Post by varagoorannarayanan on Aug 25, 2022 11:30:34 GMT 5.5
"நூலில் தொடுத்த பூ மாலை"
நூலால் தொடுத்த மலர்களை,சந்திரமௌலீஸ்வரருக்கு அலங்காரம் செய்யும் வழக்கமில்லை.-குன்று அளவிற்குப் புஷ்பங்களும்,மாலைகளும் கொண்டு வந்த அன்பருக்கு சோதனை.
"ஸ்வாமிக்கு வேண்டாம், ஆனால் நான் உபயோகப்படுத்தலாமே"- என்று பெரியவா சொல்லி அன்பரின் வாட்டத்தை போக்கி,சிஷ்யர்களுக்கு சந்தோஷத்தையும் ஏற்படுத்திய பெரியவாள்-கருணாமூர்த்தி.
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு.
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
சென்னையிலிருந்து வந்த ஓர் அன்பர், குன்று அளவுக்குப் புஷ்பங்கள் கொண்டு வந்தார். விதவிதமான மாலைகள், கதம்பம், கெட்டியான மல்லிகைச் சரம் என்று வண்ணமாய், அழகாகத் தொடுக்கப்பட்டிருந்தன.
ஆனால், அவற்றை சந்திரமௌலீஸ்வரருக்குச் சார்த்த முடியவில்லை. வாழை நாரில் இல்லாமல், நூலால் தொடுக்கப்பட்டிருந்தன. நூலால் தொடுத்த மலர்களை, சந்திரமௌலீஸ்வரருக்கு அலங்காரம் செய்யும் வழக்கமில்லை.
அன்பருடைய துயரத்தை அளவிட்டுச் சொல்ல முடியாது. எவ்வளவு ஆசையாக வாங்கி வந்தார்? ஒரு சாண் மல்லிகைச் சரம் கூட சந்திரமௌலீஸ்வரருக்குப் போடப்படவில்லையே?
பூஜை முடிந்து, பெரியவாள் வெளியே வந்தார்கள். வரும் வழியில், கூடைகளில் மலர் மாலைகளைக் கண்டார்கள்.
"ஏன் இவற்றைப் பூஜைக்குக் கொடுக்கவில்லை?" என்று பார்வையாலேயே கேள்வி.
"நூலில் தொடுத்திருக்கு.."--சிஷ்யர்கள்.
புஷ்பம் வாங்கி வந்த அன்பருக்கு, நெஞ்சம் 'தடதட' வென்று அடித்துக் கொண்டது. என்ன பதில் வருமோ என்று.
பெரியவாள் கருணாமூர்த்தி.
"நூலில் தொடுத்த புஷ்பம் ஸ்வாமிக்கு...சந்திர மௌலீஸ்வரருக்கு வேண்டாம். ஆனால், எனக்கு உபயோகப்படுத்தலாமே?"----பெரியவா.
சிஷ்யர்களுக்கு மகா சந்தோஷம். பெரியவாளை உட்கார வைத்து, எல்லா மலர் மாலைகளையும் அழகாகப் போட்டு, புஷ்பாங்கி போல் செய்து விட்டார்கள்.
எதிரே திரண்டிருந்த பக்தர்களுக்கு ஆனந்த வெள்ளம்.
"திருப்பதி வெங்கடாசலபதி" என்றார் ஒருவர். "திருச்செந்தூர் முருகன்.." "காஞ்சி காமாட்சி"--என்று சிலர்.
ஒரு வேதாந்தி; ஜகன் மித்யா என்று யாராவது சொல்லிக் கொன்டிருக்கட்டும். இந்த க்ஷணம், சத்யம், பிரம்மம் சத்யம், ஸகுணப் பிரம்மம் பரம சத்யம், சகுணம்,ஸத்குணம். பெரியவா ஸகுண பிரம்மம்... பிரும்மானந்தம்.." என்றார்.
சத்தியமான வார்த்தை.
நூலால் தொடுத்த மலர்களை,சந்திரமௌலீஸ்வரருக்கு அலங்காரம் செய்யும் வழக்கமில்லை.-குன்று அளவிற்குப் புஷ்பங்களும்,மாலைகளும் கொண்டு வந்த அன்பருக்கு சோதனை.
"ஸ்வாமிக்கு வேண்டாம், ஆனால் நான் உபயோகப்படுத்தலாமே"- என்று பெரியவா சொல்லி அன்பரின் வாட்டத்தை போக்கி,சிஷ்யர்களுக்கு சந்தோஷத்தையும் ஏற்படுத்திய பெரியவாள்-கருணாமூர்த்தி.
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு.
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
சென்னையிலிருந்து வந்த ஓர் அன்பர், குன்று அளவுக்குப் புஷ்பங்கள் கொண்டு வந்தார். விதவிதமான மாலைகள், கதம்பம், கெட்டியான மல்லிகைச் சரம் என்று வண்ணமாய், அழகாகத் தொடுக்கப்பட்டிருந்தன.
ஆனால், அவற்றை சந்திரமௌலீஸ்வரருக்குச் சார்த்த முடியவில்லை. வாழை நாரில் இல்லாமல், நூலால் தொடுக்கப்பட்டிருந்தன. நூலால் தொடுத்த மலர்களை, சந்திரமௌலீஸ்வரருக்கு அலங்காரம் செய்யும் வழக்கமில்லை.
அன்பருடைய துயரத்தை அளவிட்டுச் சொல்ல முடியாது. எவ்வளவு ஆசையாக வாங்கி வந்தார்? ஒரு சாண் மல்லிகைச் சரம் கூட சந்திரமௌலீஸ்வரருக்குப் போடப்படவில்லையே?
பூஜை முடிந்து, பெரியவாள் வெளியே வந்தார்கள். வரும் வழியில், கூடைகளில் மலர் மாலைகளைக் கண்டார்கள்.
"ஏன் இவற்றைப் பூஜைக்குக் கொடுக்கவில்லை?" என்று பார்வையாலேயே கேள்வி.
"நூலில் தொடுத்திருக்கு.."--சிஷ்யர்கள்.
புஷ்பம் வாங்கி வந்த அன்பருக்கு, நெஞ்சம் 'தடதட' வென்று அடித்துக் கொண்டது. என்ன பதில் வருமோ என்று.
பெரியவாள் கருணாமூர்த்தி.
"நூலில் தொடுத்த புஷ்பம் ஸ்வாமிக்கு...சந்திர மௌலீஸ்வரருக்கு வேண்டாம். ஆனால், எனக்கு உபயோகப்படுத்தலாமே?"----பெரியவா.
சிஷ்யர்களுக்கு மகா சந்தோஷம். பெரியவாளை உட்கார வைத்து, எல்லா மலர் மாலைகளையும் அழகாகப் போட்டு, புஷ்பாங்கி போல் செய்து விட்டார்கள்.
எதிரே திரண்டிருந்த பக்தர்களுக்கு ஆனந்த வெள்ளம்.
"திருப்பதி வெங்கடாசலபதி" என்றார் ஒருவர். "திருச்செந்தூர் முருகன்.." "காஞ்சி காமாட்சி"--என்று சிலர்.
ஒரு வேதாந்தி; ஜகன் மித்யா என்று யாராவது சொல்லிக் கொன்டிருக்கட்டும். இந்த க்ஷணம், சத்யம், பிரம்மம் சத்யம், ஸகுணப் பிரம்மம் பரம சத்யம், சகுணம்,ஸத்குணம். பெரியவா ஸகுண பிரம்மம்... பிரும்மானந்தம்.." என்றார்.
சத்தியமான வார்த்தை.