|
Post by Sumi on Apr 19, 2012 8:27:24 GMT 5.5
Source: Maha Periyaval Darisana Anubhavangal Part - 2
சின்ன காஞ்சீபுரத்தில் இருக்கும் போதெல்லாம் வரதராஜபெருமாள் கோவிலில் பிரதஷணம் செய்வது, தவறாத கடமை, பெரியவாளுக்கு.
ஒரு விடியற்காலை பொழுதில், கோவிலில் பிரதஷணம் செய்துவிட்டு, பக்தர்கள் எல்லாம் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்து கொண்டு உடன் வர, தெருவில் நடந்து வந்தார்கள், பெரியவா.
ஒரு வீட்டின் வாசலில், ஒரு பெண் குழந்தை கோலம் போட்டு கொண்டிருந்தது.
பெரியவா நின்றார்கள்.
' கோலம் நன்னாப் போடறியே ! பேஷ் ! ஆனா, கோலம் அரிசி மாவாலே தான் போடணும். அப்போ தான் ஈ, எறும்பு, பட்சியெல்லாம் அரிசி மாவை சாப்பிடும்; கோலம் போட்ட உன்னை சந்தோஷமா பார்க்கும். மொக்குமாவாலே போட்டால் அது எந்த ஜந்துவுக்கும் உபயோகபடாது இல்லையா?'
பெண் குழந்தை அழகாக தலையை ஆட்டிவிட்டு நமஸ்காரம் செய்தது.
பெரியவாளின் இந்த அறிவுரை, அந்த குழந்தைக்கு மட்டும் தானா? இல்லை, எல்லா குழந்தைகளுக்குமா?
தாயார்கள் யோசிக்கட்டும்...
|
|
|
Post by krsiyer on Apr 19, 2012 14:53:58 GMT 5.5
Sure, Periva's advise is for all only. The purpose of putting kolam by pacharisi mavu is to feed the insects like ants. Thanks for sharing. Jaya jaya Sankara, Hara hara Sankara !
|
|