Post by varagoorannarayanan on Jul 22, 2022 15:42:42 GMT 5.5
"நன்னா பேசுவா, நிறைய பேசுவா, போ"-பெரியவா.
பேச்சு வராத குழந்தையை பேசவைத்த பெரியவா.
(க்ரஹபலம் என் செய்யும்,ஆசார்யாநுக்ரஹ பலமே பலம்)
சொன்னவர்-டி.வி.ஆர்.சாரி,காஞ்சிபுரம்
தொகுப்பாளர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
1969,1970ம் வருடம்,ஸ்ரீ மஹாஸ்வாமிகள் தேனம்பாக்கம் சிவாஸ்தானத்தில் எழுந்தருளியிருந்தார்கள். எனது இரண்டாவது மகள் சாந்தலக்ஷ்மிக்கு மூன்றாண்டுகள் நிரம்பியும் பேச்சு வரவில்லை. அம்மா,அப்பா என்ற வார்த்தைககள் கூட வரவில்லை. பிறவியிலேயே ஏற்பட்டதனால், பேசவைப்பது இயலாத காரியம் என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள். Genetically Predetermined என்பதனால் சிகித்ஸை பயனளிக்காது என்றார்கள். வைத்தியநாத ஸ்வாமி,ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திப் பெருமான் போன்ற தெய்வசக்தியினால் ஏதாவது அற்புதம் நிகழ்ந்தால் தான் குழந்தையைப் பேச வைக்க முடியும் என்றார்கள்.
ஸ்ரீ ஆதிசங்கரர், ஸ்ரீதக்ஷிணாமூர்த்திப் பெருமானின் அவதாரம் என்றால்,ஸ்ரீ மஹாஸ்வாமிகளை, நானும் என் குடும்பத்தினரும், பேசும் காமாக்ஷியாகவே மனத்தினில் போற்றி வந்தோம்.
பிறவியிலேயே ஊமையாக இருந்த ஸ்ரீ மூக சங்கரரை, ஸ்ரீ காமாக்ஷி தேவியின் தெய்வீக சக்தி பேச வைத்து கவிபாடும் திறனையும் தந்தருளி, ஸ்ரீ மூக பஞ்சசதியெனும் ஸ்தோத்திர ரத்தின மாலையைப் பாடியருளச் செய்த "குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி" என்று, ஸ்ரீ மூக சங்கரர் போற்றிய ஸ்ரீ காமாக்ஷியின் கருணாவிலாஸமும், ஊமையாய் இருந்த ஹஸ்தாமலகரை பேசச் செய்த ஆசார்யாள் ஸ்ரீ ஆதிசங்கரரின் அற்புத மஹிமையையும் கேட்டறிந்த என் மனைவி, 'ஸ்ரீ மஹா ஸ்வாமிகளிடம் குழந்தையை அழைத்துச் சென்று அவரது அநுக்ரஹத்தினைப் பிரார்த்திக்கலாம்' என்று தூண்டினாள்!.
குழந்தையை ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் சந்நிதிக்கு அழைத்துச் சென்றேன். அன்று ஸ்ரீ ஸ்வாமிகளிடம் அதிகம் கூட்டம் இல்லை. ஸ்ரீ பாலு, ஸ்ரீ ராமமூர்த்தி, ஸ்ரீ ஸ்ரீ கண்டன்,ஸ்ரீ குமரேசன் போன்ற சிஷ்யர்கள் உடன் இருந்தனர்.
"சாரி வந்திருக்கார்" - ஸ்ரீ பாலு மஹாஸ்வாமிகளிடம் விண்ணப்பம் செய்கிறார்
"யார் குழந்தை?" - ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் கேள்வி.
"அடியேனுடைய குழந்தை - பேச்சே வரலே. பெரியவா அநுக்ரஹத்தினாலே பேசணும் - என் அகமுடையாள் பிரார்த்திக்கச் சொன்னா...!
"ஏன், உனக்கு அந்த ஆசை இல்லையா?"--பெரியவா.
பதில் சொல்லத் தெரியாது அசடு வழிந்தேன்.
"நன்னா பேசுவா,நிறைய பேசுவா, போ" - ஸ்ரீ மஹாஸ்வாமிகள் திருவாய் மலர்ந்து அநுக்ரஹித்து அருளினார்.
"எல்லாம் பெரியவா அனுக்ரஹம்" - என்று சொல்லி தெண்டன் சமர்ப்பித்து வீடு திரும்பினேன்.
நாங்கள் ஸ்ரீ மடத்துக்குச் சென்று, திரும்பிய அந்த மூன்று, நான்கு மணி நேரம், குழந்தைக்குப் பசித்திருக்கலாம்! தாகம் எடுத்திருக்கலாம். ஆயினும் ஸ்ரீ ஆசார்யாள் அருட்பார்வையின் மஹிமை.
குழந்தை வீடு திரும்பும் வரை சமர்த்தாக இருந்தது. வீடு திரும்பியதும், ஓட்டமாக உள்ளே சென்று சாப்பிடும் தட்டை. எடுத்து வந்து, "அம்மா மம்மு போடு" என்றதே!
ஒரே ஆச்சரியம்! வியப்பு! பேசாத குழந்தை பேசியதே! உடம்பெல்லாம் சிலிர்த்தது. ஸ்ரீ ஆசார்யா அனுக்ரஹத்தின் தெய்வீக சக்தியினால் நிகழ்ந்த அற்புதம். எடுத்தச் சொல்ல வார்த்தைகளே கிடையாது. நடமாடும் தெய்வத்தின் பரமகருணையை எண்ணி,எண்ணி ஆனந்தத்தில் திளைத்து மனதார அவர் தம் திருவடித் தாமரைகளைப் போற்றி மகிழ்ந்தோம்.க்ரஹபலம் என் செய்யும், ஆசார்யாநுக்ரஹ பலமே பலம் என்பதை உணர்ந்து குருவருளைப் போற்றலானோம்.
இரவு நேரமாதலால் மறுநாள் ஸ்ரீ மஹா ஸ்வாமிகளை ஸேவித்து, குழந்தை பேசுகின்ற அற்புதத்தினை எடுத்துச் சொன்னேன்.
"பெரியவா அநுக்ரஹ மஹிமையினால் குழந்தைக்குப் பேச்சு வந்திருக்கு" என்று நன்றிப் பெருக்குடன் விண்ணப்பித்துக் கொண்டேன்.
"நன்னா பேசுவா; நன்னா இருப்பா" - ஸ்ரீ மஹாஸ்வாமிகள்.
......................................................................................................
கட்டுரையின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.(ஓரு பகுதி)
பேச்சு வராத குழந்தையை பேசவைத்த பெரியவா.
(க்ரஹபலம் என் செய்யும்,ஆசார்யாநுக்ரஹ பலமே பலம்)
சொன்னவர்-டி.வி.ஆர்.சாரி,காஞ்சிபுரம்
தொகுப்பாளர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
1969,1970ம் வருடம்,ஸ்ரீ மஹாஸ்வாமிகள் தேனம்பாக்கம் சிவாஸ்தானத்தில் எழுந்தருளியிருந்தார்கள். எனது இரண்டாவது மகள் சாந்தலக்ஷ்மிக்கு மூன்றாண்டுகள் நிரம்பியும் பேச்சு வரவில்லை. அம்மா,அப்பா என்ற வார்த்தைககள் கூட வரவில்லை. பிறவியிலேயே ஏற்பட்டதனால், பேசவைப்பது இயலாத காரியம் என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள். Genetically Predetermined என்பதனால் சிகித்ஸை பயனளிக்காது என்றார்கள். வைத்தியநாத ஸ்வாமி,ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திப் பெருமான் போன்ற தெய்வசக்தியினால் ஏதாவது அற்புதம் நிகழ்ந்தால் தான் குழந்தையைப் பேச வைக்க முடியும் என்றார்கள்.
ஸ்ரீ ஆதிசங்கரர், ஸ்ரீதக்ஷிணாமூர்த்திப் பெருமானின் அவதாரம் என்றால்,ஸ்ரீ மஹாஸ்வாமிகளை, நானும் என் குடும்பத்தினரும், பேசும் காமாக்ஷியாகவே மனத்தினில் போற்றி வந்தோம்.
பிறவியிலேயே ஊமையாக இருந்த ஸ்ரீ மூக சங்கரரை, ஸ்ரீ காமாக்ஷி தேவியின் தெய்வீக சக்தி பேச வைத்து கவிபாடும் திறனையும் தந்தருளி, ஸ்ரீ மூக பஞ்சசதியெனும் ஸ்தோத்திர ரத்தின மாலையைப் பாடியருளச் செய்த "குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி" என்று, ஸ்ரீ மூக சங்கரர் போற்றிய ஸ்ரீ காமாக்ஷியின் கருணாவிலாஸமும், ஊமையாய் இருந்த ஹஸ்தாமலகரை பேசச் செய்த ஆசார்யாள் ஸ்ரீ ஆதிசங்கரரின் அற்புத மஹிமையையும் கேட்டறிந்த என் மனைவி, 'ஸ்ரீ மஹா ஸ்வாமிகளிடம் குழந்தையை அழைத்துச் சென்று அவரது அநுக்ரஹத்தினைப் பிரார்த்திக்கலாம்' என்று தூண்டினாள்!.
குழந்தையை ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் சந்நிதிக்கு அழைத்துச் சென்றேன். அன்று ஸ்ரீ ஸ்வாமிகளிடம் அதிகம் கூட்டம் இல்லை. ஸ்ரீ பாலு, ஸ்ரீ ராமமூர்த்தி, ஸ்ரீ ஸ்ரீ கண்டன்,ஸ்ரீ குமரேசன் போன்ற சிஷ்யர்கள் உடன் இருந்தனர்.
"சாரி வந்திருக்கார்" - ஸ்ரீ பாலு மஹாஸ்வாமிகளிடம் விண்ணப்பம் செய்கிறார்
"யார் குழந்தை?" - ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் கேள்வி.
"அடியேனுடைய குழந்தை - பேச்சே வரலே. பெரியவா அநுக்ரஹத்தினாலே பேசணும் - என் அகமுடையாள் பிரார்த்திக்கச் சொன்னா...!
"ஏன், உனக்கு அந்த ஆசை இல்லையா?"--பெரியவா.
பதில் சொல்லத் தெரியாது அசடு வழிந்தேன்.
"நன்னா பேசுவா,நிறைய பேசுவா, போ" - ஸ்ரீ மஹாஸ்வாமிகள் திருவாய் மலர்ந்து அநுக்ரஹித்து அருளினார்.
"எல்லாம் பெரியவா அனுக்ரஹம்" - என்று சொல்லி தெண்டன் சமர்ப்பித்து வீடு திரும்பினேன்.
நாங்கள் ஸ்ரீ மடத்துக்குச் சென்று, திரும்பிய அந்த மூன்று, நான்கு மணி நேரம், குழந்தைக்குப் பசித்திருக்கலாம்! தாகம் எடுத்திருக்கலாம். ஆயினும் ஸ்ரீ ஆசார்யாள் அருட்பார்வையின் மஹிமை.
குழந்தை வீடு திரும்பும் வரை சமர்த்தாக இருந்தது. வீடு திரும்பியதும், ஓட்டமாக உள்ளே சென்று சாப்பிடும் தட்டை. எடுத்து வந்து, "அம்மா மம்மு போடு" என்றதே!
ஒரே ஆச்சரியம்! வியப்பு! பேசாத குழந்தை பேசியதே! உடம்பெல்லாம் சிலிர்த்தது. ஸ்ரீ ஆசார்யா அனுக்ரஹத்தின் தெய்வீக சக்தியினால் நிகழ்ந்த அற்புதம். எடுத்தச் சொல்ல வார்த்தைகளே கிடையாது. நடமாடும் தெய்வத்தின் பரமகருணையை எண்ணி,எண்ணி ஆனந்தத்தில் திளைத்து மனதார அவர் தம் திருவடித் தாமரைகளைப் போற்றி மகிழ்ந்தோம்.க்ரஹபலம் என் செய்யும், ஆசார்யாநுக்ரஹ பலமே பலம் என்பதை உணர்ந்து குருவருளைப் போற்றலானோம்.
இரவு நேரமாதலால் மறுநாள் ஸ்ரீ மஹா ஸ்வாமிகளை ஸேவித்து, குழந்தை பேசுகின்ற அற்புதத்தினை எடுத்துச் சொன்னேன்.
"பெரியவா அநுக்ரஹ மஹிமையினால் குழந்தைக்குப் பேச்சு வந்திருக்கு" என்று நன்றிப் பெருக்குடன் விண்ணப்பித்துக் கொண்டேன்.
"நன்னா பேசுவா; நன்னா இருப்பா" - ஸ்ரீ மஹாஸ்வாமிகள்.
......................................................................................................
கட்டுரையின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.(ஓரு பகுதி)