|
Post by radha on May 7, 2012 10:44:06 GMT 5.5
Om sri gurupyo namaha;,RESPECTFUL PRANAMS TO sRI mAHA pERIVA எதற்கும் அளவு வேண்டும் நவம்பர் 29,2009, 15:07 IST
* பணம்,பேச்சு, நாம் செய்யும் செயல் எல்லாவற்றிலும் அளவுடன் இருக்க வேண்டும். ஆசையாய் இருக்கிறது என்பதற்காக அவசியமில்லாத அல்லது தீமைகளைத் தருகின்ற செயல்களைச் செய்யவே கூடாது. * சத்தியம் என்றால் வாக்கும், மனசும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. நல்ல மனதில் தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதே சத்தியம் ஆகும். * போட்டி பொறாமை இருக்கும் வரையில் யாருக்கும் மனநிறைவு உண்டாவதில்லை. தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே போவதால் வேண்டாத செயல்களைச் செய்து பின்னர் அவதிப்பட நேரிடும். * தர்மம், நீதி என்னும் இரண்டும் சேர்ந்து தான் பண்பு உண்டாகிறது. மனசில் உள்ள அசுத்தங்கள் நீங்கினால் அது தானாகவே பரமாத்மாவின் மீது திரும்பி விடும். * பெரும்பாலும் நம்முடைய கோபத்தினால் நமக்கே தீங்கு செய்தவர்களாகிறோம். கோபத்தினால் நமக்கும் நன்மையில்லை. மற்றவர்களுக்கும் நன்மை இல்லை. * பித்ரு காரியங்களுக்கு சிரத்தை வேண்டும். தெய்வ காரியங்களுக்கு பக்தி வேண்டும். * முதலில் வெளி அடக்கம் உண்டானால் தான் கொஞ்சம் கொஞ்சமாக உள் அடக்கம் சித்திக்கும். எங்கிருந்தாலும், எந்தப் பணி செய்தாலும் பகவானின் குணங்களைக் கேட்பதை லட்சியமாகக் கொள்ள வேண்டும். -காஞ்சிப் பெரியவர்
|
|
|
Post by krsiyer on May 7, 2012 17:23:07 GMT 5.5
Great preaching ! thanks for sharing jaya jaya sankara, hara hara sankara
|
|