Post by saidevo on Apr 12, 2014 9:09:08 GMT 5.5
பிரதோஷத் துதிப் பஞ்சகம்
(வண்ணச் சந்த வெண்பா: தான தனந்தனனா தன்ன தனந்தனனா)
ஆல மருந்திடவே யன்னை கரந்தருள்வாள்
ஞாலம் புரந்திடவே நன்மை விளைந்திடவே
லீலை புரிந்தவனை யின்மை களைந்திடவே
ஓல மனந்தொழவே ருண்டு. ... 1
கால மிகந்தவனே கன்னல் விருந்தெனவே
சீலம் மிகுந்திடிலே சிந்தை நிறைந்திடுவான்
கோல தனந்தனையே யுன்னு மனந்தனிலே
பால மமைந்திடவே ருண்டு. ... 2
ஏறு சிரந்தனிலே யின்றை யசந்தியிலே
கூறு வணங்குடனே கொன்றை யதிர்ந்திடுமே
ஆறு மிழிந்திடுமே அந்த நடந்தனிலே
தேறு மனந்தனிலே தெம்பு. ... 3
ஊனி லிழிந்திடவே உண்மை யழிந்திடுமே
நானு னையுன்னிடவே நன்மை யடைந்திடவே
ஈன வனந்தனிலே என்னை யுகந்தருள்வாய்
ஊன மழிந்திடவே யுந்து. ... 4
தீய துடைந்திடவே மேன்மை யடைந்திடவே
தாவு மனந்தனிலே தங்கி யகந்தைதனை
மேவு மனங்கெடவே மந்த மகன்றிடவே
காவ லயென்மனம் குந்து. ... 5
பதம் பிரித்து:
பிரதோஷத் துதிப் பஞ்சகம்
(வண்ணச் சந்த வெண்பா: தான தனந்தனனா தன்ன தனந்தனனா)
ஆலம் அருந்திடவே அன்னை கரந்து-அருள்வாள்/கரம்-தருவாள்
ஞாலம் புரந்திடவே நன்மை விளைந்திடவே
லீலை புரிந்தவனை இன்மை களைந்திடவே
ஓல மனந்தொழ-ஏர் உண்டு. ... 1 ... [ஏர்=எழுச்சி, அழகு, நன்மை]
காலம் இகந்தவனே கன்னல் விருந்தெனவே
சீலம் மிகுந்திடிலே சிந்தை நிறைந்திடுவான்
கோல தனம்-தனையே உன்னு மனம்-தனிலே
பாலம் அமைந்திட-ஏர் உண்டு. ... 2
[கோலதனம் = சிவனது கோலத்தில் உள்ள செல்வங்களான
மத்தம், மதியம், நதி, அரவு, தோல் போன்றன.]
ஏறு சிரம்-தனிலே இன்றைய சந்தியிலே
கூறு அணங்குடனே கொன்றை அதிர்ந்திடுமே
ஆறும் இழிந்திடுமே அந்த நடம்-தனிலே
தேறு மனம்-தனிலே தெம்பு. ... 3
ஊனில் இழிந்திடவே உண்மை அழிந்திடுமே
நானுனை உன்னிடவே நன்மை அடைந்திடவே
ஈன வனம்-தனிலே என்னை உகந்து-அருள்வாய்
ஊனம் அழிந்திடவே உந்து. ... 4
தீயது உடைந்திடவே மேன்மை அடைந்திடவே
தாவு மனம்-தனிலே தங்கி அகந்தை-தனை
மேவு மனம்-கெடவே மந்தம் அகன்றிடவே
காவல என்மனம் குந்து. ... 5
--ரமணி, 10-12/04/2014, கலி.29/12/5114
(சனிப் பிரதோஷ நாள்)
*****
(வண்ணச் சந்த வெண்பா: தான தனந்தனனா தன்ன தனந்தனனா)
ஆல மருந்திடவே யன்னை கரந்தருள்வாள்
ஞாலம் புரந்திடவே நன்மை விளைந்திடவே
லீலை புரிந்தவனை யின்மை களைந்திடவே
ஓல மனந்தொழவே ருண்டு. ... 1
கால மிகந்தவனே கன்னல் விருந்தெனவே
சீலம் மிகுந்திடிலே சிந்தை நிறைந்திடுவான்
கோல தனந்தனையே யுன்னு மனந்தனிலே
பால மமைந்திடவே ருண்டு. ... 2
ஏறு சிரந்தனிலே யின்றை யசந்தியிலே
கூறு வணங்குடனே கொன்றை யதிர்ந்திடுமே
ஆறு மிழிந்திடுமே அந்த நடந்தனிலே
தேறு மனந்தனிலே தெம்பு. ... 3
ஊனி லிழிந்திடவே உண்மை யழிந்திடுமே
நானு னையுன்னிடவே நன்மை யடைந்திடவே
ஈன வனந்தனிலே என்னை யுகந்தருள்வாய்
ஊன மழிந்திடவே யுந்து. ... 4
தீய துடைந்திடவே மேன்மை யடைந்திடவே
தாவு மனந்தனிலே தங்கி யகந்தைதனை
மேவு மனங்கெடவே மந்த மகன்றிடவே
காவ லயென்மனம் குந்து. ... 5
பதம் பிரித்து:
பிரதோஷத் துதிப் பஞ்சகம்
(வண்ணச் சந்த வெண்பா: தான தனந்தனனா தன்ன தனந்தனனா)
ஆலம் அருந்திடவே அன்னை கரந்து-அருள்வாள்/கரம்-தருவாள்
ஞாலம் புரந்திடவே நன்மை விளைந்திடவே
லீலை புரிந்தவனை இன்மை களைந்திடவே
ஓல மனந்தொழ-ஏர் உண்டு. ... 1 ... [ஏர்=எழுச்சி, அழகு, நன்மை]
காலம் இகந்தவனே கன்னல் விருந்தெனவே
சீலம் மிகுந்திடிலே சிந்தை நிறைந்திடுவான்
கோல தனம்-தனையே உன்னு மனம்-தனிலே
பாலம் அமைந்திட-ஏர் உண்டு. ... 2
[கோலதனம் = சிவனது கோலத்தில் உள்ள செல்வங்களான
மத்தம், மதியம், நதி, அரவு, தோல் போன்றன.]
ஏறு சிரம்-தனிலே இன்றைய சந்தியிலே
கூறு அணங்குடனே கொன்றை அதிர்ந்திடுமே
ஆறும் இழிந்திடுமே அந்த நடம்-தனிலே
தேறு மனம்-தனிலே தெம்பு. ... 3
ஊனில் இழிந்திடவே உண்மை அழிந்திடுமே
நானுனை உன்னிடவே நன்மை அடைந்திடவே
ஈன வனம்-தனிலே என்னை உகந்து-அருள்வாய்
ஊனம் அழிந்திடவே உந்து. ... 4
தீயது உடைந்திடவே மேன்மை அடைந்திடவே
தாவு மனம்-தனிலே தங்கி அகந்தை-தனை
மேவு மனம்-கெடவே மந்தம் அகன்றிடவே
காவல என்மனம் குந்து. ... 5
--ரமணி, 10-12/04/2014, கலி.29/12/5114
(சனிப் பிரதோஷ நாள்)
*****