Post by radha on Jul 18, 2012 2:46:02 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,Respectful Pranams to Sri Kanchi Maha Periva.
திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.
வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது
திருக்குறள் - இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் சிலவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழுங்கள்.
"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"
நன்றி மறப்பது நன்றன்று
* காலத்தினால் செய்த உதவி சிறிதாக இருந்தாலும், பயனை எதிர்பார்க்காமல் செய்த உதவி உலகத்தைவிட பெரியதாகும்.
* இல்லறத்தில் சிறந்து வாழ்பவன் கடவுள் நிலையில் வைத்து மதிக்கப்படுவான்.
* அன்பைப் பூட்டி வைக்க முடியாது. வேண்டப்பட்டவர்கள் துன்பமடைந்தால், அது தானே வெளிப்பட்டுவிடும்.
* தூய்மையான நிலை என்பது ஆசையை வெறுத்த நிலையாகும். இறைவனை விரும்புவதால் மட்டுமே இந்தநிலை கிடைக்கும்.
* ஒருவர் செய்த உதவியை மறப்பது நல்லதல்ல. ஆனால், தீமையை உடனே மறந்துவிட வேண்டும்.
* மனதை அதன் வழியில் செல்லவிடாமல், தீமையில்இருந்து அகற்றி நல்ல வழியில் செல்லவிட வேண்டும்.
* அறிவுடையவர்கள் மட்டுமே எதிர்கால நிகழ்ச்சிகளை ஆராய்ந்து உணரும் சக்தி பெறுகின்றனர்.
* அழிவுவராமல் காக்கும் கருவி அறிவு. இது பகையால் எதிர்ப்பவர்க்கும் அழிக்க இயலாத உள் அரண் போன்றதாகும்.
* பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் நான்கும் தம்மைச் சேராதபடி வாழ்வு நடத்துதலே தர்மம்.
- திருவள்ளுவர்
எது நிலையான புகழ்
* இறைவனை வணங்குகிறவர்களை நன்மையோ, தீமையோ பாதிக்காது, துன்பம் என்ற கடலைச் சுலபமாக நீந்திக் கரை ஏறுவர்.
* இன்பம், துன்பம், கலந்தது தான் வாழ்க்கை. ஆனால், தன் தூய்மையான மனத்தை இறைவனுக்கு அர்ப்பணித்து
விட்டால் துன்பம் இல்லை.
* அன்பை அடிப்படையாகக் கொண்டே மனித வாழ்க்கை சிறப்படைகிறது. அன்புடையவன் தன்னலமற்றவனாக வாழ்கிறான்.
* அடக்கம் உடைய மனிதன் உயர்வடைகிறான். மேலும் உயர்வடைய அடக்கத்தைத் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.
* தான தர்மங்களினால் பெற்ற புகழ் மட்டுமே நிலையானது. அதைத் தவிர இந்த உலகில் பெறும் எல்லாப்புகழுமே நிலையற்றது தான்.
* எந்த சூழ்நிலையிலும் பொதுவாய் சிந்தித்து, நடுநிலைமையோடு வாழ்வதே சிறந்தது. ஒரு மனிதனின் உயர்ந்த தகுதி அது தான்.
* உலகத்தின் மற்ற தொழில்கள் அனைத்தும் உழவைச் சார்ந்தே இருப்பதால், உழவுத் தொழில் தான் உலகில் சிறந்தது.
- திருவள்ளுவர்
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam
திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.
வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது
திருக்குறள் - இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் சிலவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழுங்கள்.
"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"
நன்றி மறப்பது நன்றன்று
* காலத்தினால் செய்த உதவி சிறிதாக இருந்தாலும், பயனை எதிர்பார்க்காமல் செய்த உதவி உலகத்தைவிட பெரியதாகும்.
* இல்லறத்தில் சிறந்து வாழ்பவன் கடவுள் நிலையில் வைத்து மதிக்கப்படுவான்.
* அன்பைப் பூட்டி வைக்க முடியாது. வேண்டப்பட்டவர்கள் துன்பமடைந்தால், அது தானே வெளிப்பட்டுவிடும்.
* தூய்மையான நிலை என்பது ஆசையை வெறுத்த நிலையாகும். இறைவனை விரும்புவதால் மட்டுமே இந்தநிலை கிடைக்கும்.
* ஒருவர் செய்த உதவியை மறப்பது நல்லதல்ல. ஆனால், தீமையை உடனே மறந்துவிட வேண்டும்.
* மனதை அதன் வழியில் செல்லவிடாமல், தீமையில்இருந்து அகற்றி நல்ல வழியில் செல்லவிட வேண்டும்.
* அறிவுடையவர்கள் மட்டுமே எதிர்கால நிகழ்ச்சிகளை ஆராய்ந்து உணரும் சக்தி பெறுகின்றனர்.
* அழிவுவராமல் காக்கும் கருவி அறிவு. இது பகையால் எதிர்ப்பவர்க்கும் அழிக்க இயலாத உள் அரண் போன்றதாகும்.
* பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் நான்கும் தம்மைச் சேராதபடி வாழ்வு நடத்துதலே தர்மம்.
- திருவள்ளுவர்
எது நிலையான புகழ்
* இறைவனை வணங்குகிறவர்களை நன்மையோ, தீமையோ பாதிக்காது, துன்பம் என்ற கடலைச் சுலபமாக நீந்திக் கரை ஏறுவர்.
* இன்பம், துன்பம், கலந்தது தான் வாழ்க்கை. ஆனால், தன் தூய்மையான மனத்தை இறைவனுக்கு அர்ப்பணித்து
விட்டால் துன்பம் இல்லை.
* அன்பை அடிப்படையாகக் கொண்டே மனித வாழ்க்கை சிறப்படைகிறது. அன்புடையவன் தன்னலமற்றவனாக வாழ்கிறான்.
* அடக்கம் உடைய மனிதன் உயர்வடைகிறான். மேலும் உயர்வடைய அடக்கத்தைத் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.
* தான தர்மங்களினால் பெற்ற புகழ் மட்டுமே நிலையானது. அதைத் தவிர இந்த உலகில் பெறும் எல்லாப்புகழுமே நிலையற்றது தான்.
* எந்த சூழ்நிலையிலும் பொதுவாய் சிந்தித்து, நடுநிலைமையோடு வாழ்வதே சிறந்தது. ஒரு மனிதனின் உயர்ந்த தகுதி அது தான்.
* உலகத்தின் மற்ற தொழில்கள் அனைத்தும் உழவைச் சார்ந்தே இருப்பதால், உழவுத் தொழில் தான் உலகில் சிறந்தது.
- திருவள்ளுவர்
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam