|
Post by Sumi on Jul 12, 2012 10:54:33 GMT 5.5
Courtesy: Prema Subramaniam
ஆப்பிள் கொண்டுவந்து குடுத்து சிஷ்யர்களை பெருச்சாளிகள் என்று சொல்லி, பெரியவாளிடம் "வாங்கி" கட்டிக்கொண்ட அதே தனவந்தர் மற்றொருமுறை கேரளாவிலிருந்து ஏராளமான வேஷ்டிகளை வாங்கிக் கொண்டுவந்து பெரியவாளிடம் சமர்ப்பித்தார்.
"இத்தனை வேஷ்டி எதுக்கு?..."
"ஸ்ரீமடத்துல இருக்கற எல்லாக் கார்யஸ்தர்களுக்கும் சேத்து வாங்கிண்டு வந்திருக்கேன் பெரியவா..."
அந்த வேஷ்டி மூட்டையிலிருந்து ஆறு வேஷ்டிகளை காஷாயத்தில் நனைக்கச் சொல்லி சிஷ்யரிடம் குடுத்தார். தனவந்தருக்கு அதன் காரணம் புரியவில்லை.
"இந்தா....இதுலேர்ந்து ஆறு வேஷ்டியை எடுத்து காஷாயத்ல முக்கி எடு. அப்புறம் அதுல ரெண்டு ஆஞ்சநேய ஸ்வாமிகளுக்கு [மடத்தில் இருந்த ஒரு துறவி], ரெண்டு புதுப் பெரியவாளுக்கு, ரெண்டு எனக்கு!........ஏன்னா...நாங்களும் மடத்து கார்யஸ்தாள்தான்!"
தனவந்தர் பெரியவாளுடைய இந்த எளிமையைக் கண்டு நெகிழ்ந்து போனார்.
Jaya Jaya Shankara, Hara Hara Shankara!
|
|
|
Post by krsiyer on Jul 13, 2012 17:16:36 GMT 5.5
Great ! thanks for sharing. jaya jaya sankara, hara hara sankara !
|
|
|
Post by mkaraman on Oct 7, 2014 22:09:23 GMT 5.5
HUMILITY THY NAME IS MAHASWAMI
|
|
|
Post by kahanam on Oct 9, 2014 11:08:25 GMT 5.5
Maha Bhagyam to the rich devotee from KeraLa. Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
|
|