JAGADHANANDA KARAKA - SRI THIAGARAJA SWAMY KIRTHANAI
Dec 1, 2015 9:30:09 GMT 5.5
durgaramprasad likes this
Post by radha on Dec 1, 2015 9:30:09 GMT 5.5
OM SRI GURUPNAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
m.youtube.com/watch?v=voyxn7zsvGE
Courtesy. :-லட்சுமி தேவநாத் in Amman DARSANAM. January 2015.
ஜகதானந்த காரகா
“ஜகதானந்த காரகா” அனைத்துலகையும் மகிழ்ச்சியுறச் செய்பவன். இராமபிரானின் பெருமைகளைப் பாடும் ஒரு ரத்தினம் போன்ற பாடலின் தொடக்க வரி. இத்தகைய ஒளிமிக்க ஆபரணத்தை ஸம்ஸ்க்ருத மொழியில் நாட்டை ராகத்தில் இசைத்துள்ளார் இசைப்புலவர் தியாகராஜர். இந்த கன ராகம் ஒளிப்பிழம்பாகவும் அடக்கமாகவும் பல படிமங்களை வெளிக்கொணரும் தன்மை பூண்டது. த்வைதம் எனும் விவாதி மெட்டைத் தள்ளி விட்டே மேற்கூறிய ராகத்தின் படிகளை உருவாக்கியுள்ளார் தியாகராஜர். மற்றொரு விவாதி நோட் ஆன ரிஷபத்தை அதீதமான உணர்ச்சிபூர்வமாக அமைத்துள்ளார். ஆகவே இந்த இராகத்தின் தனித்தன்மை வெளிப்படுகிறது.
அடுத்த வரியாக “ஜய ஜானகீ ப்ராண நாயகா” எனத் தொடர்கையில் “ஜய” என்னும் உன்னதமான சொல் பல்லவியில் இடம் பெறுகிறது. ஜானகியுடனான திருமண பந்தம் ராமனின் புகழை மேலும் உயர்த்தியது. தெய்விக அறிவு மிகுந்த ஜனகரின் புதல்வி அல்லவா அவள்!
“ககனாதிப சத்குலஜ” என ஆரம்பமாகும் அனுபல்லவி இராமனின் ஒளிமிகுந்த முன்னோர்களை நினைவுறுத்துகிறது. கதிரவன் எப்படி வானமுழுவதும் ஒளி வீசுகிறானோ அது போன்று சூரிய வம்சத்தின் அரசர்கள் பூவுலகைப் பிரகாசிக்கச் செய்தார்கள். ஒளிமிக்க இந்த வம்சத்தினரின் வழி வந்தவன் இராமபிரான், மனித உருவில் வந்த இறைவன். உணர்ச்சிப் பெருக்கால் தியாகராஜர் அவனை “பாவ்ய தாயகா” (பக்தர்களுக்கு எல்லா நன்மைகளையும் தருபவன்) என்று பாடுகிறார். இந்த உரிமையை அநுபல்லவியில் “சதா”, “சகல” (எப்பொழுதும், எல்லாமே) என்ற சொற்களால் உறுதிப்படுத்துகிறார்.
சாகித்யத்தின் மூன்றாவது நிலையில் பத்து சரணங்கள் ஒன்றை ஒன்று மிஞ்சும் விதமாக தெய்விக மணமும் இசை மணமும் கலந்து திகழ்கின்றன. இராகத்தின் நுணுக்கங்களும் ஸ்வரங்களின் துள்ளலும் குறுக்கும் நெடுக்குமாக இழைந்து, மேல் ஸ்தாயி கீழ் ஸ்தாயிகளில் திளைத்து ஆக்டேவ்களின் (ஸ்தாயி) மற்றும் மிருதங்க ஜதிகள், ஸம்ஸ்கிருதப் பிரயோகங்களின் அருமைகளை வெளிப்படுத்துகின்றன. தியாகராஜர் என்ற பக்தரின் இசை அமைப்புத்திறனைப் பாராட்டுகின்றன. இச்சரணங்களில் அவர் “ஸா” அல்லது “பா” என்ற ஸ்வரங்களோடு நிறுத்திக் கொள்கிறார்.
“அமர தாரக நிச்சய குமுதஹித” என முதல் சரணத்தில் தொடரும் சொற்றொடர் “ஸ” விலிருந்து இறங்கி “ப” வில் எளிதாக நிலைக்கிறது. இங்கு தியாகராஜர் எனும் கவி, தாரகைகளின் நடுவே தேவர்கள் மத்தியில் ஜ்வலிக்கும் சந்திரனாக ஸ்ரீராமனை உருவகப்படுத்துகிறார். எல்லாருடைய ஆசைகளையும் நிறைவேற்றும் கல்பதரு. உலகின் முழுமையும் அவனே. ஆகவேதான் தியாகராஜர் இராமனிடம் கோவிந்தனைக் காண்கிறார். “ததி பயோதிவாச ஹரண” (பால்/தயிர்க் குடங்களைத் திருடுபவன்) என்ற சொற்களால்.
“நிகம நீரஜ அம்ருதஜ” உலக நாயகனான இராமன் தாமரையை ஒத்த வேதங்களைப் போஷிப்பவன். அவற்றுள் தலையாய அமிருதமான ஸாம வேதத்திலிருந்து பிறந்தது நாதம் - இசையின் ஒலி. அடுத்து வருவது “அநிமிஷவைரி வாரீத ஸமீரணி” என்ற சொற்றொடர். மேகங்களைத் தென்றல் எளிதாகக் கலைப்பதுபோல் இராமபிரான் இராட்சதர்களை விரட்டுகிறான் என்பது பொருள்.
இந்தப் புகழாரம் இராமனின் அழகான உருவத்தை நோக்கி நகர்கிறது - “இந்திர நீலமணி ஸந்நிப அபகண” - நீலமயமான அவனது மேனி நீலமணி என்ற ஒளிமிகுந்த கல்லைப் போன்று பிரகாசிக்கிறது. சூரியனும் சந்திரனும் அவனது இரு கண்கள். நியாயவான் ஆன ஆதிசேஷன் மீது அவன் துயில் கொள்கிறான்.
“பாத விஜித மௌனி சாப” எனும் பதம் இராமாயணத்தின் பாலகாண்டக் காட்சிகளை நம் கண் முன் மலரச் செய்கிறது. சாப விமோசனம் பெற்ற அகல்யா இராமனின் முன்பு மண்டியிட்டு வணங்குகிறாள். விஸ்வாமித்திரருக்கு “குரு” என்ற அந்தஸ்தை வழங்கிய இராமன் அவரிடமிருந்து சக்தி வாய்ந்த பலை, அதிபலை என்பன போன்ற மந்திரங்கள் பலவற்றையும் கற்றான். இங்கே தியாகைய்யர் தமது கனவுலகிலேயே சஞ்சரிக்கிறார். ஆதிநாதனான இறைவன் பிரம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்கி மனித உருப் பெறுவதால், மனித வாழ்வில் ஏற்படும் சோதனைகளுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகிறான். அவற்றையெல்லாம் எதிர் கொள்வதில் சிறிதளவும் கலங்குவதில்லை.
“சிருஷ்டி ஸ்திதி அந்தகார” ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று செயல்களையும் செய்பவன் இராமனே என வலியுறுத்துகிறார். நிகரில்லாத இராமன் இனிமையும் இரக்கமும் ஒருங்கே வலியுறுத்தும் இராம காவியத்தின் நாயகனாகத் திகழ்கிறான்.
“ஸஜ்ஜன மானஸ” எனத் தொடங்கும் அடுத்த சரணத்தில் இராமனது நிகரில்லாத பக்தனான அநுமனைக் கௌரவிக்க முனைகிறார்.
“ஸுரஸாரிபு கராப்ஜ” லலிதார்ச்சன” - சுரஸன் என்ற அசுரனின் எதிரியான அநுமன் தனது தாமரை இதழ்க் கரங்களால் இராமனது பாதங்களைத் தழுவுகிறான். திறமைமிக்க ஒரே வீச்சில் தியாகைய்யர் அநுமனின் முரண்பாடுகளான வலிமையையும், கருணையையும் வெளிப்படுத்தும் அழகே அழகு! அதே சமயம் இசைஞரின் வியக்கத்தக்க திறமை பொருளிலும், சுருங்கச் சொல்வதிலும் மிளிர்கிறது.
சாகித்யத்தின் இறுதிநிலை வருகிறது - இராமனை எவ்வாறு அடைவது என்ற வினாவிற்கு ஒரு வழி காட்டுகிறார் - “ஓங்கார பஞ்சரகீர” - “ஓங்காரம்” என்ற சக்திவாய்ந்த மந்திரத்தில் கூண்டில் அடைபட்ட கிளியாகிவிடுகிறான் இராமன். அடுத்துவரும் சொற்றொடர்கள் இறைவனின் மேன்மைகளை அழகாக வர்ணிக்கின்றன. எல்லாவற்றுக்கும் சிகரமாக அமைவது இறைவனிடம் மொத்தமாக இழந்து விடும் சரணாகதி தத்துவம்.
இராமாயணத்தின் ஆதிகவியான வால்மீகியையும் நினைவு கூரத் தவறவில்லை - “கவீன” என்ற சொல்லால் கவிகளுக்கு அரசன் என்று வர்ணிக்கிறார் தியாகைய்யர். பாம்புப் புற்றில் தியானத்தில் உறைந்ததால் வால்மீகி எனப் பெயர் கொண்டவர் “பிலஜமௌனி” என்றும் வர்ணிக்கப்படுகிறார்.
சம்ஸ்கிருத மொழியில் பழைமையையும் புதுமையையும் ஒன்றெனப் பொருள் பூண்ட “புராண” என்ற சொல்லில் தொடங்கும் சரணம் “புராண புருஷ” என்பதாக ஆரம்பிக்கிறது. இதில் எவ்வாறுதனது ஜனனத்தால் இராமன் உலகின் துயர் துடைக்கிறான்; எங்ஙனம் இராவணனையும் அவனது இனத்தாரையும் அழிக்கிறான் என்பன போன்ற வர்ணனைகள் கண்ணீரை வரவழைக்கும். தியாகைய்யர் “கர, விரத, இராவண, விரவண” என்று இசைக்கும்போது “விரவண” என்ற அமானுஷ்யமான சொல்லைப் பிரயோகிக்கிறார். இராவணனையும் அவனது குலத்தவரையும் அழ விடுகிறான் இராமன் எனக் குறிப்பிடுகிறார்.
இராமனின் எண்ணற்ற குணாதிசயங்களை வர்ணிப்பதோடு சாகித்தியம் நிறைவு பெறுகிறது. அடுத்து வரும் மூன்று சரணங்களிலும் “தியாகராஜநுத” என்ற தனது முத்திரையைப் பதிப்பதன் மூலம் இராமனிடம் தமக்கு உள்ள பக்தியை வெளிப்படுத்துகிறார்.
ஜகதானந்த காரகாவில் ஆரம்பமாகும் கீர்த்தனை “துடுகு கல, ஸாதிஞ்சனே, கன கன ருசீரா, எந்தரோ மஹானுபாவுலு” ஆகிய பிறவற்றோடு சேரும் “பஞ்ச ரத்ன” (ஐந்து மணிகள்) என்ற நாமகரணம் பெறுகின்றன. “ஜகதானந்த காரகா” தனியாக ராமனின் 108 மேன்மைகளை நோக்கி சிரம் தாழ்த்துகிறது.
இசையில் வேறு பல இடங்களில் இதே போன்று ஐந்து கீர்த்தனைகள் சேர்ந்திருந்தன என்றாலும், அவை “பஞ்சகம்” என்று மட்டுமே அழைக்கப்படுகின்றனவே அன்றி பஞ்ச ரத்னங்கள் என அறியப்படுவதில்லை என விளக்கியுள்ளார். இசை விமர்சகர் டி.எஸ்.பார்த்தசாரதி. பஞ்சரத்னங்கள் ஸ்வரமும் இசைச் சொற்களும் கலந்து பாடப்படுபவை என்பதால் தனித்துவம் வாய்ந்தவை. 1940களிலிருந்து இக்கீர்த்தனைகள் தியாகராஜ ஆராதனைகளில் இசைக்கப்படுகின்றன.
தியாகையர் காலத்தில் அவருக்கு ஸ்வர ஞானம் கிடையாது; பக்தி மேலீட்டால் அமைந்த அவரது கவிதைகளில் இசை மதிப்பு மிகக் குறைவு என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்ததுண்டு. ஆனால் சிறந்த இசையும் கவிதைக் கட்டமைப்பும் கொண்ட பஞ்ச ரத்னக் கீர்த்தனைகள் நன்கு இசைக்கப்படுங்கால் மேற்கூறிய விமர்சனங்கள் உடைத்தெறியப் படுகின்றன.
இவ்வைந்து கீர்த்தனைகளுமே அழுத்தமான “ஜகதானந்தகாரர்க”ளாகும் என்பதில் ஐயமில்லை.
“லட்சுமிதேவநாத்” எழுதிய இக்கட்டுரை ‘ஹிந்து’ நாளிதழில் ஜனவரி, 9, 2009 அன்று வெளியானது. பதிப்பாளரின் உரிய அனுமதியுடன் தமிழாக்கம் செய்தவர் “மீனாட்சிகிருஷ்ணா”.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
m.youtube.com/watch?v=voyxn7zsvGE
Courtesy. :-லட்சுமி தேவநாத் in Amman DARSANAM. January 2015.
ஜகதானந்த காரகா
“ஜகதானந்த காரகா” அனைத்துலகையும் மகிழ்ச்சியுறச் செய்பவன். இராமபிரானின் பெருமைகளைப் பாடும் ஒரு ரத்தினம் போன்ற பாடலின் தொடக்க வரி. இத்தகைய ஒளிமிக்க ஆபரணத்தை ஸம்ஸ்க்ருத மொழியில் நாட்டை ராகத்தில் இசைத்துள்ளார் இசைப்புலவர் தியாகராஜர். இந்த கன ராகம் ஒளிப்பிழம்பாகவும் அடக்கமாகவும் பல படிமங்களை வெளிக்கொணரும் தன்மை பூண்டது. த்வைதம் எனும் விவாதி மெட்டைத் தள்ளி விட்டே மேற்கூறிய ராகத்தின் படிகளை உருவாக்கியுள்ளார் தியாகராஜர். மற்றொரு விவாதி நோட் ஆன ரிஷபத்தை அதீதமான உணர்ச்சிபூர்வமாக அமைத்துள்ளார். ஆகவே இந்த இராகத்தின் தனித்தன்மை வெளிப்படுகிறது.
அடுத்த வரியாக “ஜய ஜானகீ ப்ராண நாயகா” எனத் தொடர்கையில் “ஜய” என்னும் உன்னதமான சொல் பல்லவியில் இடம் பெறுகிறது. ஜானகியுடனான திருமண பந்தம் ராமனின் புகழை மேலும் உயர்த்தியது. தெய்விக அறிவு மிகுந்த ஜனகரின் புதல்வி அல்லவா அவள்!
“ககனாதிப சத்குலஜ” என ஆரம்பமாகும் அனுபல்லவி இராமனின் ஒளிமிகுந்த முன்னோர்களை நினைவுறுத்துகிறது. கதிரவன் எப்படி வானமுழுவதும் ஒளி வீசுகிறானோ அது போன்று சூரிய வம்சத்தின் அரசர்கள் பூவுலகைப் பிரகாசிக்கச் செய்தார்கள். ஒளிமிக்க இந்த வம்சத்தினரின் வழி வந்தவன் இராமபிரான், மனித உருவில் வந்த இறைவன். உணர்ச்சிப் பெருக்கால் தியாகராஜர் அவனை “பாவ்ய தாயகா” (பக்தர்களுக்கு எல்லா நன்மைகளையும் தருபவன்) என்று பாடுகிறார். இந்த உரிமையை அநுபல்லவியில் “சதா”, “சகல” (எப்பொழுதும், எல்லாமே) என்ற சொற்களால் உறுதிப்படுத்துகிறார்.
சாகித்யத்தின் மூன்றாவது நிலையில் பத்து சரணங்கள் ஒன்றை ஒன்று மிஞ்சும் விதமாக தெய்விக மணமும் இசை மணமும் கலந்து திகழ்கின்றன. இராகத்தின் நுணுக்கங்களும் ஸ்வரங்களின் துள்ளலும் குறுக்கும் நெடுக்குமாக இழைந்து, மேல் ஸ்தாயி கீழ் ஸ்தாயிகளில் திளைத்து ஆக்டேவ்களின் (ஸ்தாயி) மற்றும் மிருதங்க ஜதிகள், ஸம்ஸ்கிருதப் பிரயோகங்களின் அருமைகளை வெளிப்படுத்துகின்றன. தியாகராஜர் என்ற பக்தரின் இசை அமைப்புத்திறனைப் பாராட்டுகின்றன. இச்சரணங்களில் அவர் “ஸா” அல்லது “பா” என்ற ஸ்வரங்களோடு நிறுத்திக் கொள்கிறார்.
“அமர தாரக நிச்சய குமுதஹித” என முதல் சரணத்தில் தொடரும் சொற்றொடர் “ஸ” விலிருந்து இறங்கி “ப” வில் எளிதாக நிலைக்கிறது. இங்கு தியாகராஜர் எனும் கவி, தாரகைகளின் நடுவே தேவர்கள் மத்தியில் ஜ்வலிக்கும் சந்திரனாக ஸ்ரீராமனை உருவகப்படுத்துகிறார். எல்லாருடைய ஆசைகளையும் நிறைவேற்றும் கல்பதரு. உலகின் முழுமையும் அவனே. ஆகவேதான் தியாகராஜர் இராமனிடம் கோவிந்தனைக் காண்கிறார். “ததி பயோதிவாச ஹரண” (பால்/தயிர்க் குடங்களைத் திருடுபவன்) என்ற சொற்களால்.
“நிகம நீரஜ அம்ருதஜ” உலக நாயகனான இராமன் தாமரையை ஒத்த வேதங்களைப் போஷிப்பவன். அவற்றுள் தலையாய அமிருதமான ஸாம வேதத்திலிருந்து பிறந்தது நாதம் - இசையின் ஒலி. அடுத்து வருவது “அநிமிஷவைரி வாரீத ஸமீரணி” என்ற சொற்றொடர். மேகங்களைத் தென்றல் எளிதாகக் கலைப்பதுபோல் இராமபிரான் இராட்சதர்களை விரட்டுகிறான் என்பது பொருள்.
இந்தப் புகழாரம் இராமனின் அழகான உருவத்தை நோக்கி நகர்கிறது - “இந்திர நீலமணி ஸந்நிப அபகண” - நீலமயமான அவனது மேனி நீலமணி என்ற ஒளிமிகுந்த கல்லைப் போன்று பிரகாசிக்கிறது. சூரியனும் சந்திரனும் அவனது இரு கண்கள். நியாயவான் ஆன ஆதிசேஷன் மீது அவன் துயில் கொள்கிறான்.
“பாத விஜித மௌனி சாப” எனும் பதம் இராமாயணத்தின் பாலகாண்டக் காட்சிகளை நம் கண் முன் மலரச் செய்கிறது. சாப விமோசனம் பெற்ற அகல்யா இராமனின் முன்பு மண்டியிட்டு வணங்குகிறாள். விஸ்வாமித்திரருக்கு “குரு” என்ற அந்தஸ்தை வழங்கிய இராமன் அவரிடமிருந்து சக்தி வாய்ந்த பலை, அதிபலை என்பன போன்ற மந்திரங்கள் பலவற்றையும் கற்றான். இங்கே தியாகைய்யர் தமது கனவுலகிலேயே சஞ்சரிக்கிறார். ஆதிநாதனான இறைவன் பிரம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்கி மனித உருப் பெறுவதால், மனித வாழ்வில் ஏற்படும் சோதனைகளுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகிறான். அவற்றையெல்லாம் எதிர் கொள்வதில் சிறிதளவும் கலங்குவதில்லை.
“சிருஷ்டி ஸ்திதி அந்தகார” ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று செயல்களையும் செய்பவன் இராமனே என வலியுறுத்துகிறார். நிகரில்லாத இராமன் இனிமையும் இரக்கமும் ஒருங்கே வலியுறுத்தும் இராம காவியத்தின் நாயகனாகத் திகழ்கிறான்.
“ஸஜ்ஜன மானஸ” எனத் தொடங்கும் அடுத்த சரணத்தில் இராமனது நிகரில்லாத பக்தனான அநுமனைக் கௌரவிக்க முனைகிறார்.
“ஸுரஸாரிபு கராப்ஜ” லலிதார்ச்சன” - சுரஸன் என்ற அசுரனின் எதிரியான அநுமன் தனது தாமரை இதழ்க் கரங்களால் இராமனது பாதங்களைத் தழுவுகிறான். திறமைமிக்க ஒரே வீச்சில் தியாகைய்யர் அநுமனின் முரண்பாடுகளான வலிமையையும், கருணையையும் வெளிப்படுத்தும் அழகே அழகு! அதே சமயம் இசைஞரின் வியக்கத்தக்க திறமை பொருளிலும், சுருங்கச் சொல்வதிலும் மிளிர்கிறது.
சாகித்யத்தின் இறுதிநிலை வருகிறது - இராமனை எவ்வாறு அடைவது என்ற வினாவிற்கு ஒரு வழி காட்டுகிறார் - “ஓங்கார பஞ்சரகீர” - “ஓங்காரம்” என்ற சக்திவாய்ந்த மந்திரத்தில் கூண்டில் அடைபட்ட கிளியாகிவிடுகிறான் இராமன். அடுத்துவரும் சொற்றொடர்கள் இறைவனின் மேன்மைகளை அழகாக வர்ணிக்கின்றன. எல்லாவற்றுக்கும் சிகரமாக அமைவது இறைவனிடம் மொத்தமாக இழந்து விடும் சரணாகதி தத்துவம்.
இராமாயணத்தின் ஆதிகவியான வால்மீகியையும் நினைவு கூரத் தவறவில்லை - “கவீன” என்ற சொல்லால் கவிகளுக்கு அரசன் என்று வர்ணிக்கிறார் தியாகைய்யர். பாம்புப் புற்றில் தியானத்தில் உறைந்ததால் வால்மீகி எனப் பெயர் கொண்டவர் “பிலஜமௌனி” என்றும் வர்ணிக்கப்படுகிறார்.
சம்ஸ்கிருத மொழியில் பழைமையையும் புதுமையையும் ஒன்றெனப் பொருள் பூண்ட “புராண” என்ற சொல்லில் தொடங்கும் சரணம் “புராண புருஷ” என்பதாக ஆரம்பிக்கிறது. இதில் எவ்வாறுதனது ஜனனத்தால் இராமன் உலகின் துயர் துடைக்கிறான்; எங்ஙனம் இராவணனையும் அவனது இனத்தாரையும் அழிக்கிறான் என்பன போன்ற வர்ணனைகள் கண்ணீரை வரவழைக்கும். தியாகைய்யர் “கர, விரத, இராவண, விரவண” என்று இசைக்கும்போது “விரவண” என்ற அமானுஷ்யமான சொல்லைப் பிரயோகிக்கிறார். இராவணனையும் அவனது குலத்தவரையும் அழ விடுகிறான் இராமன் எனக் குறிப்பிடுகிறார்.
இராமனின் எண்ணற்ற குணாதிசயங்களை வர்ணிப்பதோடு சாகித்தியம் நிறைவு பெறுகிறது. அடுத்து வரும் மூன்று சரணங்களிலும் “தியாகராஜநுத” என்ற தனது முத்திரையைப் பதிப்பதன் மூலம் இராமனிடம் தமக்கு உள்ள பக்தியை வெளிப்படுத்துகிறார்.
ஜகதானந்த காரகாவில் ஆரம்பமாகும் கீர்த்தனை “துடுகு கல, ஸாதிஞ்சனே, கன கன ருசீரா, எந்தரோ மஹானுபாவுலு” ஆகிய பிறவற்றோடு சேரும் “பஞ்ச ரத்ன” (ஐந்து மணிகள்) என்ற நாமகரணம் பெறுகின்றன. “ஜகதானந்த காரகா” தனியாக ராமனின் 108 மேன்மைகளை நோக்கி சிரம் தாழ்த்துகிறது.
இசையில் வேறு பல இடங்களில் இதே போன்று ஐந்து கீர்த்தனைகள் சேர்ந்திருந்தன என்றாலும், அவை “பஞ்சகம்” என்று மட்டுமே அழைக்கப்படுகின்றனவே அன்றி பஞ்ச ரத்னங்கள் என அறியப்படுவதில்லை என விளக்கியுள்ளார். இசை விமர்சகர் டி.எஸ்.பார்த்தசாரதி. பஞ்சரத்னங்கள் ஸ்வரமும் இசைச் சொற்களும் கலந்து பாடப்படுபவை என்பதால் தனித்துவம் வாய்ந்தவை. 1940களிலிருந்து இக்கீர்த்தனைகள் தியாகராஜ ஆராதனைகளில் இசைக்கப்படுகின்றன.
தியாகையர் காலத்தில் அவருக்கு ஸ்வர ஞானம் கிடையாது; பக்தி மேலீட்டால் அமைந்த அவரது கவிதைகளில் இசை மதிப்பு மிகக் குறைவு என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்ததுண்டு. ஆனால் சிறந்த இசையும் கவிதைக் கட்டமைப்பும் கொண்ட பஞ்ச ரத்னக் கீர்த்தனைகள் நன்கு இசைக்கப்படுங்கால் மேற்கூறிய விமர்சனங்கள் உடைத்தெறியப் படுகின்றன.
இவ்வைந்து கீர்த்தனைகளுமே அழுத்தமான “ஜகதானந்தகாரர்க”ளாகும் என்பதில் ஐயமில்லை.
“லட்சுமிதேவநாத்” எழுதிய இக்கட்டுரை ‘ஹிந்து’ நாளிதழில் ஜனவரி, 9, 2009 அன்று வெளியானது. பதிப்பாளரின் உரிய அனுமதியுடன் தமிழாக்கம் செய்தவர் “மீனாட்சிகிருஷ்ணா”.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM