Post by varagoorannarayanan on Aug 24, 2022 11:43:16 GMT 5.5
உன் கடன் மனைவிக்குப் பணி செய்து கிடப்பதே!
மனைவி மேல் கடும் புகார் கூறிய பக்தருக்கு. பெரியவாளின் நீண்ட அறிவுரையும், அருளும்.
இப்படி எத்தனை குடும்பங்களைக் காப்பாற்றி இருக்கிறார்கள்! கணக்கே இல்லை. அருளுக்குக் கணக்கே இல்லை!
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு.
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
"என் மனைவிக்கு எப்போதும் உடம்பு சரியில்லை. தலைவலி என்று படுத்துக் கொண்டே கிடக்கிறாள். சமையல் செய்வதில்லை. குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதில்லை" சொல்லிக் கொண்டே போனார், நடுத்தர வயது பக்தர்.
கொஞ்ச நேரத்துக்குப் பின் பெரியவாள் சொன்னார்கள்;
"இதையே உன் சிநேகிதர்களிடம் சொல்லிப் பார்.'சம்சாரத்தை டைவர்ஸ் பண்ணு'ன்னு உபதேசம் பண்ணுவா.
உன் பந்துக்களிடம் சொல்லு,'அவள் கிடக்கிறாள்,கழிசடை, பிறந்தகத்துக்கு அனுப்பிவிட்டு, வேற நல்ல பெண்ணாப் பாத்துக் கல்யாணம் பண்ணிக்கோ' என்பார்கள்.
ஜோஸ்யரிடம் போய்க் கேட்டுப் பார். 'ராகு தசை,கேது தசை பரிகாரம் பண்ணணும்' என்பார்.
டாக்டரிடம் போ. எக்ஸ்-ரே,ரத்தப் பரிசோதனை,இஸிஜி,டெஸ்ட் எடுக்கச் சொல்லி, ஒரு பக்கம் நிறைய மருந்து எழுதிக் கொடுப்பார்.
சொந்தக்காரப் பாட்டியைக் கேள்,'உனக்குத் திருஷ்டி தோஷம்,செய்வினை,ஆபிசாரம் இருக்கு. மந்திரவாதியிடம் போ' என்பாள்.
சரி என்னிடம் வந்தே, 'என் சம்சாரத்துக்கு உடம்பு குணமாகணும்னு'' என்னைக் கேட்கல.'அவளுக்கு உடம்பு சரியில்லை. அடிச்சு விரட்டத் தயாராயிட்டேன்'னு சொல்ல வந்திருக்கே. அப்படித்தானே..."-பெரியவா.
பக்தர் மென்று விழுங்கினார். சரீரத்தின் உள் உறுப்புகளைத்தான் எக்ஸ்-ரே எடுக்க முடியும். நெஞ்சில் ஓடும் எண்ணங்களைக் கூட அப்படி படம் எடுக்க முடியுமா,என்ன?
"இதோ பார்! சம்சாரம் என்பவள், வாழ்க்கைத் துணை. அவளுக்கு உடம்புக்கு வந்துவிட்டால், அவளைக் கவனிப்பது உன் கடமை.இத்தனை நாள், உனக்குச் சோறு வடித்துப் போட்டிருக்காளே?உன் சுக- துக்கங்களில்.பங்கு கொண்டிருக்காளே? அவளும் ஒரு ஜீவன்தானே? உனக்குக் கொஞ்சமும் பச்சாதாபமே இல்லையே! எத்தனை கல் நெஞ்சு உனக்கு? நீ இனிமேல் தரிசனத்துக்கு வர வேண்டாம்"---பெரியவா.
பக்தர் தலையைக் குனிந்து கொண்டார். அவருக்குள்ளே, ஏதோ ரசவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது.
"என்னை மன்னிக்கணும். எனக்கு இவ்வளவு, கடுமையான தண்டனை கொடுக்கப்படாது. பத்தினியை நல்லபடியா கவனிச்சுக்கிறேன். தரிசனத்துக்குத் தடை போடக்கூடாது" என்று தேம்பினார்.
பெரியவாளுக்கு மனம் உருகிற்று.....
"உன் சம்சாரத்தை, கோட்டக்கல் ஆயுர்வேத வைத்தியரிடம் அழைத்துக் கொண்டு போய், டிரீட்மெண்ட் கொடு. க்ரானிக் ஹெட்-ஏக் ஆனதால் இரண்டு மூணு மாதம் வைத்தியம் செய்ய வேண்டியிருக்கும். க்ஷேமமா இரு."---பெரியவா.
இப்படி எத்தனை குடும்பங்களைக் காப்பாற்றி இருக்கிறார்கள்! கணக்கே இல்லை. அருளுக்குக் கணக்கே இல்லை!
மனைவி மேல் கடும் புகார் கூறிய பக்தருக்கு. பெரியவாளின் நீண்ட அறிவுரையும், அருளும்.
இப்படி எத்தனை குடும்பங்களைக் காப்பாற்றி இருக்கிறார்கள்! கணக்கே இல்லை. அருளுக்குக் கணக்கே இல்லை!
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு.
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
"என் மனைவிக்கு எப்போதும் உடம்பு சரியில்லை. தலைவலி என்று படுத்துக் கொண்டே கிடக்கிறாள். சமையல் செய்வதில்லை. குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதில்லை" சொல்லிக் கொண்டே போனார், நடுத்தர வயது பக்தர்.
கொஞ்ச நேரத்துக்குப் பின் பெரியவாள் சொன்னார்கள்;
"இதையே உன் சிநேகிதர்களிடம் சொல்லிப் பார்.'சம்சாரத்தை டைவர்ஸ் பண்ணு'ன்னு உபதேசம் பண்ணுவா.
உன் பந்துக்களிடம் சொல்லு,'அவள் கிடக்கிறாள்,கழிசடை, பிறந்தகத்துக்கு அனுப்பிவிட்டு, வேற நல்ல பெண்ணாப் பாத்துக் கல்யாணம் பண்ணிக்கோ' என்பார்கள்.
ஜோஸ்யரிடம் போய்க் கேட்டுப் பார். 'ராகு தசை,கேது தசை பரிகாரம் பண்ணணும்' என்பார்.
டாக்டரிடம் போ. எக்ஸ்-ரே,ரத்தப் பரிசோதனை,இஸிஜி,டெஸ்ட் எடுக்கச் சொல்லி, ஒரு பக்கம் நிறைய மருந்து எழுதிக் கொடுப்பார்.
சொந்தக்காரப் பாட்டியைக் கேள்,'உனக்குத் திருஷ்டி தோஷம்,செய்வினை,ஆபிசாரம் இருக்கு. மந்திரவாதியிடம் போ' என்பாள்.
சரி என்னிடம் வந்தே, 'என் சம்சாரத்துக்கு உடம்பு குணமாகணும்னு'' என்னைக் கேட்கல.'அவளுக்கு உடம்பு சரியில்லை. அடிச்சு விரட்டத் தயாராயிட்டேன்'னு சொல்ல வந்திருக்கே. அப்படித்தானே..."-பெரியவா.
பக்தர் மென்று விழுங்கினார். சரீரத்தின் உள் உறுப்புகளைத்தான் எக்ஸ்-ரே எடுக்க முடியும். நெஞ்சில் ஓடும் எண்ணங்களைக் கூட அப்படி படம் எடுக்க முடியுமா,என்ன?
"இதோ பார்! சம்சாரம் என்பவள், வாழ்க்கைத் துணை. அவளுக்கு உடம்புக்கு வந்துவிட்டால், அவளைக் கவனிப்பது உன் கடமை.இத்தனை நாள், உனக்குச் சோறு வடித்துப் போட்டிருக்காளே?உன் சுக- துக்கங்களில்.பங்கு கொண்டிருக்காளே? அவளும் ஒரு ஜீவன்தானே? உனக்குக் கொஞ்சமும் பச்சாதாபமே இல்லையே! எத்தனை கல் நெஞ்சு உனக்கு? நீ இனிமேல் தரிசனத்துக்கு வர வேண்டாம்"---பெரியவா.
பக்தர் தலையைக் குனிந்து கொண்டார். அவருக்குள்ளே, ஏதோ ரசவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது.
"என்னை மன்னிக்கணும். எனக்கு இவ்வளவு, கடுமையான தண்டனை கொடுக்கப்படாது. பத்தினியை நல்லபடியா கவனிச்சுக்கிறேன். தரிசனத்துக்குத் தடை போடக்கூடாது" என்று தேம்பினார்.
பெரியவாளுக்கு மனம் உருகிற்று.....
"உன் சம்சாரத்தை, கோட்டக்கல் ஆயுர்வேத வைத்தியரிடம் அழைத்துக் கொண்டு போய், டிரீட்மெண்ட் கொடு. க்ரானிக் ஹெட்-ஏக் ஆனதால் இரண்டு மூணு மாதம் வைத்தியம் செய்ய வேண்டியிருக்கும். க்ஷேமமா இரு."---பெரியவா.
இப்படி எத்தனை குடும்பங்களைக் காப்பாற்றி இருக்கிறார்கள்! கணக்கே இல்லை. அருளுக்குக் கணக்கே இல்லை!