|
Post by Sumi on May 15, 2015 7:09:33 GMT 5.5
We are pleased to share this beautiful sketch and poem on Sri Maha Periva authored by our respected moderator Sri Anusham163 ( anusham163). பெரியவா பாடல்—8சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் சீலம் மிகு குருவே—இரு கரம் குவித்து வந்திக்கிறேன் காருண்ய மூர்த்தியே ! பரம் இகம் இரண்டிலும் (உன்) தரிசனம் போதுமே ! வரம் இதை வேண்டினேன் அருளாளா! பரமேசா ! அனுதினம் சொல்லுவேன் நின் நாமம் ஒன்றே தினம் தினம் காண்பேன் நின் உருவம் ஒன்றே கணமேனும் மறவேன் நின் ஸ்மரணை என்றே மனமுவந்து பிரார்த்தித்தேன் சங்கரகுருவே! காமாமும் குரோதமும் காற்றாய்ப் பறந்திடணும் மதமும் மாஸ்சர்யமும் மஞ்சுபோல் விலகிடணும் சாந்தமும் அன்பும் பொங்கிப் பெருகிடணும் எந்தனுக்கு இதைவிட்டு வேறென்ன வேண்டும் ? என் மனத்தில் நீ இன்றி வரைவதெங்கே உன் உருவம் ? என் கரத்தில் நீ இன்றி வடிப்பதெங்கே உன் பாட்டு ? நூற்றெட்டு வரைவதற்கே வேண்டும் உன் அருளாசி மற்றொன்றும் வேண்டேன் ஜய ஜய சங்கரா! நாராயணன் பாலா. 14/05/2015.
|
|
|
Post by kahanam on May 16, 2015 14:49:56 GMT 5.5
Maha Periyava ThiruvadigaLee CharaNam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
|
|