|
Post by saidevo on May 27, 2015 7:46:46 GMT 5.5
|
|
|
Post by saidevo on May 28, 2015 9:25:22 GMT 5.5
தனித்துறை குருவாய்த் தரிசனம் தருவார் . தமிழகத் தொன்றென இதுவாம் சனந்தனர் சனகர் புலத்தியர் மற்றும் . தமிழ்முனி விசுவமித் திரரும் அனலனை வணங்க வெளிவரும் சுற்றில் . அவரது லிங்கமும் பலவே புனலணிச் சடையர் புதிர்களை விளக்கப் . புறம்பயம் தலம்தொழு வோமே. ... 3
கருவறைச் சுற்றுச் சுவர்களில் சிற்பம் . கவினுற விளங்குதல் காண்போம் உருவினில் அவைதான் சிதைந்துள காட்சி . உளந்தனில் வேதனை தருமே ’கரும்பொடு படுஞ்சொல் மடந்தை’யின் கோவிற் . கருவரைச் சுற்றினி ரண்டில் பெரும்பிணி பிறப்பும் இறப்புமாம் சுழலைப் . புறம்பயம் போக்குவ தாமே. ... 4
[’கரும்பொடு படுஞ்சொல் மடந்தை’ -- சம்பந்தர் பிரயோகம்]
|
|
|
Post by saidevo on May 29, 2015 8:32:08 GMT 5.5
தட்சிணா மூர்த்தி குளக்கரை மேவச் . சட்டைநா தர்துறை மேலே வெட்டிய விறகை ஆயலம் கொணர்ந்த . வேழையின் காட்சியாய் நின்றார் சட்டையப் பன்கொள் சாட்சியாய் வன்னி, . தலமரம் புன்னையாம் நெற்றிப் பொட்டினில் பொறியைக் கொண்டவன் மேவும் . புறம்பயம் தலம்தொழு வோமே. ... 5
திருமண வரமும் கல்வியிற் சிறப்பும் . செல்வமாய்க் குழந்தையும் கேட்பர் திருவிளை யாடல் தொல்கதை மற்றும் . திருத்தல புராணமும் பேசும் திருமண சாட்சி சொல்லம துரையில் . திருக்கிண றுடன்மரம் வன்னி பொருத்திய ஈசன் பொடியணி கொண்டே . புறம்பயம் மேவிடப் புகழே. ... 6
|
|
|
Post by saidevo on May 30, 2015 10:54:16 GMT 5.5
விரித்தவன் அவனே குவிந்தவன் அவனே . வினையறப் பிரித்தவன் அவனே சிரித்தவன் உலகாய் உருத்தவன் அவனே . சினமுற எரித்தவன் அவனே எருத்தினில் உதைத்தே பாலனைக் காத்தே . எமனவன் பணிந்திட அருளைப் புரிந்தவன் புரியாப் புதிரெனப் புணரும் . புறம்பயம் தலம்தொழு வோமே. ... 7
இராவணன் மலையைத் தூக்கிட முயல . இவரவன் தலைகளும் தோளும் ஒரேவிரல் காலால் அழுத்தியே அவனை . ஒறுத்தவன் கதறிடச் செய்தார் சராசரம் அண்டம் யாவையும் காத்தே . சகலமும் அழித்துயர் வுதரும் புராதனன் புனிதன் புகலெனக் கொண்டே . புறம்பயம் தலம்தொழு வோமே. ... 8
|
|
|
Post by radha on May 30, 2015 13:08:27 GMT 5.5
HARI OM ! HARA HARA SAMBHO MAHADEVA !! THIRUCHITRAMBALAM !!! M REALLY PLEASING TO GO THROUGH TAMIL POEMS (POETRY ) composed by SRI SAIDEVO. Appar,SUNDARER, THIRUGHANASAMBANDAR,Manikavachakar, Avayaar and other such poets have composed wonderful poems/ prayers on Gods and Goddesses which are based on our Sacred Vedas and Puranas and as such has had a ready mass appeal to many spiritual followers.These poems helped to spread faith and confidence in our SANATHANA Darmam among the people. I think they could write such soul- searching poems with the blessings of the Almighty in whom they have abundant faith.Without Divine grace,I submit, such poems would not be possible.Weknow Poet Kalidas, MUKA Kavi, Arunagiri nathar ,Jaidevar,Tarangani Narayana Thirthar,Thiagaraja Swamigaletc. have also written many poems and SLOKAMS on God/ goddesses only with the grace of the Almighty.
I feel Sri SAIDEVO is treading the footsteps of these illustrious poets/ Mahans. I wish Sri SAIDEVO all the best and this forum is fortunate to have such eminent devotees of MAHA PERIVA
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
|
|
|
Post by saidevo on Jun 1, 2015 18:43:01 GMT 5.5
I heartily thank Smt. radha for her generous praise of the efforts of this humble devotee of mahAperiyavA!
ramaNi/saidevo
|
|
|
Post by saidevo on Jun 1, 2015 18:43:32 GMT 5.5
(இறுதிப் பகுதி)
மாலவன் தாளும் மலரவன் தலையும் . மாய்ந்தனர் தேடிய லைந்தே ஆலமர் செல்வன் தன்னிலை விளக்கி . ஆறுதல் தந்தருள் செய்தார் நீலமி டற்றர் நிலவணிச் சடையர் . நிலமிசை காணுதற் கென்றே போலியாம் மாயை நீக்கவே மேவும் . புறம்பயம் தலம்தொழு வோமே. ... 9
ஆரணம் தள்ளும் அயல்நெறி எதுவும் . அறமெனக் கொளுவார் இன்றி வேரென வேதம் விளங்கிடும் சைவ . விழுநெறி கொளுவார் உள்ளக் காரிருள் நீக்கிக் கேள்வியின் ஞானம் . கனியெனக் கைவரச் செய்வார் பூரணன் பூந்தாள் பற்றியே வாழ்வோம் . புறம்பயம் தலம்தொழு வோமே. ... 10
அத்தனைப் போற்றி ஆளுடைப் பிள்ளை . அடியார்க் கருள்வது சொன்னார் புத்தகம் ஏந்திப் புறம்பயம் போனார் . பூரணன் என்றனர் அப்பர் சித்தமஞ் ஞானம் போகவே நாடு . சிவனருள் சுந்தரர் சொன்னார் பொத்திடும் இமையாய் அடியவர் காப்பார் . புறம்பயம் தலம்தொழு வோமே. ... 11
--ரமணி, 20-23/05/2015
*****
|
|