புத்தாண்டின் முதல் பாடல்
குறை தீர்க்கும் குரு பக்தி கானம்
(போகப் போக தெரியும் - மெட்டு)
சந்திர சேகர குருவை - தினம்
சிந்தித்தே மனம் மகிழ்வோம்
வந்த துன்பம் விலகும் - மனம்
எந்த நாளும் மகிழும்
மந்த மனமது மாறிட - நாம்
வந்த வினை தனை தீர்த்திட
எந்த நாளும் குருவை - நாம்
சந்ததம் துதித் திடுவோம் (சந்திர சேகர குருவை. . .)
பந்த பாசத்தை போற்றி - நம்
சொந்த பந்தங்கள் கூட்டி
எந்த நாளும் மகிழ்வோம் - நம்
சிந்தையில் சிவம் உணர்வோம் (சந்திர சேகர குருவை. . .)
அந்தி மாலையும் காலையும் - நாம்
முந்தி வணங்கவே சி(முதல்)வனை
வந்த வினைகள் வாடும் - நாம்
நொந்த நினைவுகள் ஓடும் (சந்திர சேகர குருவை. . .)
செந்தணல் யாகம் வளர்த்தே - நாம்
அந்தணர்க் களிப்போம் விருந்தே
சிந்திய கண்ணீர் யாவும் - தினம்
ஆனந்த கண்ணீராய் மாறும் (சந்திர சேகர குருவை. . .)
சந்திர சேகர குருவை - தினம்
சிந்திக்க தித்திக்கும் மனமே
வந்த துன்பம் விலகும் - மனம்
எந்த நாளும் மகிழும்
-தேனுபுரீஸ்வரதாசன் இல.சங்கர். 01.01.2015
pls see my other songs in
www.songsbyshanks.blogspot.inThose who copy and paste/fwd , kindly copy the author's name also...