Post by varagoorannarayanan on Aug 17, 2022 18:27:31 GMT 5.5
நீ போடு, சாப்பாடு'
துடிக்க வைத்த வயிற்று வலி நீங்க, பெரியவா சொன்ன பரிகாரம்.
சித்திரகுப்தன் தன் கணக்கு நோட்டில் எழுத விட்டுப்போன சமாசாரங்கள் கூட பெரியவாளுக்குத் தெரிந்து விடும்
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு.
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
திருவாரூரைச் சேர்ந்த பக்தர். தாங்க முடியாத வயிற்று வலி. உட்கொண்ட மருந்து கொஞ்ச நஞ்சமில்லை. வேண்டிக் கொண்ட தெய்வங்களுக்குக் கணக்கேயில்லை.
மருத்துவர்களுக்கெல்லாம் மருத்துவரான, பெரியவாளிடம் வந்து முறையிட்டார்.
"முன்னோர்கள் செய்த பாவம் அல்லது நானே செய்த பாவம் - வியாதி ரூபமாக வந்து துடிக்க வைக்கிறது என்கிறது சாஸ்திரம்" - அன்பர் கவலையுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.
"நான் கடுமையாகச் சொன்னால் கோவிச்சுக்க மாட்டியே!"--பெரியவா.
பக்தருக்கு அழுகையே வந்து விட்டது.
"சோழவள நாடு சோறுடைத்து என்பார்கள். சோழ தேசத்தில் யார் வீட்டுக்குப் போனாலும் சாப்பாடு போடுவார்கள். உன் முன்னோர்களிலே, பிதாமஹரோ, அவருக்கு முன்னே இருந்தவரோ..ஒருவருக்கும் சாப்பாடு போட மாட்டார். கல்யாணங்களில் கங்காணிகள் (வேலையில்லாத,நாதியில்லாத ஏழைகள்) சாப்பிட வந்தால், அவர்களை அடித்து விரட்டுவார். இந்த மாதிரி சில பாவங்கள், பின் சந்ததியைத் தாக்குகின்றன. காரணம் தெரியாமல், பேரன் - கொள்ளுப் பேரன்கள் கஷ்டப்படுகிறார்கள்.--பெரியவா.
"குருவாயூர் போன்ற ஸ்தலங்களில் தினமும் ஏராளமான பக்தர்களுக்குச் சாப்பாடு போடுகிறார்கள். அந்த மாதிரி ஏற்பாடுள்ள ஏதாவது ஒரு கோயிலில், ஒரு நாள் நீ சாப்பாடு போடு."...பெரியவா.
"உங்கள் ஊரில் தியாகராஜ ஸ்வாமி கோயிலில் முக்குந்தார்ச்சனை என்று விசேஷமாகச் செய்வார்கள். நாலு மூட்டை அரிசி வாங்கி, சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், ததியன்னம் நைவேத்யம் செய்து ஏழைகளுக்கு அன்னதானம் பண்ணிவிடு.--பெரியவா.
அன்பர், பெரியவாள் கூறியபடியே செய்தார்.மருந்து ஏதுமில்லாமல் வயிற்றுவலி மறைந்து விட்டது.
பின்னர் திருவாரூர்க்காரர், ஏராளமான மளிகை சாமான்கள்,காய்கறிகள்,பழங்கள், அரிசி மூட்டையுடன் வந்து, பிக்ஷா வந்தனம் செய்து தன் ந்ன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
பெரியவாளால்தான் இவ்வளவு கறாராகப் பேசி, பரிகாரங்கள் கூற முடியும்.
சித்திரகுப்தன், தன் கணக்கு நோட்டில் எழுத விட்டுப் போன சமாசாரங்கள் கூட பெரியவாளுக்குத் தெரிந்து விடும்!" என்று பக்தர்கள் அதிசயத்துடன் கூறுவது உண்மைதான்.
துடிக்க வைத்த வயிற்று வலி நீங்க, பெரியவா சொன்ன பரிகாரம்.
சித்திரகுப்தன் தன் கணக்கு நோட்டில் எழுத விட்டுப்போன சமாசாரங்கள் கூட பெரியவாளுக்குத் தெரிந்து விடும்
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு.
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
திருவாரூரைச் சேர்ந்த பக்தர். தாங்க முடியாத வயிற்று வலி. உட்கொண்ட மருந்து கொஞ்ச நஞ்சமில்லை. வேண்டிக் கொண்ட தெய்வங்களுக்குக் கணக்கேயில்லை.
மருத்துவர்களுக்கெல்லாம் மருத்துவரான, பெரியவாளிடம் வந்து முறையிட்டார்.
"முன்னோர்கள் செய்த பாவம் அல்லது நானே செய்த பாவம் - வியாதி ரூபமாக வந்து துடிக்க வைக்கிறது என்கிறது சாஸ்திரம்" - அன்பர் கவலையுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.
"நான் கடுமையாகச் சொன்னால் கோவிச்சுக்க மாட்டியே!"--பெரியவா.
பக்தருக்கு அழுகையே வந்து விட்டது.
"சோழவள நாடு சோறுடைத்து என்பார்கள். சோழ தேசத்தில் யார் வீட்டுக்குப் போனாலும் சாப்பாடு போடுவார்கள். உன் முன்னோர்களிலே, பிதாமஹரோ, அவருக்கு முன்னே இருந்தவரோ..ஒருவருக்கும் சாப்பாடு போட மாட்டார். கல்யாணங்களில் கங்காணிகள் (வேலையில்லாத,நாதியில்லாத ஏழைகள்) சாப்பிட வந்தால், அவர்களை அடித்து விரட்டுவார். இந்த மாதிரி சில பாவங்கள், பின் சந்ததியைத் தாக்குகின்றன. காரணம் தெரியாமல், பேரன் - கொள்ளுப் பேரன்கள் கஷ்டப்படுகிறார்கள்.--பெரியவா.
"குருவாயூர் போன்ற ஸ்தலங்களில் தினமும் ஏராளமான பக்தர்களுக்குச் சாப்பாடு போடுகிறார்கள். அந்த மாதிரி ஏற்பாடுள்ள ஏதாவது ஒரு கோயிலில், ஒரு நாள் நீ சாப்பாடு போடு."...பெரியவா.
"உங்கள் ஊரில் தியாகராஜ ஸ்வாமி கோயிலில் முக்குந்தார்ச்சனை என்று விசேஷமாகச் செய்வார்கள். நாலு மூட்டை அரிசி வாங்கி, சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், ததியன்னம் நைவேத்யம் செய்து ஏழைகளுக்கு அன்னதானம் பண்ணிவிடு.--பெரியவா.
அன்பர், பெரியவாள் கூறியபடியே செய்தார்.மருந்து ஏதுமில்லாமல் வயிற்றுவலி மறைந்து விட்டது.
பின்னர் திருவாரூர்க்காரர், ஏராளமான மளிகை சாமான்கள்,காய்கறிகள்,பழங்கள், அரிசி மூட்டையுடன் வந்து, பிக்ஷா வந்தனம் செய்து தன் ந்ன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
பெரியவாளால்தான் இவ்வளவு கறாராகப் பேசி, பரிகாரங்கள் கூற முடியும்.
சித்திரகுப்தன், தன் கணக்கு நோட்டில் எழுத விட்டுப் போன சமாசாரங்கள் கூட பெரியவாளுக்குத் தெரிந்து விடும்!" என்று பக்தர்கள் அதிசயத்துடன் கூறுவது உண்மைதான்.