Post by radha on Feb 15, 2020 6:44:10 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA. RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
ரா.பாலாஜி 发帖到 ஆன்மீகமும்... ஜோதிடமும்...
21 小时
பெரியவா திருவடியே
சரணம்.
பாவம் நீங்க ஒரே வழி தான் இருக்கிறது. அதற்கு கடவுளின் திருவடியை தினமும் தியானிப்பது அவசியம். தினமும் காலையில் ஐந்து நிமிடமாவது இஷ்ட தெய்வத்தின் திருவடிகளை மனதில் தியானியுங்கள். தியானம், வழிபாடு போன்ற உயர்ந்த விஷயங்களில் மனம் ஈடுபட்டால் மனத்தூய்மையை காக்க முடியும். எல்லாம் கடவுள் மயம் என்ற ஞானம் வந்து விட்டால் ஆசை, கோபம் ஆகிய தீய குணங்கள் உண்டாகாது. இனிப்பு சர்க்கரையால் செய்யப்பட்டது போல, உலகில் அனைத்துமாக இருப்பது கடவுள் ஒருவரே.
செல்வத்தில் சிறந்த செல்வம் நல்லறிவே. அதனால் கடவுளின் திருவடியில் சரணடைந்து நல்லறிவைத் தரும் படி பிரார்த்தனை செய்ய வேண்டும். இதயத்தில் கடவுள் குடியிருக்கிறார். அதில் கீழான சிந்தனையை அனுமதிப்பது கூடாது. நமக்கு நாமே மனதில் கட்டுதிட்டங்களை விதித்துக் கொண்டு அடக்கத்துடன் வாழ முயற்சிக்க வேண்டும். உலகத்தில் நன்மை, தீமை இரண்டும் கலந்தே இருக்கிறது. நல்லதை மட்டும் நாடும் மனநிலையை பெற வேண்டும்.
முதலில் அடக்கம் வெளியில் உண்டாக வேண்டும். அதுவே கொஞ்சம் கொஞ்சமாக மனதிற்குள்ளும் சித்திக்கத் தொடங்கும்.
சத்தியம், மனதைரியம், விட்டுக் கொடுக்கும் சுபாவம், இனிய சொல் ஆகிய நல்லபண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். கடவுளின் அருளை நினைத்து நன்றி செலுத்துவதே மனதை தூய்மைக்கும் சிறந்த வழியாகும். எந்த பணியில் இருந்து கொண்டிருந்தாலும் சரி, மனதில் இறைச் சிந்தனை மட்டுமே இருப்பது அவசியம்.
மனதிற்கு தோன்றுவதை எல்லாம் செய்வது கூடாது. சாஸ்திரப்படி செய்வதே நியாயம். தவறினால் துன்பத்திற்கு ஆளாக நேரிடும். தர்மம், நீதி இந்த இரண்டும் சேர்ந்தது தான் பண்பு. பண்பு இல்லாவிட்டால் மனிதன் தன் நிலையில் இருந்து தாழ்ந்து விடுகிறான். தவறான விஷயங்களில் ஈடுபடச் செய்வது பாவத்தின் சக்தி தான். அதிலிருந்து விழிப்புடன் காத்துக் கொள்ள முயல வேண்டும். பாவத்திற்கு பரிகாரம் தேடுவதோடு, புதிதாகப் பாவச்சுமை சேராமல் பார்த்துக் கொள்வதும் மிகவும் அவசியம்.
நம்மிடம் எத்தனையோ குறைகள் இருக்கின்றன. மற்றவர்களிடம் குற்றம் காண்பதில் கவனம் செலுத்தக்கூடாது. விருப்பு வெறுப்புடன் செய்யும் எந்த செயலும் நம்மை பாவத்தில் தள்ளிவிடும். அவரவர்க்குரிய கடமையை விருப்பு வெறுப்பின்றி செய்வது அவசியம். விருப்பு வெறுப்பில்லாமல் செய்யும் செயல் அனைத்தும் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். வாழ்வில் நல்லதை மட்டும் செய்து வருபவருக்கு கடவுளின் அருள் நிச்சயம் கிடைக்கும்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
ரா.பாலாஜி 发帖到 ஆன்மீகமும்... ஜோதிடமும்...
21 小时
பெரியவா திருவடியே
சரணம்.
பாவம் நீங்க ஒரே வழி தான் இருக்கிறது. அதற்கு கடவுளின் திருவடியை தினமும் தியானிப்பது அவசியம். தினமும் காலையில் ஐந்து நிமிடமாவது இஷ்ட தெய்வத்தின் திருவடிகளை மனதில் தியானியுங்கள். தியானம், வழிபாடு போன்ற உயர்ந்த விஷயங்களில் மனம் ஈடுபட்டால் மனத்தூய்மையை காக்க முடியும். எல்லாம் கடவுள் மயம் என்ற ஞானம் வந்து விட்டால் ஆசை, கோபம் ஆகிய தீய குணங்கள் உண்டாகாது. இனிப்பு சர்க்கரையால் செய்யப்பட்டது போல, உலகில் அனைத்துமாக இருப்பது கடவுள் ஒருவரே.
செல்வத்தில் சிறந்த செல்வம் நல்லறிவே. அதனால் கடவுளின் திருவடியில் சரணடைந்து நல்லறிவைத் தரும் படி பிரார்த்தனை செய்ய வேண்டும். இதயத்தில் கடவுள் குடியிருக்கிறார். அதில் கீழான சிந்தனையை அனுமதிப்பது கூடாது. நமக்கு நாமே மனதில் கட்டுதிட்டங்களை விதித்துக் கொண்டு அடக்கத்துடன் வாழ முயற்சிக்க வேண்டும். உலகத்தில் நன்மை, தீமை இரண்டும் கலந்தே இருக்கிறது. நல்லதை மட்டும் நாடும் மனநிலையை பெற வேண்டும்.
முதலில் அடக்கம் வெளியில் உண்டாக வேண்டும். அதுவே கொஞ்சம் கொஞ்சமாக மனதிற்குள்ளும் சித்திக்கத் தொடங்கும்.
சத்தியம், மனதைரியம், விட்டுக் கொடுக்கும் சுபாவம், இனிய சொல் ஆகிய நல்லபண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். கடவுளின் அருளை நினைத்து நன்றி செலுத்துவதே மனதை தூய்மைக்கும் சிறந்த வழியாகும். எந்த பணியில் இருந்து கொண்டிருந்தாலும் சரி, மனதில் இறைச் சிந்தனை மட்டுமே இருப்பது அவசியம்.
மனதிற்கு தோன்றுவதை எல்லாம் செய்வது கூடாது. சாஸ்திரப்படி செய்வதே நியாயம். தவறினால் துன்பத்திற்கு ஆளாக நேரிடும். தர்மம், நீதி இந்த இரண்டும் சேர்ந்தது தான் பண்பு. பண்பு இல்லாவிட்டால் மனிதன் தன் நிலையில் இருந்து தாழ்ந்து விடுகிறான். தவறான விஷயங்களில் ஈடுபடச் செய்வது பாவத்தின் சக்தி தான். அதிலிருந்து விழிப்புடன் காத்துக் கொள்ள முயல வேண்டும். பாவத்திற்கு பரிகாரம் தேடுவதோடு, புதிதாகப் பாவச்சுமை சேராமல் பார்த்துக் கொள்வதும் மிகவும் அவசியம்.
நம்மிடம் எத்தனையோ குறைகள் இருக்கின்றன. மற்றவர்களிடம் குற்றம் காண்பதில் கவனம் செலுத்தக்கூடாது. விருப்பு வெறுப்புடன் செய்யும் எந்த செயலும் நம்மை பாவத்தில் தள்ளிவிடும். அவரவர்க்குரிய கடமையை விருப்பு வெறுப்பின்றி செய்வது அவசியம். விருப்பு வெறுப்பில்லாமல் செய்யும் செயல் அனைத்தும் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். வாழ்வில் நல்லதை மட்டும் செய்து வருபவருக்கு கடவுளின் அருள் நிச்சயம் கிடைக்கும்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM