Post by Sumi on Feb 11, 2015 9:37:02 GMT 5.5
We are happy to share this 150th composition on His Holiness Sri Maha Periva by our respected member Sri Venkat Kailasam.
ஆருதலளிக்கும் அமுதா போற்றி!
இகபரம் சுகமளிக்கும் இறைவா போற்றி!
ஈசா! மறை ஓதுவாய் போற்றி!
உறு துணையாய் வருவாய் போற்றி போற்றி!-5
ஊறுவை தவிர்தருள்வாய் போற்றி!
என்னெற்றும் காத்தருள்வாய் போற்றி!
ஏற்றமது தந்தருள்வாய் போற்றி!
ஐங்கரனின் துணைவா போற்றி!
ஒன்றாகி நின்றாய் போற்றி! போற்றி!- 10
ஓங்காரமாகினாய் போற்றி!
ஔவியம் நீக்கியருள்வாய் போற்றி!
கணமும் உன்னை மறவாதிரிக்க அருள்வாய் போற்றி!
சதுர் வேத நாயகனே! சங்கரனே போற்றி!
ஞான ஒளியே காஞ்சி நாதனே போற்றி ! போற்றி! 15
தரணி புகழ் சதாசிவனே போற்றி!
நடனமாடும் நடராஜ பெருந்தகையே போற்றி!
பற்றட்டவர் பற்றும் பத்ம பாதா போற்றி!
மறையோதும் மன்னவா போற்றி!
திருமகள் தநயா போற்றி போற்றி -20
யாதுமாகி நின்றாய் போற்றி!
ராஜாதி ராஜனே நின் தாள் பணிந்தேன் போற்றி!
லம்போதர சோதரா போற்றி!
வித்தகா போற்றி போற்றி!
பிரணவத்திற்கு மூலமே போற்றி! போற்றி! -25
நாத ஒலியே போற்றி!
நாத பொருளே போற்றி
ஸவரங்களின் மூலமே போற்றி!
வேத வித்தகா போற்றி!
வேத ரஷ்ஷகா போற்றி! போற்றி !-30
கருவுக்கு உயிரானாய் போற்றி
உயிருக்கு உணர்வானாய் போற்றி!
உணர்வுக்கு சொல்லானாய் போற்றி!
சொல்லுக்கு பொருளானாய் போற்றி !
நீயே பரம் பொருளானாய் போற்றி!போற்றி!-35
மெய் ஞான பொருளே போற்றி!
ஞான வித்தகா போற்றி!
ஞான பரம் பொருளே போற்றி!
ஞான பண்டிதா போற்றி!
பரம ஞானமருள்வாய் போற்றி! போற்றி!-40
இசையே போற்றி!
இசை வடிவே போற்றி!
இசை ஞானமே போற்றி!
இசையின் சுவையேபோற்றி!
நாதானந்த வித்தகா போற்றி!போற்றி!-45
அருமறை பொருளே போற்றி!
ஆனந்த ரூபனே போற்றி!
குருநகையரசே போற்றி!
சுந்தர வடிவே போற்றி!
தத்துவ கனலே போற்றி!போற்றி!-50
ஏகாம்பரேச்வரா போற்றி!
ஜம்பு லிங்கமே போற்றி!
ஜோதி லிங்கமே போற்றி!
காளஹஸ்தீஸ்வரா போற்றி!
தில்லை நாதா போற்றி!போற்றி-55
மழலைப் பேறு தரும் மார்க்கபந்து போற்றி!
மார்க்கம் காட்டுவாய் போற்றி!
தூரனுக்கு முருகனானாய் போற்றி!
அந்தகிககு ஜோதியை காட்டிய ஜோதிஸ்வரூபனே போற்றி!
கைலாசபதே போற்றி போற்றி !!- 60
ரோகமகற்றுவாய் போற்றி!
சுகம் தருவாய் போற்றி!
வறுமை நீக்குவாய் போற்றி!
செல்வமளிப்பாய் போற்றி!
தீயது நீக்கி நல்லதளிப்பாய் போற்றி!போற்றி!-65
கனகாம்பரி காமாட்சி தாசா போற்றி!
கமல மனோகரா! கலியுக வரதா போற்றி!
கமலாசனா போற்றி!
காருண்ய சாகரா போறறி!
ஏகாம்பரேசா! சங்கரா போற்றி!போற்றி!-70
தினகரா! பாஸ்கரா போற்றி!
மந்திர ரூபா மகேஸ்வரா கைலாச வாசா போற்றி!
விடையேரும் விமலா போற்றி!
கடலலை மேல் துயிலும் அமலா போற்றி!
செங்கமல மலர் பாதா போற்றி போற்றி!!-75
சிவஞான மெய் பொருளே போற்றி!
ஞான செழுஞ்சுடரே போற்றி!
ஞானியும் யோகியுமானவனே போற்றி!
வற்றாத கருணா சாகரா போற்றி!
தட்சிணாமூர்த்தி அவதாரா! போற்றி போற்றி!!-80
யாழின் நாதமே போற்றி!
குழலின் ஓசையே போற்றி!
புள்ளின் ஒலியே போற்றி!
குயிலின் கூவலே போற்றி!
குழவியின் மழலையே போற்றி!போற்றி!!-85
அந்தகன் பாடலுக்கு தாளமிட்டு ரசித்தவா போற்றி!
அறியவரின் காம்போஜி பாடலை ரசித்தவா போற்றி!
யாழில் கானம் இசைத்து மமதை நீக்கியவா போற்றி!
இசை ஞானிக்கு கண்ணொளி காட்டியவா போற்றி!
ரங்கன் பள்ளி கொண்ட காரணத்தை விளக்கியவா போற்றி! போற்றி!-90
பாடும் நாவிற்கு இனியனானாய் போற்றி!
கேட்கும் செவிகளுக்கு அமுதமானாய் போற்றி!
நோக்கும் கண்களுக்கு அழகனானாய் போற்றி!
எண்ணங்களுக்கு அரணானாய் போற்றி!
தொழும் அடியவர் வினை தீர்ப்பாய் போற்றி!போற்றி!!-95
மோகன கிரிதர கண்ணா போற்றி!
கஸ்தூரி கந்த மந்த காச வதனா போற்றி!
துளசீஹார ஷியாமளா போற்றி!
பாண்டு ரங்க விட்டலா போற்றி!
பங்கஜமுக ரங்கபுர வாசா போற்றி!போற்றி!!-100
ஷீரடி நகர நாயகா போற்றி!
அருணாசலா போற்றி!
துங்கா நதி தீர மாதவா போற்றி!
சுரத் குமாரா போற்றி!
வேங்கட ரமணா போற்றி!போற்றி!!-105
சதாவதானியே போற்றி!
அறிவின் வடிவமே போற்றி!
ஆனந்த கூத்தனே போற்றி!போற்றி!-108
இசைவடிவமே! ராகமும் பாவமும் ஆனவனே
நெஞ்சில் உரத்தையும் வாக்கில் உண்மையும் கூூட்டி
தஞ்சம் என்றுன்னை நாடினேன் தயாபரா!
ரட்சித்தருள்வாயென்னை!!!
ஸ்ரீஜயேந்திர சுவாமி சரணம்!
ஸ்ரீவிஜயேந்திர சுவாமி சரணம்!!
- venkat k