Post by Kanchi Periva on Jun 1, 2015 23:26:02 GMT 5.5
Here is a special Kavacham on Sri Maha Periva, written by our respected member Sri venkatakailasam - to mark the special occasion of Sri Maha Periva's 122nd Jayanthi on 2nd June, 2015
விக்னேஸ்வரனின் தாள் பற்றி
குமரனின் அருள் வேண்டி
நதியும் மதியும் சூடி
அரவம் கண்டமதில் உறவாடும்
மௌலி தன் நேசா! சரணம்!
பழவ திருமேனியும்
பூசிய வெண்ணீரும்
காவி உடையும் அணிந்து
அருட் பல புரிந்து
முழு மதி முகமதில் அரும்பும் குறு நகையும்
அருள் விழியில் பெருகிடும் கருணையும்
சிந்தையில் நின்ற தெருளும் நினதாக்கிய
தட்சிணா மூர்த்தி அவதாரமே! சரணம்!
ஓங்காரத்தின் ஒலியாய்
ஒலியில் எழுந்த வேதமாய்
வேதத்தின் நாதமாய்
நாதத்தின் லயமாய்
லயத்தின் மையமாய்
ஸ்ருதியாகி சிவமாய்
காலமாகி காலத்தை
கடந்த வெளியாகி
அடியோரின் உள்ளம் புகுந்து ஒளியாகி
நின்ற சுவாமிநாத சத்குருவே! சரணம்! சரணம்!
அடித்தாலும் வெறுத்தாலும்
உன்னை துதிக்கும் அடியோரை
காத்தருள்வது உனக்கு ஒரு பாரமா?
அகத்தினையும் புறத்தினையும்
கருத்தினையும் எண்ணத்தினையும்
சிந்தனையையும் செயலையும்
காஞ்சி நாதன் நயந்து காக்க!
கபாலத்தையும் நுதலையும் மற்றும்
அழகிய விழிகள் இரண்டினையும் பார்வையையும்
புருவத்தினையும் நாசி தனையும் வாசத்தினையும்
அருட் செல்வன் காக்க!
செவிகள் இரண்டினையும் இசையினையும்
வாயினையும் பற்களையும் நல் நாக்கினையும்
குவியும் உதட்டினையும் சுவையினையும் கதுப்பு கன்னங்களையும்
சந்திர சேகரன் உவந்து காக்க!
கந்தரத்தையும் தோள்களையும்
விலாவினையும் மார்பையும்
மனத்தினையும் திணையான இதயத்தையும்
கைலாசநாதன் சேய் பரிவுடன் காக்க!
மூச்சினையும் நுரையீரல்தனையும்
கைகளிரண்டையும் விரல்களையும் நகத்தினையும்
வயிற்றையும் குதத்தையும் ஆண் பெண் குறிதனையும்
செந்தாமரையாள் தன் தனையன் முனைந்து காக்க!
இடுப்பினையும் தொடையினையும்
இருமுழங்காலையும் கணுக்கால்
பாதந்தனையும் நகங்களையும்
கணநாத பிரியன் மகிழ்ந்து காக்க!
வானிலும் நிலத்திலும் நீரிலும் தீயிலும்
பகைவர் மத்தியிலும் நாற்திசை தன்னிலும்
காலையிலும் கங்குலிலும் எப்பொழுதும்
இடைவிடாமல் ஞானசேகரன் காக்க!
வாதமும் சளிப்பு பித்தமும்
மற்றும் பிணிகள் யாவும் கூடி வராமல்
சூதும் வாதும் நாடி வராமல்
வருமையும் துயரமும் தேடி வராமல்
மறையோதும் மறையவன் காக்க!
நடக்கையிலும் இருக்கையிலும்
சேர்கையிலும் உறக்கத்திலும்
சிரிக்கையிலும் இசைக்கையிலும்
மௌலி தன் நேசன் நயமுடன் காக்க!
உண்கையிலும் உறக்கத்திலும்
கனவிலும் நினைவிலும்
காக்க காக்க காஞ்சி நாதன்
கை தண்டமும் அட்ஷய குவளையும் கடுகவே வந்து!!
இன்னல்களை இன்பமயமாக்கும் ரஸவாதி
சித்த சுத்தி தந்தருள்வான்!
சங்கடங்களுக்கு வழி கூறவல்ல விரியுரையாளன்
துக்கங்களை நீக்கி சோகங்களை அகற்றிடுவான்!
கவசம் தன்னை ஓதுவாருக்கு
ஓம்! காஞ்சி வாசாய வித்மகே
மௌலி நேசாய தீமகி
தந்நோ சந்திர சேகராய ப்ரசோயதாத்!
விக்னேஸ்வரனின் தாள் பற்றி
குமரனின் அருள் வேண்டி
நதியும் மதியும் சூடி
அரவம் கண்டமதில் உறவாடும்
மௌலி தன் நேசா! சரணம்!
பழவ திருமேனியும்
பூசிய வெண்ணீரும்
காவி உடையும் அணிந்து
அருட் பல புரிந்து
முழு மதி முகமதில் அரும்பும் குறு நகையும்
அருள் விழியில் பெருகிடும் கருணையும்
சிந்தையில் நின்ற தெருளும் நினதாக்கிய
தட்சிணா மூர்த்தி அவதாரமே! சரணம்!
ஓங்காரத்தின் ஒலியாய்
ஒலியில் எழுந்த வேதமாய்
வேதத்தின் நாதமாய்
நாதத்தின் லயமாய்
லயத்தின் மையமாய்
ஸ்ருதியாகி சிவமாய்
காலமாகி காலத்தை
கடந்த வெளியாகி
அடியோரின் உள்ளம் புகுந்து ஒளியாகி
நின்ற சுவாமிநாத சத்குருவே! சரணம்! சரணம்!
அடித்தாலும் வெறுத்தாலும்
உன்னை துதிக்கும் அடியோரை
காத்தருள்வது உனக்கு ஒரு பாரமா?
அகத்தினையும் புறத்தினையும்
கருத்தினையும் எண்ணத்தினையும்
சிந்தனையையும் செயலையும்
காஞ்சி நாதன் நயந்து காக்க!
கபாலத்தையும் நுதலையும் மற்றும்
அழகிய விழிகள் இரண்டினையும் பார்வையையும்
புருவத்தினையும் நாசி தனையும் வாசத்தினையும்
அருட் செல்வன் காக்க!
செவிகள் இரண்டினையும் இசையினையும்
வாயினையும் பற்களையும் நல் நாக்கினையும்
குவியும் உதட்டினையும் சுவையினையும் கதுப்பு கன்னங்களையும்
சந்திர சேகரன் உவந்து காக்க!
கந்தரத்தையும் தோள்களையும்
விலாவினையும் மார்பையும்
மனத்தினையும் திணையான இதயத்தையும்
கைலாசநாதன் சேய் பரிவுடன் காக்க!
மூச்சினையும் நுரையீரல்தனையும்
கைகளிரண்டையும் விரல்களையும் நகத்தினையும்
வயிற்றையும் குதத்தையும் ஆண் பெண் குறிதனையும்
செந்தாமரையாள் தன் தனையன் முனைந்து காக்க!
இடுப்பினையும் தொடையினையும்
இருமுழங்காலையும் கணுக்கால்
பாதந்தனையும் நகங்களையும்
கணநாத பிரியன் மகிழ்ந்து காக்க!
வானிலும் நிலத்திலும் நீரிலும் தீயிலும்
பகைவர் மத்தியிலும் நாற்திசை தன்னிலும்
காலையிலும் கங்குலிலும் எப்பொழுதும்
இடைவிடாமல் ஞானசேகரன் காக்க!
வாதமும் சளிப்பு பித்தமும்
மற்றும் பிணிகள் யாவும் கூடி வராமல்
சூதும் வாதும் நாடி வராமல்
வருமையும் துயரமும் தேடி வராமல்
மறையோதும் மறையவன் காக்க!
நடக்கையிலும் இருக்கையிலும்
சேர்கையிலும் உறக்கத்திலும்
சிரிக்கையிலும் இசைக்கையிலும்
மௌலி தன் நேசன் நயமுடன் காக்க!
உண்கையிலும் உறக்கத்திலும்
கனவிலும் நினைவிலும்
காக்க காக்க காஞ்சி நாதன்
கை தண்டமும் அட்ஷய குவளையும் கடுகவே வந்து!!
இன்னல்களை இன்பமயமாக்கும் ரஸவாதி
சித்த சுத்தி தந்தருள்வான்!
சங்கடங்களுக்கு வழி கூறவல்ல விரியுரையாளன்
துக்கங்களை நீக்கி சோகங்களை அகற்றிடுவான்!
கவசம் தன்னை ஓதுவாருக்கு
ஓம்! காஞ்சி வாசாய வித்மகே
மௌலி நேசாய தீமகி
தந்நோ சந்திர சேகராய ப்ரசோயதாத்!