|
Post by saidevo on Sept 21, 2014 11:20:31 GMT 5.5
பிரதோஷத் துதி: ஒரு துளி இன்பமே! (ஆசிரியத் தாழிசை)
அந்தியில் எண்ணம் அறுந்தே நின்னுருமேல் வந்துறும் அபிடேக வண்ணம் கண்டபின் சிந்தனை மீண்டும் சிறுமையைத் தேடுதே! ... 1
பாலவர் உன்புகழ் பாடக் கேட்டும் நாவலந் தன்னில் நானதைப் பாடியும் பாவமே மீண்டும் படியுதே ஏனோ? ... 2
என்மனம் கட்டிநான் ஏத்தியோர் பாடல் உன்மேல் புனைந்தும் உண்மை யிதுவென்(று) இன்னும் உணர்வினில் இறங்கிலை யீசனே! ... 3
செக்கினைச் சுற்றும் எருதென நானும் மக்கிடும் உலகின் மாயையைச் சுற்றுவதில் பக்குவம் என்றுறும் பரமனே என்வாழ்வில்? ... 4
பரமன் கழலிணை பற்றிநான் கேட்பதெல்லாம் வருநாள் வறிதாகும் வாழ்விலுன் இறைமையின் ஒருமை யுணர்வின் ஒருதுளி இன்பமே! ... 5
--ரமணி, 21/09/2014, கலி.05/06/5115
*****
|
|
|
Post by kahanam on Sept 21, 2014 14:21:17 GMT 5.5
Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Om Nama Sivaaya!
|
|