Post by varagooran on Jun 21, 2019 6:36:32 GMT 5.5
"சோமாஸ் செய்து கொண்டு வா"
(குழந்தைத்தனமாகக் கனவில் கேட்ட பெரியவா பிரம்மஸ்ரீ பிரதோஷம் மாமா அவர்களின் மனைவியிடம்) ( பிரம்மஸ்ரீ பிரதோஷம் மாமா அவர்களின் மனைவி மாதுஸ்ரீ பிரதோஷம் மாமி அவர்கள் நேற்று ஸ்ரீமகாபெரியவா திருவடிகளை அடைந்தார்கள் ) 20-06-2019
(வேத பாடசாலை பிள்ளைகளுக்காக மாமியின் கனவில் தோன்றி சோமாஸ் கேட்ட இந்த தெய்வம் உலகத்திற்கல்லவா படியளந்து கொண்டிருக்கிறது)
கட்டுரை ஆசிரியர்-ரா.வேங்கடசாமி
புத்தகம்-காஞ்சி மகானின் கருணை உள்ளம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
மகா பெரியவாள், தன்னுடைய பக்தர்களின் கனவில் தோன்றி அருள்பாலிப்பது உண்மை என்பதை அனுபவப் பூர்வமாக பல பக்தர்கள் அறிந்த விஷயம்.
"மீளா அடிமை" என்னும் பிரதோஷ மாமா, மகா பெரியவாளை சாட்சாத் சந்திர மௌலீஸ்வரராகவ நினைப்பவர். அவரது மனவியும் கணவருக்கு சற்றும் சளைத்தவர் அல்ல..அவருக்கு வந்த கனவு அலாதியானது.
மகாபெரியவா ஆகாரம் என்று ஏற்றுக் கொள்வது வெறும் பொரி மற்றும் வாழைக்காய் மாவு இவைகளே. இதுவும் ஓரிரு பிடிதான். இப்படி, உண்டு தான் உயிர்வாழ்வதாக உலகத்தோரை ஏமாற்றும் எம்பிரான், மீளா அடிமையின் துணைவியாரின் கனவில் தோன்றி,
"சோமாஸ் செய்து கொண்டு வா" என்று குழந்தைத்தனமாகக் கேட்டு இருக்கிறார்.
அந்த மாதரசிக்கு ஒரே பூரிப்பு....பகவான் நம்மிடம் கேட்டு விட்டாரே என்று மட்டற்ற மகிழ்ச்சி.
காலையில் எழுந்தவுடன் "சோமாஸ்" செய்து கொண்டு நடமாடும் தெய்வத்தைத் தரிசிக்க விரைகிறார்.
அங்கே தான் அதிசயம் காத்துக்கொண்டு இருக்கிறது.
"நான் தான் கேட்டேன்" என்று அந்தப் பெண்மணியிடம் சொல்லி முதல் அதிர்ச்சியைக் கொடுத்தார்.
"கொண்டு வந்ததை வேத பாடசாலை பசங்களுக்கெல்லாம் கொடு" என்றார் பெரியவா.
மகானின் சார்பில் மாதரசி பிள்ளைகளுக்கு விநியோகம் செய்தார். வேத பாடசாலை பிள்ளைகளுக்காக மாமியின் கனவில் தோன்றி சோமாஸ் கேட்ட இந்த தெய்வம் உலகத்திற்கல்லவா படியளந்து கொண்டிருக்கிறது.
(குழந்தைத்தனமாகக் கனவில் கேட்ட பெரியவா பிரம்மஸ்ரீ பிரதோஷம் மாமா அவர்களின் மனைவியிடம்) ( பிரம்மஸ்ரீ பிரதோஷம் மாமா அவர்களின் மனைவி மாதுஸ்ரீ பிரதோஷம் மாமி அவர்கள் நேற்று ஸ்ரீமகாபெரியவா திருவடிகளை அடைந்தார்கள் ) 20-06-2019
(வேத பாடசாலை பிள்ளைகளுக்காக மாமியின் கனவில் தோன்றி சோமாஸ் கேட்ட இந்த தெய்வம் உலகத்திற்கல்லவா படியளந்து கொண்டிருக்கிறது)
கட்டுரை ஆசிரியர்-ரா.வேங்கடசாமி
புத்தகம்-காஞ்சி மகானின் கருணை உள்ளம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
மகா பெரியவாள், தன்னுடைய பக்தர்களின் கனவில் தோன்றி அருள்பாலிப்பது உண்மை என்பதை அனுபவப் பூர்வமாக பல பக்தர்கள் அறிந்த விஷயம்.
"மீளா அடிமை" என்னும் பிரதோஷ மாமா, மகா பெரியவாளை சாட்சாத் சந்திர மௌலீஸ்வரராகவ நினைப்பவர். அவரது மனவியும் கணவருக்கு சற்றும் சளைத்தவர் அல்ல..அவருக்கு வந்த கனவு அலாதியானது.
மகாபெரியவா ஆகாரம் என்று ஏற்றுக் கொள்வது வெறும் பொரி மற்றும் வாழைக்காய் மாவு இவைகளே. இதுவும் ஓரிரு பிடிதான். இப்படி, உண்டு தான் உயிர்வாழ்வதாக உலகத்தோரை ஏமாற்றும் எம்பிரான், மீளா அடிமையின் துணைவியாரின் கனவில் தோன்றி,
"சோமாஸ் செய்து கொண்டு வா" என்று குழந்தைத்தனமாகக் கேட்டு இருக்கிறார்.
அந்த மாதரசிக்கு ஒரே பூரிப்பு....பகவான் நம்மிடம் கேட்டு விட்டாரே என்று மட்டற்ற மகிழ்ச்சி.
காலையில் எழுந்தவுடன் "சோமாஸ்" செய்து கொண்டு நடமாடும் தெய்வத்தைத் தரிசிக்க விரைகிறார்.
அங்கே தான் அதிசயம் காத்துக்கொண்டு இருக்கிறது.
"நான் தான் கேட்டேன்" என்று அந்தப் பெண்மணியிடம் சொல்லி முதல் அதிர்ச்சியைக் கொடுத்தார்.
"கொண்டு வந்ததை வேத பாடசாலை பசங்களுக்கெல்லாம் கொடு" என்றார் பெரியவா.
மகானின் சார்பில் மாதரசி பிள்ளைகளுக்கு விநியோகம் செய்தார். வேத பாடசாலை பிள்ளைகளுக்காக மாமியின் கனவில் தோன்றி சோமாஸ் கேட்ட இந்த தெய்வம் உலகத்திற்கல்லவா படியளந்து கொண்டிருக்கிறது.