Post by radha on Jan 22, 2020 15:49:00 GMT 5.5
OM Sri GURUPYO NAMAHA respectful PRANAMS to Sri kanchi MAHA periva
Saanu Puthiran
3 小时 ·
பெரியவா சரணம்.
ஜெகத்குரு என்றால் ஜெகத்திற்கே குருவன்றோ!
சாதி, மதம், இனம், மொழி, இடம் கடந்ததொரு சோதிப் பிழம்பாய் நம்மையெல்லாம் ரக்ஷிக்க வந்த தாயாபரனாச்சே! அப்பேற்பட்ட ஜெகத்குருவிடன் நாம் ப்ரார்த்திக்கும்போது ஜெகத்துக்காகவே ப்ரார்த்திக்க வேண்டியதும் நம் கடமை என தோன்றுகிறது. ஸ்ரீசரணாளை தரிசிக்க வரும் பக்தகோடிகள் ஒவ்வொருவரும் தத்தம் குறைகளையும் கஷ்டங்களையும் அவரது பாதாரவிந்தங்களில் வைக்கும்போது, அதனின்று வெளிவர வெளிச்சத்திற்கு வர அவர் கூறும் வழிகள் அந்த பக்தகோடிகளுக்கு மட்டுமல்லாமல் இவ்வுலகில் ஜனித்த, ஜனிக்கப் போகிற ஒவ்வொரு ஜீவர்களுமாகத் தாமே அவர் அருளினார்.
ஒரு பாட்டியின் வேண்டுதலுக்கு செவிமடுத்த பெரியவா, நம் எல்லோருக்குமாகத் தானே மந்த்ரோபதேசம் செய்தார்கள். "அம் பகவஹ" என எந்த தேவதையையும் த்யானித்து, எந்த நேரத்திலும் நாமெல்லாம் செபிக்கக்கூடிய மந்திரமாக அருளினாரே! அந்த அற்புத மந்திரத்தை அவரையே த்யானித்து அனுதினமும் செபிக்கின்ற பாக்கியத்தை எமக்கும் நல்கினாரே! என்னே பாக்கியம் செய்தோம்!
பெரியவா அனுக்ரஹம் நேக்கு கிடைக்கனும்னா நான் என்ன செய்யனும், சாணு புத்திரன் என கடல் கடந்து வாழும் அன்பர் ஒருவர் எம்மிடம் தொலைபேசியில் வினவினார்கள் சில வாரங்களுக்கு முன்னமாய்! அன்று அவரிடம் யாம் கூறிய பதில் இதுவே! "லோகத்திலுள்ள ஜீவர்கள் யாவரும் நலமோடிருக்க அருள்புரியுங்கள் ஸ்வாமி" என வேண்டிக்கொண்டு "பெரியவா சரணம்" என்று இயன்றளவு செபியுங்கள். சர்வ நிச்சயமாக அவரது கடாக்ஷம் கிட்டும் என்றேன். அதற்கு அவர், "எனக்குள்ள ப்ரார்த்தனையை நிறைவேற்றனுமே, அவர்" என்றார். இந்த லோகத்தில் நீங்களும் ஒருவர் தாமே! எனவே சர்வ நிச்சயமாக உங்களது ப்ரார்த்தனையையும் நிறைவேற்றுவார் என்றேன். இன்றைய தினம் மாலையில் அவர் தொலைபேசியில் என்னிடம் தொடர்பு கொண்டவர், "பெரியவா சரணம்" என வெகு சப்தமாக கூறினார்கள். எனக்கு மிக்க சந்தோஷமாக இருந்தது. நானும் "பெரியவா கடாக்ஷம் ஸ்வாமி" என்றேன். அவரோ, ஆமாம் சாணு புத்திரன்; பெரியவா கடாக்ஷம் பண்ணிட்டார். நேக்கு இன்னொரு கம்பெனியில் இதைவிட பெரியவ போஸ்டிங்கும், சம்பளமும் கிட்ட அருள்புரிந்து விட்டார். லோக ரக்ஷகனிடம் லோகக்ஷேமத்திற்காக நா பண்ணின ப்ரார்த்தனைக்காக நேக்கும் கடாக்ஷம் தந்துட்டார் என்று படு சந்தோஷமாக அவர் கூறியது இன்னமும் எனது காதுகளில் ரீங்கரிக்கிறது.
நாம் அனைவரும் ஒருமிக்க சேர்ந்து நின்று அந்த பரப்ரஹ்ம ஸ்வரூபியை அனைவருக்காகவும் ப்ரார்த்தித்து, அவரது பரிபூரண கடாக்ஷத்தைப் பெறவேண்டும் என்ற ப்ரார்த்தனையோடு இன்றைய புஷ்பத்தினை, அந்த பக்தருக்குமருள் செய்து, பெரியவா சரணமென்ற கோஷத்தின் சத்யத்தை அவருக்கு உறுதிபட தெரிவித்த ஸ்ரீசரணாளுக்கு மனதார நமஸ்கரித்து, உங்கள் அனைவரோடுமாக சேர்ந்து சமர்ப்பிக்கின்றேன்.
சங்கர சாந்நித்யம்.. சத்யம்.. சத்யம்...
ஓம் காஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்.
ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாசார்ய பரம்பராகத மூலாம்னாய சர்வக்ஞ பீடம் ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடாசார்யர்கல் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமி பாதாரவிந்தம் பஜேஹம் பஜேஹம்.
பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம்
நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
Saanu Puthiran
3 小时 ·
பெரியவா சரணம்.
ஜெகத்குரு என்றால் ஜெகத்திற்கே குருவன்றோ!
சாதி, மதம், இனம், மொழி, இடம் கடந்ததொரு சோதிப் பிழம்பாய் நம்மையெல்லாம் ரக்ஷிக்க வந்த தாயாபரனாச்சே! அப்பேற்பட்ட ஜெகத்குருவிடன் நாம் ப்ரார்த்திக்கும்போது ஜெகத்துக்காகவே ப்ரார்த்திக்க வேண்டியதும் நம் கடமை என தோன்றுகிறது. ஸ்ரீசரணாளை தரிசிக்க வரும் பக்தகோடிகள் ஒவ்வொருவரும் தத்தம் குறைகளையும் கஷ்டங்களையும் அவரது பாதாரவிந்தங்களில் வைக்கும்போது, அதனின்று வெளிவர வெளிச்சத்திற்கு வர அவர் கூறும் வழிகள் அந்த பக்தகோடிகளுக்கு மட்டுமல்லாமல் இவ்வுலகில் ஜனித்த, ஜனிக்கப் போகிற ஒவ்வொரு ஜீவர்களுமாகத் தாமே அவர் அருளினார்.
ஒரு பாட்டியின் வேண்டுதலுக்கு செவிமடுத்த பெரியவா, நம் எல்லோருக்குமாகத் தானே மந்த்ரோபதேசம் செய்தார்கள். "அம் பகவஹ" என எந்த தேவதையையும் த்யானித்து, எந்த நேரத்திலும் நாமெல்லாம் செபிக்கக்கூடிய மந்திரமாக அருளினாரே! அந்த அற்புத மந்திரத்தை அவரையே த்யானித்து அனுதினமும் செபிக்கின்ற பாக்கியத்தை எமக்கும் நல்கினாரே! என்னே பாக்கியம் செய்தோம்!
பெரியவா அனுக்ரஹம் நேக்கு கிடைக்கனும்னா நான் என்ன செய்யனும், சாணு புத்திரன் என கடல் கடந்து வாழும் அன்பர் ஒருவர் எம்மிடம் தொலைபேசியில் வினவினார்கள் சில வாரங்களுக்கு முன்னமாய்! அன்று அவரிடம் யாம் கூறிய பதில் இதுவே! "லோகத்திலுள்ள ஜீவர்கள் யாவரும் நலமோடிருக்க அருள்புரியுங்கள் ஸ்வாமி" என வேண்டிக்கொண்டு "பெரியவா சரணம்" என்று இயன்றளவு செபியுங்கள். சர்வ நிச்சயமாக அவரது கடாக்ஷம் கிட்டும் என்றேன். அதற்கு அவர், "எனக்குள்ள ப்ரார்த்தனையை நிறைவேற்றனுமே, அவர்" என்றார். இந்த லோகத்தில் நீங்களும் ஒருவர் தாமே! எனவே சர்வ நிச்சயமாக உங்களது ப்ரார்த்தனையையும் நிறைவேற்றுவார் என்றேன். இன்றைய தினம் மாலையில் அவர் தொலைபேசியில் என்னிடம் தொடர்பு கொண்டவர், "பெரியவா சரணம்" என வெகு சப்தமாக கூறினார்கள். எனக்கு மிக்க சந்தோஷமாக இருந்தது. நானும் "பெரியவா கடாக்ஷம் ஸ்வாமி" என்றேன். அவரோ, ஆமாம் சாணு புத்திரன்; பெரியவா கடாக்ஷம் பண்ணிட்டார். நேக்கு இன்னொரு கம்பெனியில் இதைவிட பெரியவ போஸ்டிங்கும், சம்பளமும் கிட்ட அருள்புரிந்து விட்டார். லோக ரக்ஷகனிடம் லோகக்ஷேமத்திற்காக நா பண்ணின ப்ரார்த்தனைக்காக நேக்கும் கடாக்ஷம் தந்துட்டார் என்று படு சந்தோஷமாக அவர் கூறியது இன்னமும் எனது காதுகளில் ரீங்கரிக்கிறது.
நாம் அனைவரும் ஒருமிக்க சேர்ந்து நின்று அந்த பரப்ரஹ்ம ஸ்வரூபியை அனைவருக்காகவும் ப்ரார்த்தித்து, அவரது பரிபூரண கடாக்ஷத்தைப் பெறவேண்டும் என்ற ப்ரார்த்தனையோடு இன்றைய புஷ்பத்தினை, அந்த பக்தருக்குமருள் செய்து, பெரியவா சரணமென்ற கோஷத்தின் சத்யத்தை அவருக்கு உறுதிபட தெரிவித்த ஸ்ரீசரணாளுக்கு மனதார நமஸ்கரித்து, உங்கள் அனைவரோடுமாக சேர்ந்து சமர்ப்பிக்கின்றேன்.
சங்கர சாந்நித்யம்.. சத்யம்.. சத்யம்...
ஓம் காஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்.
ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாசார்ய பரம்பராகத மூலாம்னாய சர்வக்ஞ பீடம் ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடாசார்யர்கல் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமி பாதாரவிந்தம் பஜேஹம் பஜேஹம்.
பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம்
நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM