Post by radha on Jul 22, 2012 14:39:42 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
2-திருப்பதி… திருப்பம்… திருப்தி — பி.சுவாமிநாதன்
Kanchi Maha Periva Thiruvadigal Saranam
ஸ்ரீவேங்கடவனின் அருட்கடாட்சத்தை – ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்திலாவது தெரிந்து கொள்ளாத – புரிந்து கொள்ளாத மெய்யன்பர்கள் அநேகமாக இருக்க முடியாது. தனது இருப்பையும், ஆசியையும் ஏதேனும் ஒரு வகையில் – தேவைப்படும் வேளையில் சம்பந்தப்பட்ட பக்தருக்கு உணர்த்தி விடுவார் வேங்கடாசலபதி. அந்த வகையில் – பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்தில், சென்னை மாகாணத்தில் பல உயர் பதவிகளை வகித்த சர் தாமஸ் மன்றோ என்கிற கிறிஸ்துவரின் அனுபவம், ஓர் ஆச்சர்யம்!
தற்போது ஆந்திர மாநிலத்தில், சித்தூர் மாவட்டத்தில்தான் திருமலை திருப்பதி இருக்கிறது. ஆனால், அந்தக் காலத்தில், சென்னை மாகாணத்தைச் சேர்ந்ததாக இருந்தது சித்தூர் மாவட்டம். சம்பவம் நடந்த காலத்தில், இந்த மாவட்டத்துக்கு கலெக்டராக இருந்தார் மன்றோ. வெள்ளையர்கள் ஆட்சிக் காலத்தில் அமைச்சர்கள் எல்லாம் கிடையாது. எல்லாமே கலெக்டர்கள் ராஜ்யம்தான். வெள்ளைக்கார துரைமார்களே, அதிகாரம் மிக்கவர்களாக இருந்தனர்.
சித்தூர் மாவட்ட கலெக்டர் என்பதால், அலுவல் ரீதியாக திருமலை-திருப்பதிக்கு அடிக்கடி போய் வர நேர்ந்தது மன்றோவுக்கு. அந்த கேஷத்திரத்தின் பெருமை பற்றிப் பலரும் சொல்லும் விஷயங்களை இந்தக் காதில் வாங்கி, அந்தக் காதில் விட்டுவிடுவார். அதெல்லாம் அவருக்குத் தேவை இல்லையே! ‘திருப்பதியில் தினம்தோறும் எவ்வளவு வசூல்? வெள்ளையர் அரசாங்கத்துக்கு இங்கிருந்து எவ்வளவு பணம் அனுப்பலாம்?’ என்பது மட்டுமே அவர் இலக்கு.
எனவே, திருமலைக்குச் செல்லும் போதெல்லாம், பெருமாள் சன்னிதி பக்கம் எட்டிக்கூடப் பார்க்காமல், உண்டியல் கலெக்ஷனிலும், ஆலய அலுவலகத்தில் வசூலாகி இருக்கும் தொகையிலும் பார்வையைச் செலுத்துவார். ‘கோயில் அதிகாரிகள் இந்தப் பணத்தைச் சுருட்டி விடுகிறார்களோ?’ என்றும் அவருக்கு சந்தேகம் வரும். எனவே, அதுபோன்ற சந்தர்ப்பங்களில் கோயில் பணியாளர்களையும், அர்ச்சகர்களையும் தாறுமாறாகத் திட்டித் தீர்ப்பார். துரையின் பேச்சுக்கு எவர்தான் பதில் சொல்ல முடியும்? வேறு வழி தெரியாமல் தலையைக் குனிந்தவாறு இருப்பார்கள், அதிகாரிகளும் அர்ச்சகர்களும். தங்கள் மனக் குமுறலை அந்தப் பெருமாளிடமே முறையிட்டுக் கண்ணீர் சிந்துவார்கள்.
ஏழுமலையானுக்குத் தலைமுடி காணிக்கையாகக் கொடுக்க வருகிறவர்களைப் பார்த்து, உள்ளூர்லயே செய்ய வேண்டிய சவரத்தை ஏனயா மலையில் வந்து செய்கிறீர்கள்?” என்று கிண்டல் செய்வார். பெருமாளுக்கு முடி காணிக்கை கொடுத்து விட்டு, மொட்டைத் தலையுடன் செல்லும் இரு நபர்களைப் பிடித்து, ஒருவர் தலையுடன் இன்னொருவரின் தலையை மோத விட்டுப் பார்ப்பார்.
குரூரமான இந்தச் செயலைக் காண நேரிடும் அர்ச்சகர்களும், கோயில் பணியாளர்களும் ‘அபசாரம்… அபசாரம்’ என்று வாயைப் பொத்திக்கொண்டு நகர்ந்துவிடுவார்கள். அந்த நேரத்தில் யாராவது ஒருவர் இதைத் தட்டிக் கேட்க முற்பட்டால், அவ்வளவுதான்… வெள்ளைக்கார படை வீரர்கள், கேட்டவரைத் துவம்சம் செய்துவிடுவார்கள்.
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார் வேங்கடாசலபதி. எதற்கும் ஒரு முடிவு உண்டல்லவா? அதுபோல் மன்றோவின் அட்டகாசங்களுக்கு ஒரு முடிவு கட்டி, அவரை மன்னித்து, தன் பக்தன் ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று பெருமாள் தீர்மானித்தார் போலும். இது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!
ஒருநாள் வசூல் விவரங்களைப் பார்வையிட, தம் படையுடன் திருமலைக்கு வந்தார் மன்றோ. உண்டியல் வசூல், வழிபாடுகள் மூலம் சேர்ந்த தொகை, காணிக்கையாக வந்தது, கையிருப்பில் இருக்கும் தொகை அனைத்துக்கும் கணக்கைத் தயாராக வைத்துக்கொண்டு, மன்றோவின் வருகையை எதிர்பார்த்திருந்தனர் அதிகாரிகள்.
ஆலயத்துக்குள் நுழைந்த மன்றோ, வசூலைப் பார்வையிடுவதற்கு முன்னதாக, ஆலயத்தை மிடுக்குடன் வலம் வந்தார். புனிதம் நிரம்பிய அந்தப் பிராகாரத்தை, அதிகார தொனியில் அவர் பவனி வந்ததைக் கண்ட பலரும் சங்கடத்தில் நெளிந்தனர்.
அப்படி வரும்போது, ஒரு மூலையில் பக்தர்கள் சிலர் அமர்ந்து பெருமாளின் பிரசாதமான வெண்பொங்கலை, சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஒரு இலையில் வைத்துக் கொண்டு, அவர்கள் பிரசாதம் சாப்பிடுவதைப் பார்த்த மன்றோ, முகம் சுளித்தார்; அருவருப்படைந்தார். சாப்பிட்டுக் கொண்டிருந்த பக்தர்களைப் பார்த்து, சே… என்ன உணவு இது… பாக்கவே ஒரு மாதிரியாய் இருக்கே… இதைச் சாப்பிட்டா என்னென்ன வியாதிங்க வருமோ? எல்லாரும் முதல்ல அதைத் துப்பிடுங்க” என்று முகத்தை அஷ்டகோணலாக்கிக் கொண்டு, கண்டிப்பான குரலில் சொன்னார்.
பக்தர்கள் பதறிப் போனார்கள். துரைக்குப் பயந்து துப்பியவர்களும் உண்டு; பெருமாளுக்கு பயந்து விழுங்கியவர்களும் உண்டு.
இதைச் சொல்லிவிட்டு, பிராகாரத்தில் ஒரு சில அடிகள் எடுத்து வைத்ததுதான் தெரியும். அடுத்த விநாடி நடந்த சம்பவத்தை, அங்கே எவரும் எதிர்பார்க்கவில்லை – வேங்கடவனைத் தவிர. ஐயோ… வயிறு வலிக்குதே… குத்துதே… என்னன்னு தெரியாம குடையுதே” என்று பெருங்குரல் எடுத்து, அடி வயிற்றைப் பிடித்துக்கொண்டு அலற ஆரம்பித்தார் மன்றோ. திடீரென சுருண்டு விழுந்தார். உடன் வந்த அலுவலக அதிகாரிகளும், கோயில் ஊழியர்களும் பதறிப் போனார்கள். நடக்கவே முடியாமல் இருந்தவரை கைத்தாங்கலாகப் பிடித்து, அவரது பங்களாவுக்கு அழைத்துச் சென்றனர்.
அன்றைய இரவு உணவை முடித்துக் கொண்டு படுத்த மன்றோவுக்கு மீண்டும் வயிற்றில் சுருக்கென்று வலி. ஆங்கிலேய மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். வைத்தியம் செய்தனர். என்றாலும், வயிற்று வலிக்கான காரணத்தை அவர்களால் கண்டறிய முடியவில்லை. இதன்பின் வந்த மருந்துகள், மாத்திரைகள், உறக்கம் வருவதற்கான ஊசிகள் – எதுவும் நிவாரணம் தரவில்லை. வலியும் குத்தலுமாக நகர்ந்தன நாட்கள். கிழிந்த துணி ஆகிப் போனார் மன்றோ.
இதையடுத்து ஒருநாள்… திருப்பதியில் இருந்து, அலுவல் விஷயமாக மன்றோவைச் சந்திக்க வந்தார், ஓர் அர்ச்சகர். தனது நிலை குறித்து அவரிடம் புலம்பித் தீர்த்தார் மன்றோ. துரைமாரே… நான் ஒன்று சொன்னால் கோவிக்கக்கூடாது. சொல்லட்டுமா?” என்று மெள்ள ஆரம்பித்தார் அந்த அர்ச்சகர்.
சொல்லுங்கள்… எனக்கு வயிற்று வலி தீர வேண்டும். அன்றைக்குக் கோயிலில் தொடங்கிய வலி இன்னமும் நீங்கிய பாடில்லை. ஏதாவது சொல்லுங்கள்” என்று, அவரது முகத்தை ஆர்வத்துடன் ஏறிட்டார் மன்றோ.
தன்னுள் தைரியத்தை வரவழைத்துக் கொண்ட அர்ச்சகர், பெருமாளோட பிரசாதத்தை நீங்க மரியாதைக்குறைவாய் பேசினதால தான், ஒங்களுக்கு இப்படி ஒரு நிலைமை உண்டாகி இருக்கும்னு தோண்றது. இதுக்கு ஒரே ஒரு பரிகாரம்தான் இருக்கு” என்று நிறுத்தினார்.
சொல்லுங்க.. அது என்ன பரிகாரம்? நான் செய்யத் தயாராய் இருக்கேன்” என்று மண்டியிட்டார் துரை.
பெருமாளோட வெண்பொங்கல் பிரசாதம் கொண்டு வந்திருக்கேன். பெருமாளை மனசுக்குள்ள தியானம் பண்ணிண்டு, இதை சாப்டுங்கோ. வந்த வலி தானா போயிடும்” என்றார்.
பரிகாரத்தைக் கேட்டதும், மன்றோவின் முகம் பிரகாசமானது. மறுவார்த்தை பேசாமல், மாலவனின் பிரசாதமான வெண்பொங்கலை வாங்கி, கண்களை மூடி பெருமாளை தியானித்து, அதை உண்ணத் தொடங்கினார்.
தவறை ஒப்புக்கொண்டால், மன்னிப்பதுதானே தெய்வத்தின் குணம்! ஒவ்வொரு கவளமாக வெண் பொங்கலை சாப்பிடச் சாப்பிட… அதுவரை இருந்த வயிற்று வலியும், குத்தல் வலியும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. பிரசாதம் முழுக்கத் தீர்வதற்கும், வயிற்று வலி முற்றிலுமாகத் தீர்வதற்கும் சரியாக இருந்தது.
ஆச்சரியப்பட்டார் மன்றோ. எங்கள் தேசத்து மருத்துவர்கள் எத்தனையோ வைத்தியம் செய்தும் தீராத இந்த வயிற்று வலி, பொங்கல் பிரசாதத்தால் தீர்ந்தது என்றால், அது வேங்கடவனின் அருளாசிதான்” என்று நெகிழ்ந்து போனார்.
இதோடு நிற்கவில்லை; தன்னைக் குணமாக்கிய இந்த வெண்பொங்கல் பிரசாதம், காலா காலத்துக்கும் பெருமாளுக்கு நடக்க வேண்டும் என்று, வயல்பாடு தாலுகாவில் உள்ள ‘கோடபாயல்’ என்ற கிராமத்தின் வருமானம் முழுவதையும் திருப்பதி பெருமாளுக்கே எழுதி வைத்து உத்தரவு போட்டார். அத்துடன், ஒரு பக்தனாகத் திருப்பதிக்குப் போய் பிரம்மோத்ஸவம், சகஸ்ர கலசாபிஷேகம் போன்றவற்றை நடத்தி, பெருமாளை வணங்கிப் பேறு பெற்றார்.
கோடபாயல் கிராமத்தின் வருவாயில் இருந்து எழுதி வைக்கப்பட்ட அந்த வெண் பொங்கல் பிரசாதம், இன்றைக்கும் திருப்பதி ஆலயத்தில் நண்பகல் வழிபாட்டுக்குப் பிறகு நடந்து வருகிறதாம். அந்தக் கட்டளை ‘மன்றோ பிரபு கங்காளம்’ என்றே அழைக்கப்படுகிறது.
இவர் மட்டுமல்ல; ஆங்கிலேயர்களில் கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோரும் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு, பல நேர்த்திக் கடன்களையும் செலுத்தி உள்ளனர் என்பது கூடுதல் தகவல்.
தாமஸ் மன்றோ, கி.பி.1761ஆம் ஆண்டு, மே 27ஆம் தேதி ஸ்காட்லாந்தில், உள்ள கிளாஸ்கோ நகரத்தில் பிறந்தவர். படிக்கின்ற காலத்திலேயே மிகவும் சுறுசுறுப்பாகவும் புத்திசாலியாகவும் இருந்த மன்றோ, ஒரு பாக்ஸரும்கூட.
ஆங்கிலேயர்களின் போர்ப் படையில் 1779ல் ஒரு சாதாரண வீரராக சேர்ந்த மன்றோ. பிறகு, கமாண்டர், கலெக்டர் என்று பல பதவிகளை வகித்து, 1820-ல் சென்னை மாகாண ஆளுநரானார்.
சென்னை – அண்ணா சாலையில், தீவுத் திடல் எதிரே பிரமாண்டமான குதிரை மீது ஒரு வெள்ளைக்காரர் அமர்ந்திருக்கும் சிலையை பலரும் பார்த்திருப்பீர்கள்! அவர்தான், சர் தாமஸ் மன்றோ!
(அற்புதங்கள் தொடரும்…)
நன்றி – தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)
Kanchi Maha Periva Thiruvadigal Saranam
2-திருப்பதி… திருப்பம்… திருப்தி — பி.சுவாமிநாதன்
Kanchi Maha Periva Thiruvadigal Saranam
ஸ்ரீவேங்கடவனின் அருட்கடாட்சத்தை – ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்திலாவது தெரிந்து கொள்ளாத – புரிந்து கொள்ளாத மெய்யன்பர்கள் அநேகமாக இருக்க முடியாது. தனது இருப்பையும், ஆசியையும் ஏதேனும் ஒரு வகையில் – தேவைப்படும் வேளையில் சம்பந்தப்பட்ட பக்தருக்கு உணர்த்தி விடுவார் வேங்கடாசலபதி. அந்த வகையில் – பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்தில், சென்னை மாகாணத்தில் பல உயர் பதவிகளை வகித்த சர் தாமஸ் மன்றோ என்கிற கிறிஸ்துவரின் அனுபவம், ஓர் ஆச்சர்யம்!
தற்போது ஆந்திர மாநிலத்தில், சித்தூர் மாவட்டத்தில்தான் திருமலை திருப்பதி இருக்கிறது. ஆனால், அந்தக் காலத்தில், சென்னை மாகாணத்தைச் சேர்ந்ததாக இருந்தது சித்தூர் மாவட்டம். சம்பவம் நடந்த காலத்தில், இந்த மாவட்டத்துக்கு கலெக்டராக இருந்தார் மன்றோ. வெள்ளையர்கள் ஆட்சிக் காலத்தில் அமைச்சர்கள் எல்லாம் கிடையாது. எல்லாமே கலெக்டர்கள் ராஜ்யம்தான். வெள்ளைக்கார துரைமார்களே, அதிகாரம் மிக்கவர்களாக இருந்தனர்.
சித்தூர் மாவட்ட கலெக்டர் என்பதால், அலுவல் ரீதியாக திருமலை-திருப்பதிக்கு அடிக்கடி போய் வர நேர்ந்தது மன்றோவுக்கு. அந்த கேஷத்திரத்தின் பெருமை பற்றிப் பலரும் சொல்லும் விஷயங்களை இந்தக் காதில் வாங்கி, அந்தக் காதில் விட்டுவிடுவார். அதெல்லாம் அவருக்குத் தேவை இல்லையே! ‘திருப்பதியில் தினம்தோறும் எவ்வளவு வசூல்? வெள்ளையர் அரசாங்கத்துக்கு இங்கிருந்து எவ்வளவு பணம் அனுப்பலாம்?’ என்பது மட்டுமே அவர் இலக்கு.
எனவே, திருமலைக்குச் செல்லும் போதெல்லாம், பெருமாள் சன்னிதி பக்கம் எட்டிக்கூடப் பார்க்காமல், உண்டியல் கலெக்ஷனிலும், ஆலய அலுவலகத்தில் வசூலாகி இருக்கும் தொகையிலும் பார்வையைச் செலுத்துவார். ‘கோயில் அதிகாரிகள் இந்தப் பணத்தைச் சுருட்டி விடுகிறார்களோ?’ என்றும் அவருக்கு சந்தேகம் வரும். எனவே, அதுபோன்ற சந்தர்ப்பங்களில் கோயில் பணியாளர்களையும், அர்ச்சகர்களையும் தாறுமாறாகத் திட்டித் தீர்ப்பார். துரையின் பேச்சுக்கு எவர்தான் பதில் சொல்ல முடியும்? வேறு வழி தெரியாமல் தலையைக் குனிந்தவாறு இருப்பார்கள், அதிகாரிகளும் அர்ச்சகர்களும். தங்கள் மனக் குமுறலை அந்தப் பெருமாளிடமே முறையிட்டுக் கண்ணீர் சிந்துவார்கள்.
ஏழுமலையானுக்குத் தலைமுடி காணிக்கையாகக் கொடுக்க வருகிறவர்களைப் பார்த்து, உள்ளூர்லயே செய்ய வேண்டிய சவரத்தை ஏனயா மலையில் வந்து செய்கிறீர்கள்?” என்று கிண்டல் செய்வார். பெருமாளுக்கு முடி காணிக்கை கொடுத்து விட்டு, மொட்டைத் தலையுடன் செல்லும் இரு நபர்களைப் பிடித்து, ஒருவர் தலையுடன் இன்னொருவரின் தலையை மோத விட்டுப் பார்ப்பார்.
குரூரமான இந்தச் செயலைக் காண நேரிடும் அர்ச்சகர்களும், கோயில் பணியாளர்களும் ‘அபசாரம்… அபசாரம்’ என்று வாயைப் பொத்திக்கொண்டு நகர்ந்துவிடுவார்கள். அந்த நேரத்தில் யாராவது ஒருவர் இதைத் தட்டிக் கேட்க முற்பட்டால், அவ்வளவுதான்… வெள்ளைக்கார படை வீரர்கள், கேட்டவரைத் துவம்சம் செய்துவிடுவார்கள்.
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார் வேங்கடாசலபதி. எதற்கும் ஒரு முடிவு உண்டல்லவா? அதுபோல் மன்றோவின் அட்டகாசங்களுக்கு ஒரு முடிவு கட்டி, அவரை மன்னித்து, தன் பக்தன் ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று பெருமாள் தீர்மானித்தார் போலும். இது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!
ஒருநாள் வசூல் விவரங்களைப் பார்வையிட, தம் படையுடன் திருமலைக்கு வந்தார் மன்றோ. உண்டியல் வசூல், வழிபாடுகள் மூலம் சேர்ந்த தொகை, காணிக்கையாக வந்தது, கையிருப்பில் இருக்கும் தொகை அனைத்துக்கும் கணக்கைத் தயாராக வைத்துக்கொண்டு, மன்றோவின் வருகையை எதிர்பார்த்திருந்தனர் அதிகாரிகள்.
ஆலயத்துக்குள் நுழைந்த மன்றோ, வசூலைப் பார்வையிடுவதற்கு முன்னதாக, ஆலயத்தை மிடுக்குடன் வலம் வந்தார். புனிதம் நிரம்பிய அந்தப் பிராகாரத்தை, அதிகார தொனியில் அவர் பவனி வந்ததைக் கண்ட பலரும் சங்கடத்தில் நெளிந்தனர்.
அப்படி வரும்போது, ஒரு மூலையில் பக்தர்கள் சிலர் அமர்ந்து பெருமாளின் பிரசாதமான வெண்பொங்கலை, சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஒரு இலையில் வைத்துக் கொண்டு, அவர்கள் பிரசாதம் சாப்பிடுவதைப் பார்த்த மன்றோ, முகம் சுளித்தார்; அருவருப்படைந்தார். சாப்பிட்டுக் கொண்டிருந்த பக்தர்களைப் பார்த்து, சே… என்ன உணவு இது… பாக்கவே ஒரு மாதிரியாய் இருக்கே… இதைச் சாப்பிட்டா என்னென்ன வியாதிங்க வருமோ? எல்லாரும் முதல்ல அதைத் துப்பிடுங்க” என்று முகத்தை அஷ்டகோணலாக்கிக் கொண்டு, கண்டிப்பான குரலில் சொன்னார்.
பக்தர்கள் பதறிப் போனார்கள். துரைக்குப் பயந்து துப்பியவர்களும் உண்டு; பெருமாளுக்கு பயந்து விழுங்கியவர்களும் உண்டு.
இதைச் சொல்லிவிட்டு, பிராகாரத்தில் ஒரு சில அடிகள் எடுத்து வைத்ததுதான் தெரியும். அடுத்த விநாடி நடந்த சம்பவத்தை, அங்கே எவரும் எதிர்பார்க்கவில்லை – வேங்கடவனைத் தவிர. ஐயோ… வயிறு வலிக்குதே… குத்துதே… என்னன்னு தெரியாம குடையுதே” என்று பெருங்குரல் எடுத்து, அடி வயிற்றைப் பிடித்துக்கொண்டு அலற ஆரம்பித்தார் மன்றோ. திடீரென சுருண்டு விழுந்தார். உடன் வந்த அலுவலக அதிகாரிகளும், கோயில் ஊழியர்களும் பதறிப் போனார்கள். நடக்கவே முடியாமல் இருந்தவரை கைத்தாங்கலாகப் பிடித்து, அவரது பங்களாவுக்கு அழைத்துச் சென்றனர்.
அன்றைய இரவு உணவை முடித்துக் கொண்டு படுத்த மன்றோவுக்கு மீண்டும் வயிற்றில் சுருக்கென்று வலி. ஆங்கிலேய மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். வைத்தியம் செய்தனர். என்றாலும், வயிற்று வலிக்கான காரணத்தை அவர்களால் கண்டறிய முடியவில்லை. இதன்பின் வந்த மருந்துகள், மாத்திரைகள், உறக்கம் வருவதற்கான ஊசிகள் – எதுவும் நிவாரணம் தரவில்லை. வலியும் குத்தலுமாக நகர்ந்தன நாட்கள். கிழிந்த துணி ஆகிப் போனார் மன்றோ.
இதையடுத்து ஒருநாள்… திருப்பதியில் இருந்து, அலுவல் விஷயமாக மன்றோவைச் சந்திக்க வந்தார், ஓர் அர்ச்சகர். தனது நிலை குறித்து அவரிடம் புலம்பித் தீர்த்தார் மன்றோ. துரைமாரே… நான் ஒன்று சொன்னால் கோவிக்கக்கூடாது. சொல்லட்டுமா?” என்று மெள்ள ஆரம்பித்தார் அந்த அர்ச்சகர்.
சொல்லுங்கள்… எனக்கு வயிற்று வலி தீர வேண்டும். அன்றைக்குக் கோயிலில் தொடங்கிய வலி இன்னமும் நீங்கிய பாடில்லை. ஏதாவது சொல்லுங்கள்” என்று, அவரது முகத்தை ஆர்வத்துடன் ஏறிட்டார் மன்றோ.
தன்னுள் தைரியத்தை வரவழைத்துக் கொண்ட அர்ச்சகர், பெருமாளோட பிரசாதத்தை நீங்க மரியாதைக்குறைவாய் பேசினதால தான், ஒங்களுக்கு இப்படி ஒரு நிலைமை உண்டாகி இருக்கும்னு தோண்றது. இதுக்கு ஒரே ஒரு பரிகாரம்தான் இருக்கு” என்று நிறுத்தினார்.
சொல்லுங்க.. அது என்ன பரிகாரம்? நான் செய்யத் தயாராய் இருக்கேன்” என்று மண்டியிட்டார் துரை.
பெருமாளோட வெண்பொங்கல் பிரசாதம் கொண்டு வந்திருக்கேன். பெருமாளை மனசுக்குள்ள தியானம் பண்ணிண்டு, இதை சாப்டுங்கோ. வந்த வலி தானா போயிடும்” என்றார்.
பரிகாரத்தைக் கேட்டதும், மன்றோவின் முகம் பிரகாசமானது. மறுவார்த்தை பேசாமல், மாலவனின் பிரசாதமான வெண்பொங்கலை வாங்கி, கண்களை மூடி பெருமாளை தியானித்து, அதை உண்ணத் தொடங்கினார்.
தவறை ஒப்புக்கொண்டால், மன்னிப்பதுதானே தெய்வத்தின் குணம்! ஒவ்வொரு கவளமாக வெண் பொங்கலை சாப்பிடச் சாப்பிட… அதுவரை இருந்த வயிற்று வலியும், குத்தல் வலியும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. பிரசாதம் முழுக்கத் தீர்வதற்கும், வயிற்று வலி முற்றிலுமாகத் தீர்வதற்கும் சரியாக இருந்தது.
ஆச்சரியப்பட்டார் மன்றோ. எங்கள் தேசத்து மருத்துவர்கள் எத்தனையோ வைத்தியம் செய்தும் தீராத இந்த வயிற்று வலி, பொங்கல் பிரசாதத்தால் தீர்ந்தது என்றால், அது வேங்கடவனின் அருளாசிதான்” என்று நெகிழ்ந்து போனார்.
இதோடு நிற்கவில்லை; தன்னைக் குணமாக்கிய இந்த வெண்பொங்கல் பிரசாதம், காலா காலத்துக்கும் பெருமாளுக்கு நடக்க வேண்டும் என்று, வயல்பாடு தாலுகாவில் உள்ள ‘கோடபாயல்’ என்ற கிராமத்தின் வருமானம் முழுவதையும் திருப்பதி பெருமாளுக்கே எழுதி வைத்து உத்தரவு போட்டார். அத்துடன், ஒரு பக்தனாகத் திருப்பதிக்குப் போய் பிரம்மோத்ஸவம், சகஸ்ர கலசாபிஷேகம் போன்றவற்றை நடத்தி, பெருமாளை வணங்கிப் பேறு பெற்றார்.
கோடபாயல் கிராமத்தின் வருவாயில் இருந்து எழுதி வைக்கப்பட்ட அந்த வெண் பொங்கல் பிரசாதம், இன்றைக்கும் திருப்பதி ஆலயத்தில் நண்பகல் வழிபாட்டுக்குப் பிறகு நடந்து வருகிறதாம். அந்தக் கட்டளை ‘மன்றோ பிரபு கங்காளம்’ என்றே அழைக்கப்படுகிறது.
இவர் மட்டுமல்ல; ஆங்கிலேயர்களில் கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோரும் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு, பல நேர்த்திக் கடன்களையும் செலுத்தி உள்ளனர் என்பது கூடுதல் தகவல்.
தாமஸ் மன்றோ, கி.பி.1761ஆம் ஆண்டு, மே 27ஆம் தேதி ஸ்காட்லாந்தில், உள்ள கிளாஸ்கோ நகரத்தில் பிறந்தவர். படிக்கின்ற காலத்திலேயே மிகவும் சுறுசுறுப்பாகவும் புத்திசாலியாகவும் இருந்த மன்றோ, ஒரு பாக்ஸரும்கூட.
ஆங்கிலேயர்களின் போர்ப் படையில் 1779ல் ஒரு சாதாரண வீரராக சேர்ந்த மன்றோ. பிறகு, கமாண்டர், கலெக்டர் என்று பல பதவிகளை வகித்து, 1820-ல் சென்னை மாகாண ஆளுநரானார்.
சென்னை – அண்ணா சாலையில், தீவுத் திடல் எதிரே பிரமாண்டமான குதிரை மீது ஒரு வெள்ளைக்காரர் அமர்ந்திருக்கும் சிலையை பலரும் பார்த்திருப்பீர்கள்! அவர்தான், சர் தாமஸ் மன்றோ!
(அற்புதங்கள் தொடரும்…)
நன்றி – தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)
Kanchi Maha Periva Thiruvadigal Saranam