Post by soundar53 on Nov 7, 2023 2:27:21 GMT 5.5
அடியேனின் தமிழாக்க முயற்சி
நாராயணீயம் - தசகம் 1 - பகவானின் மகிமை
எண்ணிலா மறைநூல்கள்தம் உரைகளுக்கப்பால்
எளிதில் உணரா, கால நேர இட வரையிலா
நான்வாழ் இலக்காம் முக்திக்கு வித்திடும் ஈடிணையற்ற
ஆன்ம உணர்வெனும் ஒருமுகப்பட்ட செறிந்து பரவிய
எல்லையிலா பேரின்பப்பரம் பொருள், கண்டவுடன்
எழில் மிகு கண்ணனாய் மீண்டும் காட்சி கொடுத்தனனே !
என்ன புண்ணியம் செய்தனரோ குருவாயூர் மக்கள் ! ... 1
அரிய அப்பரம்பொருள் எளிதில் கைக்கிட்டினும் அற்ப பொருட்களை
அறியாமையால் உடல் வாக்கு மனதால் அருந்துவர் அந்தோ! அச்செயல்
அறிவிலிகளின் சிறுமையுடன் சேர் மடமையன்றோ! எனினும் யாம்
ஒருமித்த மன உறுதி கொண்டு உயிர்நிலைகள் ஒன்றிய உள்ளுருவாம் குருவாயூரப்பனைப் இப்பிறவிப் பிணிதீர சரணடைந்தோம் என்றும்...2
முக்குணத்தில் முதலாய் மாசிலா தூயநிலையாய் பேரின்ப ஒளியாய்
உடலுடன் உயிராய்ப் புலன்களுடன் வடிவாய் காட்சி கொடுப்பான் என
பல முறை கேட்ட வியாசரின் வாக்கு ஏற்ப “நிர்மால்ய” நிறை கொண்டு
பரகதி நிலையை தடையின்றி புலப்படுத்திடுவான் தஞ்சமடைந்தோர்க்கு
பன்னிசையாய் தேனென செவிபாயும் மனதிற்று மகிழ்வூட்டும் அவ்வடிவம்
பரவசம் அடைவர் நற்பேறு பெற்றோர் பற்றிடுவர் எளிதுடனே அவன் வடிவம்
....3
நிலையான, நித்தம் பரிபூரணமாம், அளவிலா பேரானந்தத்தேன் நிறை,
இறையெனும் தூயப் பேராழியில், முக்தி பெற்றோர், மிளிரும் முத்து மாலையென உறைய, அலை அலையென உதித்த சத்வ குண வடிவமோ
இவ்வடிவாய் இங்கு அவதரித்த பரம்பொருளான முழுமுதலோன்! உனை
வடிவு அந்தமிலா ஆதி என உறையில் மிகையில்லை எல்லையிலோனே!..4
செயல் வரையிலா, உள்நோக்கிலா, பிறப்பிலா பெருமாள் நீ - எனினும்
செய்திடுவாய் படைக்கும் பணிதனை கடைக்கண்ணாலே - விளைந்ததே,
பொய்மையென காலமெனும் சக்கரச்சுழலில் முதலில் மறைந்து, பின் மெய்மையாய் உருவெடுத்த உன்னுள் உறை இயற்கை - அவ்வுள்ளுறை
இயற்கையின் மாசிலா நற்குணமின் சிறு கூறென தடையின்றி ஒளிமிகு
நீக்கமற அமைந்த மகிமை நிறை அவ்எழில் வடிவம் இங்கு கண்டேனே!....5
மழைநிறைப் புதுக்கார்முகில் எழிலாய்
கருநீலக் கமலமலர்க் கொத்தொப்ப வனப்பாய்
இதுஒன்றே அழகென அச்சொல்லுக்கு வடிவாய்
நற்றவத்தவர் உள்ளிருந்து காணும் அவர்தம்
நல்வினைகளின் திருப்பிறப்பென வடிவமைந்தவனே
அலைமகள் தடையிலா மனமகிழ் ஆனந்த நிலையமே
அலையெனப் பெருகும் பேரின்பத் தேன் வெள்ளமதில்
அடியாரகள் திளைத்திட அருள்புரியும் ஆராவமுதனை
அடியேன் அனுதினமும் துதித்திடுவேன் என் குருவாயூரப்பனை! ...6
பிறப்போர்க்கு வேதனை பிணிதரும், படைத்தலெனும் உன் விளையாட்டு !
அங்கனம் யான் எண்ணியது பிழை இன்று, வினை ஒன்றுமிலா விலாசியே!
எங்கனம் பேரின்ப உன்இவ் வடிவைப் பருகிடுவர் தம் விழிசெவி வழியே ?
எங்கனம் பருகி பரவசமுடன் அமுதெனும் பேரானந்தக் கடலில் மூழ்கித் திளைத்து தம் பிறவிப்பணி தீர்ப்பர் உன் படைப்பிலையெனில் உலகோனே!
.....7
வணங்கிடும் அடியார்முன் காட்சி கொடுத்திட்டாய் எந்நேரமும்
வளமும், விழையும், விழையாப் பொருளும் அளித்திட்டாய் நித்தம்
குறைவிலா களிப்புடனே அடைந்தனரே அவர் பேரின்பப் பரவசம்
அனைவரும் அணுகும் அளவிலா பலன்தரும் பாரிஜாத அருமரமாம்
உனைவிடுத்து உம்பர் தோட்டத்து கீழ்தர விழை நிறை மரம்தனை
எண்ணிறந்த மாந்தர் அவாவினால் நாடுவரே வீணாக, ஹரியே.....8
வேண்டிடும் வரமளிப்பர் கருணையால் வேறுபல தெய்வங்கள் ! ஆனால்
நாடிடும் நலிந்தோர்க்கு முக்தியெனும் உனையே அளித்திடுவாயே நீ !
ஆண்டிடுவர் அடைந்த சக்தி கொண்டு வேறுபல தெய்வங்கள் ! எனினும்
ஆண்டவனே! அவருள் உறை சக்தி உன்னுள் உறை நீயன்றோ ! இதை
அறிந்திடும் நற்பேறான்மா அடைந்திடும் பேரானந்தம் ஒவ்வொரு முறையும்
அளவற்ற ஒப்பிலா நற்குணமுடை உன் இவ்வடிவே அப்பேரானந்தம் !
போற்றிடுவேன் உன் நாமம் பொழுதெல்லாம் குருவாயூரப்பனே!......9
சங்கரன் முதல் சகல தெய்வங்களும் உன்னுள் அடக்கம்.
இங்கனம் தரணியில் தீரமுடையோரை வாகை சூடும் வீரம்
தூய உன் புகழ், முற்றும் துறந்த முனியோரும் பாடி மகிழும்
மாயவன் உன் மார்பில் அலைமகள் மகிழ்ந்து பிரியா உறையும்
நீக்கமற நிறைந்தும், இல்லை உனக்கு சிறிதேனும் பற்றுதல் ஏதும் !
அரக்கன் முரனை வதைத்தவனே ! அறுகுண நிறை உனக்கே,
ஆண்டவன் எனும் பதம் வெகு பொருத்தமாகும் குருவாயூரப்பனே ! ..10
இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!
prabhusponder.com/tag/தசகம்-1/
நாராயணீயம் - தசகம் 1 - பகவானின் மகிமை
எண்ணிலா மறைநூல்கள்தம் உரைகளுக்கப்பால்
எளிதில் உணரா, கால நேர இட வரையிலா
நான்வாழ் இலக்காம் முக்திக்கு வித்திடும் ஈடிணையற்ற
ஆன்ம உணர்வெனும் ஒருமுகப்பட்ட செறிந்து பரவிய
எல்லையிலா பேரின்பப்பரம் பொருள், கண்டவுடன்
எழில் மிகு கண்ணனாய் மீண்டும் காட்சி கொடுத்தனனே !
என்ன புண்ணியம் செய்தனரோ குருவாயூர் மக்கள் ! ... 1
அரிய அப்பரம்பொருள் எளிதில் கைக்கிட்டினும் அற்ப பொருட்களை
அறியாமையால் உடல் வாக்கு மனதால் அருந்துவர் அந்தோ! அச்செயல்
அறிவிலிகளின் சிறுமையுடன் சேர் மடமையன்றோ! எனினும் யாம்
ஒருமித்த மன உறுதி கொண்டு உயிர்நிலைகள் ஒன்றிய உள்ளுருவாம் குருவாயூரப்பனைப் இப்பிறவிப் பிணிதீர சரணடைந்தோம் என்றும்...2
முக்குணத்தில் முதலாய் மாசிலா தூயநிலையாய் பேரின்ப ஒளியாய்
உடலுடன் உயிராய்ப் புலன்களுடன் வடிவாய் காட்சி கொடுப்பான் என
பல முறை கேட்ட வியாசரின் வாக்கு ஏற்ப “நிர்மால்ய” நிறை கொண்டு
பரகதி நிலையை தடையின்றி புலப்படுத்திடுவான் தஞ்சமடைந்தோர்க்கு
பன்னிசையாய் தேனென செவிபாயும் மனதிற்று மகிழ்வூட்டும் அவ்வடிவம்
பரவசம் அடைவர் நற்பேறு பெற்றோர் பற்றிடுவர் எளிதுடனே அவன் வடிவம்
....3
நிலையான, நித்தம் பரிபூரணமாம், அளவிலா பேரானந்தத்தேன் நிறை,
இறையெனும் தூயப் பேராழியில், முக்தி பெற்றோர், மிளிரும் முத்து மாலையென உறைய, அலை அலையென உதித்த சத்வ குண வடிவமோ
இவ்வடிவாய் இங்கு அவதரித்த பரம்பொருளான முழுமுதலோன்! உனை
வடிவு அந்தமிலா ஆதி என உறையில் மிகையில்லை எல்லையிலோனே!..4
செயல் வரையிலா, உள்நோக்கிலா, பிறப்பிலா பெருமாள் நீ - எனினும்
செய்திடுவாய் படைக்கும் பணிதனை கடைக்கண்ணாலே - விளைந்ததே,
பொய்மையென காலமெனும் சக்கரச்சுழலில் முதலில் மறைந்து, பின் மெய்மையாய் உருவெடுத்த உன்னுள் உறை இயற்கை - அவ்வுள்ளுறை
இயற்கையின் மாசிலா நற்குணமின் சிறு கூறென தடையின்றி ஒளிமிகு
நீக்கமற அமைந்த மகிமை நிறை அவ்எழில் வடிவம் இங்கு கண்டேனே!....5
மழைநிறைப் புதுக்கார்முகில் எழிலாய்
கருநீலக் கமலமலர்க் கொத்தொப்ப வனப்பாய்
இதுஒன்றே அழகென அச்சொல்லுக்கு வடிவாய்
நற்றவத்தவர் உள்ளிருந்து காணும் அவர்தம்
நல்வினைகளின் திருப்பிறப்பென வடிவமைந்தவனே
அலைமகள் தடையிலா மனமகிழ் ஆனந்த நிலையமே
அலையெனப் பெருகும் பேரின்பத் தேன் வெள்ளமதில்
அடியாரகள் திளைத்திட அருள்புரியும் ஆராவமுதனை
அடியேன் அனுதினமும் துதித்திடுவேன் என் குருவாயூரப்பனை! ...6
பிறப்போர்க்கு வேதனை பிணிதரும், படைத்தலெனும் உன் விளையாட்டு !
அங்கனம் யான் எண்ணியது பிழை இன்று, வினை ஒன்றுமிலா விலாசியே!
எங்கனம் பேரின்ப உன்இவ் வடிவைப் பருகிடுவர் தம் விழிசெவி வழியே ?
எங்கனம் பருகி பரவசமுடன் அமுதெனும் பேரானந்தக் கடலில் மூழ்கித் திளைத்து தம் பிறவிப்பணி தீர்ப்பர் உன் படைப்பிலையெனில் உலகோனே!
.....7
வணங்கிடும் அடியார்முன் காட்சி கொடுத்திட்டாய் எந்நேரமும்
வளமும், விழையும், விழையாப் பொருளும் அளித்திட்டாய் நித்தம்
குறைவிலா களிப்புடனே அடைந்தனரே அவர் பேரின்பப் பரவசம்
அனைவரும் அணுகும் அளவிலா பலன்தரும் பாரிஜாத அருமரமாம்
உனைவிடுத்து உம்பர் தோட்டத்து கீழ்தர விழை நிறை மரம்தனை
எண்ணிறந்த மாந்தர் அவாவினால் நாடுவரே வீணாக, ஹரியே.....8
வேண்டிடும் வரமளிப்பர் கருணையால் வேறுபல தெய்வங்கள் ! ஆனால்
நாடிடும் நலிந்தோர்க்கு முக்தியெனும் உனையே அளித்திடுவாயே நீ !
ஆண்டிடுவர் அடைந்த சக்தி கொண்டு வேறுபல தெய்வங்கள் ! எனினும்
ஆண்டவனே! அவருள் உறை சக்தி உன்னுள் உறை நீயன்றோ ! இதை
அறிந்திடும் நற்பேறான்மா அடைந்திடும் பேரானந்தம் ஒவ்வொரு முறையும்
அளவற்ற ஒப்பிலா நற்குணமுடை உன் இவ்வடிவே அப்பேரானந்தம் !
போற்றிடுவேன் உன் நாமம் பொழுதெல்லாம் குருவாயூரப்பனே!......9
சங்கரன் முதல் சகல தெய்வங்களும் உன்னுள் அடக்கம்.
இங்கனம் தரணியில் தீரமுடையோரை வாகை சூடும் வீரம்
தூய உன் புகழ், முற்றும் துறந்த முனியோரும் பாடி மகிழும்
மாயவன் உன் மார்பில் அலைமகள் மகிழ்ந்து பிரியா உறையும்
நீக்கமற நிறைந்தும், இல்லை உனக்கு சிறிதேனும் பற்றுதல் ஏதும் !
அரக்கன் முரனை வதைத்தவனே ! அறுகுண நிறை உனக்கே,
ஆண்டவன் எனும் பதம் வெகு பொருத்தமாகும் குருவாயூரப்பனே ! ..10
இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!
prabhusponder.com/tag/தசகம்-1/