|
Post by saidevo on Sept 10, 2013 9:38:16 GMT 5.5
42. வேலனின் கோலம் (அறுசீர் விருத்தம்: மா மா காய் மா மா காய்)
பாலும் தேனும் வேண்டேன்நான் . மௌனம் கிட்ட வேண்டுவனே வேலன் பார்வை பட்டாலே . வேண்டும் மாற்றம் வாராதோ? வேலன் பார்வை படுவதற்கே . மேலும் கீழும் பார்க்கின்றேன் ஆலை உள்ளம் கட்டுண்டால் . ஐயன் பார்வை வருமென்றார்.
ஆலை உள்ளம் கட்டுண்ண . ஆன மட்டும் முயன்றேனே வேலை ஓய்வு பெற்றிடினும் . வேறோர் பக்கம் உளம்செலுதே வேலை வேண்டி வழிபட்டால் . ஏறும் பேய்கள் இறங்கிவிடும் கோலம் போடும் மனத்துள்ளே . வேலால் கோலம் போட்டுவிடு!
வேலால் கோலம் போட்டாலே . வேண்டும் நேர்மை வந்துவிடும் காலைக் கையை அசைக்காது . காணும் கோலம் அமர்ந்தேபார் ஏலம் போடும் மனத்துள்ளே . ஏதும் எண்ணம் தொடராதே ஓலம் தன்னால் அடங்கிவிடும் . ஓசை யெல்லாம் ஓமாகும்.
--ரமணி, 18/08/2013, கலி.02/05/5114
*****
|
|
|
Post by kahanam on Dec 28, 2013 12:21:59 GMT 5.5
Velan Kai Velum, Avan Amarum Mayilum Jnanam Tharum! Om SaravaNa Bhava! Jaya Jaya Shankara, Hara Hara Shankara!
|
|
|
Post by radha on Feb 8, 2014 1:38:27 GMT 5.5
HARI OM !
ஆறுமுகனின் பன்னிருகரங்களில் எத்தனையோ ஆயுதங்கள் இருந்தாலும், தனிச்சிறப்பு மிக்கது வேல் மட்டுமே. இறைவனது ஆயுதங்களில் தனியே வைத்து வழிபடும் முறை வேலுக்கு மட்டும்தான் உள்ளது. பழங்காலத்தில் இருந்தே வேல் வழிபாடு நடந்துவருவது சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெற்றிவேல், வீரவேல், வைரவேல், சக்திவேல், கூர்வேல், ஞானவேல் என பல்வேறு திருநாமத்தில் அழைக்கப்படும் வேலின் சிறப்புகள் பல்வேறு நூற்களில் காணலாம். வேல் பூஜைக்கு மேல் சிறந்த பூஜை எதுவும் இல்லை. வேல் சின்னத்தை உடலில் அணிந்து கொள்வதும், மனதார ""வேல் வேல்'' என ஓதுவதும், வேலை மனதில் நிறுத்தி தியானிப்பதும், வேலை வழிபடுவோர்க்கு வினைகள் பட்டழியும். இதனைத்தான் ""வேலுண்டு வினை இல்லை''என்பர். அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரத்தில் வேல் பற்றிய சிறப்புகளை ஏராளமான பாடல்களில் குறிப்பிட்டிருக்கிறார். உற்றார் உறவினர்கள் அனைவரும் கைவிட்ட நிலையில் துணையின்றி தனித்துச் செல்லுகின்ற வழியில் தனக்கு ணையாக வந்து உதவுவன "வடிவேலும் மயூரமுமே'' என பொருள்பட பாடலில் குறிப்பிட்டு உள்ளார். வேல் ஞானத்தின் அம்சம். அந்த வேலைத் தாங்கி இருக்கின்ற முருகப்பெருமானை ஞானவேல் முருகன் என போற்றுகின்றனர். வேலை வழிபட்டால் ஞானம் உண்டாகும். குமரகுருபர சுவாமிகள் நீண்ட காலம் வாய் பேசமுடியாத நிலையில் இருந்தார். திருச்செந்தூர் முருகனை மனதார வேண்டி அவனே கதி என இருந்தார். ஒருநாள் தன் பக்தனின் வேண்டுதலை ஏற்று குமர குருபரனின் முன் தோன்றி, ""குருபரா, உனக்கு பேசுகின்ற திறனோடு என்னைப் பாடுகின்ற புலமையினையும் வழங்கினோம்'' எனக்கூறி அவரது நாவில் ஞான வேல் கொண்டு எழுதினார். முருகனின் பேராற்றலால் குருபரன் "கந்தர் கலிவெண்பாவை' பாடினார். மாயையே உருவான கிரௌஞ்ச மலையைப் பொடியாக்கிய வேலைப்பணிவோர்க்கு கொடிய மிருகங்கள், பறவைகள், தீராத வியாதிகள், கிரகதோஷங்கள் முதலிய பாதகங்களால் எந்தவிதமான துன்பங்களும் நேராது என ஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார். இத்தனை சிறப்புகளும் ஒருங்கே அமையப்பெற்ற வேலுக்கென ஒரு தனிக்கோயில், கோவை மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. "வேல் கோட்டம்- தியான மண்டபம் ' என அழைக்கப்படுகிறது இக்கோயில். 6 அடி உயரம் கொண்டு அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய வேல், கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வேலின் தண்டுப் பகுதியில் பஞ்ச பூத சக்கரங்கள் செதுக்கப்பட்டுள்ளது. வேலின் முகப்புப் பகுதியில் இயற்கையான வெளிச்சம் விழும் விதத்தில் விதானத்தில் ஒரு சிறிய துவாரம் அமைக்கப்பட்டுள்ளது. முன் மண்டபம் அறுகோண வடிவில் முருகனின் "சரவணபவ' எனும் ஆறெழுத்து மந்திரத்தைக் குறிக்கும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் நிலவும் அமைதி, தியானத்திற்கு வலு சேர்ப்பதாக உள்ளது. இவ்வாலயத்தில் கிருத்திகை, பௌர்ணமி ஆகிய தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 5.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும். தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய தினங்களில் சிறப்பு அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நிகழ்த்தப்படுகின்றன. மருதமலைக்குச் செல்லும்போது இவ்வாலயத்திற்கும் சென்று வேலவனுடைய வேலினை தரிசித்து, தியானித்து மன அமைதி பெறலாமே! கோவையில், மருதமலை அடிவாரம் தெற்குப் பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது.
Source:-KUMUDAM BHAKTHI SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
|
|