Post by Sumi on Jan 11, 2012 10:59:10 GMT 5.5
Courtesy: Shri V Radhakrishnan
Site: www.periva.org
Sri Gurupyo Namaha: ! Respectful Pranam To Sri Maha Periva !!
Hara Hara Sankara ,Siva Siva Sankara !
Jaya Jaya Sankara Hara Hara Sankara !!
Sri ANDAL THAYARE Saranam. !!
Sri Manickavachakar Swamigale Saranam !!
Om Hari Om Hari Om Hari,Hari Om Hari Om Hari Om !!!
மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் இனிய குரலில் பாடி மகிழுங்கள்.
திருப்பாவை : பாடல் - 20
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.
பொருள்: முப்பத்து மூன்றுகோடி தேவர்களுக்கு எல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக கடவுளே! எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல்மிக்கவனே! பகைவர்களுக்கு பயத்தைக் கொடுக்கும் தூயவனே! எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமி தாயே! எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடியுடன், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து, இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக.
விளக்கம்: எல்லார்க்கும் முந்திய தெய்வம் கண்ணனே என்கிறாள் ஆண்டாள். உண்மை தானே! "ஆதிமூலமே' என்று கஜேந்திரன் யானை அலறியதும் கருடன் மீதேறி காற்றினும் வேகமாய் வந்து முதலையிடம் இருந்து காத்தான். பிரகலாதன் அழைத்ததும், கருடனைக் கூட எதிர்பாராமல், தூணில் இருந்தே நரசிம்மமாய் வெளிப்பட்டான் அதனால் தான் இப்படி ஒரு பட்டம் அவனுக்கு.
திருவெம்பாவை : பாடல் - 20
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.
பொருள்: சிவபெருமானே! எல்லாவற்றுக்கும் முந்தைய உன் பாதமலர்களை வணங்குகிறோம். எல்லாவற்றுக்கும் முடிவாயுள்ள மென்மையான திருவடிகளை பணிகின்றோம். எல்லா உயிர்களையும் படைக்கின்ற பொற்பாதங்களை சரணடைகின்றோம். எல்லா உயிர்களுக்கும் இன்ப வாழ்வு தரும் மலரடிகளை பிரார்த்திக்கிறோம். உயிர்களை அழித்து இறுதிக்காலத்தை தருகின்ற இணையற்ற காலடிகளைப் போற்றுகிறோம். திருமாலாலும், பிரம்மாவாலும் காண முடியாத தாமரை பாதங்களைக் கண்டு பெருமிதமடைகிறோம். பிறப்பற்ற நிலை தரும் தங்கத் திருவடிகளை பற்றுகிறோம். உன்னோடு ஐக்கியமாகி, உன் நினைவுகளுடன் நீர்நிலைகளில் நீராடி மகிழ்கிறோம்.
விளக்கம்: திருவெம்பாவையின் கடைசிப்பாடல் இது. அவனது திருவடியே முதலும் முடிவுமானது என்று சொல்லி விட்டார் மாணிக்கவாசகர். எனவே, அவனைப் பற்றுங்கள். வாழும் காலத்திலும், வாழ்க்கைக்குப் பிறகும் சுக வாழ்வு வாழ்வீர்கள் என்கிறார். நாளை முதல், திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் இடம் பெறும்.
Site: www.periva.org
Sri Gurupyo Namaha: ! Respectful Pranam To Sri Maha Periva !!
Hara Hara Sankara ,Siva Siva Sankara !
Jaya Jaya Sankara Hara Hara Sankara !!
Sri ANDAL THAYARE Saranam. !!
Sri Manickavachakar Swamigale Saranam !!
Om Hari Om Hari Om Hari,Hari Om Hari Om Hari Om !!!
மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் இனிய குரலில் பாடி மகிழுங்கள்.
திருப்பாவை : பாடல் - 20
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.
பொருள்: முப்பத்து மூன்றுகோடி தேவர்களுக்கு எல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக கடவுளே! எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல்மிக்கவனே! பகைவர்களுக்கு பயத்தைக் கொடுக்கும் தூயவனே! எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமி தாயே! எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடியுடன், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து, இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக.
விளக்கம்: எல்லார்க்கும் முந்திய தெய்வம் கண்ணனே என்கிறாள் ஆண்டாள். உண்மை தானே! "ஆதிமூலமே' என்று கஜேந்திரன் யானை அலறியதும் கருடன் மீதேறி காற்றினும் வேகமாய் வந்து முதலையிடம் இருந்து காத்தான். பிரகலாதன் அழைத்ததும், கருடனைக் கூட எதிர்பாராமல், தூணில் இருந்தே நரசிம்மமாய் வெளிப்பட்டான் அதனால் தான் இப்படி ஒரு பட்டம் அவனுக்கு.
திருவெம்பாவை : பாடல் - 20
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.
பொருள்: சிவபெருமானே! எல்லாவற்றுக்கும் முந்தைய உன் பாதமலர்களை வணங்குகிறோம். எல்லாவற்றுக்கும் முடிவாயுள்ள மென்மையான திருவடிகளை பணிகின்றோம். எல்லா உயிர்களையும் படைக்கின்ற பொற்பாதங்களை சரணடைகின்றோம். எல்லா உயிர்களுக்கும் இன்ப வாழ்வு தரும் மலரடிகளை பிரார்த்திக்கிறோம். உயிர்களை அழித்து இறுதிக்காலத்தை தருகின்ற இணையற்ற காலடிகளைப் போற்றுகிறோம். திருமாலாலும், பிரம்மாவாலும் காண முடியாத தாமரை பாதங்களைக் கண்டு பெருமிதமடைகிறோம். பிறப்பற்ற நிலை தரும் தங்கத் திருவடிகளை பற்றுகிறோம். உன்னோடு ஐக்கியமாகி, உன் நினைவுகளுடன் நீர்நிலைகளில் நீராடி மகிழ்கிறோம்.
விளக்கம்: திருவெம்பாவையின் கடைசிப்பாடல் இது. அவனது திருவடியே முதலும் முடிவுமானது என்று சொல்லி விட்டார் மாணிக்கவாசகர். எனவே, அவனைப் பற்றுங்கள். வாழும் காலத்திலும், வாழ்க்கைக்குப் பிறகும் சுக வாழ்வு வாழ்வீர்கள் என்கிறார். நாளை முதல், திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் இடம் பெறும்.