|
Post by Sumi on May 3, 2012 14:00:47 GMT 5.5
Source: Maha Periyavaal Darisana Anubhavangal Part - 4செல்லையா முதலியார் தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. பெரியவாளிடம் வந்து பிராத்தித்து கொண்டார்கள். 'ரெண்டு பேரும் பிரதோஷம் விரதம் இருங்கோ, அன்னிக்கு சாயரட்சை சிவதரிசனம் பண்ணிட்டு, பலகாரம் பண்ணலாம். சுவாமி அபிஷேகத்துக்கு நிறைய பால் கொடுக்கணும். குடத்தை கோயிலிலேயே வெச்சிட்டு வந்துடு - யார் வேணுமானாலும் எடுத்திண்டு போகட்டும்..' தம்பதிகளுக்கு குழந்தை பிறந்தது. பெயர் வைக்கணுமே? பெரியவாளிடம் வந்தார்கள். 'நீ குடம் குடமாக பாலபிஷேகம் பண்ணியிருக்கே. குடம்னா, கும்பம். கும்பத்தினாலே ஈஸ்வரனுக்கு அபிஷேகம்!.. கும்பேஸ்வரன்னு பேர் வை..' முதலியார் தம்பதிகள் ஆட்சேபிக்கவில்லை. 'எங்கள் குடும்பத்தில் இந்த பெயர் சூட்டுவது வழக்கமில்லை' என்று முணுமுணுக்ககூட இல்லை! 'கும்பேஸ்வர'னை அப்படியே ஏற்றுகொண்டார்கள்!
|
|
|
Post by krsiyer on May 4, 2012 11:16:11 GMT 5.5
His Greatness ! thanks for sharing. jaya jaya sankara, hara hara sankara !
|
|