Sri Saidevo Ramani, I read this recently and felt that this is an inspired Divine song. Can you post the meaning in Tamil? Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
அன்புள்ள திரு. கஹனம் அவர்களுக்கு,
வணக்கம். ’வண்ணம்’ என்ற சொல்லுக்குப் பல்வேறு பொருள்கள் உள்ளன:
நிறம், அழகு, இயற்கையழகு, ஒப்பனை, குணம், நன்மை, சிறப்பு, கனம்,
வடிவு, சாதி, இனம், வகை, பண், மாலை, செயல்.
இந்தப் பொருள்களை வைத்துப் பாடலைப் பார்ப்போம். (பாடல் தொடர் அந்தாதியாக உள்ளது காண்க.)
வெண்பா
பால் போன்ற நன்மைதரும் குணம்தங்கும் மேனியிலே ஆளுகின்ற வெண்ணீறாக அவனும்
நான்கு விதமான வேதமும் இழையப் பாதத்தின் வண்ணமும், அழகும் காட்டி ஆடும்போது
பெண்மை இயல்பு இடப்புறம் இருக்கக் காலடியில் பேய்வண்ணமான முயலகன் இருக்க,
எனக்குக் கடைக்கண்ணால் நன்மைசெய்து அருள்வான்.
(கவித்துறை: காய் காய் மா மா காய்)
வானில் கலந்திருக்கும் விடையேறும் சிவனே! இந்த அந்திவண்ண அமைதியில்
தேனின் இனமாக இனிமையும் நன்மையும் தரும் பண்ணிற் சிறந்தது தேவன் மீதுள்ள தீந்தமிழ்ப் பண்களே;
ஊனாகிய இந்த உடலொடு கலந்திருக்கும் உயிர்தனிலே துளிரென விளங்கி வளரும் மனதில் ஒளி தங்கி
நான் இப்போது கலந்திருக்கும் இப்பிறவி வாழ்வில் என் இன்னல்கள் தீர உன்னை நாடுவேனே.
(அகவல்)
எப்படி நான் உன்னை நாடுவது, எங்ஙனம் விழைவது?
காடுபோல என் மனதில் வினைகள் கவிழ்ந்து உள்ளனவே!
வெறும் கூடு என்னும் இவ்வுடலே என் மனம் பெருமையாக நினைக்கும் போது
எவ்விதம் மேன்மை வரும், பீடையாம் துன்பம்தான் வரும்!
சுடுகாட்டில் எழும் சாம்பலை விரும்பும் மேலவனாம் சிவன்
எனக்கு வீடென்று கிட்டாவிடிலும், என் வினைகளைக் கொல்லும்
வேடனாக வரவே என் மனதில் நான் வேண்டுவேன்.
ஆடல் நாயகன் மேல் இந்த அமைதியான மாலைச் சந்தியில்
பாடும் பாடல்களில் என் பாடு தீருமே
எனவே, நான் உமையின் நாயகன் செம்மையான சிவம் என்னும் குணத்தை நாடுவேன்.
(எழுசீர் விருத்தம்: அனைத்தும் காய்ச்சீர்கள்)
அந்தி வானத்தின் செவ்வண்ணத்தில் எண்ணத்தில் தேனூறக் காணும்
. செம்மையாம் தூய்மையத் தரும் உன் மேனியில் அபிஷேகத்தின் சீர்ப்பொருட்கள் விழும்போது
செவ்வண்டுப் புழுவாகத் தவிக்கும் இந்தக் கூட்டினுள் உறையும் உயிரை
. உன் மந்திர ஒலியே அதிர்வாக மேம்படுத்த முனையும்
இருப்பினும் என் மனமோ ஈனத்தை நாடியே
. இரண்டு உருவெனும் மாயயில் வீழ்ந்து மயங்கும்!
என் குணமும் மனமும் எப்படி இருந்தாலும் என்னுள்ளத்தில் நீ வந்து
. எப்போதும் எனக்கு உன் நாமம் நினைவில் வரச் செய்யவேண்டும்.
(வண்ணக் கலிவிருத்தம்: தனனன தனனன தனனானன தானன)
தன்னை நினைக்கும் உள்ளத்தில் நிறைவாக நிற்கும் ஈசன்
வினைகளால் துன்புறும் உயிரின் விழிவுகளைத் தருவான்
சுனையின் நீர்வளம் என்று உயிர் அந்தத் தனியனைக் காணும்போது
அவனது சிவபரத்தை ஈரமுள்ள அன்னையாகக் கருதி அணுகுவேனே.
இந்த விளக்கத்தை நினைத்து நான் எழுதிய பாடல் தொடரில், சொல்லிலும் பொருளிலும்,
இது சரியாக அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஏதேனும் குறைகண்டால் தெரிவிக்கவும்.
ரமணி
*****