|
Post by saidevo on Jun 15, 2015 18:56:10 GMT 5.5
|
|
|
Post by saidevo on Jun 19, 2015 7:54:30 GMT 5.5
மூலத் தான லிங்கம் பின்னே முக்கணன் விடையூர்வார் கோலம் உருவில் பாதம் எட்டாக் குறளனுக் கருள்செய்தார் காலம் கடந்தார் அழகம் மையுடன் காத்தருள் செய்தலமே ஆலின் அடியில் அமர்ந்தார் ஆளும் அவளிவ ணல்லூரே. ... 4
[கோலம் = பன்றி, குறளன் = வாமன அவதாரம் எடுத்த திருமால்]
கோட்ட மூர்த்தம் பிரமன் துர்க்கை கும்பமு னிவரென்றே பாட்டின் நால்வர் கந்தன் கமலை பார்வதி மூத்தமகன் வேட்டே அறைகள் தனியாய்ச் சுற்றில் வீற்றிருந் தருள்செய்ய ஆட்டும் வினைகள் அறவே நீங்க அவளிவ ணல்லூரே. ... 5
பஞ்சா ரண்யத் தலத்தில் இவ்வூர் பாதிரி வனமாகும் அஞ்சும் ஒருநாள் பொழுதில் காணும் அறநெறி வழக்குண்டாம் நஞ்சை யுண்ட நாதன் மேவி நன்மைகள் தந்தருளி அஞ்சேல் என்றே ஆற்றுப் படுத்தும் அவளிவ ணல்லூரே. ... 6
|
|
|
Post by radha on Jun 19, 2015 13:23:43 GMT 5.5
OM NAMA SHIVAYA
A story. Based on the above poem
இத்தல இறைவனை பூஜித்து வந்த சிவாச்சாரியாருக்கு இரண்டு பெண்கள். இதில் மூத்த பெண் சுசீலையை அரசவைப்புலவரின் மகன் மணந்தான். இவன் தலயாத்திரை மேற்கொண்டு பல தலங்களை தரிசித்து பல ஆண்டுகள் கழித்து திரும்பி வந்தபோது சுசீலை அம்மை நோயால் பாதிக்கப்பட்டு கண்பார்வை இல்லாமல் அழகிழந்து காணப்பட்டாள். இவளது தங்கை அழகுடன் இருந்ததால் அவளை தன் மனைவியாக நினைத்து அழைத்தார்.
அருகிலிருந்த சுசீலையை தன் மனைவியாக ஏற்க மறுத்தார். இதனால் மனம் வருந்திய சிவாச்சாரியார் இத்தல இறைவனிடம் அழுது முறையிட்டார். இறைவன் சுசீலையை கோயில் எதிரிலுள்ள தீர்த்தத்தில் தை அமாவாசை தினத்தில் நீராடும்படி கூறினார். நீராடி வெளியே வந்தவுடன், சுசீலை முன்பை விட மிக அழகாக விளங்கினாள். சிவன், பார்வதி சமேதராக காட்சி தந்து "அவள் தான் இவள்' என சுட்டிக்காட்டி மறைந்தார். அன்றிலிருந்து இத்தலம் அவளிவணல்லூர் எனவும், இறைவன் சாட்சிநாதர் எனவும் ஆனார்கள்.
Source:- DINAMALAR. SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
|
|
|
Post by saidevo on Jun 26, 2015 9:29:09 GMT 5.5
கணையை எய்த கருப்பு வில்லன் காமனை எரித்தாண்டார் கணையை விடுத்தே முப்பு ரத்தில் கனலெழக் கொண்டாண்டார் கணைத்தாள் நாசி கொண்டாள் இடமே காதலில் நின்றாண்டார் அணைவார்க் கினிமேல் அல்லல் இல்லை அவளிவ ணல்லூரே. ... 7
[கணை = முறையே அம்பு, அம்பு, மூங்கில்; கணைத்தாள் நாசி = மூங்கில் தண்டு போன்ற நாசி--சௌந்தர்ய லஹரீ, ஸ்லோகம் 61]
இலங்கை வேந்தன் மலையை அசைக்க இறைவனின் கால்விரலில் தலைகள் நசுங்கித் தோளும் துவளத் தானவன் போற்றிடவே வலம்-ஆ யுள்வாள் வரமாய்த் தந்தே வாலிறை யாட்கொண்டார் அலையும் உள்ளம் அமைதி பெறவே அவளிவ ணல்லூரே. ... 8
அயனும் மாலும் தலைதாள் தேடி அயர்ந்திடும் அழலானார் தலையில் ஆறும் கலையும் ஏற்றித் தாண்டவம் ஆடுவரே நிலையா உலகில் நிலைகொள் உண்மை நிலவிட நிற்பவரே அலங்கா ரம்கொள் அரையன் என்றே அவளிவ ணல்லூரே. ... 9
வேதம் தவிர்க்கும் நெறிகள் யாவும் வினைகொளும் நெறியாகா பேதம் இதனை உணர்ந்தே பேணிப் பித்தனை அடைவோரைக் காதும் காதும் வைத்தாற் போலக் காத்தருள் செய்பவனே ஆதி என்றே நிலைகொண் டானே அவளிவ ணல்லூரே. ... 10
இலங்கை வேந்தன் வரலா றுரைத்தே இலங்கிடும் பதிகமென நலஞ்சொல் நாவின் அரசர் அப்பர் நலம்படும் நெறிசொல்வார் கலையார் சொற்கள் ஒலியார் பொருளில் காழியர் கோன்சொல்வார் அலைநீர் நஞ்சைக் கொண்டான் உறையும் அவளிவ ணல்லூரே. ... 11
[காழியர்கோன் = சம்பந்தர்]
--ரமணி, 08-12/06/2015, கலி.29/02/5116
*****
|
|