Post by radha on Mar 31, 2012 1:51:04 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTS TO SRI MAHA PERIVA.
HARE RAMA HARE RAMA,RAMA RAMA HARE HARE ,SRI RAMA SRI RAMA SRI RAMA
சத்தியத்தையும் தர்மத்தையும் காப்பதற்காக விஷ்ணு எடுத்த அவதாரம் ராமாவதாரம். அவர் நவக்கிரகங்களை அழைத்து, ""நான் பூவுலகில் ராமனாக அவதரிக்கப் போகிறேன். அதனால், நீங்கள் அனைவரும் வீர்யம் மிக்க ஸ்தானங்களில் போய் அமருங்கள்,'' என்று உத்தரவிட்டார். தசரதர் செய்த புத்திரகாமேஷ்டி யாக பலனாக பூமியில் அவதரித்தார்.
ராமர் பிறந்த வேளையில் குரு, சுக்கிரன், சூரியன், சனி, செவ்வாய் ஆகிய ஐந்தும் உச்ச பலத்துடனும், சந்திரன் ஆட்சி பலமும், புதன் சூரியனோடும், ராகுகேது மறைவு ஸ்தானங்களிலும் வீற்றிருந்தனர். இந்த ஜாதகத்தை வழிபடுவது சிறப்பு.
சித்திரைமாதம் புனர்பூச நட்சத்திரத்தன்று பகல் வேளையில் ராமன் பிறந்தார். சித்திரையில் சூரியன் உச்சவீடான மேஷராசியில் சஞ்சரிப்பார். இதனால் தைரியம், ஒழுக்கம், கவுரவம், செல்வாக்கு ராமனுக்கு உண்டானது. பிதுர்காரகராகிய சூரியனின் பலத்தால் தந்தை மீது பாசம் கொண்ட பிள்ளையாக இருந்தார். சூரியனோடு புதனும் கூடி புதஆதித்ய யோகம் ஏற்பட்டது.
இதன்மூலம் கலைகளில் சிறந்தவராக, விவேகம், புத்திசாலித்தனம் நிறைந்தவராக விளங்கினார். நவமி திதியில் பிறந்ததால் தன் கவுரவத்தை நிலைநாட்டுவதில் கவனமாக இருந்தார். துலாம் ராசியில் சனி உச்சமானதால் தீர்க்காயுள் கொண்டவராக இருந்தார். சனியின் பார்வை சூரியனின் மேல் பட்டதால் தந்தையின் மரணத்திற்கு காரணமானார். அதே சனி, புதனையும் பார்த்ததால் காட்டுக்குச் செல்லவேண்டிய நிர்ப்பந்தமும் உண்டானது.
கடகலக்னத்தில் பிறந்ததால் நளினமும், மென்மையான மனமும் உடையவராக இருந்தார். லக்னத்தில் குரு உச்ச பலத்துடனும், சந்திரன் ஆட்சி பலத்துடனும் வீற்றிருந்தனர். இதனால் பார்ப்பவரைக் கவரும் வசீகரம் நிறைந்தவராக திகழ்ந்தார். சனியின் பத்தாம்பார்வை லக்னம் மற்றும் குருசந்திரரைப் பார்த்ததால், தாய் ஸ்தானத்தில் இருந்த கைகேயியே ராமனின்
துன்பத்திற்கு வித்திட்டாள். மகரவீட்டில் செவ்வாய் உச்சத்தில் இருந்ததால் உடல், மனம் உறுதி மிக்கவராகவும், பெருந்தன்மை மிக்கவராகவும் இருந்தார். விஸ்வாமித்திரர் செய்த யாகத்தைக் காக்கவும், சுக்ரீவன், விபீஷணன் ஆகிய நல்லவர்களுக்கு உதவியும் செய்தார்.
களத்திரகாரனான சுக்கிரன் குருவீட்டில் உச்சபலம் பெற்றதால், அழகும், நற்குணமும் கொண்ட சீதையை மனைவியாகப் பெறும் பாக்கியம் பெற்றார். களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் இருந்ததால், சுயம்வரத்தில் வில்லொடித்து வெற்றி வீரனாக சீதையை மணந்தார். சனியின் வீடான மகரத்தில் இருந்த செவ்வாயால் மனைவியைப் பிரிந்தார்.
சுக்கிரன் குருவீட்டில் இருந்ததால், ராவணனால் சீதை கவரப்பட்டாலும், அவளுடைய கற்பு காப்பாற்றப்பட்டது. வித்யா ஸ்தானமான நான்கில் சனி இருந்ததால் வாழ்வு முழுவதும் ஞானியாக பற்றில்லாமல் வாழ்ந்தார். ராமநவமி நன்னாளில் ராமர் ஜாதகத்தைப் பக்தியுடன் வழிபடுவோருக்கு கிரகதோஷம் நீங்கி வாழ்வில் அனுகூலம் உண்டாகும்.
- சன்மிஷ்டை
HARE RAMA HARE RAMA,RAMA RAMA HARE HARE ,SRI RAMA SRI RAMA SRI RAMA
சத்தியத்தையும் தர்மத்தையும் காப்பதற்காக விஷ்ணு எடுத்த அவதாரம் ராமாவதாரம். அவர் நவக்கிரகங்களை அழைத்து, ""நான் பூவுலகில் ராமனாக அவதரிக்கப் போகிறேன். அதனால், நீங்கள் அனைவரும் வீர்யம் மிக்க ஸ்தானங்களில் போய் அமருங்கள்,'' என்று உத்தரவிட்டார். தசரதர் செய்த புத்திரகாமேஷ்டி யாக பலனாக பூமியில் அவதரித்தார்.
ராமர் பிறந்த வேளையில் குரு, சுக்கிரன், சூரியன், சனி, செவ்வாய் ஆகிய ஐந்தும் உச்ச பலத்துடனும், சந்திரன் ஆட்சி பலமும், புதன் சூரியனோடும், ராகுகேது மறைவு ஸ்தானங்களிலும் வீற்றிருந்தனர். இந்த ஜாதகத்தை வழிபடுவது சிறப்பு.
சித்திரைமாதம் புனர்பூச நட்சத்திரத்தன்று பகல் வேளையில் ராமன் பிறந்தார். சித்திரையில் சூரியன் உச்சவீடான மேஷராசியில் சஞ்சரிப்பார். இதனால் தைரியம், ஒழுக்கம், கவுரவம், செல்வாக்கு ராமனுக்கு உண்டானது. பிதுர்காரகராகிய சூரியனின் பலத்தால் தந்தை மீது பாசம் கொண்ட பிள்ளையாக இருந்தார். சூரியனோடு புதனும் கூடி புதஆதித்ய யோகம் ஏற்பட்டது.
இதன்மூலம் கலைகளில் சிறந்தவராக, விவேகம், புத்திசாலித்தனம் நிறைந்தவராக விளங்கினார். நவமி திதியில் பிறந்ததால் தன் கவுரவத்தை நிலைநாட்டுவதில் கவனமாக இருந்தார். துலாம் ராசியில் சனி உச்சமானதால் தீர்க்காயுள் கொண்டவராக இருந்தார். சனியின் பார்வை சூரியனின் மேல் பட்டதால் தந்தையின் மரணத்திற்கு காரணமானார். அதே சனி, புதனையும் பார்த்ததால் காட்டுக்குச் செல்லவேண்டிய நிர்ப்பந்தமும் உண்டானது.
கடகலக்னத்தில் பிறந்ததால் நளினமும், மென்மையான மனமும் உடையவராக இருந்தார். லக்னத்தில் குரு உச்ச பலத்துடனும், சந்திரன் ஆட்சி பலத்துடனும் வீற்றிருந்தனர். இதனால் பார்ப்பவரைக் கவரும் வசீகரம் நிறைந்தவராக திகழ்ந்தார். சனியின் பத்தாம்பார்வை லக்னம் மற்றும் குருசந்திரரைப் பார்த்ததால், தாய் ஸ்தானத்தில் இருந்த கைகேயியே ராமனின்
துன்பத்திற்கு வித்திட்டாள். மகரவீட்டில் செவ்வாய் உச்சத்தில் இருந்ததால் உடல், மனம் உறுதி மிக்கவராகவும், பெருந்தன்மை மிக்கவராகவும் இருந்தார். விஸ்வாமித்திரர் செய்த யாகத்தைக் காக்கவும், சுக்ரீவன், விபீஷணன் ஆகிய நல்லவர்களுக்கு உதவியும் செய்தார்.
களத்திரகாரனான சுக்கிரன் குருவீட்டில் உச்சபலம் பெற்றதால், அழகும், நற்குணமும் கொண்ட சீதையை மனைவியாகப் பெறும் பாக்கியம் பெற்றார். களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் இருந்ததால், சுயம்வரத்தில் வில்லொடித்து வெற்றி வீரனாக சீதையை மணந்தார். சனியின் வீடான மகரத்தில் இருந்த செவ்வாயால் மனைவியைப் பிரிந்தார்.
சுக்கிரன் குருவீட்டில் இருந்ததால், ராவணனால் சீதை கவரப்பட்டாலும், அவளுடைய கற்பு காப்பாற்றப்பட்டது. வித்யா ஸ்தானமான நான்கில் சனி இருந்ததால் வாழ்வு முழுவதும் ஞானியாக பற்றில்லாமல் வாழ்ந்தார். ராமநவமி நன்னாளில் ராமர் ஜாதகத்தைப் பக்தியுடன் வழிபடுவோருக்கு கிரகதோஷம் நீங்கி வாழ்வில் அனுகூலம் உண்டாகும்.
- சன்மிஷ்டை