Post by radha on Dec 1, 2015 9:18:48 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
லட்சுமிராஜரத்னம்
சூரிய மூர்த்தே நமோஸ்துதே
மார்கழி மாதக் கடைசியிலேயே கரும்பின் மணமும், மஞ்சள் மணமும் மணக்கத் தொடங்கி விடுகிறதே. தெரு ஓரங்களில் கட்டு, கட்டாகக் கரும்புகள் சுவரில் சாய்த்து வைக்கப்பட்டு “பொங்கல் வரப் போகிறது” என்று கட்டியம் கூறுகின்றன. உத்திராயனப் புண்ணிய காலம் பிறக்கப் போகிறது, என்பது இதன் பொருள்.
சூரியன் தென் திசையில் சஞ்சரிப்பதை தட்சிணாயனம் என்கிறோம். தை மாதம் முதல் வடதிசையில் பயணம் செய்ய ஆரம்பிப்பதை உத்திராயனம் என்கிறோம். இதை பெரியவர்கள் உத்திராயனப் புண்ணியகாலம் என்பார்கள். சூரிய நாராயணனுக்குப் பொங்கல் வைப்பதைப் பொங்கல் திருநாளாகக் கொண்டாடி மகிழ்கிறோம்.
“முத்துச் சம்பா நெல்லுக்குத்தி
முற்றத்திலே பொங்கல் வைத்து”
சூரியமூர்த்தியைப் பூஜிக்கிறோம். வாசலிலும், முற்றத்திலும் சூரியபகவானின் தேர்க்கோலம் இடுவது வழக்கம்.
சூரியனின் தேருக்கு ஒற்றைச் சக்கரம். ஏழு குதிரைகள். அவை பச்சை நிறத்தைக் கொண்டுள்ளன. அவை காயத்ரி, பிருகதி, உஷ்ணிக், ஜகதி, திருஷ்டுப், அனுஷ்படுப், பங்க்தி என்னும் ஏழு சந்த வஸுக்களே குதிரைகள். தேரின் சாரதி அருணன். இவன் கருடனின் சகோதரன்.
இத்தகைய பெருமை பொங்கும் ரதக் கோலமிட்டு அடுப்பை வைத்துப் புதுப் பொங்கல் பானையில் மஞ்சள், குங்குமம் இட்டு மஞ்சள் கொத்துக் கட்டி, பூ வைத்துப் புத்தரிசி இட்டு வெல்லப்பாகு மணம் கமழப் பொங்கல் வைப்பது காலம் காலமாக இருந்து வரும் தமிழர் பண்பாடு.
முதலில் பால் பொங்கும். “பொங்கலோ பொங்கல்” என்று ஆனந்தக் கூச்சல், கை தட்டலுடன் ஒலிக்கும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேது?
“மூடநெய் பெய்து முழங்கை வழிவார”என ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையில் பாடிய பொங்கலை இப்பொழுது சாப்பிடுகிறோம்.
மாடுகளுக்குப் பொங்கல் இடுகிறோம். மாடு இல்லை என்றால் உழவுத் தொழில் இல்லை என்பது ஒரு காலம். உழவுமாடுகள் என்றே சொல்லுவார்கள்.
பொங்கலுக்கு அடுத்த நாள் கனுப் பொங்கல். உள்ளூரில் இருக்கும் பெண்கள் பிறந்த வீட்டிற்குச் சாப்பிடப் போவார்கள். பிறந்த வீட்டினர் பொங்கல் சீர் என்று புடைவையோ, பணமோ தாம்பூலத்தில் வைத்துத் தருவார்கள். வெளியூரில் இருக்கும் பெண்களுக்குப் பணம் அனுப்புவது வழக்கம்.
கனுப்பொங்கல் அன்று கன்னிப் பெண்களும், சுமங்கலிப் பெண்களும் மஞ்சள் கீற்றிக் கொள்ளும் வழக்கம் உண்டு. அக்கம் பக்கத்துப் பெரியவர்களிடம் புது மஞ்சள் கிழங்கைக் கொடுத்து நெற்றியில் கீற்றிக் கொள்வார்கள். காலையில் நேரம் இல்லாவிட்டால் முதல் நாளே மஞ்சள் கீற்றிக் கொள்ளலாம்.
பெரியவர்களை நமஸ்கரித்து மஞ்சள் கீற்றிக் கொள்ளும் பொழுது அவர்கள் ஆசிர்வாதச் சொற்கள் பொருள் பொதிந்த சொற்கள். முதலில் சிரிக்க வைத்து சிறுசுகளை நாண வைத்தாலும் சிந்திக்க வைக்கும் தீர்க்கமான ஆசிர்வாதம்.
“தாயோடும், தந்தையோடும், சீரோடும் ஜனத்தோடும் (மக்களோடும் என்று பொருள்) சின்ன அகமுடையானுக்கு வாழ்க்கைப்பட்டு, பெரிய அகமுடையானுக்குக் குழந்தை குட்டி பெற்று நன்னா தீர்க்க சுமங்கலியா இருக்கணும்” என்று வாழ்த்துவார்கள்.
கன்னிப் பெண்கள் பொருள் புரியாமல் “இது என்ன ஒருத்திக்கு இரண்டு கணவன்களா?” என்று சிரிப்பார்கள்.
காலம் காலமாக ஆசிர்வதிக்கும் இதற்குள் புகுந்து பார்த்தால் அந்தக்கால சம்ப்ரதாயம் புரியும். மணமகள் ஆறு அல்லது ஏழு வயசுப் பெண். மணமகன் பன்னிரண்டு வயசுப் பையன். பெண் வயசுக்கு வந்த பின்பு மணமகன் வீட்டிற்குச் சென்று வாழத் தொடங்குவாள். மணமகனுக்கும் வயது கூடியிருக்கும்.
இதைத்தான் வாழ்த்தாகக் கனுப்பொங்கலுக்கு “சின்ன அகமுடையானுக்கு வாழ்க்கைப்பட்டு பெரிய அகமுடையானுக்குக் குழந்தைகள் பெற்று” என்ற வாழ்த்து வார்த்தைகள். பொருள் பொதிந்த வாழ்த்துகள்.
சூரியனைத் தொழுது விட்டு வாழ்த்தும் வாழ்த்துகள் பலிக்கும். உயிர் வாழ்வதற்கு சூரிய ஒளி மிகவும் அவசியம். அனைத்துப் புராணங்களும் இதை உணர்ந்தே சூரியனைப் பற்றி எடுத்துச் சொல்லியிருக்கின்றன.
ஆதிசங்கரரும் காணாபத்யம், சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம் என்பதுடன் ஆறாவது சமயமாக சௌரம் என்று ஆதவனையும் வைத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
ஆதவனின் ஒளிதான் அனைத்து ஜீவராசிகளையும் வாழ வைக்கிறது. அறு சமயத்தையும் குறிப்பிடும்பொழுது அருணகிரிநாதப் பெருமான் திருப்புகழில் “அறு சமய சாத்திரப் பொருளோனே” என்றும் “அறுசமய நீதி ஒன்றும் அறியாமல்” என்றும் சொல்லியிருக்கிறார்.
முருகனின் அழகைப் பற்றிச் சொல்லும் பொழுது சூரியனின் ஒளிக்கு ஈடாக வைத்துச் சொல்லுகிறார். அதை சீர் பாதவகுப்பில் வைத்துப் பார்க்கலாம். ஒரு சூரிய ஒளியைக் குறிப்பிடவில்லை. சதகோடி சூரியன்கள் ஒளியைக் கொண்டவனாக முருகனைப் புகழ்ந்து பேசுகிறார்கள்.
சதகோடி என்பதை நூறுகோடி என்பதல்ல. பலகோடி என்கிறது தக்கயாகப் பரணி.
நீலநிற மயிலின் மேல் செந்நிறச் செவ்வேள் தோன்றுவது, நீலக்கடலில் செந்நிறச் சூரியன் தோன்றுவதற்கு உவமையாகும்.
சீர்பாத வகுப்பைப் பார்க்கலாம்.
“உததியிடை கடவுமர கதவருண குலதுரக
வுபலளித கனகரத சதகோடி சூரியர்கள்
உதயமென அதிகவித கலபகக மயிலின்மிசை
யுகமுடிவின் இருளகல ஒருசோதி வீசுவதும்”
என்கிறார்.
“உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறுகடற்கண்டா அங்
ஓவர இமைக்குஞ் சேண் விளங் கவிரொளி”
என்கிறது திருமுருகாற்றுப்படை
“ஞாயிறேர் நிறத்தகை” என்கிறது பரிபாடல்
சூரியனுடைய கதிர்கள் ஆயிரம் என்பர். அவற்றில் 400 மழை பொழியும், 300 மழை வளத்தை உண்டாக்கும், 300 பனியைப் பொழியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
துவாதசாத்ரன் எனப்படும் பன்னிரு சூரியர்கள் மாதம் ஒரு சூரியனாகப் பணிபுரிவதாகச் சொல்லுகின்றன புராணங்கள். இவர்கள் சித்திரை, முதல் பங்குனி வரை முறையே 7000, 8000, 9000, 9000, 9000, 11000, 1000, 8000, 7000, 11000, 5000, 1000 கதிர்களுடன் விளங்குவர் (அபிதான சிந்தாமணி)
இத்தகைய ஒளிக் கடவுளான சூரியமூர்த்தியின் ஒளியை முருகக் கடவுளின் செந்நிறத்திற்கு உவமையாகச் சொல்லுவதென்றால் சூரியனின் பெருமைக்கு ஈடிணை ஏது? “செவ்வான் உருவிற்னே திகழ் வேலவ” என்கிறது கந்தரனுபூதி.
“சுக்கிற்குச் சிறந்த மருந்தில்லை, சுப்ரமண்யனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை” என்பார்கள். இந்த சுப்ரமண்யனுக்கு உவமையாக ஒளியை சூரியனை வைத்துச் சொல்லுவதென்றால் சூரியனின் பெருமையை அளவிட முடியுமா?
சூரியமூர்த்தி தனியாகத் தன் தேரில் பவனி வருகிறான் என்று எண்ணிவிடலாகாது. சூரியபகவானைச் சுற்றி சகல தேவாதி தேவர்களும் பவனி வருகிறார்கள். துதி பாடுவார்கள். கந்தர்வர்கள் இன்னிசை முழங்குகிறார்கள். அப்சரஸ்கள் நடனம் புரிகிறார்கள். யக்ஷகர்கள், நாகர்கள், ராக்ஷஸர்கள் காவல் புரிகிறார்கள்.
இது மட்டுமல்ல. ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் தங்கள் சுய ரூபத்துடன் சூரியனைத் துதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முத்தேவருமே சூரியனைப் புகழ்ந்து கொண்டாடுவார்கள். வேதங்கள் சூரியனைப் போற்றுகிறது. சூரியமூர்த்தி ஜகத்துக்கெல்லாம் அதிபதி.
இராவணனை வெற்றி பெற ஸ்ரீஇராமச்சந்திரமூர்த்திக்கு அகத்திய மாமுனிவர் ஸ்ரீஆதித்யஹ்ருதய ஸ்தோத்திரத்தை உபதேசித்தார், என்பர்.
சூரியன் சிம்ம இராசிக்கு அதிபதி. தஞ்சை ஜில்லாவில் சூரியனுக்கு என்றே கோவில் இருக்கிறது. அதில் சுவர்ச்சலா என்றும், சாயா என்றும் கூறப்படுகின்ற இரு தேவியருடன் கோவில் கொண்டுள்ளார். மற்ற கிரகங்கள் அருள்பாலிக்கக் கோவில் கொண்டுள்ளனர் அங்கே. இதுதான் சூரியனார் கோவில்.
முத்துஸ்வாமி தீக்ஷிதர் நவகிரகங்கள் மீது கீர்த்தனங்கள் இயற்றியுள்ளார். சூரியன் மீது இயற்றப்பட்ட கீர்த்தனம் “சூரியமூர்த்தே சாயாதிபதே” என்பது.
உலகம் தோன்றுவதற்குக் காரண கர்த்தாவான சூரியபகவான் தர்மாத்மா. சத்தியசந்தன்.
சித்தர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், மகான்கள், தர்மம் தவறாத கிருஹஸ்தர்கள், உத்தமமான மன்னர்கள் அனைவரும் சூரிய மண்டலத்தில் வசிக்கிறார்கள்.
உஷத் காலத்தில் ரிக் வேதமாகவும், மத்யான வேளையில் யஜுர்வேதஸ்வரூபியாகவும், அஸ்தமன காலத்தில் சாமவேத ஸ்வரூபியாகவும் திகழ்கிறார்.
கர்ப்பவாசம் இன்றிப் பிறந்திருப்பதால் அஜன் என்று பெயர். ஆதித்தியன், பவன், பாஸ்கரன், பிரஜாபதி, ஆதவன், சவிதா, காலம் தவறாமல் உதயமாகி ஒளியை வீசுவதால் சூரியன் என்றும், பானு, சித்திரபானு, திவாகரன், பக்தியால் துதித்து வரம் வேண்டுபவர்களுக்கு தாதா, அதிவேகமாக சஞ்சரிப்பவராதலால் அர்யமன், மித்ரன், வருணன், ரவி, சக்கரன், விவஸ்வான், மேகத்தின் மூலம் இடிமுழக்கம் செய்பவராதலால் மாஜன்யன், பூஷ்வா என்று சூரியனின் பெயர்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
யாக்ஞவல்கியர் இவர் மாணவர். சூரியத்தேரின் முன்னால் நடந்து உஷ்ணத்தைத் தாங்கியபடி படித்த அனுமனும் இவரது மாணவர். சுக்ரீவன் சூரியனின் கூறு. குந்திதேவிக்கு இவரருளால் கிடைத்தவன். ஸ்ரீஇராமச்சந்திரமூர்த்தி சூரிய குலத்தோன்றல். சூரிய வம்சத்தினர்.
இவரின் பெருமையைச் சொல்லிக் கொண்டே போகலாம். தைப் பொங்கல் வைத்து சூரிய மூர்த்தியைக் கும்பிட்டாலும் தினமும் காலையில் கிழக்கு நோக்கி நின்று சூரிய தரிசனம் செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். ஞாயிறு தோறும் ஆதித்யஹ்ருதயம் போன்ற மந்திரங்கள் சொல்லி சர்க்கரைப் பொங்கல், வடை, அன்னம் வைத்து சூரிய நமஸ்காரம் செய்யலாம்.
திருச்செந்தூரில் உஷத் காலத்தில் கடற்கரையில் சூரிய நமஸ்கார பூஜையை பக்தர்கள் செய்வது கண் கொள்ளாக் காட்சியாகும். நாமும் ஆதவனைத் தினமும் தொழலாமே!
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
AMMAN DARSANAM JANUARY 2015 issue
லட்சுமிராஜரத்னம்
சூரிய மூர்த்தே நமோஸ்துதே
மார்கழி மாதக் கடைசியிலேயே கரும்பின் மணமும், மஞ்சள் மணமும் மணக்கத் தொடங்கி விடுகிறதே. தெரு ஓரங்களில் கட்டு, கட்டாகக் கரும்புகள் சுவரில் சாய்த்து வைக்கப்பட்டு “பொங்கல் வரப் போகிறது” என்று கட்டியம் கூறுகின்றன. உத்திராயனப் புண்ணிய காலம் பிறக்கப் போகிறது, என்பது இதன் பொருள்.
சூரியன் தென் திசையில் சஞ்சரிப்பதை தட்சிணாயனம் என்கிறோம். தை மாதம் முதல் வடதிசையில் பயணம் செய்ய ஆரம்பிப்பதை உத்திராயனம் என்கிறோம். இதை பெரியவர்கள் உத்திராயனப் புண்ணியகாலம் என்பார்கள். சூரிய நாராயணனுக்குப் பொங்கல் வைப்பதைப் பொங்கல் திருநாளாகக் கொண்டாடி மகிழ்கிறோம்.
“முத்துச் சம்பா நெல்லுக்குத்தி
முற்றத்திலே பொங்கல் வைத்து”
சூரியமூர்த்தியைப் பூஜிக்கிறோம். வாசலிலும், முற்றத்திலும் சூரியபகவானின் தேர்க்கோலம் இடுவது வழக்கம்.
சூரியனின் தேருக்கு ஒற்றைச் சக்கரம். ஏழு குதிரைகள். அவை பச்சை நிறத்தைக் கொண்டுள்ளன. அவை காயத்ரி, பிருகதி, உஷ்ணிக், ஜகதி, திருஷ்டுப், அனுஷ்படுப், பங்க்தி என்னும் ஏழு சந்த வஸுக்களே குதிரைகள். தேரின் சாரதி அருணன். இவன் கருடனின் சகோதரன்.
இத்தகைய பெருமை பொங்கும் ரதக் கோலமிட்டு அடுப்பை வைத்துப் புதுப் பொங்கல் பானையில் மஞ்சள், குங்குமம் இட்டு மஞ்சள் கொத்துக் கட்டி, பூ வைத்துப் புத்தரிசி இட்டு வெல்லப்பாகு மணம் கமழப் பொங்கல் வைப்பது காலம் காலமாக இருந்து வரும் தமிழர் பண்பாடு.
முதலில் பால் பொங்கும். “பொங்கலோ பொங்கல்” என்று ஆனந்தக் கூச்சல், கை தட்டலுடன் ஒலிக்கும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேது?
“மூடநெய் பெய்து முழங்கை வழிவார”என ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையில் பாடிய பொங்கலை இப்பொழுது சாப்பிடுகிறோம்.
மாடுகளுக்குப் பொங்கல் இடுகிறோம். மாடு இல்லை என்றால் உழவுத் தொழில் இல்லை என்பது ஒரு காலம். உழவுமாடுகள் என்றே சொல்லுவார்கள்.
பொங்கலுக்கு அடுத்த நாள் கனுப் பொங்கல். உள்ளூரில் இருக்கும் பெண்கள் பிறந்த வீட்டிற்குச் சாப்பிடப் போவார்கள். பிறந்த வீட்டினர் பொங்கல் சீர் என்று புடைவையோ, பணமோ தாம்பூலத்தில் வைத்துத் தருவார்கள். வெளியூரில் இருக்கும் பெண்களுக்குப் பணம் அனுப்புவது வழக்கம்.
கனுப்பொங்கல் அன்று கன்னிப் பெண்களும், சுமங்கலிப் பெண்களும் மஞ்சள் கீற்றிக் கொள்ளும் வழக்கம் உண்டு. அக்கம் பக்கத்துப் பெரியவர்களிடம் புது மஞ்சள் கிழங்கைக் கொடுத்து நெற்றியில் கீற்றிக் கொள்வார்கள். காலையில் நேரம் இல்லாவிட்டால் முதல் நாளே மஞ்சள் கீற்றிக் கொள்ளலாம்.
பெரியவர்களை நமஸ்கரித்து மஞ்சள் கீற்றிக் கொள்ளும் பொழுது அவர்கள் ஆசிர்வாதச் சொற்கள் பொருள் பொதிந்த சொற்கள். முதலில் சிரிக்க வைத்து சிறுசுகளை நாண வைத்தாலும் சிந்திக்க வைக்கும் தீர்க்கமான ஆசிர்வாதம்.
“தாயோடும், தந்தையோடும், சீரோடும் ஜனத்தோடும் (மக்களோடும் என்று பொருள்) சின்ன அகமுடையானுக்கு வாழ்க்கைப்பட்டு, பெரிய அகமுடையானுக்குக் குழந்தை குட்டி பெற்று நன்னா தீர்க்க சுமங்கலியா இருக்கணும்” என்று வாழ்த்துவார்கள்.
கன்னிப் பெண்கள் பொருள் புரியாமல் “இது என்ன ஒருத்திக்கு இரண்டு கணவன்களா?” என்று சிரிப்பார்கள்.
காலம் காலமாக ஆசிர்வதிக்கும் இதற்குள் புகுந்து பார்த்தால் அந்தக்கால சம்ப்ரதாயம் புரியும். மணமகள் ஆறு அல்லது ஏழு வயசுப் பெண். மணமகன் பன்னிரண்டு வயசுப் பையன். பெண் வயசுக்கு வந்த பின்பு மணமகன் வீட்டிற்குச் சென்று வாழத் தொடங்குவாள். மணமகனுக்கும் வயது கூடியிருக்கும்.
இதைத்தான் வாழ்த்தாகக் கனுப்பொங்கலுக்கு “சின்ன அகமுடையானுக்கு வாழ்க்கைப்பட்டு பெரிய அகமுடையானுக்குக் குழந்தைகள் பெற்று” என்ற வாழ்த்து வார்த்தைகள். பொருள் பொதிந்த வாழ்த்துகள்.
சூரியனைத் தொழுது விட்டு வாழ்த்தும் வாழ்த்துகள் பலிக்கும். உயிர் வாழ்வதற்கு சூரிய ஒளி மிகவும் அவசியம். அனைத்துப் புராணங்களும் இதை உணர்ந்தே சூரியனைப் பற்றி எடுத்துச் சொல்லியிருக்கின்றன.
ஆதிசங்கரரும் காணாபத்யம், சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம் என்பதுடன் ஆறாவது சமயமாக சௌரம் என்று ஆதவனையும் வைத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
ஆதவனின் ஒளிதான் அனைத்து ஜீவராசிகளையும் வாழ வைக்கிறது. அறு சமயத்தையும் குறிப்பிடும்பொழுது அருணகிரிநாதப் பெருமான் திருப்புகழில் “அறு சமய சாத்திரப் பொருளோனே” என்றும் “அறுசமய நீதி ஒன்றும் அறியாமல்” என்றும் சொல்லியிருக்கிறார்.
முருகனின் அழகைப் பற்றிச் சொல்லும் பொழுது சூரியனின் ஒளிக்கு ஈடாக வைத்துச் சொல்லுகிறார். அதை சீர் பாதவகுப்பில் வைத்துப் பார்க்கலாம். ஒரு சூரிய ஒளியைக் குறிப்பிடவில்லை. சதகோடி சூரியன்கள் ஒளியைக் கொண்டவனாக முருகனைப் புகழ்ந்து பேசுகிறார்கள்.
சதகோடி என்பதை நூறுகோடி என்பதல்ல. பலகோடி என்கிறது தக்கயாகப் பரணி.
நீலநிற மயிலின் மேல் செந்நிறச் செவ்வேள் தோன்றுவது, நீலக்கடலில் செந்நிறச் சூரியன் தோன்றுவதற்கு உவமையாகும்.
சீர்பாத வகுப்பைப் பார்க்கலாம்.
“உததியிடை கடவுமர கதவருண குலதுரக
வுபலளித கனகரத சதகோடி சூரியர்கள்
உதயமென அதிகவித கலபகக மயிலின்மிசை
யுகமுடிவின் இருளகல ஒருசோதி வீசுவதும்”
என்கிறார்.
“உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறுகடற்கண்டா அங்
ஓவர இமைக்குஞ் சேண் விளங் கவிரொளி”
என்கிறது திருமுருகாற்றுப்படை
“ஞாயிறேர் நிறத்தகை” என்கிறது பரிபாடல்
சூரியனுடைய கதிர்கள் ஆயிரம் என்பர். அவற்றில் 400 மழை பொழியும், 300 மழை வளத்தை உண்டாக்கும், 300 பனியைப் பொழியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
துவாதசாத்ரன் எனப்படும் பன்னிரு சூரியர்கள் மாதம் ஒரு சூரியனாகப் பணிபுரிவதாகச் சொல்லுகின்றன புராணங்கள். இவர்கள் சித்திரை, முதல் பங்குனி வரை முறையே 7000, 8000, 9000, 9000, 9000, 11000, 1000, 8000, 7000, 11000, 5000, 1000 கதிர்களுடன் விளங்குவர் (அபிதான சிந்தாமணி)
இத்தகைய ஒளிக் கடவுளான சூரியமூர்த்தியின் ஒளியை முருகக் கடவுளின் செந்நிறத்திற்கு உவமையாகச் சொல்லுவதென்றால் சூரியனின் பெருமைக்கு ஈடிணை ஏது? “செவ்வான் உருவிற்னே திகழ் வேலவ” என்கிறது கந்தரனுபூதி.
“சுக்கிற்குச் சிறந்த மருந்தில்லை, சுப்ரமண்யனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை” என்பார்கள். இந்த சுப்ரமண்யனுக்கு உவமையாக ஒளியை சூரியனை வைத்துச் சொல்லுவதென்றால் சூரியனின் பெருமையை அளவிட முடியுமா?
சூரியமூர்த்தி தனியாகத் தன் தேரில் பவனி வருகிறான் என்று எண்ணிவிடலாகாது. சூரியபகவானைச் சுற்றி சகல தேவாதி தேவர்களும் பவனி வருகிறார்கள். துதி பாடுவார்கள். கந்தர்வர்கள் இன்னிசை முழங்குகிறார்கள். அப்சரஸ்கள் நடனம் புரிகிறார்கள். யக்ஷகர்கள், நாகர்கள், ராக்ஷஸர்கள் காவல் புரிகிறார்கள்.
இது மட்டுமல்ல. ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் தங்கள் சுய ரூபத்துடன் சூரியனைத் துதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முத்தேவருமே சூரியனைப் புகழ்ந்து கொண்டாடுவார்கள். வேதங்கள் சூரியனைப் போற்றுகிறது. சூரியமூர்த்தி ஜகத்துக்கெல்லாம் அதிபதி.
இராவணனை வெற்றி பெற ஸ்ரீஇராமச்சந்திரமூர்த்திக்கு அகத்திய மாமுனிவர் ஸ்ரீஆதித்யஹ்ருதய ஸ்தோத்திரத்தை உபதேசித்தார், என்பர்.
சூரியன் சிம்ம இராசிக்கு அதிபதி. தஞ்சை ஜில்லாவில் சூரியனுக்கு என்றே கோவில் இருக்கிறது. அதில் சுவர்ச்சலா என்றும், சாயா என்றும் கூறப்படுகின்ற இரு தேவியருடன் கோவில் கொண்டுள்ளார். மற்ற கிரகங்கள் அருள்பாலிக்கக் கோவில் கொண்டுள்ளனர் அங்கே. இதுதான் சூரியனார் கோவில்.
முத்துஸ்வாமி தீக்ஷிதர் நவகிரகங்கள் மீது கீர்த்தனங்கள் இயற்றியுள்ளார். சூரியன் மீது இயற்றப்பட்ட கீர்த்தனம் “சூரியமூர்த்தே சாயாதிபதே” என்பது.
உலகம் தோன்றுவதற்குக் காரண கர்த்தாவான சூரியபகவான் தர்மாத்மா. சத்தியசந்தன்.
சித்தர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், மகான்கள், தர்மம் தவறாத கிருஹஸ்தர்கள், உத்தமமான மன்னர்கள் அனைவரும் சூரிய மண்டலத்தில் வசிக்கிறார்கள்.
உஷத் காலத்தில் ரிக் வேதமாகவும், மத்யான வேளையில் யஜுர்வேதஸ்வரூபியாகவும், அஸ்தமன காலத்தில் சாமவேத ஸ்வரூபியாகவும் திகழ்கிறார்.
கர்ப்பவாசம் இன்றிப் பிறந்திருப்பதால் அஜன் என்று பெயர். ஆதித்தியன், பவன், பாஸ்கரன், பிரஜாபதி, ஆதவன், சவிதா, காலம் தவறாமல் உதயமாகி ஒளியை வீசுவதால் சூரியன் என்றும், பானு, சித்திரபானு, திவாகரன், பக்தியால் துதித்து வரம் வேண்டுபவர்களுக்கு தாதா, அதிவேகமாக சஞ்சரிப்பவராதலால் அர்யமன், மித்ரன், வருணன், ரவி, சக்கரன், விவஸ்வான், மேகத்தின் மூலம் இடிமுழக்கம் செய்பவராதலால் மாஜன்யன், பூஷ்வா என்று சூரியனின் பெயர்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
யாக்ஞவல்கியர் இவர் மாணவர். சூரியத்தேரின் முன்னால் நடந்து உஷ்ணத்தைத் தாங்கியபடி படித்த அனுமனும் இவரது மாணவர். சுக்ரீவன் சூரியனின் கூறு. குந்திதேவிக்கு இவரருளால் கிடைத்தவன். ஸ்ரீஇராமச்சந்திரமூர்த்தி சூரிய குலத்தோன்றல். சூரிய வம்சத்தினர்.
இவரின் பெருமையைச் சொல்லிக் கொண்டே போகலாம். தைப் பொங்கல் வைத்து சூரிய மூர்த்தியைக் கும்பிட்டாலும் தினமும் காலையில் கிழக்கு நோக்கி நின்று சூரிய தரிசனம் செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். ஞாயிறு தோறும் ஆதித்யஹ்ருதயம் போன்ற மந்திரங்கள் சொல்லி சர்க்கரைப் பொங்கல், வடை, அன்னம் வைத்து சூரிய நமஸ்காரம் செய்யலாம்.
திருச்செந்தூரில் உஷத் காலத்தில் கடற்கரையில் சூரிய நமஸ்கார பூஜையை பக்தர்கள் செய்வது கண் கொள்ளாக் காட்சியாகும். நாமும் ஆதவனைத் தினமும் தொழலாமே!
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
AMMAN DARSANAM JANUARY 2015 issue