Post by radha on Sept 8, 2020 16:16:33 GMT 5.5
OM Sri GURUPYO NAMAHA respectful PRANAMS to Sri KANCHI MAHA
knramesh
In AMRITHA VAHINI
Today's Sri Chandrasekaramrutham
*ஆவணி மாஸ ஜயந்தி உத்ஸவம்!*
* குருவிடம் இருந்து ஞான தானம் பெற்று அவர் போலவே ஞானியாகிறவன், தானும் இந்த தானத்தைச் செய்து மற்றவரையும் ஞானியாக்கி விடுகிறான்.
* எக்காலத்தும், எவ்விஷயத்தும் திருப்தியை ஏற்படுத்தக் கூடிய தானம் - ஞான தானம் தான்.
* சப்த மாத்திரத்திலேயே ஏற்படுகிற பலன்கள் தான் மந்திரங்களுக்கு விசேஷம்.
* மந்திரங்களை நாம் விடுவதால் மந்திரத்துக்கு ஒரு கஷ்டமும் இல்லை, நஷ்டம் நமக்கு தான்.
* சரியை என்பது நித்ய ஒழுக்க ஆசாரங்களுக்கு வேண்டியதைச் சொல்பவை.
* கிரியா பாதம் என்பது செய்ய வேண்டிய பூஜை முதலியவைகளைச் சொல்பவை.
* கடுமையாக மனதை அடக்கி நிலைநிறுத்தி, அதை ஈசனிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பிராணாயாமம், த்யானம், நிஷ்டை முதலிய முறைகளைச் சொல்வது யோக பாதம்.
* மனதை வெற்றி கொண்டவன் உலகத்தை வெற்றி கொள்வான். அந்த வெற்றிக்கு உதவுவது ஞான பாதம்.
* மூலத்தை ரட்சிக்க வேண்டும் என்றால், அந்த மூலம் எந்த பாஷையில் இருக்கிறதோ, அந்த பாஷையை ரட்சிக்க வேண்டும்.
* இது என் பாஷை, இது உன் பாஷை என்றெல்லாம் பலர் சண்டைப் போடுவதைப் பார்த்தால் துக்கமாக இருக்கிறது.
* மதத்தைக் காட்டிலும், ஸ்வாமியைக் காட்டிலும் பாஷை தான் உயர்வு என்று நினைப்பது மிகவும் தப்பு.
* ஹிந்தியை தேசிய பாஷை என்றால், சம்ஸ்கிருதத்தை உலக பாஷை என்று தான் சொல்ல வேண்டும்.
* நம்முடைய தர்மத்திற்கு - மதத்திற்கு மூலமான வேதம், சாஸ்திரம் எல்லாம் இருப்பதாலேயே, சமஸ்கிருதத்தை நாம் ரட்சிக்க வேண்டும்.
* சம்ஸ்கிருதத்தில் வேதம் இருப்பது போலவே, தமிழில் "திருக்குறள்" இருக்கிறது. இதுவும் ஒரு தமிழ் மறை. எனவே தமிழ் மொழியையும் காப்பது நம் கடமையாகிறது.
* சுக துக்கங்களில் சலனமடையாமல், தன்னையும், மற்றவர்களையும் ஆனந்தமாக இருக்கச் செய்வது தான் "யோகம்".
* "ராமன்" என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம். மற்றவர்களுக்கு ஆனந்தம் அளிப்பவன் என்றும் அர்த்தம
* வேத தர்மங்களை அப்படியே அனுசரித்து ஆனந்தமாக வாழ்ந்து காட்டவே பகவான் "ராம அவதாரம்" எடுத்தார்.
* வேதப் பொருளான பரமாத்மா தசரதன் பிள்ளையாக வேஷம் போட்டவுடன் வேதமும் வால்மீகியின் குழந்தையாக, ஸ்ரீ ராமாயணமாக வந்துவிட்டது.
प
knramesh
In AMRITHA VAHINI
Today's Sri Chandrasekaramrutham
*ஆவணி மாஸ ஜயந்தி உத்ஸவம்!*
* குருவிடம் இருந்து ஞான தானம் பெற்று அவர் போலவே ஞானியாகிறவன், தானும் இந்த தானத்தைச் செய்து மற்றவரையும் ஞானியாக்கி விடுகிறான்.
* எக்காலத்தும், எவ்விஷயத்தும் திருப்தியை ஏற்படுத்தக் கூடிய தானம் - ஞான தானம் தான்.
* சப்த மாத்திரத்திலேயே ஏற்படுகிற பலன்கள் தான் மந்திரங்களுக்கு விசேஷம்.
* மந்திரங்களை நாம் விடுவதால் மந்திரத்துக்கு ஒரு கஷ்டமும் இல்லை, நஷ்டம் நமக்கு தான்.
* சரியை என்பது நித்ய ஒழுக்க ஆசாரங்களுக்கு வேண்டியதைச் சொல்பவை.
* கிரியா பாதம் என்பது செய்ய வேண்டிய பூஜை முதலியவைகளைச் சொல்பவை.
* கடுமையாக மனதை அடக்கி நிலைநிறுத்தி, அதை ஈசனிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பிராணாயாமம், த்யானம், நிஷ்டை முதலிய முறைகளைச் சொல்வது யோக பாதம்.
* மனதை வெற்றி கொண்டவன் உலகத்தை வெற்றி கொள்வான். அந்த வெற்றிக்கு உதவுவது ஞான பாதம்.
* மூலத்தை ரட்சிக்க வேண்டும் என்றால், அந்த மூலம் எந்த பாஷையில் இருக்கிறதோ, அந்த பாஷையை ரட்சிக்க வேண்டும்.
* இது என் பாஷை, இது உன் பாஷை என்றெல்லாம் பலர் சண்டைப் போடுவதைப் பார்த்தால் துக்கமாக இருக்கிறது.
* மதத்தைக் காட்டிலும், ஸ்வாமியைக் காட்டிலும் பாஷை தான் உயர்வு என்று நினைப்பது மிகவும் தப்பு.
* ஹிந்தியை தேசிய பாஷை என்றால், சம்ஸ்கிருதத்தை உலக பாஷை என்று தான் சொல்ல வேண்டும்.
* நம்முடைய தர்மத்திற்கு - மதத்திற்கு மூலமான வேதம், சாஸ்திரம் எல்லாம் இருப்பதாலேயே, சமஸ்கிருதத்தை நாம் ரட்சிக்க வேண்டும்.
* சம்ஸ்கிருதத்தில் வேதம் இருப்பது போலவே, தமிழில் "திருக்குறள்" இருக்கிறது. இதுவும் ஒரு தமிழ் மறை. எனவே தமிழ் மொழியையும் காப்பது நம் கடமையாகிறது.
* சுக துக்கங்களில் சலனமடையாமல், தன்னையும், மற்றவர்களையும் ஆனந்தமாக இருக்கச் செய்வது தான் "யோகம்".
* "ராமன்" என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம். மற்றவர்களுக்கு ஆனந்தம் அளிப்பவன் என்றும் அர்த்தம
* வேத தர்மங்களை அப்படியே அனுசரித்து ஆனந்தமாக வாழ்ந்து காட்டவே பகவான் "ராம அவதாரம்" எடுத்தார்.
* வேதப் பொருளான பரமாத்மா தசரதன் பிள்ளையாக வேஷம் போட்டவுடன் வேதமும் வால்மீகியின் குழந்தையாக, ஸ்ரீ ராமாயணமாக வந்துவிட்டது.
प