Post by Sumi on Jun 1, 2012 16:41:33 GMT 5.5
Vaikasi Visakam falls on 3rd June 2012. Let us see what Maha Periva said about Lord Muruga.
ஸ்கந்த நாமச் சிறப்பு - மகாபெரியவர் விளக்கம்
"ஸ்கந்தர்' என்றால் "துள்ளிக் கொண்டு வெளிப்பட்டவர்' என்று அர்த்தம் பரமேச்வரனுடைய சக்தி நேத்ர ஜ்யோதிஸ்ஸாக (நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட ஒளி) ஒரே துடிப்போடு, லோகாநுக்ரஹம் பண்ண வேண்டுமென்ற துடிப்போடு, துள்ளிக்கொண்டு வெளிப்பட்டே ஸ்கந்தமூர்த்தி உத்பவமானார். அந்த விசேஷத்தால் தான் அவருக்கு ஸூப்ரஹ்மண்யர், கார்த்திகேயர், குமாரர், சரவணபவர் என்றிப்படி அநேக நாமாக்கள் இருந்தபோதிலும், அவரைப் பற்றிய புராணத்திற்கு ஸ்கந்த புராணம், ஸ்காந்தம் என்றே பெயரிருக்கிறது. அவருடைய லோகத்துக்கு ஸ்கந்தலோகம் என்றே பெயர். அவர் ஸம்பந்தமான விரதத்தை "ஸ்கந்த ஷஷ்டி' என்றே சொல்கிறோம். அம்பாளோடும் "முருகனோடும் இருக்கும் பரமேச்வரமூர்த்திக்கும் "சோமாஸ்கந்தர்' என்றே பேர் இருக்கிறது. "முருகன்' என்று அவருக்குச் சிறப்பாகத் தமிழ்ப்பெயர் கொடுத்திருக்கும் நம் பாஷையிலும், கந்தரநுபூதி, கந்தரலங்காரம், கந்தர் கலிவெண்பா என்றே ஸ்தோத்திரங்கள் இருக்கின்றன. சென்னை பட்டணத்தில் சிறப்பாகக் கந்த கோட்டம் இருக்கிறது.
**********
கார்த்திகைப் பெண்களின் பிள்ளை - முருகன் பற்றி பெரியவர்
பரமசிவனின் நேத்ராக்னியில் இருந்து வந்தவரே குமாரசுவாமி. அவர் ஞானாக்னியானாலும் இதயத்தில் குளிர்ந்தவர். ஏனென்றால் ரொம்ப ஜலசம்பந்தம் உள்ளவர். சரவணம் என்ற பொய்கையில் தான், சிவதேஜஸ் முருகனாக ரூபம் கொண்டது. அம்பாளே சரவணப் பொய்கை. அப்பா நெருப்பாக இருக்க, அம்மா நீராக இருந்தாள். ஜலரூபமான கங்கையும் அவருக்கு இன்னொரு மாதா. அதனால் முருகனை "காங்கேயன்' என்று அழைத்து வழிபடுகிறோம்.
எல்லாப் பெண்களும் அவருக்கு மாதா. சஷ்டிப் பெண்களுக்கு அவர் பாலன் ஆனார். கார்த்திகைப் பெண்டிருக்குப் பிள்ளையாகக் கார்த்திகேயர் ஆனார். நட்சத்திரத்தில் ஆறாக இருப்பது கார்த்திகை. திதியில் ஆறாவது சஷ்டி. இவருக்கு ஆறுமுகம். ஆறு அட்சரம் கொண்ட சடாக்ஷரி (சரவணபவ) இவருடைய மந்திரம். மனிதர்களிடமுள்ள காமம் (பெண்ணாசை), குரோதம் (கோபம்), லோபம் ( பற்று), மோகம் (பிற ஆசை), மதம் (ஆணவம்), மாச்சர்யம் (வெறுப்பு) என்ற ஆறு பகைவர்களைக் கொன்று ஞானம் அருளும் ஆறுபடை வீரர் அவரே.
ஜொலிக்கிற ஞானாக்னியான வேலாயுதத்தை "சக்தி சக்தி' என்றே சொல்லுகிறோம். வேதமே முக்கியமாக அக்கினி வழிபாட்டு மதம் தான். அக்கினி என்ற வார்த்தையோடு தான் வேதம் ஆரம்பமாகிறது. உபா சனையில் (இறைவனை வழிபடும் முறை) ஒளபாசனம் என்னும் அக்கினி முறையே முக்கியமானது. இதற்கு சுப்பிரமணியரே அதிதேவதையாக இருக்கிறார்.
கந்தன் என்னும் கருணாமூர்த்தி - சொல்கிறார் காஞ்சிப்பெரியவர்
வேதத்துக்கு முக்கியமென்ன? அக்னி உபாசனை! சுப்ரமண்யர், அக்னி ஸ்வரூபமாயிருப்பவர். பரமேச்வரனின் நேத்ராக்னிப் பொறி ஆறு சேர்ந்து, அவராக ஆனது. அதனால் தான் அவர் வேத தேவராக இருக்கிறார். வேதம் படிப்பதும், சொல்லிக் கொடுப்பதுமே தொழிலாயுள்ள அந்தணர்களின் தெய்வமாய் இருப்பவர் சுப்ரமண்யர்.
ஆசார்யாளும் (ஆதிசங்கரர்) "சுப்ரஹ்மண்ய புஜங்கத்தில்' ""மஹீதேவ தேவம், மஹாதேவ பாவம், மஹாதேவ பாலம்'' என்று சொல்லியிருக்கிறார்.
தமிழிலுள்ள பக்தி நூல்களில் ரொம்பவும் புராதனமான திருமுருகாற்றுப்படையிலும் இப்படியே தான் சொல்லியிருக்கிறது. சண்முகனின் ஆறு முகங்களில், ஒவ்வொன்றும் ஒருவிதமாக அனுக்ரஹம் செய்வதாக நக்கீரர் சொல்லிக் கொண்டு போகும்போது, இக்கருத்தை வலியுறுத்தியுள்ளார். "சுப்ரமண்ய ஸ்வாமி' என்பதே குமாரசுவாமிக்கு பிரசித்த நாமாவாக இருப்பதிலிருந்தே, அவர் வேதத்துக்கும், வைதிகத்துக்கும் அதிதேவதை என்று நிச்சயமாகிறது.
பரமேச்வரன் மன்மதனை பஸ்மம் பண்ணினவர். எந்த நேத்ராக்னியினாலே (நெற்றிக்கண்ணாலே) மதனைப் பொசிக்கினாரோ, அதே நேத்ராக்னியில் உண்டானவர் சுப்ரஹ்மண்யர். காமத்திலே பிறக்காமல் ஞானத்திலே பிறந்தவர். ஞானமே லோகத்தை ரக்ஷிக்க வேண்டும் என்று கருணாமூர்த்தி ஸ்வரூபமாக விளங்குகிறார்.
ஸ்கந்த நாமச் சிறப்பு - மகாபெரியவர் விளக்கம்
"ஸ்கந்தர்' என்றால் "துள்ளிக் கொண்டு வெளிப்பட்டவர்' என்று அர்த்தம் பரமேச்வரனுடைய சக்தி நேத்ர ஜ்யோதிஸ்ஸாக (நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட ஒளி) ஒரே துடிப்போடு, லோகாநுக்ரஹம் பண்ண வேண்டுமென்ற துடிப்போடு, துள்ளிக்கொண்டு வெளிப்பட்டே ஸ்கந்தமூர்த்தி உத்பவமானார். அந்த விசேஷத்தால் தான் அவருக்கு ஸூப்ரஹ்மண்யர், கார்த்திகேயர், குமாரர், சரவணபவர் என்றிப்படி அநேக நாமாக்கள் இருந்தபோதிலும், அவரைப் பற்றிய புராணத்திற்கு ஸ்கந்த புராணம், ஸ்காந்தம் என்றே பெயரிருக்கிறது. அவருடைய லோகத்துக்கு ஸ்கந்தலோகம் என்றே பெயர். அவர் ஸம்பந்தமான விரதத்தை "ஸ்கந்த ஷஷ்டி' என்றே சொல்கிறோம். அம்பாளோடும் "முருகனோடும் இருக்கும் பரமேச்வரமூர்த்திக்கும் "சோமாஸ்கந்தர்' என்றே பேர் இருக்கிறது. "முருகன்' என்று அவருக்குச் சிறப்பாகத் தமிழ்ப்பெயர் கொடுத்திருக்கும் நம் பாஷையிலும், கந்தரநுபூதி, கந்தரலங்காரம், கந்தர் கலிவெண்பா என்றே ஸ்தோத்திரங்கள் இருக்கின்றன. சென்னை பட்டணத்தில் சிறப்பாகக் கந்த கோட்டம் இருக்கிறது.
**********
கார்த்திகைப் பெண்களின் பிள்ளை - முருகன் பற்றி பெரியவர்
பரமசிவனின் நேத்ராக்னியில் இருந்து வந்தவரே குமாரசுவாமி. அவர் ஞானாக்னியானாலும் இதயத்தில் குளிர்ந்தவர். ஏனென்றால் ரொம்ப ஜலசம்பந்தம் உள்ளவர். சரவணம் என்ற பொய்கையில் தான், சிவதேஜஸ் முருகனாக ரூபம் கொண்டது. அம்பாளே சரவணப் பொய்கை. அப்பா நெருப்பாக இருக்க, அம்மா நீராக இருந்தாள். ஜலரூபமான கங்கையும் அவருக்கு இன்னொரு மாதா. அதனால் முருகனை "காங்கேயன்' என்று அழைத்து வழிபடுகிறோம்.
எல்லாப் பெண்களும் அவருக்கு மாதா. சஷ்டிப் பெண்களுக்கு அவர் பாலன் ஆனார். கார்த்திகைப் பெண்டிருக்குப் பிள்ளையாகக் கார்த்திகேயர் ஆனார். நட்சத்திரத்தில் ஆறாக இருப்பது கார்த்திகை. திதியில் ஆறாவது சஷ்டி. இவருக்கு ஆறுமுகம். ஆறு அட்சரம் கொண்ட சடாக்ஷரி (சரவணபவ) இவருடைய மந்திரம். மனிதர்களிடமுள்ள காமம் (பெண்ணாசை), குரோதம் (கோபம்), லோபம் ( பற்று), மோகம் (பிற ஆசை), மதம் (ஆணவம்), மாச்சர்யம் (வெறுப்பு) என்ற ஆறு பகைவர்களைக் கொன்று ஞானம் அருளும் ஆறுபடை வீரர் அவரே.
ஜொலிக்கிற ஞானாக்னியான வேலாயுதத்தை "சக்தி சக்தி' என்றே சொல்லுகிறோம். வேதமே முக்கியமாக அக்கினி வழிபாட்டு மதம் தான். அக்கினி என்ற வார்த்தையோடு தான் வேதம் ஆரம்பமாகிறது. உபா சனையில் (இறைவனை வழிபடும் முறை) ஒளபாசனம் என்னும் அக்கினி முறையே முக்கியமானது. இதற்கு சுப்பிரமணியரே அதிதேவதையாக இருக்கிறார்.
**********
கந்தன் என்னும் கருணாமூர்த்தி - சொல்கிறார் காஞ்சிப்பெரியவர்
வேதத்துக்கு முக்கியமென்ன? அக்னி உபாசனை! சுப்ரமண்யர், அக்னி ஸ்வரூபமாயிருப்பவர். பரமேச்வரனின் நேத்ராக்னிப் பொறி ஆறு சேர்ந்து, அவராக ஆனது. அதனால் தான் அவர் வேத தேவராக இருக்கிறார். வேதம் படிப்பதும், சொல்லிக் கொடுப்பதுமே தொழிலாயுள்ள அந்தணர்களின் தெய்வமாய் இருப்பவர் சுப்ரமண்யர்.
ஆசார்யாளும் (ஆதிசங்கரர்) "சுப்ரஹ்மண்ய புஜங்கத்தில்' ""மஹீதேவ தேவம், மஹாதேவ பாவம், மஹாதேவ பாலம்'' என்று சொல்லியிருக்கிறார்.
தமிழிலுள்ள பக்தி நூல்களில் ரொம்பவும் புராதனமான திருமுருகாற்றுப்படையிலும் இப்படியே தான் சொல்லியிருக்கிறது. சண்முகனின் ஆறு முகங்களில், ஒவ்வொன்றும் ஒருவிதமாக அனுக்ரஹம் செய்வதாக நக்கீரர் சொல்லிக் கொண்டு போகும்போது, இக்கருத்தை வலியுறுத்தியுள்ளார். "சுப்ரமண்ய ஸ்வாமி' என்பதே குமாரசுவாமிக்கு பிரசித்த நாமாவாக இருப்பதிலிருந்தே, அவர் வேதத்துக்கும், வைதிகத்துக்கும் அதிதேவதை என்று நிச்சயமாகிறது.
பரமேச்வரன் மன்மதனை பஸ்மம் பண்ணினவர். எந்த நேத்ராக்னியினாலே (நெற்றிக்கண்ணாலே) மதனைப் பொசிக்கினாரோ, அதே நேத்ராக்னியில் உண்டானவர் சுப்ரஹ்மண்யர். காமத்திலே பிறக்காமல் ஞானத்திலே பிறந்தவர். ஞானமே லோகத்தை ரக்ஷிக்க வேண்டும் என்று கருணாமூர்த்தி ஸ்வரூபமாக விளங்குகிறார்.