Post by radha on Apr 5, 2015 9:09:55 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA,RESPECTFUL. PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
4 Votes
Thanks to Sri Krishnamoorthy Balasubramanian for sharing this.
அறத்துக்கே அன்பு சார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை
கணபதி உம்மையே கைதொழுது நின்றேன்
கணபதி என்றிடத் தடையெலாம் ஓடிடும்
கணபதி வாழ்த்தொடு இவ்வந்தாதி தொடங்கினேன்
கணபதி நீர் செய்யும் அருள்
ஞானவருளொளி எனவே ஐயனும் தோன்றினார்
ஞானவருளொளி சங்கரன் தானுமாய்
ஞானவருளொளி அம்பிகை தானுமாய்
இவ்வருளொளி உதித்தது உலகம் உய்யவே
உய்யப் பிறந்தனை நீவிர் உம்மடியாரெல்லாம்
உய்யப் பிறந்தனை நீவிர் வேதனெறியெல்லாம்
உய்யப் பிறந்தனை நீவிர் அன்பும் அறமும்
உய்யப் பிறந்தனை நீவிர் தருமம் என்றுமே
என்றும் நிலைத்திடும் நின் திருக் கீர்த்தி
என்றும் இருந்திடும் உம் திரு நாமம்
என்றும் கிடைத்திடும் உம்மருட் செல்வம்
என்றும் சிறந்திடும் நின் திருக் கோலமே
உம் திருக்கோலம் கண்டிட கண்ணாயிரம் வேண்டும்
உம் திருக்கோலம் பாடிட நாவாயிரம் வேண்டும்
உம் திருக்கோலம் தொழுதிட கையாயிரம் வேண்டும்
உம் திருக்கோலம் நினைத்திட தீர்ந்திடும் வினையே
வினையே விளைத்த இவ்வுடல் கொண்டிங்குமிக
வினையே விளைத்தனன் உம்மடி சேராமல்
வினையே தடுத்திட, பரிந்திங்கு வந்து என்
வினையை அழித்துன் பதம் சேர்த்துக்க் கொண்டிடும்
எம் அப்பனை, அமுதினை, எங்கள் இன்னுயிரினை,
எம் அப்பனாய், அம்மையாய் யாதுமாய் நின்றானை
எம் அப்பனே, ஐயனே என்றழைக்க வருவோனை
இப்பெரும் ஜோதியை, என்று நான் காண்பெனோ ?
காண்பெனோ, உம் சுடர் திருமுகத்தினை?
காண்பெனோ, உம் அருள்தரு பதத்தினை?
காண்பெனோ, உம் அபய திருக்கரத்தினை?
காண்பெனோ, உம் கருணையின் பெருக்கினை?
பெருக்கினை அன்புவெள்ளம் பாரெலாமுய்ய நீரும்
பெருக்கினை கருணைவெள்ளம் பக்தர் எல்லாருமுய்ய
பெருக்கினை ஞான ஜோதி இருளெலாம் நீங்குமாறு
பெருக்கினை ஏக்கம் என்னுள், உம்மை நான் அடைவதற்கே
அடைவதற்கரிய நின்றன் திருவடி மலர்கள் இங்கே
அடைவதற்கரிய பேறும் வீடுமே தந்திடாதோ?
அடைவதற்கரிய உந்தன் திருவடி நிழலைத்தேடி
அடைவதற்கென்று வீடு பேறும் தான் வந்திடாதோ?
வந்தன பக்தர் கூட்டம், உம் இடம் நாடி இங்கே
வந்தனர் தேவரெல்லாம் உம்மருள் நாடி இங்கே
வந்தனர் சிவகணங்கள் உம் ஏவல் கொள்ள இங்கே
வந்தன உயிர்கள் எல்லாம் வந்தனம் செய்வதற்கே
சங்கர நாமம் உயரிய நாமம்
சகலரும் ஜெபித்திடும் சிறந்த நாமம்
மனங்களில் நின்றிடும் மகேஸ்வர நாமம்
மனத் துயர் நீக்கிடும் மங்கள நாமம்
பிணி எல்லாம் போக்கிடும் ஔஷத நாமம்
வழி தனைக் காட்டிடும் சத்குரு நாமம்
விதி எல்லாம் மாற்றிடும் ஒப்பிலா நாமம்
விக்னம் நீக்கிடும் அக்ஞானம் அழித்திடும்
என்றும் உரைத்திட எண்ணத்தில் வந்தே
எதையும் நடத்திடும் அற்புத நாமம்
அன்பரின் நெஞ்சினில் நிலைத்திருந்தே
ஆனந்தம் வாழ்வினில் தந்திடும் அருளே
இறைவனும் வாழ்த்திடும் இறையம்சம் நீயே
ஈடில்லா அமைதியை தந்திடும் தாயே
உன்னாமம் உரைத்தால் உயர்ந்திடும் வாழ்வே
ஊக்கமும் தந்து அருள்வாய் நீ குருவே
எண்ணிலா நலமே வாழ்வில் தந்திடுவாயே
ஏழை என் துணை இங்கு உனையன்றி யாரே
ஐம்புலன் அடக்கிடும் வழியதைக் கூறி
ஒவ்வாத செயல் நான் செய்வதை மாற்றி
ஒடமாம் வாழ்க்கை ஓட்டிட செய்யும்
ஔஷதம் நீயே உன் தாள் பணிந்தேனே!
தண்டம் ஏந்திய குருவின் திருவடி
அண்டம் காக்கும் அற்புத திருவடி
கண்டம் தடுக்கும் குருவின் திருவடி
பற்றிட மறைந்திடும் பாவங்கள் தானடி
மங்களம் தந்திடும் குருவின் திருவடி
மனத்தில் இருத்தி பணிவோம் மலரடி
கணத்தில் வந்து தருவான் சேவடி –
குருவாய் வந்த தாயவன் தானடி.
கூடும் அன்பிலே கும்பிட்டேன் உம்மை
நாடும் பொருள் நற்செல்வம் தருவிர்
ஆடும் பொற்திருவடி நீரருள வேண்டும்
அடியேன் உள்ளமதில் நீர் சதா உறைய வேண்டும்!
சர்வ வியாபியான அவருக்குத் தெரியாதது என்ன இருக்கிறது?
ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா அவர்கள் திருப்பாதம் பணிந்து, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.
Courtesy: (KANCHI ACHARYAS,Vishay Nathan,Indumathy Iyer)
Dedicated to Sri .Sri.Paramacharya 108th Peetharohana Jayanthi.
Share this:SRIKANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAMi
4 Votes
Thanks to Sri Krishnamoorthy Balasubramanian for sharing this.
அறத்துக்கே அன்பு சார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை
கணபதி உம்மையே கைதொழுது நின்றேன்
கணபதி என்றிடத் தடையெலாம் ஓடிடும்
கணபதி வாழ்த்தொடு இவ்வந்தாதி தொடங்கினேன்
கணபதி நீர் செய்யும் அருள்
ஞானவருளொளி எனவே ஐயனும் தோன்றினார்
ஞானவருளொளி சங்கரன் தானுமாய்
ஞானவருளொளி அம்பிகை தானுமாய்
இவ்வருளொளி உதித்தது உலகம் உய்யவே
உய்யப் பிறந்தனை நீவிர் உம்மடியாரெல்லாம்
உய்யப் பிறந்தனை நீவிர் வேதனெறியெல்லாம்
உய்யப் பிறந்தனை நீவிர் அன்பும் அறமும்
உய்யப் பிறந்தனை நீவிர் தருமம் என்றுமே
என்றும் நிலைத்திடும் நின் திருக் கீர்த்தி
என்றும் இருந்திடும் உம் திரு நாமம்
என்றும் கிடைத்திடும் உம்மருட் செல்வம்
என்றும் சிறந்திடும் நின் திருக் கோலமே
உம் திருக்கோலம் கண்டிட கண்ணாயிரம் வேண்டும்
உம் திருக்கோலம் பாடிட நாவாயிரம் வேண்டும்
உம் திருக்கோலம் தொழுதிட கையாயிரம் வேண்டும்
உம் திருக்கோலம் நினைத்திட தீர்ந்திடும் வினையே
வினையே விளைத்த இவ்வுடல் கொண்டிங்குமிக
வினையே விளைத்தனன் உம்மடி சேராமல்
வினையே தடுத்திட, பரிந்திங்கு வந்து என்
வினையை அழித்துன் பதம் சேர்த்துக்க் கொண்டிடும்
எம் அப்பனை, அமுதினை, எங்கள் இன்னுயிரினை,
எம் அப்பனாய், அம்மையாய் யாதுமாய் நின்றானை
எம் அப்பனே, ஐயனே என்றழைக்க வருவோனை
இப்பெரும் ஜோதியை, என்று நான் காண்பெனோ ?
காண்பெனோ, உம் சுடர் திருமுகத்தினை?
காண்பெனோ, உம் அருள்தரு பதத்தினை?
காண்பெனோ, உம் அபய திருக்கரத்தினை?
காண்பெனோ, உம் கருணையின் பெருக்கினை?
பெருக்கினை அன்புவெள்ளம் பாரெலாமுய்ய நீரும்
பெருக்கினை கருணைவெள்ளம் பக்தர் எல்லாருமுய்ய
பெருக்கினை ஞான ஜோதி இருளெலாம் நீங்குமாறு
பெருக்கினை ஏக்கம் என்னுள், உம்மை நான் அடைவதற்கே
அடைவதற்கரிய நின்றன் திருவடி மலர்கள் இங்கே
அடைவதற்கரிய பேறும் வீடுமே தந்திடாதோ?
அடைவதற்கரிய உந்தன் திருவடி நிழலைத்தேடி
அடைவதற்கென்று வீடு பேறும் தான் வந்திடாதோ?
வந்தன பக்தர் கூட்டம், உம் இடம் நாடி இங்கே
வந்தனர் தேவரெல்லாம் உம்மருள் நாடி இங்கே
வந்தனர் சிவகணங்கள் உம் ஏவல் கொள்ள இங்கே
வந்தன உயிர்கள் எல்லாம் வந்தனம் செய்வதற்கே
சங்கர நாமம் உயரிய நாமம்
சகலரும் ஜெபித்திடும் சிறந்த நாமம்
மனங்களில் நின்றிடும் மகேஸ்வர நாமம்
மனத் துயர் நீக்கிடும் மங்கள நாமம்
பிணி எல்லாம் போக்கிடும் ஔஷத நாமம்
வழி தனைக் காட்டிடும் சத்குரு நாமம்
விதி எல்லாம் மாற்றிடும் ஒப்பிலா நாமம்
விக்னம் நீக்கிடும் அக்ஞானம் அழித்திடும்
என்றும் உரைத்திட எண்ணத்தில் வந்தே
எதையும் நடத்திடும் அற்புத நாமம்
அன்பரின் நெஞ்சினில் நிலைத்திருந்தே
ஆனந்தம் வாழ்வினில் தந்திடும் அருளே
இறைவனும் வாழ்த்திடும் இறையம்சம் நீயே
ஈடில்லா அமைதியை தந்திடும் தாயே
உன்னாமம் உரைத்தால் உயர்ந்திடும் வாழ்வே
ஊக்கமும் தந்து அருள்வாய் நீ குருவே
எண்ணிலா நலமே வாழ்வில் தந்திடுவாயே
ஏழை என் துணை இங்கு உனையன்றி யாரே
ஐம்புலன் அடக்கிடும் வழியதைக் கூறி
ஒவ்வாத செயல் நான் செய்வதை மாற்றி
ஒடமாம் வாழ்க்கை ஓட்டிட செய்யும்
ஔஷதம் நீயே உன் தாள் பணிந்தேனே!
தண்டம் ஏந்திய குருவின் திருவடி
அண்டம் காக்கும் அற்புத திருவடி
கண்டம் தடுக்கும் குருவின் திருவடி
பற்றிட மறைந்திடும் பாவங்கள் தானடி
மங்களம் தந்திடும் குருவின் திருவடி
மனத்தில் இருத்தி பணிவோம் மலரடி
கணத்தில் வந்து தருவான் சேவடி –
குருவாய் வந்த தாயவன் தானடி.
கூடும் அன்பிலே கும்பிட்டேன் உம்மை
நாடும் பொருள் நற்செல்வம் தருவிர்
ஆடும் பொற்திருவடி நீரருள வேண்டும்
அடியேன் உள்ளமதில் நீர் சதா உறைய வேண்டும்!
சர்வ வியாபியான அவருக்குத் தெரியாதது என்ன இருக்கிறது?
ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா அவர்கள் திருப்பாதம் பணிந்து, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.
Courtesy: (KANCHI ACHARYAS,Vishay Nathan,Indumathy Iyer)
Dedicated to Sri .Sri.Paramacharya 108th Peetharohana Jayanthi.
Share this:SRIKANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAMi