|
Post by Sumi on Apr 18, 2012 8:11:13 GMT 5.5
Source: Maha Periyaval Darisana Anubhavangal Author: A. Ramachandran, Thanjavur Part - 2
தினமும் கந்தர் அநுபூதி பாராயணம் செய்பவன் நான். என்ன காரணத்தாலோ பொருளாதாரத்தில் மேம்பாட்டை அடையவில்லை.
என்னை போலவே கந்தர் அநுபூதி பாராயணம் செய்யும் பழக்கமுடைய ஒரு அன்பர் 'வறுமை நீங்குவதற்கு வேறு எதாவது தோத்திரமோ, வேறு வழியோ சொல்லவேண்டும்' என்று பெரியவாளிடம் பிராதித்தாராம்.
'கந்தர் அநுபூதி பாராயணம் செய்து வருகிறாயே? அதை விட வேறு என்ன வேண்டும்? வறுமை நீங்க அதுவே போதும்' என்றார்களாம் பெரியவா.
அன்பர் 'முருகனிடம் உள்ள பக்தியினால் அநுபூதி படிக்கிறேன். இப்பொது தேவை பணம்! அதற்கு எதாவது வழி சொல்ல வேண்டும்! என்று கேட்டிருக்கிறார். அநுபூதியின் கடைசி பாட்டு 'வருவாய் அருள்வாய்....' என்று தொடங்கும். 'அதே பாடலில், குருவாய் வருவாய் அருள்வாய் என்றிருக்கிறதே?' என்று சுட்டி காட்டினார்களாம் பெரியவா.
முருகன் குருவாக வந்து, வருவாய் (பணம்) அருள்வான் - என்று உணர்த்தினார்கள்.
இது, முருக பக்தர்கள் அனைவருக்கும் செய்த உபதேசம் தானே?
என் மனதிலிருந்த தாபமும் நீங்கியது.
|
|
|
Post by krsiyer on Apr 18, 2012 12:16:07 GMT 5.5
Good definition. thanks for sharing jaya jaya sankara, hara hara sankara !
|
|