Post by radha on Sept 13, 2018 15:09:53 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
தெய்வத்தின் குரல்: மற்றவர் பொருளுக்கு ஆசை வேண்டாம்
Published : 13 Sep 2018 10:34 IST
‘பரிக்ரஹம்’ என்றால் உடைமை சேர்த்துக் கொள்வது; அப்படிச் சேர்த்துக் கொள்ளாமலிருப்பதே ‘அபரிக்ரஹம்’. நீ ஜீவிப்பதற்கு எது அத்தியாவசியமோ அதற்கு அதிகமாக ஒரு துரும்புகூடச் சேர்த்துக் கொள்ளாதே’ என்பதுதான் அபரிக்ரஹ தர்மம்.
ரூபாய் என்று ஒன்று ஏற்பட்ட நாளாகத்தான் சொந்தத்துக்கு ஜாஸ்தி சேர்த்து மூட்டை கட்டிவைத்துக் கொள்வது, தன்னுடைய துராசைகளுக்கே கன்னாபின்னா என்று செலவழிப்பது இதெல்லாம் அதிகமாகி, தானதர்மங்கள் பண்ணுவதற்கும், அபரிக்ரஹ தர்மத்துக்கும் ஹானி உண்டாகி வந்திருக்கிறது. ரூபாய் என்று ஒன்று இல்லாத நாள் உண்டா என்று தோன்றலாம். அப்படி ஒரு நாள் இருந்திருக்கிறது.
ஆதியில் எல்லா இடத்திலும் barter என்று ஒரு பொருளுக்குப் பதில் இன்னொரு பொருளை ‘எக்ஸ்சேஞ்ச்’ (பரிவர்த்தனை) பண்ணிக்கொள்வதுதான் இருந்ததே தவிர ரூபாயோ, டாலரோ இல்லை. அப்புறந்தான் ஒவ்வொரு சீமையிலும் சமுதாயங்கள் ஒரு அமைப்பாகக் கெட்டிப்பட்டு, அங்கங்கே ராஜாங்கம் தோன்றி ஒரு ஆட்சி முறையின் கீழே வந்த பிற்பாடு நாணயம், கரன்சி என்பது தோன்றிற்று.
எந்தப் பொருளானாலும் இதைக் கொண்டு மதிப்பை நிர்ணயம் பண்ணுவது சுலபமாயிருந்தது. கையடக்கமாக எடுத்துப் போகும்படியாகவும், வைத்துக் காக்கும்படியாகவும் இப்படி ஒன்றை ஏற்படுத்திக்கொண்டார்கள். ஆனாலும் ஈஸ்ட் இண்டியா கம்பெனி ஆட்சி வருகிறவரைகூட நம் நாட்டில் எல்லா ஜனங்களிடையேயும் விசேஷமாக நாணயப் பழக்கம் இருந்துவிடவில்லை.
மேல்மட்டங்களில் சில காரியங்களுக்கு மட்டுந்தான் நாணய மாற்றத்தில் கொடுக்கல் வாங்கல் நடந்தது. ஒரு நாணயத்துக்கு நிஜமாகவே அதன் மதிப்பு இருக்கும்படியாகத் தங்கம், வெள்ளி இவற்றிலேயே காசு இருந்தால், அதிகமாகக் கிடைக்காத இந்த லோகங்களில் அளவாகவே நாணயம் போடுவார்கள்.
அப்புறம்தான் நாணயத்துக்கும் அதன் மதிப்புக்கும் சம்பந்தமேயில்லாமல் நிக்கல், செம்பு, வெறும் காகிதம் என்று ஏற்பட்டபின் இஷ்டத்துக்கு அச்சடித்து எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் விநியோகிப்பதாக ஆகிவிட்டது. இதற்கு முன்னாடி, சமீப நூற்றாண்டுகளில்கூட பொதுஜனங்களுக்கிடையே பண்ட மாற்று முறையில்தான் பெரும்பாலும் வியாபாரம் நடந்தது.
அரசாங்கத்திற்குக்கூட விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு தானியமாகவே தான் கொடுக்கப்பட்டு வந்தது. பாக்கி தானியத்தைப் பணமாக்க முடியாது. விவசாய நாடு அல்லவா இது?
தான தர்மத்துக்கு ஏற்பட்ட தடை
இங்கே உற்பத்தியாகிற பண்டங்களில் தானியம்தான் மிகவும் அதிகம். அநேகமாக ஒவ்வொருவனுக்கும் சொந்தமாகத் துண்டு நிலமாவது இருக்கும்; அநேகத் துறையினருக்கு ராஜமான்யமாக நிலமோ, தானியமோ கிடைத்து வந்தது. தவிர பாக்கியை விற்றுப் பணம் பண்ணுவதற்குப் பெரும்பாலும் இடமில்லாமலே இருந்தது.
அதனால் வருகிற, போகிற யாத்ரிகர்களுக்கெல்லாம் அன்ன சத்திரம், கோயிலில் முக்குறுணி நாலுகுறுணி என்று நிவேதனம் பண்ணிப் பிரசாதமாக வினியோகிப்பது, லக்ஷ பிராம்மண போஜனம் என்கிற மாதிரி தானதர்மம் என்றெல்லாம் செய்தே தீரவேண்டியிருந்தது.
அப்புறம் பணமாய்ப் பண்ணிப் பேங்கில் போட்டுக் கொள்ளலாம் என்று ஏற்பட்ட பின்தான் தனக்கென்று எத்தனை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம் என்பதாக பரிக்ரஹத்தின் உச்சிக்குப் போய், தான தர்மம் என்பதையே அடைத்து விட்டதாக ஏற்பட்டிருக்கிறது.
அபரிக்ரஹத்துக்கு எங்கேயோ போகவேண்டியதில்லை. நாலைந்து தலைமுறைக்கு முன்னால் எப்படியிருந்தார்கள் என்று பார்த்தால் போதும். மண்பானை, கல்சட்டி, ஓலை, பாக்குப்பட்டை இவைதாம் அவர்களுடைய சொத்து.
கருகமணிதான் நகை. நாலு கீற்றை வேய்ந்துகொண்டால் அந்தப் பர்ணசாலைதான் அரண்மனைக்கு மேலே. அரண்மனைக்காரனான திலீபன் முதலான சக்கரவர்த்திகள் இப்படிப் பர்ணசாலைகளில் வசித்து வந்த வசிஷ்டர் முதலானவர்களின் காலில்தான் வந்து விழுந்தார்கள்.
நிம்மதி கிடைக்காது
நம் சமீபகால முன்னோர்கள்கூட இப்படி எளிமையாயிருந்துகொண்டே நிம்மதியாகக் காலக்ஷேபம் நடத்தியிருக்கிறார்கள். இப்போது நாம் பணத்தாலும் உடைமைகளாலும் லக்ஷரிகளாலுந்தான் அந்தஸ்து என்று ஆக்கிக்கொண்டு, இதைத் தேடிக்கொண்டே போவதில் சீலங்களை இழந்து, சீலத்தாலேயே நம் முன்னோர் எந்தச் சொத்துமில்லாமலும் பெற்றிருந்த சமூக கௌரவத்தையும் அடியோடு இழந்து, ரொம்பக் குறைந்தவர்களாக நிற்கிறோம்.
உடைமைகளைச் சேர்த்துக்கொள்ளக் கொள்ள பயந்தான் ஜாஸ்தியாகிறது. அபரிக்ரஹத்தின் நிம்மதி இங்கே ஒருகாலும் கிடைக்காது.
காந்தியும் இந்த அபரிக்ரஹத்தை ரொம்பவும் சொல்லி, அனுஷ்டானம் பண்ணியும் வந்தார். அப்புறம் இப்போது (1958-ல்) விநோபாவும் சொல்லிக்கொண்டிருக்கிறார். தலைவர்கள் எனப்பட்டவர்கள் இந்த இரண்டு பேருக்கும் நமஸ்காரம் பண்ணிக்கொண்டே ‘ஆப்போஸிட் டைரக்ஷனில்’ தேசத்தை வேகமாக இழுத்து விட்டுக்கொண்டிருக்கிறார்கள். மேல் நாடுகளுக்கு நாம் பிற்பட்டு நிற்கவில்லை என்று ‘ப்ராக்ரஸ்’ காட்ட வேண்டாமா?
ஒரு அளவுக்கு, கணக்குக்குக் கட்டுப்பட்டு நடந்து கொண்டு இங்கே இந்த உலகத்திலேயே நிம்மதியும், அதோடு பாரமார்த்திகமான ச்ரேயஸும் அடைய வேண்டும்.
(தெய்வத்தின் குரல் மூன்றாம் பகுதி)
ம்.
தெய்வத்தின் குரல்: மற்றவர் பொருளுக்கு ஆசை வேண்டாம்
Published : 13 Sep 2018 10:34 IST
‘பரிக்ரஹம்’ என்றால் உடைமை சேர்த்துக் கொள்வது; அப்படிச் சேர்த்துக் கொள்ளாமலிருப்பதே ‘அபரிக்ரஹம்’. நீ ஜீவிப்பதற்கு எது அத்தியாவசியமோ அதற்கு அதிகமாக ஒரு துரும்புகூடச் சேர்த்துக் கொள்ளாதே’ என்பதுதான் அபரிக்ரஹ தர்மம்.
ரூபாய் என்று ஒன்று ஏற்பட்ட நாளாகத்தான் சொந்தத்துக்கு ஜாஸ்தி சேர்த்து மூட்டை கட்டிவைத்துக் கொள்வது, தன்னுடைய துராசைகளுக்கே கன்னாபின்னா என்று செலவழிப்பது இதெல்லாம் அதிகமாகி, தானதர்மங்கள் பண்ணுவதற்கும், அபரிக்ரஹ தர்மத்துக்கும் ஹானி உண்டாகி வந்திருக்கிறது. ரூபாய் என்று ஒன்று இல்லாத நாள் உண்டா என்று தோன்றலாம். அப்படி ஒரு நாள் இருந்திருக்கிறது.
ஆதியில் எல்லா இடத்திலும் barter என்று ஒரு பொருளுக்குப் பதில் இன்னொரு பொருளை ‘எக்ஸ்சேஞ்ச்’ (பரிவர்த்தனை) பண்ணிக்கொள்வதுதான் இருந்ததே தவிர ரூபாயோ, டாலரோ இல்லை. அப்புறந்தான் ஒவ்வொரு சீமையிலும் சமுதாயங்கள் ஒரு அமைப்பாகக் கெட்டிப்பட்டு, அங்கங்கே ராஜாங்கம் தோன்றி ஒரு ஆட்சி முறையின் கீழே வந்த பிற்பாடு நாணயம், கரன்சி என்பது தோன்றிற்று.
எந்தப் பொருளானாலும் இதைக் கொண்டு மதிப்பை நிர்ணயம் பண்ணுவது சுலபமாயிருந்தது. கையடக்கமாக எடுத்துப் போகும்படியாகவும், வைத்துக் காக்கும்படியாகவும் இப்படி ஒன்றை ஏற்படுத்திக்கொண்டார்கள். ஆனாலும் ஈஸ்ட் இண்டியா கம்பெனி ஆட்சி வருகிறவரைகூட நம் நாட்டில் எல்லா ஜனங்களிடையேயும் விசேஷமாக நாணயப் பழக்கம் இருந்துவிடவில்லை.
மேல்மட்டங்களில் சில காரியங்களுக்கு மட்டுந்தான் நாணய மாற்றத்தில் கொடுக்கல் வாங்கல் நடந்தது. ஒரு நாணயத்துக்கு நிஜமாகவே அதன் மதிப்பு இருக்கும்படியாகத் தங்கம், வெள்ளி இவற்றிலேயே காசு இருந்தால், அதிகமாகக் கிடைக்காத இந்த லோகங்களில் அளவாகவே நாணயம் போடுவார்கள்.
அப்புறம்தான் நாணயத்துக்கும் அதன் மதிப்புக்கும் சம்பந்தமேயில்லாமல் நிக்கல், செம்பு, வெறும் காகிதம் என்று ஏற்பட்டபின் இஷ்டத்துக்கு அச்சடித்து எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் விநியோகிப்பதாக ஆகிவிட்டது. இதற்கு முன்னாடி, சமீப நூற்றாண்டுகளில்கூட பொதுஜனங்களுக்கிடையே பண்ட மாற்று முறையில்தான் பெரும்பாலும் வியாபாரம் நடந்தது.
அரசாங்கத்திற்குக்கூட விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு தானியமாகவே தான் கொடுக்கப்பட்டு வந்தது. பாக்கி தானியத்தைப் பணமாக்க முடியாது. விவசாய நாடு அல்லவா இது?
தான தர்மத்துக்கு ஏற்பட்ட தடை
இங்கே உற்பத்தியாகிற பண்டங்களில் தானியம்தான் மிகவும் அதிகம். அநேகமாக ஒவ்வொருவனுக்கும் சொந்தமாகத் துண்டு நிலமாவது இருக்கும்; அநேகத் துறையினருக்கு ராஜமான்யமாக நிலமோ, தானியமோ கிடைத்து வந்தது. தவிர பாக்கியை விற்றுப் பணம் பண்ணுவதற்குப் பெரும்பாலும் இடமில்லாமலே இருந்தது.
அதனால் வருகிற, போகிற யாத்ரிகர்களுக்கெல்லாம் அன்ன சத்திரம், கோயிலில் முக்குறுணி நாலுகுறுணி என்று நிவேதனம் பண்ணிப் பிரசாதமாக வினியோகிப்பது, லக்ஷ பிராம்மண போஜனம் என்கிற மாதிரி தானதர்மம் என்றெல்லாம் செய்தே தீரவேண்டியிருந்தது.
அப்புறம் பணமாய்ப் பண்ணிப் பேங்கில் போட்டுக் கொள்ளலாம் என்று ஏற்பட்ட பின்தான் தனக்கென்று எத்தனை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம் என்பதாக பரிக்ரஹத்தின் உச்சிக்குப் போய், தான தர்மம் என்பதையே அடைத்து விட்டதாக ஏற்பட்டிருக்கிறது.
அபரிக்ரஹத்துக்கு எங்கேயோ போகவேண்டியதில்லை. நாலைந்து தலைமுறைக்கு முன்னால் எப்படியிருந்தார்கள் என்று பார்த்தால் போதும். மண்பானை, கல்சட்டி, ஓலை, பாக்குப்பட்டை இவைதாம் அவர்களுடைய சொத்து.
கருகமணிதான் நகை. நாலு கீற்றை வேய்ந்துகொண்டால் அந்தப் பர்ணசாலைதான் அரண்மனைக்கு மேலே. அரண்மனைக்காரனான திலீபன் முதலான சக்கரவர்த்திகள் இப்படிப் பர்ணசாலைகளில் வசித்து வந்த வசிஷ்டர் முதலானவர்களின் காலில்தான் வந்து விழுந்தார்கள்.
நிம்மதி கிடைக்காது
நம் சமீபகால முன்னோர்கள்கூட இப்படி எளிமையாயிருந்துகொண்டே நிம்மதியாகக் காலக்ஷேபம் நடத்தியிருக்கிறார்கள். இப்போது நாம் பணத்தாலும் உடைமைகளாலும் லக்ஷரிகளாலுந்தான் அந்தஸ்து என்று ஆக்கிக்கொண்டு, இதைத் தேடிக்கொண்டே போவதில் சீலங்களை இழந்து, சீலத்தாலேயே நம் முன்னோர் எந்தச் சொத்துமில்லாமலும் பெற்றிருந்த சமூக கௌரவத்தையும் அடியோடு இழந்து, ரொம்பக் குறைந்தவர்களாக நிற்கிறோம்.
உடைமைகளைச் சேர்த்துக்கொள்ளக் கொள்ள பயந்தான் ஜாஸ்தியாகிறது. அபரிக்ரஹத்தின் நிம்மதி இங்கே ஒருகாலும் கிடைக்காது.
காந்தியும் இந்த அபரிக்ரஹத்தை ரொம்பவும் சொல்லி, அனுஷ்டானம் பண்ணியும் வந்தார். அப்புறம் இப்போது (1958-ல்) விநோபாவும் சொல்லிக்கொண்டிருக்கிறார். தலைவர்கள் எனப்பட்டவர்கள் இந்த இரண்டு பேருக்கும் நமஸ்காரம் பண்ணிக்கொண்டே ‘ஆப்போஸிட் டைரக்ஷனில்’ தேசத்தை வேகமாக இழுத்து விட்டுக்கொண்டிருக்கிறார்கள். மேல் நாடுகளுக்கு நாம் பிற்பட்டு நிற்கவில்லை என்று ‘ப்ராக்ரஸ்’ காட்ட வேண்டாமா?
ஒரு அளவுக்கு, கணக்குக்குக் கட்டுப்பட்டு நடந்து கொண்டு இங்கே இந்த உலகத்திலேயே நிம்மதியும், அதோடு பாரமார்த்திகமான ச்ரேயஸும் அடைய வேண்டும்.
(தெய்வத்தின் குரல் மூன்றாம் பகுதி)
ம்.