Post by Kanchi Periva on May 6, 2015 8:05:24 GMT 5.5
Namaskaram. We are pleased to share the new poem on Sri Maha Periva composed by our respected member Sri venkatakailasam
மகா பெரியவா அந்தாதி…
குருநாதன் புகழ் பாடும் அந்தாதி புனைந்தேன்
ஆனை முகத்தோன் தாள் வணங்கி!
இன்னல் களையும் காஞ்சிநாதனை வேண்டி!
ஈகை குணம் என்னுள் கனிய! -1-
கனிந்து ஈரமுடன் நெஞ்சினில் உறையும்!
சிந்தையில் நிற்கும் குணநாதா! மங்கள விநாயகனே!
ஜோதிசுவரூபா! என் நினைவில் கனிந்த தயாபரா!
கரும வினை தீர்த்தருளும் குருநாதா! காஞ்சி நாதா! -2-
காஞ்சி நாதா..தத்வமறியாமல் இருந்தேன்
அங்கும் இங்கும் ஜகமெங்கும்
மனத்திற்கு உகந்த நிம்மதியை
தேடித்தேடி அலைந்தேன்.. -3-
அலைந்து அலைந்து களைத்தேன்!
ஊழ் வினையை நீக்குபவன் நீயே என அறியாது!
காற்றும் கனலும் புனலும் மண்ணும் விண்ணும் நீயே!
மறை ஓதும் மறையவனும் நீயே! -4-
மறையவனை உன்னுள் தேடினால்
தன்னுள் உன்னை காட்டி அருள்வான்!
சரணமடைந்தார் குற்றமெல்லாம்
பொருத்தருளுவான் மெய் ஞானமருள்வான்!!-5-
மெய் ஞானம் வேண்டி நின்றேன்! ஞான வினோதா!
பச்சை நிற மறுதோன்றி இலையினுள்
ஒளிந்திருக்கும் சிவப்பு நிறமும்
பூவுடன் கலந்த மணமும் நீ -6-
மணக்கும் உன் தாள் பணிய
நான் ஓடி ஓடி வந்தேன்! உன் நாமம் செப்பிடவே!
சதா சதாசிவமென்று நின் நாமம் உறைக்கும் நாவை
தந்தருள்வாய் ஜகத் குருவே ! -7-
ஜகத் குருவே என் மன களிற்றின் மதத்தை நீக்குவாய்!
இச்சை கொண்டேன் நானே பிச்சை கேட்க!
சித்தம் மகிழ்ந்திட கரும வினை தீர்த்தருள்
நல்குவாய் சீலம் நிறைந்த சிந்தனையை! -8-
சிந்தனையில் நின்றவனை
யாரோ என்றெண்ணாமலே
நாளும் துதித்து மகிழ்ந்தட வேண்டும்
பாசமகற்றும் பரமனவன்! -9-
பரமா புருஷா! கருணா சாகரா!
இசை தரும் சுவையை ஊட்டமாட்டாயா?
ஒளிரும் மணியாகி அருளுக்கு உருவாகி நின்ற
திருவடியை காட்ட மாட்டாயா? -10-
காட்டுவாய் இடர் களையும்
கைலாசநாதன் தன் பேரருளை!
அஞ்ஞானமகற்றி நீயே நானெண்ணும்
உணர்வை என்னுள் கூட்டிடுவாய் ! -11-
கூட்டிடுவான் புவி ரத்ன கருணாகரன்!
அருளை காட்டிடுவான்!
அரவிந்தம் அரும்பும் தாளை
தொழுதேத்துபவர்க்கு! -12-
தொழுது பவள பாதம் பிடித்தால்
மார்கம் காட்டிடுவான் காஞ்சி நாதன்
சிக்கல்களை நீக்கும் பரம்பொருள்!
புகலிடம் அவனின்றி வேறில்லை! -13-
வேறில்லை அவனியில் உய்ய
அவன் அருளன்றி! வேறேது தெய்வம்!
அவன் துணையின்றி கதி வேறில்லை!
காக்கும் உபாசனா தெய்வம்! -14-
தெய்வமே! சதுர்மறைகளோதும் பரமகுருவே!சரணம்
நெஞ்சம் நினைத்துனை நாட
தஞ்சம் என வந்த வறியவருக்கு
அவர் மீண்டிட வழி காட்டும் காஞ்சி நாதன் ! -15-
காஞ்சி நாதா! மௌலி தன் நேசா! வழி தெரியாத பாதையிலே
வழி காட்டியாய் நிற்பது
உன் அருள் முகம் ஒன்றே!
வேங்கடவன் என்னை அலற விடலாகுமா? -16-
அலற விடலாகுமா அடியேனை!
நான் செய்த பாபமா!
அன்றி, தெய்வங்கள் கொண்ட கோபமா!
என்னை காக்கும் தருணம் இதுவே! -17-
தருணம் இது அன்றி வேறில்லை
ஊழ் வினை தீர செய் வினை அகல!
வெந்த மன புண்ணை ஆற்ற
உன் அருள் மருந்து வேண்டும்! -18-
மருந்து வேண்டி நின்றேன்!
விழியில் வழியும் நீரை துடைக்க கைகள் வேண்டும்!
ஓலமிடும் மனதிற்கு ஆருதலளிக்க புன்னகை வேண்டும்!
பற்றிகொள்ள உன் கமல பாதங்கள் வேண்டும்! -19-
கமல பாதங்கள் வேண்டும்!
பற்றட்டவர் பற்றும் மணக்கும் மலர் பாதங்கள்!
விழியால் அபயமளிக்கும் ஐயனின் பாதங்கள்!
அறவழி கூறி அருள்நெறி காட்டிடும் காஞ்சி நாதன்! -20-
காஞ்சி ஈசா! மன ஊனத்துடன் வாழ்ந்து வந்தேன்
ஊனத்தை நீக்கி உன்னை அறிய வைத்தாய்
மன சுமையை நீக்கும் அருளாளன் நீ
யாவர்க்கும் எளியன், நிர்மலன்! -21-
நிர்மலமான முகமுடையான்!
ஆதரவு அற்றவரை ஆதரிக்கும் அன்னை!
ஊழ்வினை நீக்கியருளும் அம்மையும் அவரே!
அவரிருக்க பயமேன் ! -22-
பயமொன்றில்லை பவழ பாதம் தொழுபவற்கு!
பணி நாடி வருபவர்க்கும்
பிணி நீங்க வேண்டி வருபவர்க்கும்
இடர் களையும் காருண்ய ரூபன்! -23-
காருண்ய ரூபன்!கல்யாணரூபன்!
காஞ்சனன்! முக்காலமுணர்ந்த பரமன்!
நாடி சென்று காத்திடும் ஓங்காரரூபன்
சனாதன தருமம் காக்கும் வெங்கடேசன்! -24-
வெங்கடவா! கஸ்துரி கந்த மந்தஹாச வதனா!
முரளிதர கோபாலா! துளசீஹார ஷ்யாமளா!
பங்கஜ முக ரங்கபுர வாசா!
பாண்டுரங்க விட்டாலா! -25-
விட்டாலா! விஜய விட்டாலா!
சேஷ சயனா!ஷீரடி நகர நாயகா!
மௌலீசா!ஆதாரம் நீயே என்று நித்தம் உன் நாமம்
துதித்திடும் அடியேனை காத்திடுவாய்! -26-
காத்திடுவாய்! கனகசபேசா!
நடனமாடும் நடராஜா!
அறிவின் வடிவமே! ஆநந்த கூத்தனே!
இசை வடிவமே! ராகமும் பாவமுமானவனே! -27-
பாவமும், சுருதியுடன் கூடிய லயமும் இணைந்து
பக்தியுடன் இசைத்தால் எழும் நாதமே நீ !
நாதத்திலிருந்து எழும் வேதமும்
வேதத்தில் துளிரும் ஞானமும் நீ! -28-
காஞ்சி நாத தியானம் மன ஆட்டத்தை நசுக்கும்!
மனமலம் நீக்கும் 'நான்'என்னும் அகந்தை அழியும்
பற்றை துறக்க, உத்தம குணம் நிறைய
நின் நாமம் ஓயாமல் இசைப்பேன்! -29-
அகாரமும் உகாரமும் மகாரமும்
ஒன்றாகி இணைந்து ஓங்காரமாகி
அகங்காரம் அழித்து என்னுள்
இடம் கொண்டான் சத்குருநாதன்!! -30-
மகா பெரியவா அந்தாதி…
குருநாதன் புகழ் பாடும் அந்தாதி புனைந்தேன்
ஆனை முகத்தோன் தாள் வணங்கி!
இன்னல் களையும் காஞ்சிநாதனை வேண்டி!
ஈகை குணம் என்னுள் கனிய! -1-
கனிந்து ஈரமுடன் நெஞ்சினில் உறையும்!
சிந்தையில் நிற்கும் குணநாதா! மங்கள விநாயகனே!
ஜோதிசுவரூபா! என் நினைவில் கனிந்த தயாபரா!
கரும வினை தீர்த்தருளும் குருநாதா! காஞ்சி நாதா! -2-
காஞ்சி நாதா..தத்வமறியாமல் இருந்தேன்
அங்கும் இங்கும் ஜகமெங்கும்
மனத்திற்கு உகந்த நிம்மதியை
தேடித்தேடி அலைந்தேன்.. -3-
அலைந்து அலைந்து களைத்தேன்!
ஊழ் வினையை நீக்குபவன் நீயே என அறியாது!
காற்றும் கனலும் புனலும் மண்ணும் விண்ணும் நீயே!
மறை ஓதும் மறையவனும் நீயே! -4-
மறையவனை உன்னுள் தேடினால்
தன்னுள் உன்னை காட்டி அருள்வான்!
சரணமடைந்தார் குற்றமெல்லாம்
பொருத்தருளுவான் மெய் ஞானமருள்வான்!!-5-
மெய் ஞானம் வேண்டி நின்றேன்! ஞான வினோதா!
பச்சை நிற மறுதோன்றி இலையினுள்
ஒளிந்திருக்கும் சிவப்பு நிறமும்
பூவுடன் கலந்த மணமும் நீ -6-
மணக்கும் உன் தாள் பணிய
நான் ஓடி ஓடி வந்தேன்! உன் நாமம் செப்பிடவே!
சதா சதாசிவமென்று நின் நாமம் உறைக்கும் நாவை
தந்தருள்வாய் ஜகத் குருவே ! -7-
ஜகத் குருவே என் மன களிற்றின் மதத்தை நீக்குவாய்!
இச்சை கொண்டேன் நானே பிச்சை கேட்க!
சித்தம் மகிழ்ந்திட கரும வினை தீர்த்தருள்
நல்குவாய் சீலம் நிறைந்த சிந்தனையை! -8-
சிந்தனையில் நின்றவனை
யாரோ என்றெண்ணாமலே
நாளும் துதித்து மகிழ்ந்தட வேண்டும்
பாசமகற்றும் பரமனவன்! -9-
பரமா புருஷா! கருணா சாகரா!
இசை தரும் சுவையை ஊட்டமாட்டாயா?
ஒளிரும் மணியாகி அருளுக்கு உருவாகி நின்ற
திருவடியை காட்ட மாட்டாயா? -10-
காட்டுவாய் இடர் களையும்
கைலாசநாதன் தன் பேரருளை!
அஞ்ஞானமகற்றி நீயே நானெண்ணும்
உணர்வை என்னுள் கூட்டிடுவாய் ! -11-
கூட்டிடுவான் புவி ரத்ன கருணாகரன்!
அருளை காட்டிடுவான்!
அரவிந்தம் அரும்பும் தாளை
தொழுதேத்துபவர்க்கு! -12-
தொழுது பவள பாதம் பிடித்தால்
மார்கம் காட்டிடுவான் காஞ்சி நாதன்
சிக்கல்களை நீக்கும் பரம்பொருள்!
புகலிடம் அவனின்றி வேறில்லை! -13-
வேறில்லை அவனியில் உய்ய
அவன் அருளன்றி! வேறேது தெய்வம்!
அவன் துணையின்றி கதி வேறில்லை!
காக்கும் உபாசனா தெய்வம்! -14-
தெய்வமே! சதுர்மறைகளோதும் பரமகுருவே!சரணம்
நெஞ்சம் நினைத்துனை நாட
தஞ்சம் என வந்த வறியவருக்கு
அவர் மீண்டிட வழி காட்டும் காஞ்சி நாதன் ! -15-
காஞ்சி நாதா! மௌலி தன் நேசா! வழி தெரியாத பாதையிலே
வழி காட்டியாய் நிற்பது
உன் அருள் முகம் ஒன்றே!
வேங்கடவன் என்னை அலற விடலாகுமா? -16-
அலற விடலாகுமா அடியேனை!
நான் செய்த பாபமா!
அன்றி, தெய்வங்கள் கொண்ட கோபமா!
என்னை காக்கும் தருணம் இதுவே! -17-
தருணம் இது அன்றி வேறில்லை
ஊழ் வினை தீர செய் வினை அகல!
வெந்த மன புண்ணை ஆற்ற
உன் அருள் மருந்து வேண்டும்! -18-
மருந்து வேண்டி நின்றேன்!
விழியில் வழியும் நீரை துடைக்க கைகள் வேண்டும்!
ஓலமிடும் மனதிற்கு ஆருதலளிக்க புன்னகை வேண்டும்!
பற்றிகொள்ள உன் கமல பாதங்கள் வேண்டும்! -19-
கமல பாதங்கள் வேண்டும்!
பற்றட்டவர் பற்றும் மணக்கும் மலர் பாதங்கள்!
விழியால் அபயமளிக்கும் ஐயனின் பாதங்கள்!
அறவழி கூறி அருள்நெறி காட்டிடும் காஞ்சி நாதன்! -20-
காஞ்சி ஈசா! மன ஊனத்துடன் வாழ்ந்து வந்தேன்
ஊனத்தை நீக்கி உன்னை அறிய வைத்தாய்
மன சுமையை நீக்கும் அருளாளன் நீ
யாவர்க்கும் எளியன், நிர்மலன்! -21-
நிர்மலமான முகமுடையான்!
ஆதரவு அற்றவரை ஆதரிக்கும் அன்னை!
ஊழ்வினை நீக்கியருளும் அம்மையும் அவரே!
அவரிருக்க பயமேன் ! -22-
பயமொன்றில்லை பவழ பாதம் தொழுபவற்கு!
பணி நாடி வருபவர்க்கும்
பிணி நீங்க வேண்டி வருபவர்க்கும்
இடர் களையும் காருண்ய ரூபன்! -23-
காருண்ய ரூபன்!கல்யாணரூபன்!
காஞ்சனன்! முக்காலமுணர்ந்த பரமன்!
நாடி சென்று காத்திடும் ஓங்காரரூபன்
சனாதன தருமம் காக்கும் வெங்கடேசன்! -24-
வெங்கடவா! கஸ்துரி கந்த மந்தஹாச வதனா!
முரளிதர கோபாலா! துளசீஹார ஷ்யாமளா!
பங்கஜ முக ரங்கபுர வாசா!
பாண்டுரங்க விட்டாலா! -25-
விட்டாலா! விஜய விட்டாலா!
சேஷ சயனா!ஷீரடி நகர நாயகா!
மௌலீசா!ஆதாரம் நீயே என்று நித்தம் உன் நாமம்
துதித்திடும் அடியேனை காத்திடுவாய்! -26-
காத்திடுவாய்! கனகசபேசா!
நடனமாடும் நடராஜா!
அறிவின் வடிவமே! ஆநந்த கூத்தனே!
இசை வடிவமே! ராகமும் பாவமுமானவனே! -27-
பாவமும், சுருதியுடன் கூடிய லயமும் இணைந்து
பக்தியுடன் இசைத்தால் எழும் நாதமே நீ !
நாதத்திலிருந்து எழும் வேதமும்
வேதத்தில் துளிரும் ஞானமும் நீ! -28-
காஞ்சி நாத தியானம் மன ஆட்டத்தை நசுக்கும்!
மனமலம் நீக்கும் 'நான்'என்னும் அகந்தை அழியும்
பற்றை துறக்க, உத்தம குணம் நிறைய
நின் நாமம் ஓயாமல் இசைப்பேன்! -29-
அகாரமும் உகாரமும் மகாரமும்
ஒன்றாகி இணைந்து ஓங்காரமாகி
அகங்காரம் அழித்து என்னுள்
இடம் கொண்டான் சத்குருநாதன்!! -30-