Post by radha on Mar 12, 2021 1:16:46 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
சிவராத்திரி புராணக் காரணம்
பூலோகத்தில் உயிர்களைப் படைத்து முடித்ததும், சிவனும் பார்வதியும் கயிலாயமலைக்குத் திரும்பினர். அப்போது,''சுவாமி! தங்களை வழிபட மிக உகந்த நாள் எது?'' எனக் கேட்டாள் பார்வதி.''மாசி மாத தேய்பிறை 14ம்நாளான சதுர்த்தசியே (அமாவாசைக்கு முந்திய நாள்) எனக்கு மிக பிரியமானது. அந்நாளே மகாசிவராத்திரி. அன்று விரதமிருப்பது சிறப்பு. அன்றிரவு ஜாமங்களில் நான்கு கால பூஜை நடத்த வேண்டும்.
வாசனைமலர், அலங்காரம் இவற்றை விட வில்வார்ச்சனை செய்வது சிறப்பு. நான்கு காலங்களில் முறையே பால், தயிர், வெண்ணெய், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த விரதமகிமையை வேறு எந்த விரதத்தோடும் ஒப்பிட முடியாது'' என்றார்.
சிவனின் விருப்பமறிந்த பார்வதி தோழியரிடம் இதை தெரிவித்தாள். அவர்கள் பூலோகவாசிகளிடம் எடுத்துக்கூற, எல்லா கோயில்களிலும் மகாசிவராத்திரி பூஜை நடத்தத் தொடங்கியது.
விரதமிருக்கும் முறை
சிவராத்திரியன்று முழுவதும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இயலாதவர்கள் பால், பழம் சாப்பிட்டு ஒருவேளை மட்டும் உணவு உண்ணலாம். 'ஓம் நமசிவாய' 'ஓம் சிவாயநம' மந்திரங்களை 108 அல்லது 1008 முறை ஜபிக்க வேண்டும். இரவில் விழித்திருந்து கோயிலில் நடைபெறும் நான்குகால அபிஷேகத்தை தரிசிக்கவேண்டும்.
பசியை பொறுத்துக் கொள்வதன் மூலம் காமம், கோபம், பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுபடலாம். விழித்திருந்து சிவபூஜை செய்வதால் சுறுசுறுப்பு உண்டாகும். சிவனுக்கு அபிஷேகம் செய்வது புறவழிபாடு. அகவழிபாடாக, “சிவ பெருமானே! தண்ணீர், பாலால் உமக்கு அபிஷேகம் நடக்கிறது. அதை ஞானப்பாலாக்கி அருள்புரிய வேண்டும். அறியாமல் செய்த பாவங் களைப் போக்கி வாழ்வில் மகிழ்ச்சியைத் தர வேண்டும்'' எனப் பிரார்த்திக்க வேண்டும்.
நற்றுணையாவது நமச்சிவாயவே!
* உலகாளும் சிவனே! காதுகளுக்கு அமிர்தமான 'நமசிவாய' என்னும் திருநாமம் கொண்டவனே! சந்திர பிம்பத்தை முடியில் தரித்தவனே! கற்பூரம் போல் பிரகாசிப்பவனே! ஜடை தரித்தவனே! பிறவிக்கடலைத் தாண்டச் செய்பவனே! எங்களுக்கு செல்வவளம் தருவாயாக.
* பார்வதி பிரியனே! பாம்பைக் கழுத்தில் சூடியவனே! கங்கையைத் தலை மேல் கொண்டவனே! பக்தர் மேல் பாசம் கொண்டவனே! பயத்தைப் போக்குகிறவனே! அன்பு மயமானவனே! எங்கள் இல்லங்களை மங்களகரமாக்குவாயாக.
* ஜோதியாய் ஒளிர்பவனே! சிவனே என்ற திருநாமம் சொல்வோரைக் காப்பவனே! எதிரிகளின் எதிரியே! நெற்றிக்கண் கொண்டவனே! காதுகளில் ரத்ன குண்டலம் அணிந்தவனே! எங்கள் நெஞ்சத்தில் மஞ்சம் கொள்ள வருவாயாக.
* ஐந்து முகம் கொண்டவனே! தங்கமயமான புலித்தோல் உடுத்தியவனே! மூவுலகுக்கும் அதிபதியே! சம்சார சாகரத்தில் தவிக்கும் பக்தர்களை கரை சேர்ப்பவனே! பிறவிக்கடலில் இருந்து மீட்பவனே! பிரம்மனால் பூஜிக்கப்பட்டவனே! உன்னை என்றும் மறவாத மனதைத் தருவாயாக.
* மங்கள லட்சணம் உடையவனே! பயத்தைப் போக்குகின்றவனே! பூதகணங்களின் தலைவனே! சங்கீதத்தில் விருப்பம் கொண்டவனே! சிறந்த காளையை வாகனமாகக் கொண்டவனே! யானைத்தோல் போர்த்தியவனே! மகேஸ்வரனே! எங்கள் நாடும், வீடும் நலமுடன் திகழ அருள்புரிவாயாக.
* புண்ணியம் செய்தவர்களுக்கு முகத்தைக் காட்டுபவனே! சூலாயுதம் கொண்டவனே! மானும், மழு என்னும் கோடரியும் ஏந்தியவனே! சிவந்த நிறம் கொண்டவனே! சூரியனுக்குப் பிரியமானவனே! எங்களுக்கு தீர்க்காயுளையும், நல்ல குழந்தைகளையும் தந்தருள்வாயாக.
* தேவர்களின் தெய்வமே! மகாதேவனே! விரும்பிய பொருட்களைத் தருபவனே! கவுரியுடனும், மகாகணபதியுடனும் காட்சி அளிப்பவனே! வேல் முருகனின் தந்தையே! மகனிடம் உபதேசம் பெற்ற மாணவனே! எங்களுக்கு கல்வியறிவு, சிறந்த பணி, நற்புகழைத் தந்தருள்வாயாக.
* திரிபுர சம்ஹாரம் செய்தவனே! அகத்தியரை பொதிகைக்கு அனுப்பி யவனே! வாக்குக்கு எட்டாத பெருமை உடையவனே! நாட்டிய நாயகனே! எங்கள் மனதிலுள்ள தற்பெருமை, ஆணவம், அகம்பாவம் ஆகிய குணங்களை நீக்குவாயாக.
* கிரகங்களால் ஏற்படும் சிரமத்தைப் போக்குபவனே! 'சிவசிவ' என்பவரின் தீவினையை மாய்ப்பவனே! சிந்தனைக்கு எட்டாதவனே! ஆளும் பரம்பொருளே! சங்கரனே! நாங்கள் எங்கு வசித்தாலும், அங்கெல்லாம் வந்து எங்களை பாதுகாப்பாயாக.
* இன்பத்தின் எல்லையே! இகபர சுகமே! உலக பாரத்தை தாங்குபவனே! பாவங்களைத் தீர்ப்பவனே! பூலோகத்துக்கும் வானுலகத்துக்கும் நெருப்பாய் உயர்ந்து நின்றவனே! அண்ணாமலையாய் உயர்ந்தவனே! கைலாய நாதனே! நிறைவான மனதைத் தந்தருள்வாய்.
ஐந்து அடையாளங்கள்
சிவக்குரிய அடையாளங்கள் ஐந்து. அவை ருத்ராட்சம், விபூதி, வில்வம், சிவலிங்கம், ஐந்தெழுந்து மந்திரம். சிவராத்திரியன்று நெற்றியில் திருநீறிட்டு, கழுத்தில் ருத்ராட்சமாலை அணிந்து, நமசிவாய மந்திரம் ஜபித்தபடி, சிவலிங்கத்தை வில்வத்தால் அர்ச்சித்து வழிபடவேண்டும்.
செல்வம் தரும் சிவராத்திரி
அம்பு படுக்கையில் கிடந்த பிதாமகர் பீஷ்மர், சிவராத்திரி விரத மகிமையை பாண்டவர்களுக்கு எடுத்துச் சொல்லியதாக மகாபாரதம் விளக்குகிறது.
இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த மன்னர் சித்திரபானு. முனிவரான அஷ்டவக்கிரர் ஒரு சிவராத்திரி நாளில் மன்னரைச் சந்திக்க வந்தார். விரதமிருந்த மன்னர் முனிவரிடம், ''ஐயனே! நான் 'சுஸ்வரன்' என்னும் வேடனாக முற்பிறவியில் வாழ்ந்தேன். வேட்டையாடி மாமிசத்தை விற்பது என் தொழில். ஒருநாள், பகலில் மிருகம் ஏதும் சிக்கவில்லை.
இரவான பிறகு மான் ஒன்றைக் கொன்றேன். காட்டிலேயே தங்கிவிட்டேன். மிருகங்களிடமிருந்து தப்ப ஒரு மரத்தில் ஏறிக் கொண்டேன். பசிமயக்கத்தால் துாக்கம் வரவில்லை. இலைகளைப் பறித்து கீழே போட்டபடி இருந்தேன். பொழுது புலர்ந்து விட்டது. அந்த நாள் சிவராத்திரி என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. மரணம் ஏற்பட்டு என் உயிர் நீங்கிய பின், இரு சிவதுாதர்கள் என்னை அழைத்துச் செல்ல வந்தனர். 'நீ வேட்டையாடச் சென்ற நாள் சிவராத்திரி. அன்று நீ ஏறியது வில்வமரம். மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. நீ வில்வ இலைகளைப் பறித்துப் போட்டபடி இருந்தாய். உறங்கவும் இல்லை. அறியாமல் செய்தாலும், சிவராத்திரியன்று சிவலிங்கத்துக்கு வில்வார்ச்சனையால் உனக்கு நற்கதி கிடைத்தது'
என்றனர். அதனால், நாடாளும் மன்னராக சித்திரபானு என்ற பெயரில் இப்பிறவியில் பிறக்கும் பேறு பெற்றேன்'' என்றார். பக்தியுடன் சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், எத்தனை பிறவி எடுத்தாலும் வளமுடன் வாழும் பேறு பெறுவர்.
ஆலாலகண்டா! அற்புத சுந்தரா!!
பாற்கடலைக் கடைந்த போது எழுந்த ஆலகால விஷத்தில் இருந்த மிகுந்த உஷ்ணம் கிளம்பியது. செய்வதறியாது தவித்த தேவர்கள், கருணைக்கடலான சிவபெருமானிடம் ஓடினார்கள். தங்கள் முயற்சியால் உண்டான முதல் பயனான விஷத்தை சிவனே ஏற்று அருளும்படி வேண்டினர். தன் அருகில் இருந்த நண்பர் சுந்தரரிடம் பாற்கடலில் எழுந்த விஷத்தைக் கொண்டு வருமாறு கட்டளையிட்டார் சிவன். அவரும் சிவமந்திரம் ஜெபித்து விஷத்தை நாவற்கனி போல உருட்டி வந்து கொடுத்தார். சிவன் அதை விழுங்கி விட்டார். இதனைக் கண்ட தேவர்கள் 'ஆலாலகண்டா' 'அற்புத சுந்தரா' என்று கோஷமிட்டனர். விஷத்தைத் திரட்டி அற்புதம் நிகழ்த்தியவர் என்பது இதன் பொருள்.
இணைந்த இரு விஷங்கள்
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் வலியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் விஷம் கக்கியது. அப்போது கடலில் இருந்தும் விஷம் வெளிப்பட்டது. இருவித விஷங்களும் ஒன்று சேர்ந்தன. 'ஆலம்' என்பதற்கு விஷம் என பொருள். இருவிஷங்கள் இணைந்தால் அதனை 'ஆலாலம்' என்று குறிப்பிட்டனர். இதுவே பேச்சுவழக்கில் 'ஆலகாலம்' என்று திரிந்துவிட்டது.
நாகதோஷம் போக்கும் சிவன்
வணிகன் மகள் ஒருத்தி திருமணத்திற்காக திருமருகல் (திருவாரூர் அருகில்) என்னும் தலத்திற்கு வந்து தங்கியிருந்தாள். திருமணத்திற்கு முதல்நாள் இரவு மணமகனை நாகம் தீண்டியதால் இறந்தான். அந்த சமயத்தில் திருமருகல் சிவனை வழிபட வந்த ஞானசம்பந்தர், மணப்பெண்ணின் அழுகுரல் கேட்டார். இரக்கப்பட்ட அவர், திருமருகல்
ஈசனான மாணிக்கவண்ணர் மீது பதிகம் பாடினார். சிவனருளால் மணமகன் துõங்கி எழுவது போல கண்விழித்தான். குறித்த முகூர்த்தத்தில் திருமணம் நடந்தேறியது. நாகதோஷத்தால் உண்டாகும் திருமணத்தடையைப் போக்குவதில் சிறந்த தலம். திருவாரூர், கும்பகோணத்தில் இருந்து பஸ் உண்டு.
ஐந்து கோலம்! ஐந்து பலன்!
சிவபெருமான் கோயில்களில் உருவம், அருவுருவம், அருவம் என மூன்று நிலைகளில் காட்சிதருகிறார். கருவறையில் பெரும்பாலும் அருவுருவத் திருமேனியான சிவலிங்கமாக இருப்பார். அருவத்திருமேனியாக (உருவமே இல்லாத நிலை) சிதம்பரம், திருப்பெருந்துறை போன்ற கோயில்களில் அருள்கிறார். உருவத்திருமேனியை சிவமூர்த்தங்கள் எனக் குறிப்பிடுவர். இந்த மூர்த்தங்களில் ஐந்து மூர்த்தங்கள் மிகச் சிறப்புடையவை.
1.நமக்கு என்ன பலன் தேவையோ அதற்கேற்ற வடிவத்தில் சிவபெருமானை வழிபட்டு பலன் பெறலாம். சாந்தமே உருவான தட்சிணாமூர்த்தியாக வழிபடுபவர்கள் மனஅமைதியும் ஞானமும் கைவரப்பெறுவர்.
2. வசீகரமூர்த்தியாகத் திகழும் பிட்சாடனரை வணங்கினால் முகத்தில் வசீகரமும், மனதில் புத்துணர்வும் பிறக்கும்.
3.வக்ரமூர்த்தியாக விளங்கும் பைரவராக சிவனை வழிபட்டால் எதிரித்தொல்லை நீங்கி தைரியம் உண்டாகும்.
4.ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜராகத் துதித்தால் மனமகிழ்ச்சியும் குதுாகலமும் ஏற்படும்.
5.அம்மையப்பராக சிவபார்வதி வீற்றிருக்க முருகன் நடுவில் அமர்ந்திருக்கும் சோமாஸ்கந்தமூர்த்தியை. தரிசித்தால் வாழ்வில் நிம்மதியும், மனநிறைவும் ஏற்படும்.
எல்லாமே ஐந்து தான்
சிவபெருமானுக்கு ஐந்தெழுத்து மந்திரத்தால் ஏற்பட்ட பெயர் 'பஞ்சாட்சரம்'. பஞ்சாட்சர மந்திரமான நமசிவாயத்தை சிவனே ஓதுவதால் காசியை விட புனிதமான தலமாக விருத்தாசலம் போற்றப்படுகிறது. 'விருத்தாசலம்' என்பதற்கு 'பழமையான மலை' என்பது பொருள். இக்கோயிலுக்கும் ஐந்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு.
திசைக்கொரு கோபுரமாக நான்கு ராஜகோபுரங்களும், கோயிலுக்குள்ளே ஒரு கோபுரமாக ஐந்து கோபுரங்கள் உள்ளன. கோயிலில் ஐந்து கொடிமரங்கள் உள்ளன. பிரம்மோற்ஸவத்தின்போது ஐந்து கொடிமரத்திலும் கொடி ஏற்றப்படுகிறது.வலப்புறம் தலைசாய்த்தபடி ஐந்து நந்திகள் இருப்பது சிறப்பாகும். மணிமுத்தாறு, அக்னி, சக்கர, குபேர, நித்தியானந்த கூபம் என்னும் ஐந்து தீர்த்தம் உள்ளன. விபசித்து, உரோமசர், குமாரதேவர், நாதசர்மா, அவைர்த்தணி என்னும் ஐந்து ரிஷிகள் விருத்தகிரீஸ்வரரை வழிபட்டு முக்தி பெற்றனர்.
பிரபஞ்சமே சிவம்
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் 'கடவுளுக்கு சம்பந்தமான ஐந்து' என்பது பொருள். “பிரபஞ்சம் என்பது பஞ்சபூதங்களின் சேர்க்கை. இயற்கையே சிவன் என்னும் கோட்பாடின் அடிப்படையில் இந்த ஐந்திற்கும் தனித்தனியாக சிவலிங்கம் வடித்து பஞ்சபூதத்தலங்களை ஏற்படுத்தினர். அவையே காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் (மண்), திருவானைக்காவல்( நீர்), திருவண்ணாமலை( அக்னி), காளஹஸ்தி (வாயு), சிதம்பரம்(ஆகாயம்) ஆகிய தலங்களாகும். இதேபோல, சிவபெருமானுக்கு பொன்னம்பலம், வெள்ளியம்பலம், தாமிரசபை, ரத்தினசபை, சித்திரசபை ஆகிய ஐந்து சபைகளாக சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, திருவாலங்காடு, குற்றாலம் ஆகிய தலங்கள் உள்ளன.
பொன்னான பாட்டு
மார்க்கண்டேயருக்காக சிவன் மழு என்ற ஆயுதம் (கோடரி வடிவம்) நடனமாடிய தலம் மழுவாடி. தற்போது 'மழபாடி' என்று மாறிவிட்டது. நந்திதேவர், சுயசாம்பிகையை இங்கு திருமணம் செய்து கொண்டார். தேவாரம் பாடிய சுந்தரரின் கனவில் தோன்றிய சிவன், “மழுவாடிக்கு வர மறந்தனையோ?,” என்று நினைவூட்டினார். உடனே, இங்கு வந்து, 'பொன்னார் மேனியனே' என்று தொடங்கும் பதிகத்தைப் பாடினார். “என் தாயானவனே! திருமழபாடியில் அருள்புரியும் மாணிக்கமே! உன்னை விட்டால் வேறு யாரை நான் நினைப்பேன்''என்ற பொருளில் 'மழபாடியில் மாணிக்கமே! அன்னே! உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே!” என்று சுந்தரர் உள்ளம் உருகிப் பாடினார்.
ருத்ராட்சம் பிறந்த கதை
சிவபக்தர்கள் ருத்ராட்சத்தை தங்கள் உயிர் மூச்சாகக் கருதுகின்றனர். திரிபுராசுரனால் துன்பப்பட்ட தேவர்களைக் காக்க, சிவன் கண்களை மூடாமல் ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். 'அகோர அஸ்திரம்' என்ற ஆயுதத்தை தயார் செய்ய கண்களை மூடும் போது, அவரது மூன்று கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது. அது பூமியில் பட்டதும் ஒரு மரம் தோன்றியது. அந்த மரத்தில் இருந்து விழுந்த பழம் தான் ருத்ராட்சம். ருத்ரனாகிய சிவனின் கண்களில் இருந்து உண்டானதால் இப்பெயர் உண்டானது.
துளையுள்ள ஒரே விதை
ருத்ராட்ச மரத்தின் விதைக்கு தனிச்சிறப்பு உண்டு. மற்ற விதைகளில் துவாரம் இருக்காது. துளசி அல்லது ஸ்படிக மணிகளை துளையிட்ட பிறகே கோர்க்க முடியும். ஆனால், இயற்கையிலேயே துளை உள்ளது ருத்ராட்சம். எல்லா மனிதர்களும் இதை எளிதாக அணிய வேண்டும் என்ற அடிப்படையில் இப்படி படைக்கப்பட்டுள்ளது. ஜாவா தீவு, நேபாளம், பெங்களூருவில் ருத்ராட்ச மரம் வளர்கிறது. வியாதியை போக்கும் தன்மை இதற்குண்டு. ருத்ராட்சத்தை ஊற வைத்த நீரில் மஞ்சள்பொடி சேர்த்து குடித்தால் வாந்தி, இருமல் நீங்கும். உஷ்ணம் தணியும்.
சிவபூஜை செய்த சிவன்
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என்று அனைவரும் சிவபூஜை செய்து அருள்பெற்றுள்ளனர். ஆனால் சிவன் தன்னைத் தானே பூஜை செய்து வழிபட்ட தலம் மதுரை இம்மையில் நன்மை தருவார் கோயிலாகும். மூலவர் லிங்கவடிவத்தில் இருக்கிறார். அவருக்கு பின்புறம் சிவபார்வதி சிலைகள் உள்ளன. சிவபெருமானே, மதுரையில் சுந்தரபாண்டியராக அரசாட்சி செய்கிறார். பாண்டிய அரசர்கள் ஆட்சி பீடத்தில் அமரும் போது சிவபூஜை செய்வது மரபு. இதன் அடிப்படையில், மதுரையில் ஆட்சியில் அமர்ந்த சிவனும், தனது பட்டாபிஷேகத்தின் போது, தனக்குத்தானே பூஜை செய்து கொண்டாராம். அந்த அடிப்படையில், இவ்வாறு சந்நிதி எழுப்பப்பட்டுள்ளது. இதே போன்ற சந்நிதி வேதாரண்யத்திலும் உள்ளது.
.
திரும்பத் திரும்ப பயன்படுத்தலாம்
வில்வம் மகாலட்சுமி வாசம் செய்யும் இடம். வில்வ இலையால் சிவனை பூஜிக்க மோட்சம் கிடைக்கும். ஒருமுறை பூஜைக்குப் பயன்படுத்திய வில்வத்தை நீரில் கழுவி விட்டு மீண்டும் பயன்படுத்தலாம். மூன்று வில்வ இலைகள் சேர்ந்திருப்பதை 'வில்வ தளம்' என்பர். இதனால் சிவனை பூஜிப்பது சிறப்பானது. அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வில்வம் பறிக்கக் கூடாது. வில்வம் மருத்துவ குணம் உடையது. காய்ச்சல், இருமலுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
காசியில் சப்தரிஷி பூஜை
காசி என்றதும் நினைவுக்கு வருவது கங்கை நதியும், காசி விஸ்வநாதர் கோயிலும் தான். விஸ்வ நாதருக்கு தினமும் இரவு 7.45 - 8.30 மணி வரை சப்தரிஷி பூஜை நடக்கும். அத்ரி, வசிஷ்டர், கஷ்யபர், கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி ஆகிய ஏழு பேரும் சப்தரிஷிகளாவர். வானமண்டலத்தில் சனி உலகத்திற்கு வடக்கே சப்தரிஷி மண்டலம் உள்ளது. அங்கிருந்து வந்து தினமும் காசி விஸ்வநாதரை இவர்கள் பூஜிப்பதாக ஐதீகம். இதனை குறிக்கும் விதத்தில், கருவறையில் ஏழு அந்தணர்கள்(7பண்டாக்கள்) சூழ்ந்து நின்று பூஜை நடத்துவர்.
அபாயம் போக்கும் மந்திரம்
நால்வழிச்சாலையில் குறித்த இடத்திற்கு விரைந்து செல்வது போல, பிறவிப்பயணத்தை விரைவில் முடிக்க சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் வழி காட்டியுள்ளனர். தேவாரம், திருவாசகப் பாடல்கள் பாடுவோர் பிறவித்துன்பத்தை விரைவில் களையலாம். அத்துடன், ஐந்தெழுத்து மந்திரமான 'நமசிவாய' 'சிவாயநம' என்பவற்றையும் தினமும் சொல்ல வேண்டும். நீதிநுாலான நல்வழியில், 'சிவாயநம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை” எனகிறார் அவ்வையார்
பித்தா என்பது ஏன்?
'பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா' என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடலே இது தான். சிவனை இவர் 'பித்தன்' என அழைக்கக் காரணம் என்ன தெரியுமா? சுந்தரருக்கு திருமணம் நடக்க இருந்த வேளையில், அவரை ஆட்கொள்ள நினைத்த சிவன், முதியவர் வடிவி்ல் வந்தார். சுந்தரர் தன் முன்னோருக்கும், தனக்கும் அடிமை என்றார். “ஏ பித்தனே! நீ யார்? என்ன உளறுகிறாய்?” என்று சுந்தரர் கடிந்தார். பின்பு தான் வந்தது சிவன் என்ற உண்மை புரிந்தது. தன்னைப் பாடும்படி சிவன் கேட்கவே, என்ன சொல்லி ஆரம்பிப்பது என சுந்தரர் குழம்பினார். “என்னை பித்தன் என்று திட்டினாயே! அதியிலேயே துவங்கு,” என்றார்.
சுந்தரரும் அந்த வார்த்தையின் பெருமையை உணர்ந்தார். சிவனின் தலையிலுள்ள கங்கை மூன்று முறை தான் மனிதர்களின் பாவத்தைப் பொறுப்பாள். ஆனால், அவரது துணைவி பார்வதியோ, எத்தனை தடவை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வாள். எத்தனை தடவை தப்பு செய்தாலும் பொறுப்பவளை தலையில் வைத்து கொண்டாடாமல், குறைந்த தடவை பொறுப்பவளை, சிவன் தனது தலையில் வைத்துக் கொண்டாடுகிறார். இத்தகைய புரிந்து கொள்ள முடியாத செயல்களைச் செய்வதால் அவரைப் 'பித்தன்' என்றார் சுந்தரர்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
SOURCE-: DINAMALAR
சிவராத்திரி புராணக் காரணம்
பூலோகத்தில் உயிர்களைப் படைத்து முடித்ததும், சிவனும் பார்வதியும் கயிலாயமலைக்குத் திரும்பினர். அப்போது,''சுவாமி! தங்களை வழிபட மிக உகந்த நாள் எது?'' எனக் கேட்டாள் பார்வதி.''மாசி மாத தேய்பிறை 14ம்நாளான சதுர்த்தசியே (அமாவாசைக்கு முந்திய நாள்) எனக்கு மிக பிரியமானது. அந்நாளே மகாசிவராத்திரி. அன்று விரதமிருப்பது சிறப்பு. அன்றிரவு ஜாமங்களில் நான்கு கால பூஜை நடத்த வேண்டும்.
வாசனைமலர், அலங்காரம் இவற்றை விட வில்வார்ச்சனை செய்வது சிறப்பு. நான்கு காலங்களில் முறையே பால், தயிர், வெண்ணெய், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த விரதமகிமையை வேறு எந்த விரதத்தோடும் ஒப்பிட முடியாது'' என்றார்.
சிவனின் விருப்பமறிந்த பார்வதி தோழியரிடம் இதை தெரிவித்தாள். அவர்கள் பூலோகவாசிகளிடம் எடுத்துக்கூற, எல்லா கோயில்களிலும் மகாசிவராத்திரி பூஜை நடத்தத் தொடங்கியது.
விரதமிருக்கும் முறை
சிவராத்திரியன்று முழுவதும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இயலாதவர்கள் பால், பழம் சாப்பிட்டு ஒருவேளை மட்டும் உணவு உண்ணலாம். 'ஓம் நமசிவாய' 'ஓம் சிவாயநம' மந்திரங்களை 108 அல்லது 1008 முறை ஜபிக்க வேண்டும். இரவில் விழித்திருந்து கோயிலில் நடைபெறும் நான்குகால அபிஷேகத்தை தரிசிக்கவேண்டும்.
பசியை பொறுத்துக் கொள்வதன் மூலம் காமம், கோபம், பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுபடலாம். விழித்திருந்து சிவபூஜை செய்வதால் சுறுசுறுப்பு உண்டாகும். சிவனுக்கு அபிஷேகம் செய்வது புறவழிபாடு. அகவழிபாடாக, “சிவ பெருமானே! தண்ணீர், பாலால் உமக்கு அபிஷேகம் நடக்கிறது. அதை ஞானப்பாலாக்கி அருள்புரிய வேண்டும். அறியாமல் செய்த பாவங் களைப் போக்கி வாழ்வில் மகிழ்ச்சியைத் தர வேண்டும்'' எனப் பிரார்த்திக்க வேண்டும்.
நற்றுணையாவது நமச்சிவாயவே!
* உலகாளும் சிவனே! காதுகளுக்கு அமிர்தமான 'நமசிவாய' என்னும் திருநாமம் கொண்டவனே! சந்திர பிம்பத்தை முடியில் தரித்தவனே! கற்பூரம் போல் பிரகாசிப்பவனே! ஜடை தரித்தவனே! பிறவிக்கடலைத் தாண்டச் செய்பவனே! எங்களுக்கு செல்வவளம் தருவாயாக.
* பார்வதி பிரியனே! பாம்பைக் கழுத்தில் சூடியவனே! கங்கையைத் தலை மேல் கொண்டவனே! பக்தர் மேல் பாசம் கொண்டவனே! பயத்தைப் போக்குகிறவனே! அன்பு மயமானவனே! எங்கள் இல்லங்களை மங்களகரமாக்குவாயாக.
* ஜோதியாய் ஒளிர்பவனே! சிவனே என்ற திருநாமம் சொல்வோரைக் காப்பவனே! எதிரிகளின் எதிரியே! நெற்றிக்கண் கொண்டவனே! காதுகளில் ரத்ன குண்டலம் அணிந்தவனே! எங்கள் நெஞ்சத்தில் மஞ்சம் கொள்ள வருவாயாக.
* ஐந்து முகம் கொண்டவனே! தங்கமயமான புலித்தோல் உடுத்தியவனே! மூவுலகுக்கும் அதிபதியே! சம்சார சாகரத்தில் தவிக்கும் பக்தர்களை கரை சேர்ப்பவனே! பிறவிக்கடலில் இருந்து மீட்பவனே! பிரம்மனால் பூஜிக்கப்பட்டவனே! உன்னை என்றும் மறவாத மனதைத் தருவாயாக.
* மங்கள லட்சணம் உடையவனே! பயத்தைப் போக்குகின்றவனே! பூதகணங்களின் தலைவனே! சங்கீதத்தில் விருப்பம் கொண்டவனே! சிறந்த காளையை வாகனமாகக் கொண்டவனே! யானைத்தோல் போர்த்தியவனே! மகேஸ்வரனே! எங்கள் நாடும், வீடும் நலமுடன் திகழ அருள்புரிவாயாக.
* புண்ணியம் செய்தவர்களுக்கு முகத்தைக் காட்டுபவனே! சூலாயுதம் கொண்டவனே! மானும், மழு என்னும் கோடரியும் ஏந்தியவனே! சிவந்த நிறம் கொண்டவனே! சூரியனுக்குப் பிரியமானவனே! எங்களுக்கு தீர்க்காயுளையும், நல்ல குழந்தைகளையும் தந்தருள்வாயாக.
* தேவர்களின் தெய்வமே! மகாதேவனே! விரும்பிய பொருட்களைத் தருபவனே! கவுரியுடனும், மகாகணபதியுடனும் காட்சி அளிப்பவனே! வேல் முருகனின் தந்தையே! மகனிடம் உபதேசம் பெற்ற மாணவனே! எங்களுக்கு கல்வியறிவு, சிறந்த பணி, நற்புகழைத் தந்தருள்வாயாக.
* திரிபுர சம்ஹாரம் செய்தவனே! அகத்தியரை பொதிகைக்கு அனுப்பி யவனே! வாக்குக்கு எட்டாத பெருமை உடையவனே! நாட்டிய நாயகனே! எங்கள் மனதிலுள்ள தற்பெருமை, ஆணவம், அகம்பாவம் ஆகிய குணங்களை நீக்குவாயாக.
* கிரகங்களால் ஏற்படும் சிரமத்தைப் போக்குபவனே! 'சிவசிவ' என்பவரின் தீவினையை மாய்ப்பவனே! சிந்தனைக்கு எட்டாதவனே! ஆளும் பரம்பொருளே! சங்கரனே! நாங்கள் எங்கு வசித்தாலும், அங்கெல்லாம் வந்து எங்களை பாதுகாப்பாயாக.
* இன்பத்தின் எல்லையே! இகபர சுகமே! உலக பாரத்தை தாங்குபவனே! பாவங்களைத் தீர்ப்பவனே! பூலோகத்துக்கும் வானுலகத்துக்கும் நெருப்பாய் உயர்ந்து நின்றவனே! அண்ணாமலையாய் உயர்ந்தவனே! கைலாய நாதனே! நிறைவான மனதைத் தந்தருள்வாய்.
ஐந்து அடையாளங்கள்
சிவக்குரிய அடையாளங்கள் ஐந்து. அவை ருத்ராட்சம், விபூதி, வில்வம், சிவலிங்கம், ஐந்தெழுந்து மந்திரம். சிவராத்திரியன்று நெற்றியில் திருநீறிட்டு, கழுத்தில் ருத்ராட்சமாலை அணிந்து, நமசிவாய மந்திரம் ஜபித்தபடி, சிவலிங்கத்தை வில்வத்தால் அர்ச்சித்து வழிபடவேண்டும்.
செல்வம் தரும் சிவராத்திரி
அம்பு படுக்கையில் கிடந்த பிதாமகர் பீஷ்மர், சிவராத்திரி விரத மகிமையை பாண்டவர்களுக்கு எடுத்துச் சொல்லியதாக மகாபாரதம் விளக்குகிறது.
இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த மன்னர் சித்திரபானு. முனிவரான அஷ்டவக்கிரர் ஒரு சிவராத்திரி நாளில் மன்னரைச் சந்திக்க வந்தார். விரதமிருந்த மன்னர் முனிவரிடம், ''ஐயனே! நான் 'சுஸ்வரன்' என்னும் வேடனாக முற்பிறவியில் வாழ்ந்தேன். வேட்டையாடி மாமிசத்தை விற்பது என் தொழில். ஒருநாள், பகலில் மிருகம் ஏதும் சிக்கவில்லை.
இரவான பிறகு மான் ஒன்றைக் கொன்றேன். காட்டிலேயே தங்கிவிட்டேன். மிருகங்களிடமிருந்து தப்ப ஒரு மரத்தில் ஏறிக் கொண்டேன். பசிமயக்கத்தால் துாக்கம் வரவில்லை. இலைகளைப் பறித்து கீழே போட்டபடி இருந்தேன். பொழுது புலர்ந்து விட்டது. அந்த நாள் சிவராத்திரி என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. மரணம் ஏற்பட்டு என் உயிர் நீங்கிய பின், இரு சிவதுாதர்கள் என்னை அழைத்துச் செல்ல வந்தனர். 'நீ வேட்டையாடச் சென்ற நாள் சிவராத்திரி. அன்று நீ ஏறியது வில்வமரம். மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. நீ வில்வ இலைகளைப் பறித்துப் போட்டபடி இருந்தாய். உறங்கவும் இல்லை. அறியாமல் செய்தாலும், சிவராத்திரியன்று சிவலிங்கத்துக்கு வில்வார்ச்சனையால் உனக்கு நற்கதி கிடைத்தது'
என்றனர். அதனால், நாடாளும் மன்னராக சித்திரபானு என்ற பெயரில் இப்பிறவியில் பிறக்கும் பேறு பெற்றேன்'' என்றார். பக்தியுடன் சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், எத்தனை பிறவி எடுத்தாலும் வளமுடன் வாழும் பேறு பெறுவர்.
ஆலாலகண்டா! அற்புத சுந்தரா!!
பாற்கடலைக் கடைந்த போது எழுந்த ஆலகால விஷத்தில் இருந்த மிகுந்த உஷ்ணம் கிளம்பியது. செய்வதறியாது தவித்த தேவர்கள், கருணைக்கடலான சிவபெருமானிடம் ஓடினார்கள். தங்கள் முயற்சியால் உண்டான முதல் பயனான விஷத்தை சிவனே ஏற்று அருளும்படி வேண்டினர். தன் அருகில் இருந்த நண்பர் சுந்தரரிடம் பாற்கடலில் எழுந்த விஷத்தைக் கொண்டு வருமாறு கட்டளையிட்டார் சிவன். அவரும் சிவமந்திரம் ஜெபித்து விஷத்தை நாவற்கனி போல உருட்டி வந்து கொடுத்தார். சிவன் அதை விழுங்கி விட்டார். இதனைக் கண்ட தேவர்கள் 'ஆலாலகண்டா' 'அற்புத சுந்தரா' என்று கோஷமிட்டனர். விஷத்தைத் திரட்டி அற்புதம் நிகழ்த்தியவர் என்பது இதன் பொருள்.
இணைந்த இரு விஷங்கள்
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் வலியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் விஷம் கக்கியது. அப்போது கடலில் இருந்தும் விஷம் வெளிப்பட்டது. இருவித விஷங்களும் ஒன்று சேர்ந்தன. 'ஆலம்' என்பதற்கு விஷம் என பொருள். இருவிஷங்கள் இணைந்தால் அதனை 'ஆலாலம்' என்று குறிப்பிட்டனர். இதுவே பேச்சுவழக்கில் 'ஆலகாலம்' என்று திரிந்துவிட்டது.
நாகதோஷம் போக்கும் சிவன்
வணிகன் மகள் ஒருத்தி திருமணத்திற்காக திருமருகல் (திருவாரூர் அருகில்) என்னும் தலத்திற்கு வந்து தங்கியிருந்தாள். திருமணத்திற்கு முதல்நாள் இரவு மணமகனை நாகம் தீண்டியதால் இறந்தான். அந்த சமயத்தில் திருமருகல் சிவனை வழிபட வந்த ஞானசம்பந்தர், மணப்பெண்ணின் அழுகுரல் கேட்டார். இரக்கப்பட்ட அவர், திருமருகல்
ஈசனான மாணிக்கவண்ணர் மீது பதிகம் பாடினார். சிவனருளால் மணமகன் துõங்கி எழுவது போல கண்விழித்தான். குறித்த முகூர்த்தத்தில் திருமணம் நடந்தேறியது. நாகதோஷத்தால் உண்டாகும் திருமணத்தடையைப் போக்குவதில் சிறந்த தலம். திருவாரூர், கும்பகோணத்தில் இருந்து பஸ் உண்டு.
ஐந்து கோலம்! ஐந்து பலன்!
சிவபெருமான் கோயில்களில் உருவம், அருவுருவம், அருவம் என மூன்று நிலைகளில் காட்சிதருகிறார். கருவறையில் பெரும்பாலும் அருவுருவத் திருமேனியான சிவலிங்கமாக இருப்பார். அருவத்திருமேனியாக (உருவமே இல்லாத நிலை) சிதம்பரம், திருப்பெருந்துறை போன்ற கோயில்களில் அருள்கிறார். உருவத்திருமேனியை சிவமூர்த்தங்கள் எனக் குறிப்பிடுவர். இந்த மூர்த்தங்களில் ஐந்து மூர்த்தங்கள் மிகச் சிறப்புடையவை.
1.நமக்கு என்ன பலன் தேவையோ அதற்கேற்ற வடிவத்தில் சிவபெருமானை வழிபட்டு பலன் பெறலாம். சாந்தமே உருவான தட்சிணாமூர்த்தியாக வழிபடுபவர்கள் மனஅமைதியும் ஞானமும் கைவரப்பெறுவர்.
2. வசீகரமூர்த்தியாகத் திகழும் பிட்சாடனரை வணங்கினால் முகத்தில் வசீகரமும், மனதில் புத்துணர்வும் பிறக்கும்.
3.வக்ரமூர்த்தியாக விளங்கும் பைரவராக சிவனை வழிபட்டால் எதிரித்தொல்லை நீங்கி தைரியம் உண்டாகும்.
4.ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜராகத் துதித்தால் மனமகிழ்ச்சியும் குதுாகலமும் ஏற்படும்.
5.அம்மையப்பராக சிவபார்வதி வீற்றிருக்க முருகன் நடுவில் அமர்ந்திருக்கும் சோமாஸ்கந்தமூர்த்தியை. தரிசித்தால் வாழ்வில் நிம்மதியும், மனநிறைவும் ஏற்படும்.
எல்லாமே ஐந்து தான்
சிவபெருமானுக்கு ஐந்தெழுத்து மந்திரத்தால் ஏற்பட்ட பெயர் 'பஞ்சாட்சரம்'. பஞ்சாட்சர மந்திரமான நமசிவாயத்தை சிவனே ஓதுவதால் காசியை விட புனிதமான தலமாக விருத்தாசலம் போற்றப்படுகிறது. 'விருத்தாசலம்' என்பதற்கு 'பழமையான மலை' என்பது பொருள். இக்கோயிலுக்கும் ஐந்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு.
திசைக்கொரு கோபுரமாக நான்கு ராஜகோபுரங்களும், கோயிலுக்குள்ளே ஒரு கோபுரமாக ஐந்து கோபுரங்கள் உள்ளன. கோயிலில் ஐந்து கொடிமரங்கள் உள்ளன. பிரம்மோற்ஸவத்தின்போது ஐந்து கொடிமரத்திலும் கொடி ஏற்றப்படுகிறது.வலப்புறம் தலைசாய்த்தபடி ஐந்து நந்திகள் இருப்பது சிறப்பாகும். மணிமுத்தாறு, அக்னி, சக்கர, குபேர, நித்தியானந்த கூபம் என்னும் ஐந்து தீர்த்தம் உள்ளன. விபசித்து, உரோமசர், குமாரதேவர், நாதசர்மா, அவைர்த்தணி என்னும் ஐந்து ரிஷிகள் விருத்தகிரீஸ்வரரை வழிபட்டு முக்தி பெற்றனர்.
பிரபஞ்சமே சிவம்
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் 'கடவுளுக்கு சம்பந்தமான ஐந்து' என்பது பொருள். “பிரபஞ்சம் என்பது பஞ்சபூதங்களின் சேர்க்கை. இயற்கையே சிவன் என்னும் கோட்பாடின் அடிப்படையில் இந்த ஐந்திற்கும் தனித்தனியாக சிவலிங்கம் வடித்து பஞ்சபூதத்தலங்களை ஏற்படுத்தினர். அவையே காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் (மண்), திருவானைக்காவல்( நீர்), திருவண்ணாமலை( அக்னி), காளஹஸ்தி (வாயு), சிதம்பரம்(ஆகாயம்) ஆகிய தலங்களாகும். இதேபோல, சிவபெருமானுக்கு பொன்னம்பலம், வெள்ளியம்பலம், தாமிரசபை, ரத்தினசபை, சித்திரசபை ஆகிய ஐந்து சபைகளாக சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, திருவாலங்காடு, குற்றாலம் ஆகிய தலங்கள் உள்ளன.
பொன்னான பாட்டு
மார்க்கண்டேயருக்காக சிவன் மழு என்ற ஆயுதம் (கோடரி வடிவம்) நடனமாடிய தலம் மழுவாடி. தற்போது 'மழபாடி' என்று மாறிவிட்டது. நந்திதேவர், சுயசாம்பிகையை இங்கு திருமணம் செய்து கொண்டார். தேவாரம் பாடிய சுந்தரரின் கனவில் தோன்றிய சிவன், “மழுவாடிக்கு வர மறந்தனையோ?,” என்று நினைவூட்டினார். உடனே, இங்கு வந்து, 'பொன்னார் மேனியனே' என்று தொடங்கும் பதிகத்தைப் பாடினார். “என் தாயானவனே! திருமழபாடியில் அருள்புரியும் மாணிக்கமே! உன்னை விட்டால் வேறு யாரை நான் நினைப்பேன்''என்ற பொருளில் 'மழபாடியில் மாணிக்கமே! அன்னே! உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே!” என்று சுந்தரர் உள்ளம் உருகிப் பாடினார்.
ருத்ராட்சம் பிறந்த கதை
சிவபக்தர்கள் ருத்ராட்சத்தை தங்கள் உயிர் மூச்சாகக் கருதுகின்றனர். திரிபுராசுரனால் துன்பப்பட்ட தேவர்களைக் காக்க, சிவன் கண்களை மூடாமல் ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். 'அகோர அஸ்திரம்' என்ற ஆயுதத்தை தயார் செய்ய கண்களை மூடும் போது, அவரது மூன்று கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது. அது பூமியில் பட்டதும் ஒரு மரம் தோன்றியது. அந்த மரத்தில் இருந்து விழுந்த பழம் தான் ருத்ராட்சம். ருத்ரனாகிய சிவனின் கண்களில் இருந்து உண்டானதால் இப்பெயர் உண்டானது.
துளையுள்ள ஒரே விதை
ருத்ராட்ச மரத்தின் விதைக்கு தனிச்சிறப்பு உண்டு. மற்ற விதைகளில் துவாரம் இருக்காது. துளசி அல்லது ஸ்படிக மணிகளை துளையிட்ட பிறகே கோர்க்க முடியும். ஆனால், இயற்கையிலேயே துளை உள்ளது ருத்ராட்சம். எல்லா மனிதர்களும் இதை எளிதாக அணிய வேண்டும் என்ற அடிப்படையில் இப்படி படைக்கப்பட்டுள்ளது. ஜாவா தீவு, நேபாளம், பெங்களூருவில் ருத்ராட்ச மரம் வளர்கிறது. வியாதியை போக்கும் தன்மை இதற்குண்டு. ருத்ராட்சத்தை ஊற வைத்த நீரில் மஞ்சள்பொடி சேர்த்து குடித்தால் வாந்தி, இருமல் நீங்கும். உஷ்ணம் தணியும்.
சிவபூஜை செய்த சிவன்
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என்று அனைவரும் சிவபூஜை செய்து அருள்பெற்றுள்ளனர். ஆனால் சிவன் தன்னைத் தானே பூஜை செய்து வழிபட்ட தலம் மதுரை இம்மையில் நன்மை தருவார் கோயிலாகும். மூலவர் லிங்கவடிவத்தில் இருக்கிறார். அவருக்கு பின்புறம் சிவபார்வதி சிலைகள் உள்ளன. சிவபெருமானே, மதுரையில் சுந்தரபாண்டியராக அரசாட்சி செய்கிறார். பாண்டிய அரசர்கள் ஆட்சி பீடத்தில் அமரும் போது சிவபூஜை செய்வது மரபு. இதன் அடிப்படையில், மதுரையில் ஆட்சியில் அமர்ந்த சிவனும், தனது பட்டாபிஷேகத்தின் போது, தனக்குத்தானே பூஜை செய்து கொண்டாராம். அந்த அடிப்படையில், இவ்வாறு சந்நிதி எழுப்பப்பட்டுள்ளது. இதே போன்ற சந்நிதி வேதாரண்யத்திலும் உள்ளது.
.
திரும்பத் திரும்ப பயன்படுத்தலாம்
வில்வம் மகாலட்சுமி வாசம் செய்யும் இடம். வில்வ இலையால் சிவனை பூஜிக்க மோட்சம் கிடைக்கும். ஒருமுறை பூஜைக்குப் பயன்படுத்திய வில்வத்தை நீரில் கழுவி விட்டு மீண்டும் பயன்படுத்தலாம். மூன்று வில்வ இலைகள் சேர்ந்திருப்பதை 'வில்வ தளம்' என்பர். இதனால் சிவனை பூஜிப்பது சிறப்பானது. அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வில்வம் பறிக்கக் கூடாது. வில்வம் மருத்துவ குணம் உடையது. காய்ச்சல், இருமலுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
காசியில் சப்தரிஷி பூஜை
காசி என்றதும் நினைவுக்கு வருவது கங்கை நதியும், காசி விஸ்வநாதர் கோயிலும் தான். விஸ்வ நாதருக்கு தினமும் இரவு 7.45 - 8.30 மணி வரை சப்தரிஷி பூஜை நடக்கும். அத்ரி, வசிஷ்டர், கஷ்யபர், கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி ஆகிய ஏழு பேரும் சப்தரிஷிகளாவர். வானமண்டலத்தில் சனி உலகத்திற்கு வடக்கே சப்தரிஷி மண்டலம் உள்ளது. அங்கிருந்து வந்து தினமும் காசி விஸ்வநாதரை இவர்கள் பூஜிப்பதாக ஐதீகம். இதனை குறிக்கும் விதத்தில், கருவறையில் ஏழு அந்தணர்கள்(7பண்டாக்கள்) சூழ்ந்து நின்று பூஜை நடத்துவர்.
அபாயம் போக்கும் மந்திரம்
நால்வழிச்சாலையில் குறித்த இடத்திற்கு விரைந்து செல்வது போல, பிறவிப்பயணத்தை விரைவில் முடிக்க சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் வழி காட்டியுள்ளனர். தேவாரம், திருவாசகப் பாடல்கள் பாடுவோர் பிறவித்துன்பத்தை விரைவில் களையலாம். அத்துடன், ஐந்தெழுத்து மந்திரமான 'நமசிவாய' 'சிவாயநம' என்பவற்றையும் தினமும் சொல்ல வேண்டும். நீதிநுாலான நல்வழியில், 'சிவாயநம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை” எனகிறார் அவ்வையார்
பித்தா என்பது ஏன்?
'பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா' என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடலே இது தான். சிவனை இவர் 'பித்தன்' என அழைக்கக் காரணம் என்ன தெரியுமா? சுந்தரருக்கு திருமணம் நடக்க இருந்த வேளையில், அவரை ஆட்கொள்ள நினைத்த சிவன், முதியவர் வடிவி்ல் வந்தார். சுந்தரர் தன் முன்னோருக்கும், தனக்கும் அடிமை என்றார். “ஏ பித்தனே! நீ யார்? என்ன உளறுகிறாய்?” என்று சுந்தரர் கடிந்தார். பின்பு தான் வந்தது சிவன் என்ற உண்மை புரிந்தது. தன்னைப் பாடும்படி சிவன் கேட்கவே, என்ன சொல்லி ஆரம்பிப்பது என சுந்தரர் குழம்பினார். “என்னை பித்தன் என்று திட்டினாயே! அதியிலேயே துவங்கு,” என்றார்.
சுந்தரரும் அந்த வார்த்தையின் பெருமையை உணர்ந்தார். சிவனின் தலையிலுள்ள கங்கை மூன்று முறை தான் மனிதர்களின் பாவத்தைப் பொறுப்பாள். ஆனால், அவரது துணைவி பார்வதியோ, எத்தனை தடவை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வாள். எத்தனை தடவை தப்பு செய்தாலும் பொறுப்பவளை தலையில் வைத்து கொண்டாடாமல், குறைந்த தடவை பொறுப்பவளை, சிவன் தனது தலையில் வைத்துக் கொண்டாடுகிறார். இத்தகைய புரிந்து கொள்ள முடியாத செயல்களைச் செய்வதால் அவரைப் 'பித்தன்' என்றார் சுந்தரர்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
SOURCE-: DINAMALAR