|
Post by radha on May 10, 2012 8:09:49 GMT 5.5
SRI GURUPYO NAMAHA:, RESPECTFUL PRANAMS TO SRI MAHA PERIVA
ஆன்மிக சிந்தனைகள் »காஞ்சி பெரியவர் தர்மம் வளர்க்கும் தீபங்கள்
Source:- Dinamalar
* அவரவர் தேவைகளைக் குறைத்துக் கொண்டு, மனசினால் நிறைந்து, சுபிட்சமாக இருக்க வேண்டும். வசதி உள்ளவர்கள் கூட எளிய வாழ்க்கை நடத்துவது அவர்களுக்கும் நல்லது, மற்ற ஜன சமூகத்துக்கும் நல்லது. * பெண்கள் தர்மத்தை வளர்க்கிற தீபங்களாக உள்ளனர். இவர்களின் பண்பு கெடுகிறதற்கு இடம் தரக்கூடாது. * இன்றைய தலைறையினருக்கு தர்மத்தை ஏற்கும்படியாக, நாம் சரித்திரத்தை குழைத்துக் கொடுத்தால் தான் அது நம்மை நல்வழிப்படுத்த உபயோகமாகும். புராணம் இதைச் செய்வதால் இவற்றை நாம் படிக்க வேண்டும். * "இளைமையில் கல்' என்று சொல்வார்கள், ஆகவே ஒருவன் இளம் வயதில் கல்வி கற்பது மிகவும் அவசியம். * உடல் பலம், அஹிம்சை, தைரியம் இவற்றோடு பிறருக்கு உதவும் மனப்பான்மையும் ஒருவருக்கு வேண்டும். * தர்மத்துக்கு ஆபத்து வந்தால் உயிரையும் கொடுத்து காப்பாற்றுவது தான் ஒரு நல்ல இளைஞனின் கடமை. * ஆயிரங்காலத்துப் பயிரான திருமணத்தை, வரதட்சணை என்னும் பூச்சி அழிக்கின்ற வகையில் உள்ளது. -காஞ்சிப்பெரியவர்
Sri Kanchi Maha Periva Thiruvadigal Charanam
|
|
|
Post by krsiyer on May 10, 2012 13:48:17 GMT 5.5
Correct, His Greatness, thanks for sharing jaya jaya sankara, hara hara sankara
|
|