள் மீதமிருந்தது.
‘அந்த காமாட்சிக்குதான் என்ன ஒரு கருணை?’ இளையவர் மனது நெகிழ்ந்து விட்டது. அதுவே, ‘அவள் இருக்கிறாள். இனி நமக்கென்ன கவலை’ என்று, தொடர்ந்து மடத்துப் பணிகளை வெகு உற்சாகமாக செய்யவும் காரணமாகிவிட்டது. இங்கேதான் கடவுள் எனப்படும் காமாட்சியோ, மீனாட்சியோ, இல்லை, ஈஸ்வரனோ, மஹாவிஷ்ணுவோ ஏன் ஊரார் அவ்வளவு பேரும் பார்க்க பிரத்யட்சமாவதில்லை என்னும் கேள்விக்கு விடையும் உள்ளது.
இந்த விடை நேரிடையானது கிடையாது. அதை சூட்சுமமாகத்தான் புரிந்து கொள்ள வேண்டும். இளையவருக்கு உற்சாகம் மிகுதியாகிவிட்ட நிலையில், பெரியவரை காமாட்சி தன் திருவடிகளில் சேர்த்துக்கொண்டாள். அதைத்தொடர்ந்து, அடுத்த பட்டத்துக்குரியவர் வந்து சேர்ந்தார். இவர் அப்படியே இளையவர் வழியில் சென்று நாடி வருபவர்களுக்கெல்லாம் வாரி வழங்கும் வள்ளலாகிவிட்டார்.
நான் ஒரு வேத பிராம்மணன்” என்று ஒருவன் எதிரில் வந்து நின்று கண்களைக் கசக்கினாலே போதும். இந்தா பிடி” என்று அவருக்கு தங்கக் காசில் இருந்து, ரூபாய் வரை தரவும் திரும்பவும் மடம் கடனில் வந்து விழப் பார்த்தது.
இதைப்பார்த்த முன்னாள் இளைய வரும், இப்போதைய பெரியவருமானவர் திரும்ப கவலைப்படத் தொடங்கி, ஒரு குறுக்கு வழியை கண்டுபிடித்தார். அதன் படி, அவர் சிவாஜி மஹாராஜாவிடம் தன் மடத்துக்கு காவலுக்கு ஒரு பத்து சிப்பாய்கள் தினப்படிக்கே வேண்டும் என்று கேட்க, சிப்பாய்களும் வந்து இளையவரின் முகாமுக்குள் சுற்றி வளைத்து நின்று விட்டனர்! போலீஸைப் பார்த்தால், இளையவரிடம் பொய்களை கூறி பொருளுதவி கேட்டு வருபவர்கள் குறைந்து விடுவார்கள். மடம் கடனில் சிக்காது என்பது பெரியவரது எண்ணம்.
ஆனால், சிப்பாய்கள் வந்து நிற்கவும், இளையவர் நித்ய பூஜையைக்கூட செய்யாமல் பந்த் நடத்தத் தொடங்கி விட்டார். அதாவது, நித்யபூஜை எதையும் செய்யாதபடி, ஒரு மவுனயுத்தம் தொடங்கிவிட்டது.
அதன்பின் பெரியவர் வந்து, ‘இப்படி இருந்தால் மடம் கடனில் சிக்கிவிடும். இதை படாதபாடுபட்டு சிவாஜி மஹாராஜா உதவியாலே மீட்டு வைத்திருக்கிறேன்’ என்று கூறவும்தான், இளையவர் சமாதான மானார். போலீஸாரும் வாபசாகினர். அதேசமயம், புதிதாக பொறுப்பேற்ற இளையவருக்குள் புதுப்புது எண்ணங்கள்.
‘மடத்துக்கென்று நிரந்தர வருவாய் வந்தபடியே இருந்தால்… வாரி வழங்குவது குறித்தோ, இல்லை… மற்ற செலவுகள் குறித்தோ கவலை கொள்ளத் தேவையில்லை அல்லவா?’
- ஒரு தேர்ந்த நிர்வாகியைப் போல் யோசித்தவர், மடத்தில் மீதமிருக்கும் பொன்னைக் கொண்டு, நிலம் வாங்கி குத்தகைக்கு விட்டால், மடத்துக்கு அதன்மூலம் வருடம் தவறாமல் வருமானமும் தான்யங்களும்கூட கிடைத்து விடும் என நினைத்து, பொன்னை மூட்டையாக கட்டி எடுத்துக்கொண்டு, தனியே ஒரு குதிரைமேல் ஏறிக்கொண்டு, தஞ்சாவூர் பக்கத்தில் உள்ள கபிஸ்தலம் என்கிற ஊருக்கு பயணமாகி விட்டார்! அவருக்கு அப்போது கைகொடுத்து உதவி செய்தவர் கபிஸ்தலத்து மூப்பனார்தான்! (இப்போதைய மூப்பனார் அல்ல – இவர் முன்னோர்கள்).
அப்போது கும்பகோணத்துக்கு வட கிழக்கில் அணைக்குடி என்கிற கிராமம் இருந்தது. அந்த ஊரைச் சேர்ந்த மிராசுதாரான அணைக்குடி பிள்ளை என்பவரிடம் மூப்பனார் அழைத்துச்சென்றார். மிராசுதாருக்கு இளையவரின் அக்கறை மற்றும் அவரது தெய்வீகம் மிகவே பிடித்துவிட்டது.
இளையவர் கொடுத்த பொன்னை பதினேழாயிரம் ரூபாயாக மாற்றி எடுத்துக் கொண்டு, பதிலுக்கு தன் வசம் கும்பகோணத்துக்கு இரண்டே மைல் தொலைவில் இருந்த கருப்பூரில் உள்ள நாற்பது வேலி (270 ஏக்கர்) நிலத்தை சாசனம் செய்து கொடுத்தார். அத்தனை பெரிய இடம் பல லட்ச ரூபாய்க்கு போகும். ஆனால், மிராசுதாருக்கு மடத்துக்கு உதவ வேண்டும் என்பது எண்ணம்!
ஒரு மடத்து நிர்வாகம் என்பதுகூட இப்படி செலவுக்கும் கடனுக்கும் இடையில் சிக்கி தெய்வாதீனமாக மீட்டெடுக்கப் பட்டு, அதன் காரணமாக நிரந்தர வருமானம் என்பது ஒரு பொதுவான அமைப்புக்கு தேவை என்கிற எதார்த்தத்தில் வந்து நின்றுவிட்டது. இனி நாம் நம் மகாபெரியவரிடம் வருவோம்.
இந்த சம்பவங்களை எல்லாம் சொன்ன அவர், மடத்து நிர்வாகம் பற்றி சொன்ன கருத்துதான் இங்கே மிக முக்கியம்.
‘மடத்துக்கு பணபலம் அதிகம் கூடவே கூடாது என்கிற கட்சிதான் நான்! இந்த பலத்தை பெருக்குவதில் கவனம் சென்றால் தபஸ், தியானம் போன்ற ஆத்ம விசாரங்களில் எப்படி இறங்க முடியும்?
இம்மட்டில் சகலத்தையும் அம்பாள் செயலாக கருதிய முந்தைய பெரியவரின் நம்பிக்கையும், செயல்பாடுமே சரியான தாகும். அவளிடம் சகலத்தையும் விட்டு விட்டு, மடாதிபதிக்கு உண்டான கடமைகளில் இருந்து துளியும் விலகக்கூடாது. விலகி, வருவாய் பற்றி சிந்தித்தால், ஆத்ம விசாரம் தூரச் சென்றுவிடும். அம்பாளும் தூரச் சென்றுவிடுவாள்.
அவள் மேல் எண்ணம் இல்லாததால் தானே, நிலம் வாங்குவது, அதன்மூலம் வருவா காண்பது என்று புத்தி போகிறது? என்னதான் நல்ல எண்ணத்தோடு, நல்லவை அனைத்தும் பொருளாதாரப் பற்றாக்குறையால் ஷீணித்துவிடக்கூடாது என்று கருதி, இதுபோல செயல்பட ஒரு தனித்துணிவும் பார்வையும் வேண்டும். அது அன்றைய இளையவரிடம் இருந்தது.
‘அவர் அன்று வாங்கிப்போட்ட இடத்து வருவாதான், இன்று மடத்துக்கும் பெரிய வருவாய்’ என்று கூறிடும் பெரியவர் ‘கலியில் பக்தியை வளர்க்க முயற்சிக்கும்போது, இதுபோன்ற சில சமரசங்களுக்கும் இடம் கொடுக்க வேண்டியுள்ளது. ஆனால், சமரசமே வாழ்வாக மாறிவிடாதபடி, நிர்வகிப்பதில்தான் மடத்தின் அருட்பிரகாசம் இருக்கிறது’ என்கிறார். இதை, தான் வழி நடத்தும் மடத்துக்காக மட்டும் கூறவில்லை. இது எல்லோருக்குமான பொதுக் கருத்து.
பணம் சம்பாதிப்பது; பின் காப்பாற்றிக் கொள்ள பாடாப்படுவது என்பதிலேயே, இன்று பலர் வாழ்க்கை சென்று விடுகிறது. இங்கே அருளைச் சம்பாதிப்பது என்பது ஊறுகாய்போல ஏதோ இருக்கிறது. அவ்வளவுதான்!
பொருளைவிட இந்த அருள் என்ன அத்தனை பெரிதா? எந்த வகையில்…?
பெரியவர் வாழ்விலேயே ஒரு மகத்தான சம்பவம். அது பொருளைத் துச்சமாக்கி, அருளை ஒரு மலைபோல எல்லோருக்கும் காட்டிற்று. அது…?
- தொடரும்…
நன்றி – தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)
Kanchi Maha Periva Thiruvadigal Saranam
8-சந்திரசேகரம்–இந்திரா-செளந்தர்ராஜன்
பெரியவரானவர் அந்த போலீஸ்காரர்களின் ஆக்கிரமிப்பை ‘இதுவும் அம்பாள் செயலே!’ என்று ஞானருசியோடு பார்க்க, இளையவருக்கு மட்டும் கோபமான கோபம் வந்தது.
உங்கள் சரபோஜி, எதற்காக எங்களை இப்படி சுற்றி வளைத்து பிடிக்கிறார்? இந்த தஞ்சாவூர் நகரத்துக்குள்ளேயே கால் பட்டுவிடக்கூடாது என்று ஒதுங்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஏன் இப்படி வைதீகமானவர்களை சிரமப்படுத்துகிறீர்கள்?” என்று கேட்டதற்கு சிப்பாய்களிடம் பதிலில்லை.
மாறாக ‘நடங்கள்’ என்கிற உத்தரவு வேறு…
இதில் பெரியவரின் மேனாவைச் (பல்லக்கு) சுற்றி மட்டுமே ஏழெட்டு போலீஸ்காரர்கள்!
அதேபோல இளைவருக்கும்…!
மேனாவுக்குள் இருக்கும் இளையவர் மனத்திலோ, சரபோஜி ராஜாவை நினைத்து மிகவே மனம் கொதித்தபடி இருந்தது. ‘உதவி செய்ய முடியாது என்று சொன்னவர், உபத்திரவம் எதற்கு செய்கிறார்?’ என்கிற கேள்வி வேறு…
ஆனால், நடந்ததே வேறு…
ஊருக்குள் செல்லச் செல்லத் தான் அது புரிந்தது. வைதீக பிராம்மணர்கள் பூர்ணகும்பத்துடன் காத்திருக்க, வழியெங்கும் தண்ணீர் தெளித்து கோலமும் போடப்பட்டிருந்தது.
அதாவது, ராஜ வரவேற்பு!
இப்படிக் கூடவா ஒரு ராஜா இருப்பார்?
அதற்கு சரபோஜி ராஜாவான சிவாஜி மஹாராஜா மிக பணிவாக பதில் கூறினார்.
ஸ்வாமிஜி! முதலில் என்னை மன்னித்துவிடுங்கள். உங்களால் நான் மிக மிக தன்யனாகியுள்ளேன். நீங்கள் உதவி கேட்டு வந்தபோது, நான் அதை சாதாரணமாய் எடுத்துக்கொண்டு உதவ மறுத்து விட்டேன். அதற்காக இப்போது எவ்வளவு சந்தோஷப்படுகிறேன் தெரியுமா?” என்று திருப்பிக் கேள்வி கேட்டார்.
உங்கள் பேச்சு, செயல் எல்லாமே புரியாத புதிராகவே உள்ளதே?” என்றார் பெரியவர்.
உண்மைதான்… உங்களிடம் முடியாது என்று நான் சொல்லப்போக, அந்த அம்பாளுக்கே என் மேல் கோபமான கோபம் வந்துவிட்டது. இரவு என் சொப்பனத்தில் தோன்றியவள், ‘என் குழந்தைகளை இப்படி ஏமாற்றி அனுப்பிவிட்டாயே – இதற்கா நான் உனக்கு திரவியங்களை தந்திருக்கிறேன்?’ என்றும் கேட்டாள். உடம்பெல்லாம் வியர்த்திட தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தேன். ஒருபுறம் இப்படி கோபத்துக்கு ஆளாகிவிட்டோமே என்ற வருத்தம் ஏற்பட்டாலும், மறுபுறம் அவள் தரிசனம் கிடைத்ததை நான் என்ன வென்று சொல்வேன்?
உங்களுக்கு கருணை செய்ய உத்தேசித்தவள், போனால் போகிறது என்று எனக்கும் கருணை செய்துவிட்டாள். இது எத்தனை பெரிய பாக்கியம்?” என்று கேட்கவும், பெரியவருக்கும் சரி; இளையவருக்கும் சரி, அப்படியே மனது குளிர்ந்து, கண்களிலும் ஆனந்தக்கண்ணீர் வந்து தேங்கிவிட்டது.
அப்புறமென்ன?
தர்பார்தான்… தங்கம், வெள்ளி என்று வாரி இறைத்ததோடு, மடத்து பணிகளுக்கான உபபொருட்களாக கூடாரத்திலே இருந்து வலம்புரிச் சங்கு தங்க வட்டில், வெள்ளிப்பாத்திரங்கள் என்று பரிசாகக் குவித்துவிட்டார்.
இது போக, தஞ்சை ராஜ வீதியில் யானை மேலேறிக்கொண்டு நகர்வலம் வேறு. இந்த நகர்வலத்தின்பொருட்டு, பெரியவர் யானை மேல் ஏற சிரமப்பட்ட போது, சிவாஜி மஹாராஜாவே முன் வந்து தன் தோளைத் தந்து, அதில் பெரியவர் கால் பதிய யானை மேல் ஏறிக்கொள்ள, சிவாஜி மஹாராஜாவிடம் ஒரே பூரிப்பு!
இறுதியில் கூட்டிக்கழித்து பார்த்த போது, மடத்துக் கடன்கள் அவ்வளவும் நீங்கி ஐயாயிரத்துக்கும் மேலாக பொற் காசுகள் மீதமிருந்தது.
‘அந்த காமாட்சிக்குதான் என்ன ஒரு கருணை?’ இளையவர் மனது நெகிழ்ந்து விட்டது. அதுவே, ‘அவள் இருக்கிறாள். இனி நமக்கென்ன கவலை’ என்று, தொடர்ந்து மடத்துப் பணிகளை வெகு உற்சாகமாக செய்யவும் காரணமாகிவிட்டது. இங்கேதான் கடவுள் எனப்படும் காமாட்சியோ, மீனாட்சியோ, இல்லை, ஈஸ்வரனோ, மஹாவிஷ்ணுவோ ஏன் ஊரார் அவ்வளவு பேரும் பார்க்க பிரத்யட்சமாவதில்லை என்னும் கேள்விக்கு விடையும் உள்ளது.
இந்த விடை நேரிடையானது கிடையாது. அதை சூட்சுமமாகத்தான் புரிந்து கொள்ள வேண்டும். இளையவருக்கு உற்சாகம் மிகுதியாகிவிட்ட நிலையில், பெரியவரை காமாட்சி தன் திருவடிகளில் சேர்த்துக்கொண்டாள். அதைத்தொடர்ந்து, அடுத்த பட்டத்துக்குரியவர் வந்து சேர்ந்தார். இவர் அப்படியே இளையவர் வழியில் சென்று நாடி வருபவர்களுக்கெல்லாம் வாரி வழங்கும் வள்ளலாகிவிட்டார்.
நான் ஒரு வேத பிராம்மணன்” என்று ஒருவன் எதிரில் வந்து நின்று கண்களைக் கசக்கினாலே போதும். இந்தா பிடி” என்று அவருக்கு தங்கக் காசில் இருந்து, ரூபாய் வரை தரவும் திரும்பவும் மடம் கடனில் வந்து விழப் பார்த்தது.
இதைப்பார்த்த முன்னாள் இளைய வரும், இப்போதைய பெரியவருமானவர் திரும்ப கவலைப்படத் தொடங்கி, ஒரு குறுக்கு வழியை கண்டுபிடித்தார். அதன் படி, அவர் சிவாஜி மஹாராஜாவிடம் தன் மடத்துக்கு காவலுக்கு ஒரு பத்து சிப்பாய்கள் தினப்படிக்கே வேண்டும் என்று கேட்க, சிப்பாய்களும் வந்து இளையவரின் முகாமுக்குள் சுற்றி வளைத்து நின்று விட்டனர்! போலீஸைப் பார்த்தால், இளையவரிடம் பொய்களை கூறி பொருளுதவி கேட்டு வருபவர்கள் குறைந்து விடுவார்கள். மடம் கடனில் சிக்காது என்பது பெரியவரது எண்ணம்.
ஆனால், சிப்பாய்கள் வந்து நிற்கவும், இளையவர் நித்ய பூஜையைக்கூட செய்யாமல் பந்த் நடத்தத் தொடங்கி விட்டார். அதாவது, நித்யபூஜை எதையும் செய்யாதபடி, ஒரு மவுனயுத்தம் தொடங்கிவிட்டது.
அதன்பின் பெரியவர் வந்து, ‘இப்படி இருந்தால் மடம் கடனில் சிக்கிவிடும். இதை படாதபாடுபட்டு சிவாஜி மஹாராஜா உதவியாலே மீட்டு வைத்திருக்கிறேன்’ என்று கூறவும்தான், இளையவர் சமாதான மானார். போலீஸாரும் வாபசாகினர். அதேசமயம், புதிதாக பொறுப்பேற்ற இளையவருக்குள் புதுப்புது எண்ணங்கள்.
‘மடத்துக்கென்று நிரந்தர வருவாய் வந்தபடியே இருந்தால்… வாரி வழங்குவது குறித்தோ, இல்லை… மற்ற செலவுகள் குறித்தோ கவலை கொள்ளத் தேவையில்லை அல்லவா?’
- ஒரு தேர்ந்த நிர்வாகியைப் போல் யோசித்தவர், மடத்தில் மீதமிருக்கும் பொன்னைக் கொண்டு, நிலம் வாங்கி குத்தகைக்கு விட்டால், மடத்துக்கு அதன்மூலம் வருடம் தவறாமல் வருமானமும் தான்யங்களும்கூட கிடைத்து விடும் என நினைத்து, பொன்னை மூட்டையாக கட்டி எடுத்துக்கொண்டு, தனியே ஒரு குதிரைமேல் ஏறிக்கொண்டு, தஞ்சாவூர் பக்கத்தில் உள்ள கபிஸ்தலம் என்கிற ஊருக்கு பயணமாகி விட்டார்! அவருக்கு அப்போது கைகொடுத்து உதவி செய்தவர் கபிஸ்தலத்து மூப்பனார்தான்! (இப்போதைய மூப்பனார் அல்ல – இவர் முன்னோர்கள்).
அப்போது கும்பகோணத்துக்கு வட கிழக்கில் அணைக்குடி என்கிற கிராமம் இருந்தது. அந்த ஊரைச் சேர்ந்த மிராசுதாரான அணைக்குடி பிள்ளை என்பவரிடம் மூப்பனார் அழைத்துச்சென்றார். மிராசுதாருக்கு இளையவரின் அக்கறை மற்றும் அவரது தெய்வீகம் மிகவே பிடித்துவிட்டது.
இளையவர் கொடுத்த பொன்னை பதினேழாயிரம் ரூபாயாக மாற்றி எடுத்துக் கொண்டு, பதிலுக்கு தன் வசம் கும்பகோணத்துக்கு இரண்டே மைல் தொலைவில் இருந்த கருப்பூரில் உள்ள நாற்பது வேலி (270 ஏக்கர்) நிலத்தை சாசனம் செய்து கொடுத்தார். அத்தனை பெரிய இடம் பல லட்ச ரூபாய்க்கு போகும். ஆனால், மிராசுதாருக்கு மடத்துக்கு உதவ வேண்டும் என்பது எண்ணம்!
ஒரு மடத்து நிர்வாகம் என்பதுகூட இப்படி செலவுக்கும் கடனுக்கும் இடையில் சிக்கி தெய்வாதீனமாக மீட்டெடுக்கப் பட்டு, அதன் காரணமாக நிரந்தர வருமானம் என்பது ஒரு பொதுவான அமைப்புக்கு தேவை என்கிற எதார்த்தத்தில் வந்து நின்றுவிட்டது. இனி நாம் நம் மகாபெரியவரிடம் வருவோம்.
இந்த சம்பவங்களை எல்லாம் சொன்ன அவர், மடத்து நிர்வாகம் பற்றி சொன்ன கருத்துதான் இங்கே மிக முக்கியம்.
‘மடத்துக்கு பணபலம் அதிகம் கூடவே கூடாது என்கிற கட்சிதான் நான்! இந்த பலத்தை பெருக்குவதில் கவனம் சென்றால் தபஸ், தியானம் போன்ற ஆத்ம விசாரங்களில் எப்படி இறங்க முடியும்?
இம்மட்டில் சகலத்தையும் அம்பாள் செயலாக கருதிய முந்தைய பெரியவரின் நம்பிக்கையும், செயல்பாடுமே சரியான தாகும். அவளிடம் சகலத்தையும் விட்டு விட்டு, மடாதிபதிக்கு உண்டான கடமைகளில் இருந்து துளியும் விலகக்கூடாது. விலகி, வருவாய் பற்றி சிந்தித்தால், ஆத்ம விசாரம் தூரச் சென்றுவிடும். அம்பாளும் தூரச் சென்றுவிடுவாள்.
அவள் மேல் எண்ணம் இல்லாததால் தானே, நிலம் வாங்குவது, அதன்மூலம் வருவா காண்பது என்று புத்தி போகிறது? என்னதான் நல்ல எண்ணத்தோடு, நல்லவை அனைத்தும் பொருளாதாரப் பற்றாக்குறையால் ஷீணித்துவிடக்கூடாது என்று கருதி, இதுபோல செயல்பட ஒரு தனித்துணிவும் பார்வையும் வேண்டும். அது அன்றைய இளையவரிடம் இருந்தது.
‘அவர் அன்று வாங்கிப்போட்ட இடத்து வருவாதான், இன்று மடத்துக்கும் பெரிய வருவாய்’ என்று கூறிடும் பெரியவர் ‘கலியில் பக்தியை வளர்க்க முயற்சிக்கும்போது, இதுபோன்ற சில சமரசங்களுக்கும் இடம் கொடுக்க வேண்டியுள்ளது. ஆனால், சமரசமே வாழ்வாக மாறிவிடாதபடி, நிர்வகிப்பதில்தான் மடத்தின் அருட்பிரகாசம் இருக்கிறது’ என்கிறார். இதை, தான் வழி நடத்தும் மடத்துக்காக மட்டும் கூறவில்லை. இது எல்லோருக்குமான பொதுக் கருத்து.
பணம் சம்பாதிப்பது; பின் காப்பாற்றிக் கொள்ள பாடாப்படுவது என்பதிலேயே, இன்று பலர் வாழ்க்கை சென்று விடுகிறது. இங்கே அருளைச் சம்பாதிப்பது என்பது ஊறுகாய்போல ஏதோ இருக்கிறது. அவ்வளவுதான்!
பொருளைவிட இந்த அருள் என்ன அத்தனை பெரிதா? எந்த வகையில்…?
பெரியவர் வாழ்விலேயே ஒரு மகத்தான சம்பவம். அது பொருளைத் துச்சமாக்கி, அருளை ஒரு மலைபோல எல்லோருக்கும் காட்டிற்று. அது…?
- தொடரும்…
நன்றி – தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)
Kanchi Maha Periva Thiruvadigal Saranam