Post by Deleted on Dec 19, 2019 7:20:27 GMT 5.5
நான்காம் பாகம் :
மங்களாரம்பம் - பெரிய இடத்துப் பிள்ளை
திருமால் செய்த கோணங்கி
பிள்ளையாரென்றால் முதலில் தோர்பிக்கர்ணத்தைத்தான் நினைத்துக்க் கொள்கிறோம் மற்ற சுவாமிகள் மாதிரி இவர் ரொம்பச்ரமம்
தருகிற சுவாமி இல்லை என்று சொன்னேன். பெருமாள் என்றால் அங்க ப்ரதஷ்னம், முழங்கால் முறிச்சான்' மலை ஏறிப்போகனும்;
அலகு செடில் குத்திக் கொள்வது என்றெல்லாம் கூட உண்டு. ஈசுவரனுக்கோ ஒரே பசியும் பட்டினியுமாய் உபவாஸமிருக்க
வேண்டும். இப்படி எல்லாம் இல்லாமல், ஸ்வல்ப ச்ரமமே தருகிறவர் பிள்ளையார்தான். அதுவுங்கூட வேடிக்கையாக, குழந்தை
விளையாட்டு மாதிரி, அல்லது குழந்தைக்கு விளையாடுக் காட்டுகிற மாதிரித்தானிருக்கும். நெற்றியில் குட்டிக் கொள்வது, தோப்புக்
கரணம் போடுவது இரண்டையுந்தான் சொல்கிறேன். ஒருத்தர் தோப்புக்கரணம் போட்டால் குழந்தையே முதற்கொண்டு அதை வேடிக்கையாகப்
பார்த்துக்கொண்டு, தன் ஸ்வபாவப்படி தானும் அப்படி 'இமிட்டேட்' பண்ணும்.
இந்தத் தோப்புக்கரணத்தை ஆதியில் உண்டாக்கியவர் மஹாவிஷ்ணுதான், அவர் ஒரு சமயம் சஹோதரியைப் பார்பதர்க்காகவும், தமக்கு
ரொம்பவும் ஆபத்தான பரமேஸ்வரனோடு சல்லாபிப்பதற்காகவும், மருமான் கணேசரைக் கொஞ்சி விளையாடுவதற்காகவும் கைலாசதுக்கு
வந்திருந்தார். அப்போது தம்முடைய சக்கரத்தைச் சுட்டிக் குழந்தைக்கு வேடிக்கை காட்டினார். உடனே குழந்தை தும்பிக்கையை நீட்டிச் சக்கரத்தைப்
பிடிங்கிக்கொண்டு லபக்கென்று வாய்க்குள் போட்டு நன்றாக அடக்கிக் கொண்டுவிட்டது. மஹாவிஷ்ணு நயமாகவும் பயமாகவும்
எத்தனை பண்ணியும் அது சக்கரத்தை வெளியே போடமாட்டேனென்று அடம் பண்ணி விளையாடிற்று. அப்போது தான் மகாவிஷ்ணு யுக்தி
பண்ணி, இப்படிக் காதைப் பிடித்துக்கொண்டு தோர்பிக்கர்ணம் போட்டார். அதைப் பார்த்ததும், எப்போதுமே சிரித்த முகமாயிருக்கும்
'ப்ரஸன்னவதன'க் குழந்தை விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிக்கிறது. சிரிக்கிறபோது வாயில் அடக்கிக் கொண்ட சக்கரமும் குபுக்கென்று வெளியிலே
வந்து விழுந்தது, சடக்கென்று அதை மகாவிஷ்ணு எடுத்து வைத்துக் கொண்டுவிட்டார்.
மஹாவிஷ்ணு கைகளால் காதைப் பிடித்துக் கொண்டது ஸம்ஸ்கிருதத்தில் "தோர்ப்பி" என்றால் "கைகளால்", "கர்ணம்" என்பது "காது"
என்று தெரிந்ததே. கையால் காதைப் பிடித்துக் கொள்ளும் 'தோர்பி(ஹ்) கர்ண'மே தோப்பிக்கரணம் என்றெல்லாம் ஆகிவிட்டது.
குட்டிகரணம் என்கிற மாதிரி இங்கே கரணம் இல்லை கர்ணம் என்று சொல்ல வேண்டும்.
மங்களாரம்பம் - பெரிய இடத்துப் பிள்ளை
திருமால் செய்த கோணங்கி
பிள்ளையாரென்றால் முதலில் தோர்பிக்கர்ணத்தைத்தான் நினைத்துக்க் கொள்கிறோம் மற்ற சுவாமிகள் மாதிரி இவர் ரொம்பச்ரமம்
தருகிற சுவாமி இல்லை என்று சொன்னேன். பெருமாள் என்றால் அங்க ப்ரதஷ்னம், முழங்கால் முறிச்சான்' மலை ஏறிப்போகனும்;
அலகு செடில் குத்திக் கொள்வது என்றெல்லாம் கூட உண்டு. ஈசுவரனுக்கோ ஒரே பசியும் பட்டினியுமாய் உபவாஸமிருக்க
வேண்டும். இப்படி எல்லாம் இல்லாமல், ஸ்வல்ப ச்ரமமே தருகிறவர் பிள்ளையார்தான். அதுவுங்கூட வேடிக்கையாக, குழந்தை
விளையாட்டு மாதிரி, அல்லது குழந்தைக்கு விளையாடுக் காட்டுகிற மாதிரித்தானிருக்கும். நெற்றியில் குட்டிக் கொள்வது, தோப்புக்
கரணம் போடுவது இரண்டையுந்தான் சொல்கிறேன். ஒருத்தர் தோப்புக்கரணம் போட்டால் குழந்தையே முதற்கொண்டு அதை வேடிக்கையாகப்
பார்த்துக்கொண்டு, தன் ஸ்வபாவப்படி தானும் அப்படி 'இமிட்டேட்' பண்ணும்.
இந்தத் தோப்புக்கரணத்தை ஆதியில் உண்டாக்கியவர் மஹாவிஷ்ணுதான், அவர் ஒரு சமயம் சஹோதரியைப் பார்பதர்க்காகவும், தமக்கு
ரொம்பவும் ஆபத்தான பரமேஸ்வரனோடு சல்லாபிப்பதற்காகவும், மருமான் கணேசரைக் கொஞ்சி விளையாடுவதற்காகவும் கைலாசதுக்கு
வந்திருந்தார். அப்போது தம்முடைய சக்கரத்தைச் சுட்டிக் குழந்தைக்கு வேடிக்கை காட்டினார். உடனே குழந்தை தும்பிக்கையை நீட்டிச் சக்கரத்தைப்
பிடிங்கிக்கொண்டு லபக்கென்று வாய்க்குள் போட்டு நன்றாக அடக்கிக் கொண்டுவிட்டது. மஹாவிஷ்ணு நயமாகவும் பயமாகவும்
எத்தனை பண்ணியும் அது சக்கரத்தை வெளியே போடமாட்டேனென்று அடம் பண்ணி விளையாடிற்று. அப்போது தான் மகாவிஷ்ணு யுக்தி
பண்ணி, இப்படிக் காதைப் பிடித்துக்கொண்டு தோர்பிக்கர்ணம் போட்டார். அதைப் பார்த்ததும், எப்போதுமே சிரித்த முகமாயிருக்கும்
'ப்ரஸன்னவதன'க் குழந்தை விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிக்கிறது. சிரிக்கிறபோது வாயில் அடக்கிக் கொண்ட சக்கரமும் குபுக்கென்று வெளியிலே
வந்து விழுந்தது, சடக்கென்று அதை மகாவிஷ்ணு எடுத்து வைத்துக் கொண்டுவிட்டார்.
மஹாவிஷ்ணு கைகளால் காதைப் பிடித்துக் கொண்டது ஸம்ஸ்கிருதத்தில் "தோர்ப்பி" என்றால் "கைகளால்", "கர்ணம்" என்பது "காது"
என்று தெரிந்ததே. கையால் காதைப் பிடித்துக் கொள்ளும் 'தோர்பி(ஹ்) கர்ண'மே தோப்பிக்கரணம் என்றெல்லாம் ஆகிவிட்டது.
குட்டிகரணம் என்கிற மாதிரி இங்கே கரணம் இல்லை கர்ணம் என்று சொல்ல வேண்டும்.