Post by saidevo on Jul 24, 2014 18:13:30 GMT 5.5
பிரதோஷப் பாடல்
கடலி லெழுவிடம் நத்தியே...
(திருப்புகழ்ப் பாடல் ’நினது திருவடி சத்திம யிற்கொடி’ சந்தம்)
தனன தனதன தத்தன தத்தன
தனன தனதன தத்தன தத்தன
தனன தனதன தத்தன தத்தன ... தனதான
கடலி லெழுவிடம் நத்தியெ டுத்தவர்
. கருதி யமுதென வுட்கொளு மக்கணம்
. கதறி விமலைக ரத்தைய ழுத்திட ... இழியாதே
விடமும் சம்புக ழுத்திலி றுத்திட
. விமலை யுளமதி லச்சம யக்கமும்
. விலக அமரரும் விக்கிவ ழுத்திட ... வினையேகி
விடப மிசைவரு மத்தன கத்தினி
. லிளகி யிமையவர் தற்பரை மற்றிரு
. இறையின் விநயம னத்துந ளிப்புற ... விடையேறி
விடப நவிரம ருப்பிடை நுட்பத
. விகசி தவிததி விக்னம றுக்கும்
. விககம் வதிசடை நர்த்தகன் பொற்பதம் ... மருந்தாமே.
மனதி லெழுவிடம் நத்தியெ டுத்திவன்
. மயலி லமுதென வுட்கொளு மக்கணம்
. மலையி னரவுக ழுத்திலி றுக்குத ... லறியாதே
கனவு நனவென வியத்திலு ளத்தினில்
. கரமி துபரவி முற்றிய பற்றினில்
. கரண விகதன நித்திய வித்தக ... னெனவானான்
மனதி லுருவரும் வருணனை விற்பனம்
. மரண முறுகணம் வெற்றென வுற்றது
. வருபி றவிதனி லுற்றிடு வற்கட ... மெனவாகும்
சனன மரணமு ழற்சியில் வற்றுதல்
. அகல அனல்விழி விச்சைவி தைத்தருள்
. சடையன் திருமணி நித்திய நர்த்தக ... நடராசா!
பதம் பிரித்து:
கடலில் எழுவிடம் நத்தி எடுத்து-அவர்
. கருதி அமுதென உட்கொளும் அக்கணம்
. கதறி விமலை கரத்தை அழுத்திட ... இழியாதே
விடமும் சம்பு கழுத்தில் இறுத்திட
. விமலை உளமதில் அச்ச மயக்கமும்
. விலக அமரரும் விக்கி வழுத்திட ... வினை-ஏகி
விடப மிசைவரும் அத்தன் அகத்தினில்
. இளகி இமையவர் தற்பரை மற்றிரு
. இறையின் விநய மனத்து நளிப்புற ... விடையேறி
விடப நவிர மருப்பிடை நுட்பத
. விகசித விததி விக்னம் அறுக்கும்
. விககம் வதிசடை நர்த்தகன் பொற்பதம் ... மருந்தாமே.
[நத்தி = விரும்பி; இழியாதே = இறங்காதே; இறுத்திட = தங்கிட;
தற்பரை = உமை; மற்றிரு இறை = அரியும் அயனும்;
விநயமனம் = பணியும் மனம்; நளிப்பு = செறிவு = தன்னடக்கம்;
நவிரம் = தலை, உச்சி; மருப்பு = கொம்பு;
விகசித விததி = மலர்ச்சியின் விரிவு; விககம் = சந்திரன்]
மனதில் எழுவிடம் நத்தி எடுத்து-இவன்
. மயலில் அமுதென உட்கொளும் அக்கணம்
. மலையின் அரவு கழுத்தில் இறுக்குதல் ... அறியாதே
கனவு நனவென வியத்தில் உளத்தினில்
. கரமிது பரவி முற்றிய பற்றினில்
. கரண விகதன நித்திய வித்தகன் ... என-ஆனான்
மனதில் உருவரும் வருணனை விற்பனம்
. மரணம் உறுகணம் வெற்றென உற்று-அது
. வரு பிறவிதனில் உற்றிடு வற்கடம் ... என-ஆகும்
சனன மரணம் உழற்சியில் வற்றுதல்
. அகல அனல்விழி விச்சை விதைத்தருள்
. சடையன் திருமணி நித்திய நர்த்தக ... நடராசா!
[மயலில் = மயக்கத்தில்; வியத்தில் = உடலில்; கரம் = விடம்;
கரண விகதன நித்திய வித்தகன் = இந்திரியத்தால் உறும்
அறிவைப் புகுழந்து அதுவே பெருமை என்பவன்; வருணனை = கற்பனை;
வற்கடம் = வறுமை; உழற்சி = அலைக்கழிப்பு, சுழற்சி;
விச்சை = வித்தை = விதையை]
--ரமணி, 23/07/2014, கலி.07/04/5115
*****
கடலி லெழுவிடம் நத்தியே...
(திருப்புகழ்ப் பாடல் ’நினது திருவடி சத்திம யிற்கொடி’ சந்தம்)
தனன தனதன தத்தன தத்தன
தனன தனதன தத்தன தத்தன
தனன தனதன தத்தன தத்தன ... தனதான
கடலி லெழுவிடம் நத்தியெ டுத்தவர்
. கருதி யமுதென வுட்கொளு மக்கணம்
. கதறி விமலைக ரத்தைய ழுத்திட ... இழியாதே
விடமும் சம்புக ழுத்திலி றுத்திட
. விமலை யுளமதி லச்சம யக்கமும்
. விலக அமரரும் விக்கிவ ழுத்திட ... வினையேகி
விடப மிசைவரு மத்தன கத்தினி
. லிளகி யிமையவர் தற்பரை மற்றிரு
. இறையின் விநயம னத்துந ளிப்புற ... விடையேறி
விடப நவிரம ருப்பிடை நுட்பத
. விகசி தவிததி விக்னம றுக்கும்
. விககம் வதிசடை நர்த்தகன் பொற்பதம் ... மருந்தாமே.
மனதி லெழுவிடம் நத்தியெ டுத்திவன்
. மயலி லமுதென வுட்கொளு மக்கணம்
. மலையி னரவுக ழுத்திலி றுக்குத ... லறியாதே
கனவு நனவென வியத்திலு ளத்தினில்
. கரமி துபரவி முற்றிய பற்றினில்
. கரண விகதன நித்திய வித்தக ... னெனவானான்
மனதி லுருவரும் வருணனை விற்பனம்
. மரண முறுகணம் வெற்றென வுற்றது
. வருபி றவிதனி லுற்றிடு வற்கட ... மெனவாகும்
சனன மரணமு ழற்சியில் வற்றுதல்
. அகல அனல்விழி விச்சைவி தைத்தருள்
. சடையன் திருமணி நித்திய நர்த்தக ... நடராசா!
பதம் பிரித்து:
கடலில் எழுவிடம் நத்தி எடுத்து-அவர்
. கருதி அமுதென உட்கொளும் அக்கணம்
. கதறி விமலை கரத்தை அழுத்திட ... இழியாதே
விடமும் சம்பு கழுத்தில் இறுத்திட
. விமலை உளமதில் அச்ச மயக்கமும்
. விலக அமரரும் விக்கி வழுத்திட ... வினை-ஏகி
விடப மிசைவரும் அத்தன் அகத்தினில்
. இளகி இமையவர் தற்பரை மற்றிரு
. இறையின் விநய மனத்து நளிப்புற ... விடையேறி
விடப நவிர மருப்பிடை நுட்பத
. விகசித விததி விக்னம் அறுக்கும்
. விககம் வதிசடை நர்த்தகன் பொற்பதம் ... மருந்தாமே.
[நத்தி = விரும்பி; இழியாதே = இறங்காதே; இறுத்திட = தங்கிட;
தற்பரை = உமை; மற்றிரு இறை = அரியும் அயனும்;
விநயமனம் = பணியும் மனம்; நளிப்பு = செறிவு = தன்னடக்கம்;
நவிரம் = தலை, உச்சி; மருப்பு = கொம்பு;
விகசித விததி = மலர்ச்சியின் விரிவு; விககம் = சந்திரன்]
மனதில் எழுவிடம் நத்தி எடுத்து-இவன்
. மயலில் அமுதென உட்கொளும் அக்கணம்
. மலையின் அரவு கழுத்தில் இறுக்குதல் ... அறியாதே
கனவு நனவென வியத்தில் உளத்தினில்
. கரமிது பரவி முற்றிய பற்றினில்
. கரண விகதன நித்திய வித்தகன் ... என-ஆனான்
மனதில் உருவரும் வருணனை விற்பனம்
. மரணம் உறுகணம் வெற்றென உற்று-அது
. வரு பிறவிதனில் உற்றிடு வற்கடம் ... என-ஆகும்
சனன மரணம் உழற்சியில் வற்றுதல்
. அகல அனல்விழி விச்சை விதைத்தருள்
. சடையன் திருமணி நித்திய நர்த்தக ... நடராசா!
[மயலில் = மயக்கத்தில்; வியத்தில் = உடலில்; கரம் = விடம்;
கரண விகதன நித்திய வித்தகன் = இந்திரியத்தால் உறும்
அறிவைப் புகுழந்து அதுவே பெருமை என்பவன்; வருணனை = கற்பனை;
வற்கடம் = வறுமை; உழற்சி = அலைக்கழிப்பு, சுழற்சி;
விச்சை = வித்தை = விதையை]
--ரமணி, 23/07/2014, கலி.07/04/5115
*****