Post by varagooran on Nov 21, 2015 7:13:53 GMT 5.5
"மயக்கத்திலிருந்து மீள வழி!"
(தினமும் அஞ்சு நிமிஷம் பகவந் நாம ஸ்மரணம்
செய்யுங்கள்.ஒவ்வொருவரும் சிறிது தர்மம் செய்தால்
லோகத்தில் பல ஜனங்களின் கஷ்டம் நிவர்த்தியாகி விடும். ஆயிரம் பெயர் சொன்னால் மட்டும் போதாது.
பொருளினாலும் பகவத் கைங்கர்யம் செய்ய வேண்டும்)
ஸ்ரீ பரமாச்சார்யாள் பாதையிலே..
ஆர்.பொன்னம்மாள்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
20-11-2012 போஸ்ட் மறுபதிவு
குழந்தைக்கு அசௌக்கியம் வந்துவிடின் நாம் தூக்கத்தை
லட்சியம் செய்வோமா? ஒருவரிடத்தில் பிரியம் வரும்போது எல்லாவற்றையும் அவருக்கு அர்ப்பணம் செய்கிறோம்.
ஸ்வாமிக்குப் பொருள்களை அபிஷேகம் செய்து எதற்காக வீணாக்க வேண்டும் என்று நினைக்கையில்,,பணத்தைப் பெரிதாக நினைக்கிறோம். வாஸ்தவ அன்பு வந்ததற்கு அடையாளம் தனது பொருளை அர்ப்பணம் செய்வதே.
குழந்தைக்காக ஏன் செலவிடுகிறாய் என்று ஒருவர் சொன்னால் அது தகப்பன் காதில் விழாது.
பக்தி,முக்திக்குப் பூர்வாங்கம். நமது தேகம்,வாழ்நாள்,பொருள் ஆகியவற்றை பகவானுக்கு அர்ப்பணம் செய்யவேண்டும்.ஆழ்வார்களும்,
நாயன்மார்களும் அப்படியே செய்தவர்கள்.
பணத்தை அர்ப்பணம் செய்ய வேண்டுமென்ற எண்ணம்
வந்துவிடின் நஷ்டமாகிறது என்ற எண்ணமிராது. பணம்
பெரிது என்று நினைக்கிறவரையில் இவன் கடைத்தேற
மாட்டான். .முன்னாளில் தாங்களும் வாழ்ந்து கொண்டு
கோவில்களும் கட்டினார்கள். கோவில் கட்டினதற்குக்
காரணம் சொத்தைக் காட்டிலும் பகவானைப் பெரிதாக
நினைத்ததே. சிற்பிகள் தங்களுடைய வித்தையைத்
தங்களுடைய வீட்டில் உபயோகிக்கவில்லை; கோவில்களில் உபயோகித்தார்கள். கவிகளும் அப்படியே செய்தனர். பணக்காரர்கள் கோவில் கட்டினார்கள். பகவானுக்கு அதனால் லாபமில்லை, கட்டினவன் கடைத்தேறினான்,உலகிற்குவழியும் காட்டினான்.
பகவானுக்கு எதையும் அர்ப்பணம் செய்ய வேண்டும்.
இப்போது அவரவர் சம்பாத்யம் அவரவர் செலவிற்குப்
போதவில்லை. ஆகையால் ஒரு தர்மமும்
சாத்தியப்படவில்லை. முன்னாளில் ஏராளமாகத் தர்மம்
செய்து வந்தனர்.இப்பொழுதும் நகரத்துச் செட்டியார்கள்
செய்கிறார்கள். எவ்வளவு சம்பாதித்தாலும் கஷ்டம்
வருகிறது. தானம் கொடுத்த பணம் இருந்தால்
சாப்பிடலாமே என்று தோன்றுகிறது. அது
கொடுக்கப்படாதிருந்தால் அதுவும் போயிருக்கும்.
லோகமெல்லாம் ஒன்றாகி விட்டதால் இப்படியாகி
விட்டது. முன்னாளில் 50 வருஷங்களுக்கு ஒரு பஞ்சம்.
இப்பொழுது லோகமுழுமையிலும் நித்யம் பஞ்சம்.
ஆயினும் சாத்தியப்படும் வரையில் பகவானுக்கு
அர்ப்பணம் செய்ய வேண்டும். அதுதான் பரம லாபம்.
பொருள்,உடல்,மனம்,வாக்கு இவைகளைக் கொடுக்க
வேண்டும்.இந்த ஒற்றுமை இருந்தால், எவ்வளவு
பேதமிருந்தாலும் அந்தரங்க அன்பிருக்கும்.
பணம் வெளிப்பிராணன்; வெளியில் ஸஞ்சாரம் செய்வது. அதையும் கொடுக்க வேண்டும்.
தினமும் அஞ்சு நிமிஷம் பகவந் நாம ஸ்மரணம்
செய்யுங்கள்.ஒவ்வொருவரும் சிறிது தர்மம் செய்தால்
லோகத்தில் பல ஜனங்களின் கஷ்டம் நிவர்த்தியாகி விடும். ஆயிரம் பெயர் சொன்னால் மட்டும் போதாது.
பொருளினாலும் பகவத் கைங்கர்யம் செய்ய வேண்டும்
(தினமும் அஞ்சு நிமிஷம் பகவந் நாம ஸ்மரணம்
செய்யுங்கள்.ஒவ்வொருவரும் சிறிது தர்மம் செய்தால்
லோகத்தில் பல ஜனங்களின் கஷ்டம் நிவர்த்தியாகி விடும். ஆயிரம் பெயர் சொன்னால் மட்டும் போதாது.
பொருளினாலும் பகவத் கைங்கர்யம் செய்ய வேண்டும்)
ஸ்ரீ பரமாச்சார்யாள் பாதையிலே..
ஆர்.பொன்னம்மாள்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
20-11-2012 போஸ்ட் மறுபதிவு
குழந்தைக்கு அசௌக்கியம் வந்துவிடின் நாம் தூக்கத்தை
லட்சியம் செய்வோமா? ஒருவரிடத்தில் பிரியம் வரும்போது எல்லாவற்றையும் அவருக்கு அர்ப்பணம் செய்கிறோம்.
ஸ்வாமிக்குப் பொருள்களை அபிஷேகம் செய்து எதற்காக வீணாக்க வேண்டும் என்று நினைக்கையில்,,பணத்தைப் பெரிதாக நினைக்கிறோம். வாஸ்தவ அன்பு வந்ததற்கு அடையாளம் தனது பொருளை அர்ப்பணம் செய்வதே.
குழந்தைக்காக ஏன் செலவிடுகிறாய் என்று ஒருவர் சொன்னால் அது தகப்பன் காதில் விழாது.
பக்தி,முக்திக்குப் பூர்வாங்கம். நமது தேகம்,வாழ்நாள்,பொருள் ஆகியவற்றை பகவானுக்கு அர்ப்பணம் செய்யவேண்டும்.ஆழ்வார்களும்,
நாயன்மார்களும் அப்படியே செய்தவர்கள்.
பணத்தை அர்ப்பணம் செய்ய வேண்டுமென்ற எண்ணம்
வந்துவிடின் நஷ்டமாகிறது என்ற எண்ணமிராது. பணம்
பெரிது என்று நினைக்கிறவரையில் இவன் கடைத்தேற
மாட்டான். .முன்னாளில் தாங்களும் வாழ்ந்து கொண்டு
கோவில்களும் கட்டினார்கள். கோவில் கட்டினதற்குக்
காரணம் சொத்தைக் காட்டிலும் பகவானைப் பெரிதாக
நினைத்ததே. சிற்பிகள் தங்களுடைய வித்தையைத்
தங்களுடைய வீட்டில் உபயோகிக்கவில்லை; கோவில்களில் உபயோகித்தார்கள். கவிகளும் அப்படியே செய்தனர். பணக்காரர்கள் கோவில் கட்டினார்கள். பகவானுக்கு அதனால் லாபமில்லை, கட்டினவன் கடைத்தேறினான்,உலகிற்குவழியும் காட்டினான்.
பகவானுக்கு எதையும் அர்ப்பணம் செய்ய வேண்டும்.
இப்போது அவரவர் சம்பாத்யம் அவரவர் செலவிற்குப்
போதவில்லை. ஆகையால் ஒரு தர்மமும்
சாத்தியப்படவில்லை. முன்னாளில் ஏராளமாகத் தர்மம்
செய்து வந்தனர்.இப்பொழுதும் நகரத்துச் செட்டியார்கள்
செய்கிறார்கள். எவ்வளவு சம்பாதித்தாலும் கஷ்டம்
வருகிறது. தானம் கொடுத்த பணம் இருந்தால்
சாப்பிடலாமே என்று தோன்றுகிறது. அது
கொடுக்கப்படாதிருந்தால் அதுவும் போயிருக்கும்.
லோகமெல்லாம் ஒன்றாகி விட்டதால் இப்படியாகி
விட்டது. முன்னாளில் 50 வருஷங்களுக்கு ஒரு பஞ்சம்.
இப்பொழுது லோகமுழுமையிலும் நித்யம் பஞ்சம்.
ஆயினும் சாத்தியப்படும் வரையில் பகவானுக்கு
அர்ப்பணம் செய்ய வேண்டும். அதுதான் பரம லாபம்.
பொருள்,உடல்,மனம்,வாக்கு இவைகளைக் கொடுக்க
வேண்டும்.இந்த ஒற்றுமை இருந்தால், எவ்வளவு
பேதமிருந்தாலும் அந்தரங்க அன்பிருக்கும்.
பணம் வெளிப்பிராணன்; வெளியில் ஸஞ்சாரம் செய்வது. அதையும் கொடுக்க வேண்டும்.
தினமும் அஞ்சு நிமிஷம் பகவந் நாம ஸ்மரணம்
செய்யுங்கள்.ஒவ்வொருவரும் சிறிது தர்மம் செய்தால்
லோகத்தில் பல ஜனங்களின் கஷ்டம் நிவர்த்தியாகி விடும். ஆயிரம் பெயர் சொன்னால் மட்டும் போதாது.
பொருளினாலும் பகவத் கைங்கர்யம் செய்ய வேண்டும்