Post by radha on Jan 2, 2018 6:21:12 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA.RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
ஆருத்ரா தரிசனமான இன்று நடராஜரை வழிபடும் விதத்தில் இந்த ஸ்தோத்திரம் தரப்பட்டுள்ளது. இதைப் படித்தால் நன்மை உண்டாகும்.
● பிரகாசம் மிக்க சபையில் நடனமாடும் ஈசனே! தில்லை நடராஜனே! தில்லை நகர், தீட்சிதர்களால் பூஜிக்கப்படுபவனே! காலனை உதைத்தவனே! பக்தர்களை காக்க, சூலம் ஏந்தியவனே! கருணை மிக்கவனே! மனக்கவலை தீர்ப்பவனே! சித்திர சபையின் நாயகனே! எங்களுக்கு ஆரோக்கிய வாழ்வை அளித்தருள வேண்டும்.
● நெற்றிக் கண் கொண்டவனே! பதஞ்சலி, வியாக்ரபாதருக்கு நடன காட்சி அளித்தவனே! கோவிந்தராஜ பெருமாளை தோழனாகப் பெற்றவனே! புலித்தோலை ஆடையாக உடுத்தியவனே! பவானி என்னும் சிவகாமி அன்னையை மணந்தவனே! ஆடலில் வல்லவனே! உன் திருவடியை சரணடைந்த எங்களுக்கு செல்வ வளம் தந்தருள வேண்டும்.
● மன்மதனை எரித்தவனே! பாம்பை அணிகலனாகச் சூடியவனே! வேதத்தின் சாரமாகத் திகழ்பவனே! ஜடாமுடி தரித்தவனே! திருவாதிரை அபிஷேகத்தில் மகிழ்பவனே! நந்திகேஸ்வரருடன் திருநடனம் புரிபவனே! உன் தாமரைப் பாதத்தில் தஞ்சம் அடைந்து விட்டோம். உன் அருளால் எங்கள் குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்க வேண்டும்.
● பாவம் போக்குபவனே! பார்வதியுடன் விளையாடி களிப்பவனே! வேத வித்தகனே! விரும்பும் வரங்களை அளிப்பவனே! திருநீறு, ருத்ராட்ச மாலை அணிந்தவர்களை காப்பவனே! மாணிக்க வாசகருக்கு அருள்புரிந்தவனே! உன் அருளால் இந்த உலகிலுள்ள உயிர்கள் எல்லாம், இன்புற்று வாழ வேண்டும்.
தீயில் தோன்றிய சபாபதி
சத்தியலோகத்தில் பிரம்மா நடத்திய யாகத்திற்கு தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேரை அழைத்தார். ''தில்லையில் இருந்து,நடராஜரின் திருநடனம் காண்பதை விட, யாகத்தால் எங்களுக்கு என்ன பலன் கிடைக்க போகிறது'' என பிரம்மாவை கேட்டனர். அங்கு தோன்றிய நடராஜர், யாகத்திற்கு செல்லும்படியும், யாகத்தின் முடிவில் அங்கு காட்சியளிப்பதாகவும் வாக்களித்தார். அவ்வாறு தீயில் வெளிப்பட்ட நடராஜர் 'ரத்தின சபாபதி' என அழைக்கப்பட்டார்.
இவரது சிலை சிதம்பரம் நடராஜரின் சிலையின் கீழ் உள்ளது. தினமும் காலை 10:00 - 11:00 மணிக்குள் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கும். இந்த நடராஜரின் சிலைக்கு முன்புறமும், பின்புறமும் தீபாராதனை காட்டி வழிபடுவர்.
ஆடுகின்றாரடி தில்லையிலே...!
சிதம்பரத்தை நடராஜர் கோயில் என்று குறிப்பிட்டாலும், இங்குள்ள மூலவர், லிங்க வடிவில் 'ஆதிமூலநாதர்' என்னும் பெயருடன் வீற்றிருக்கிறார். கைலாயநாதரான சிவனின் நாட்டியத்தை, பூலோக மக்களும் தரிசிக்க விரும்பிய பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள், தில்லைவனமான இத்தலத்தில் ஆதிமூலநாதரை நோக்கி தவமிருந்தனர்.
வேண்டுதலை ஏற்ற சிவன், தைப்பூச நன்னாளில் உச்சிப் பொழுதில் 'திரிசகஸ்ர முனிவர்கள்' என்னும் 3000 அந்தணர்களுடன் எழுந்தருளி நடன தரிசனம் அளித்தார். நான் அசைந்தால்; அசையும் அகிலமெல்லாமேஉலக இயக்கத்தின் உயிர்த்துடிப்பாக இருப்பவர் சிவன். சதா சர்வ காலம் இடை விடாமல் ஆடிக் கொண்டே உலகத்தை இயக்குகிறார். படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தொழில்களை நடனத்தின்போது நடத்துகிறார். இதனை 'பஞ்ச கிருத்தியம்' என்பர். நடராஜர் அசைந்தாடுவதால் தான் அணு முதல் ஆகாயம் வரை அனைத்தும் அசைந்து இயங்குகிறது.
பஞ்ச சபை பார்க்கலாமா
நடராஜருக்கு பஞ்ச சபைகள் என ஐந்து கோயில்கள் உள்ளன. அவை சிதம்பரம் - கனக சபை, மதுரை - வெள்ளியம்பலம், திருநெல்வேலி - தாமிரசபை, திருவாலங்காடு - ரத்தின சபை, குற்றாலம் - சித்திர சபை. ஆருத்ரா தரிசன நன்னாளில் இத்தலங்களை தரிசிப்பதை பக்தர்கள் பாக்கியமாக கருதுகின்றனர்.
கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி அம்மன் சமேத மங்களநாதசுவாமி கோயிலில் மரகத கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது. இக்கோயிலில் டிச., 24ல் ஆருத்ரா தரிசன விழா காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
ஆருத்ரா தரிசனத்திற்காக வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே மரகத நடராஜரின் திருமேனியில் பூசப்பட்ட சந்தனம் களையப்படும். நேற்று காலை 10:30 மணிக்கு சந்தனம் களையப்பட்ட மரகத நடராஜருக்கு, மஞ்சள், திரவியப்பொடி, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகை
அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் சந்தனாதித் தைலம் பூசப்பட்டது. இந்த அபூர்வ தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இரவு 10:30 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெற்றது.இன்று அதிகாலை 4:00 மணிக்கு கல்தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தருளும் நிகழ்ச்சியும், அருணோதய நேரத்தில் சுவாமியின் திருமேனியில் புதிய சந்தனம் பூசப்பட்டு, மலர்களால் சர்வ அலங்காரத்தில்
பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
ஆருத்ரா தரிசனமான இன்று நடராஜரை வழிபடும் விதத்தில் இந்த ஸ்தோத்திரம் தரப்பட்டுள்ளது. இதைப் படித்தால் நன்மை உண்டாகும்.
● பிரகாசம் மிக்க சபையில் நடனமாடும் ஈசனே! தில்லை நடராஜனே! தில்லை நகர், தீட்சிதர்களால் பூஜிக்கப்படுபவனே! காலனை உதைத்தவனே! பக்தர்களை காக்க, சூலம் ஏந்தியவனே! கருணை மிக்கவனே! மனக்கவலை தீர்ப்பவனே! சித்திர சபையின் நாயகனே! எங்களுக்கு ஆரோக்கிய வாழ்வை அளித்தருள வேண்டும்.
● நெற்றிக் கண் கொண்டவனே! பதஞ்சலி, வியாக்ரபாதருக்கு நடன காட்சி அளித்தவனே! கோவிந்தராஜ பெருமாளை தோழனாகப் பெற்றவனே! புலித்தோலை ஆடையாக உடுத்தியவனே! பவானி என்னும் சிவகாமி அன்னையை மணந்தவனே! ஆடலில் வல்லவனே! உன் திருவடியை சரணடைந்த எங்களுக்கு செல்வ வளம் தந்தருள வேண்டும்.
● மன்மதனை எரித்தவனே! பாம்பை அணிகலனாகச் சூடியவனே! வேதத்தின் சாரமாகத் திகழ்பவனே! ஜடாமுடி தரித்தவனே! திருவாதிரை அபிஷேகத்தில் மகிழ்பவனே! நந்திகேஸ்வரருடன் திருநடனம் புரிபவனே! உன் தாமரைப் பாதத்தில் தஞ்சம் அடைந்து விட்டோம். உன் அருளால் எங்கள் குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்க வேண்டும்.
● பாவம் போக்குபவனே! பார்வதியுடன் விளையாடி களிப்பவனே! வேத வித்தகனே! விரும்பும் வரங்களை அளிப்பவனே! திருநீறு, ருத்ராட்ச மாலை அணிந்தவர்களை காப்பவனே! மாணிக்க வாசகருக்கு அருள்புரிந்தவனே! உன் அருளால் இந்த உலகிலுள்ள உயிர்கள் எல்லாம், இன்புற்று வாழ வேண்டும்.
தீயில் தோன்றிய சபாபதி
சத்தியலோகத்தில் பிரம்மா நடத்திய யாகத்திற்கு தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேரை அழைத்தார். ''தில்லையில் இருந்து,நடராஜரின் திருநடனம் காண்பதை விட, யாகத்தால் எங்களுக்கு என்ன பலன் கிடைக்க போகிறது'' என பிரம்மாவை கேட்டனர். அங்கு தோன்றிய நடராஜர், யாகத்திற்கு செல்லும்படியும், யாகத்தின் முடிவில் அங்கு காட்சியளிப்பதாகவும் வாக்களித்தார். அவ்வாறு தீயில் வெளிப்பட்ட நடராஜர் 'ரத்தின சபாபதி' என அழைக்கப்பட்டார்.
இவரது சிலை சிதம்பரம் நடராஜரின் சிலையின் கீழ் உள்ளது. தினமும் காலை 10:00 - 11:00 மணிக்குள் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கும். இந்த நடராஜரின் சிலைக்கு முன்புறமும், பின்புறமும் தீபாராதனை காட்டி வழிபடுவர்.
ஆடுகின்றாரடி தில்லையிலே...!
சிதம்பரத்தை நடராஜர் கோயில் என்று குறிப்பிட்டாலும், இங்குள்ள மூலவர், லிங்க வடிவில் 'ஆதிமூலநாதர்' என்னும் பெயருடன் வீற்றிருக்கிறார். கைலாயநாதரான சிவனின் நாட்டியத்தை, பூலோக மக்களும் தரிசிக்க விரும்பிய பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள், தில்லைவனமான இத்தலத்தில் ஆதிமூலநாதரை நோக்கி தவமிருந்தனர்.
வேண்டுதலை ஏற்ற சிவன், தைப்பூச நன்னாளில் உச்சிப் பொழுதில் 'திரிசகஸ்ர முனிவர்கள்' என்னும் 3000 அந்தணர்களுடன் எழுந்தருளி நடன தரிசனம் அளித்தார். நான் அசைந்தால்; அசையும் அகிலமெல்லாமேஉலக இயக்கத்தின் உயிர்த்துடிப்பாக இருப்பவர் சிவன். சதா சர்வ காலம் இடை விடாமல் ஆடிக் கொண்டே உலகத்தை இயக்குகிறார். படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தொழில்களை நடனத்தின்போது நடத்துகிறார். இதனை 'பஞ்ச கிருத்தியம்' என்பர். நடராஜர் அசைந்தாடுவதால் தான் அணு முதல் ஆகாயம் வரை அனைத்தும் அசைந்து இயங்குகிறது.
பஞ்ச சபை பார்க்கலாமா
நடராஜருக்கு பஞ்ச சபைகள் என ஐந்து கோயில்கள் உள்ளன. அவை சிதம்பரம் - கனக சபை, மதுரை - வெள்ளியம்பலம், திருநெல்வேலி - தாமிரசபை, திருவாலங்காடு - ரத்தின சபை, குற்றாலம் - சித்திர சபை. ஆருத்ரா தரிசன நன்னாளில் இத்தலங்களை தரிசிப்பதை பக்தர்கள் பாக்கியமாக கருதுகின்றனர்.
கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி அம்மன் சமேத மங்களநாதசுவாமி கோயிலில் மரகத கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது. இக்கோயிலில் டிச., 24ல் ஆருத்ரா தரிசன விழா காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
ஆருத்ரா தரிசனத்திற்காக வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே மரகத நடராஜரின் திருமேனியில் பூசப்பட்ட சந்தனம் களையப்படும். நேற்று காலை 10:30 மணிக்கு சந்தனம் களையப்பட்ட மரகத நடராஜருக்கு, மஞ்சள், திரவியப்பொடி, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகை
அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் சந்தனாதித் தைலம் பூசப்பட்டது. இந்த அபூர்வ தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இரவு 10:30 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெற்றது.இன்று அதிகாலை 4:00 மணிக்கு கல்தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தருளும் நிகழ்ச்சியும், அருணோதய நேரத்தில் சுவாமியின் திருமேனியில் புதிய சந்தனம் பூசப்பட்டு, மலர்களால் சர்வ அலங்காரத்தில்
பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM